Saturday, July 31, 2010

தில்லாலங்கடி - கிக்

ஜெயம் ராஜா - கோடு மேல அலுங்காக குலுங்காம இன்னொரு கோடு போடுறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா.இப்படி என் தம்பி படிக்கும் போது பேசி நொந்தவர் தான் ஜெயம் ராஜா. இன்னைக்கு கோடு மேல கோடு போட்டு பேப்பர் கிழிஞ்சு போச்சு. எம்.குமரன் படமும் ரவி தேஜா நடிச்சது தான்.அதுல பிரகாஷ்ராஜ் கேரளாவில் இருப்பார்.ஜெயம் ராஜா அதை மலேஷியா என்று காட்டி இஷ்க் என்ற இந்திப் படத்தில் சுட்ட காட்சிகளை எல்லாம் போட்டு ஒப்பேத்தி விட்டார். கிக் படத்தில் ரவி தேஜா மலேசியா வருவதால் இவர்களும் அங்கே போக வேண்டிய கட்டாயம்.தம்பிக்கு எல்லாம் தெலுங்கில் மட்டும் தான் உருவினார். விஜய்க்கு வீடியோ கேமில் இருந்து உருவி விட்டார்.

ஜெயம் ரவி - பாஸ் உங்களுக்கு பிஞ்சு மூஞ்சு.தயவு செய்து இந்த மாதிரி படத்தில் எல்லாம் அதுவும் ரவி தேஜா மாதிரியே நடிக்க வேண்டாம்.உங்களுக்கு அவர் மாதிரி நக்கல் இல்ல விக்கல் கூட வராது.

தமன்னா - இலியானாவும், தெலுங்கு ரசிகர்களும் இந்த படத்தை நல்லவேளையாக பார்க்கவில்லை. கொலை கேஸ்ல இருந்து தப்பிச்சிட்டீங்க.

ஷாம் - ஏன் சார் இந்த மர்டர் வெறி.அந்த பசங்க கூட சேராதீங்க.

சன் பிக்சர்ஸ் - இப்படியே மொக்கைகளா பாத்து பாத்து வாங்கி விடுங்க.அப்புறம் எந்திரன் அதோ கதி தான். அளவுக்கு மீறினால் அமிர்தமே நஞ்சாம்.அப்ப விளம்பரம்.

வடிவேலு - பீல்ட் அவுட் ஆகி உக்கார வேண்டிய நாள் தூரத்தில் இல்லை.பிரம்மானந்தம் நடித்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

டவுட் - சூட்டிங் எடுக்கும் போது இந்த படம் சைட் பை சைட் ஓடிக்கொண்டிருந்ததா.

விஜய் - உங்களுக்கு மட்டும் ஒரு டிவிட்டர்.
வேலாயுதம் - மெட்ராஸ் பாஷையில் முதல் எழுத்தை மட்டும் மாற்றினால் கிடைக்கும் தலைப்பை ரசிகர்கள் படம் வெளியானப் பின் பயன்படுத்துவார்கள் #ஆருடம்

Friday, July 30, 2010

ஜெகநாதன் - ஆதி - சுஜாதா

ஜெகநாதன் - ஆதி என்று தொடங்கும் பதிவை இரண்டு நாட்களுக்கு முன் எங்காவது பார்த்திருந்தால் அதற்கு எதிர்பதிவு என்று இதை நினைத்து விட வேண்டாம். தினமும் சத்தியப்பிரமாணம் எடுத்து கொள்ளாத குறையாக சண்டை இழுக்கக் கூடாது என்று நினைத்து கொண்டாலும் அதை மீறுவதே எனக்கு வேலையாகயிருக்கிறது.

ஜெகன் - நான் அடிக்கடி சொல்வதுண்டு.நான் பதிவுலகத்தில் பொறாமை படுவது இரண்டு பதிவர்களின் மேல் தான்.அதில் ஒருவர் ஜெகநாதன். நான் மகான் அல்ல என்ற மொக்கை பதிவிலும் கூட அவரை பார்த்து பொறாமை கொள்கிறேன் என்று சொன்னேன்.அடுத்த நாளே இன்னும் அதிகப் பொறாமை கொள்ளுமாறு ஒரு விஞ்ஞான சிறுகதை எழுதியுள்ளார்.

க.சீ.சிவக்குமார் அடிக்கடி சொல்லும் ஜெகன் தான் இந்த ஜெகநாதன்.இதுவரை இந்த வருடத்தில் பதினெட்டே பதிவு தான் எழுதியுள்ளார்.  விமர்சனங்கள் கடுமையாக வைப்பார்.அவர் எப்படி விமர்சனம் செய்வார் என்று பதிவுலகின் கவிஞர்கள் நேசமித்ரனிடமும், யாத்ராவிடமும் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.என்னை இரண்டு முறை விமர்சனம் செய்துள்ளார். ஏன் உங்கள் கதையில் நாயகன் நல்லவான தெரிகிறான்.இந்த இடத்தில் தான் கதாசிரியர் தோற்றுப் போகிறார் என்று.இன்னும் சொன்னார் அதை இங்கே படித்துக் கொள்ளவும்.

இந்த கதையை மட்டும் நன்றாக தெரிந்த பதிவர்கள் எழுதியிருந்தால் கொண்டாடியிருப்பார்கள்.

அடுத்து ஆதி எழுதிய சைக்கிள் சிறுகதையைப் படித்தேன்.தொடக்கம் ஒரு இடத்தில் தொடங்கி முடிவு இன்னொரு இடத்திற்கு இடம் பெயர்ந்து விட்டது. இந்த கதையில் மட்டும் ஒரே ஒரு வார்த்தையை ஆதி போட்டிருந்தால் அருமை என்று எல்லா பின்னூட்டங்களும் வந்திருக்கும். தொடரும் என்று போட்டு விட்டு தொடர்கதையாக மாற்றியிருந்தால் நிச்சயம் அப்படித்தான் சொல்லியிருப்பார்கள்.

தொடரும் போடாமல் ஒரு வார்த்தை கூட மாறாமல் இந்த கதையை ஜெயமோகன் அவர் பதிவில் போட்டு இருந்தால் ராம்ஜி யாஹூ போன்ற அதி தீவிர ரசிகர்கள் ஜெயமோகனைத் தலையில் தூக்கி வைத்து கொண்டாடியிருப்பார்கள்.இதை கிண்டலுக்கு சொல்லவில்லை.யார் எழுதுகிறார் என்பதை பொறுத்து தான் விவாதமே.

சுஜாதா சிறுகதை எழுதிப் பழகும் எல்லோரையும் நிறைய பாதித்திருக்கிறார் என்பது நிதர்சனம். ரொம்ப திராமையான கதையை கூட சிலாகிக்க வைத்து விடுவார்.உதாரணத்திற்கு விகடனில் வந்து சிறுகதை. பெரிதாக ஈர்க்கவில்லை என்றாலும் வாசகனை ஏதாவது ஒரு இடத்தில் கட்டி வைக்கும் திறமை அவருக்கு மட்டும் தான் இருந்ததாக இன்னும் நான் நினைக்கிறேன். புதிதாக கல்யாணம் ஆன கணவன் மனைவி வீட்டில் பேசிக் கொள்ள முடியாமல் காவிரி ஆற்றுக்குப் போகிறார்கள். மனையிடம் வீரத்தைக் காண்பிக்க காவிரியில் குதித்து நீந்துகிறான்.தசைப்பிடிப்பினால் மூழ்கும் அவனை காப்பாற்ற நீச்சல் தெரியாத மனைவி காப்பாற்ற குதிக்கிறாள். பிறகு இருவரும் மறுநாள் காலையில் பிணமாக ஒதுங்குகிறார்கள். புதுமணத் தம்பதியர்கள் எப்படி பேசிக் கொள்வார்கள் என்று நாம் எழுதினால் அரைப் பக்கம் எழுதி வைப்போம் அல்லது வைப்பேன். அவர் ஒரே வரியில் முடித்து விட்டார். அவளை இறுக்கமாக அணைத்தான்(வேறுவிதமாக எழுதியிருக்கிறேன்.)  முறைத்ததும் கைகளை விலக்கிக் கொண்டான்.அவர்கள் என்ன பேசிக் கொண்டால் நமக்கென்ன என்று கதையை கொஞ்சம் வேறு பக்கம் நகர்த்தியிருப்பார். வாசகனை அந்த இடத்தில் அவர் கட்டி வைத்து விட்டார்.

விவரணைகளைக் குறைத்து கொண்டு கதையை சொன்னால் வாசகனை கட்டி வைத்து விடலாம்.இல்லை அவர்கள் விமர்சனத்தில் இருந்து அது காப்பாற்றும். கயிறு கொஞ்சம் நீளமாகயிருந்தால் வாசிப்பவனை ஒரு விளாசு விளாச வேண்டும்.அந்த பாணி தான் எனக்கு சரி வரும்.அந்த பாணியில் கதை எழுதியிருக்கிறேன்.பயத்தினால் வெளியிட மனது வரவில்லை. பாருங்க நான் பயந்த சுபாவம் உள்ளவன்.

உடனே நான் இவர்களுக்கு சொறிந்து விடுகிறேன். அப்படி செய்கிறேன்.இப்படி செய்கிறேன் என்று ஆரம்பிக்கக் கூடாது. இதை எழுதக் காரணம் முன்பெல்லாம் விமர்சனமோ,சண்டையோ போடுவதற்கு முன் அவர்கள் என்ன நினைத்து கொள்வார்களா என்று கொஞ்சம் சலனம் வரும். அப்படி சலனம் உண்டாக்கியவர்களில் ஆதியும்,ஜெகநாதனும் உண்டு. என்னை சங்கடத்தில் ஆழ்த்தக் கூடாதென்றே எதுவும் சொல்வதில்லை.மிக முக்கியமாக படிப்பதேயில்லை என்று நினைக்கிறேன். அதுதான் நான் கம்பு சுழற்றுவதற்கு எதுவாகயிருக்கிறது.

மேலும் சிறுகதை எழுதுவது எப்படி என்று ரணகளமாக விவாதித்த ஜெகநாதனுக்காக இந்த இடுகை. ஜெகநாதனுக்கு சொறிகிறேன் என்று சொன்னால் பரவாயில்லை. காரணம் நான் யார் என்று தெரியாத காலத்தில் இருந்து இதுவரை அவர் தளத்தில்,அவர் மனதில் இடம் கொடுத்து வைத்திருக்கிறார்.

Thursday, July 29, 2010

பாச்சா,புர்ச்சியாளர்கள்,நாட்டாமை மற்றும் நசுங்கிய சொம்புகளுக்கு

நான் சும்மாவே ஆடுவேன்..கால்ல சலங்கை வேற கட்டி விட்டுப் வேடிக்கை பார்த்தா - களவாணி.

இப்படி தனியா வராதே..வீட்ல யாராவது பெரியவங்க இருந்தா கூட்டிக்கிட்டு வா - பருத்திவீரன்.

(தொடர்ச்சி) ஏண்டா மவனே சின்னப்பையனைப் போட்டு இந்த அடி அடிக்கிறே..ஏலேய் குட்டிச் சாக்கு இங்க வா..போடு

(இன்னும் தொடர்ச்சி) பாருங்க அண்ணே..காலையிலே இருந்து அதையே நினைச்சி அழுவுறாரு..

இந்த நாளை ஏதாவது பேப்பர்ல குறிச்சி வைச்சுக்கோ..உன்னை விட பெரிய ஆளா வரல - அண்ணாமலை

உன் கூட்டத்திலையும் எங்க ஆள் ஒருத்தன் இருக்கான்..அவன் உங்களைக் காட்டிக் கொடுப்பான் - போக்கிரி

நான் அடிச்சா தாங்க மாட்டே..நாலு மாசம் தூங்க மாட்ட.. - வேட்டைக்காரன்.

ஆண்டவன் கெட்டவங்களுக்கு நிறைய கொடுப்பான்..ஆனா கை விட்டுருவான்..நல்லவங்களை சோதிப்பான்..ஆனா கை விட மாட்டான்.. - பாட்ஷா

நான் நினைச்சா உன்னை எண்ணி ஏழே நாள்ல முடிப்பேன் - பாட்ஷா

நான் பாத்து பாத்து வளர்ந்த வீட்டு மரமில்லை..தானா வளந்த காட்டுமரம்..வெட்ட நினைச்சா கோடாலியே சிக்கிரும் - அமர்க்களம்.

அடடா நசுங்கப் போகும் சொம்புகளை விட்டு விட்டேனே..சரி பார்ட் இன்வினிட்டி எழுதும் போது பார்த்துக்கலாம்.

Wednesday, July 28, 2010

நான் மகான் அல்ல - விமர்சனம்

ரஜினிக்குப் பிறகு இந்த தலைப்பு கார்த்திக்கு பொருந்துகிறதோ இல்லையோ தெரியாது. யாருக்கு வேண்டுமானாலும் பொருந்தலாம்.எனக்கும் பொருந்தும்.பொருந்தவில்லை என்றாலும் பரவாயில்லை. ஒரு காலத்தில் தொடர்பதிவிற்கு அழைக்க மாட்டார்களா என்று ஏங்கித் தவித்து இருக்கிறேன். இப்போதெல்லாம் வரவே கூடாது என்று வேண்டிக் கொள்கிறேன்.காரணம் கடைசியில். காரணம் அங்கு தானிருக்கும்.ஓடி விடாது.நேராக அங்கு போக வேண்டாம். இருந்தாலும் எழுத காரணம் அதுவும் அந்த காரணத்தால் புரியும்.(சொல்லித் தொலையேன்..போடுறதே மொக்கை).நான் பிரபல பதிவன் என்று நினைத்து விடக்கூடாது.அழைத்தவரின் பதிவை நான் படித்ததில்லை என்று நினைத்து விடக்கூடாது என்பதால் இந்த சரமாரியான மொக்கை.கோபம் வருதா.இதற்கு காரணமான விதூஷை நல்லா திட்டுங்க.

1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?

சாரு ஒருமுறை அண்ணா பல்கலைகழகத்தின் வானொலியின் நேரலைக்கு போனாராம்.(அவர் குரல் தமிழகத்தில் பிரபலமாக).மேலே இருப்பது போல் கேள்வி கேட்டதும் உங்க புகழே வேண்டாம் என்று கோபத்தோடு எழுந்து வந்து விட்டாராம்.அந்த அளவிற்கு எனக்கு கோபம் வரவில்லை.எழுந்தால் பால்கனி தான். இப்படி எல்லாம் கேள்வி கேட்டு நான் பதில் சொன்னா அதை எதிர்பதிவா போடுவீங்க.அதுவும் வேற ப்ளாக்குல.அப்புறம் மண்டபத்துல பதிவு எழுதி எனக்கெதிரா போராடுவீங்க. தேவையா இது..(டேய் உனக்கெல்லாம் இது ஒவர்..) ஒவர்.. இது அடித்ததே சோர்வாக இருக்கிறது.இனி மனசாட்சி பேசும்.

2) அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?

பெயர் சொல்றதுக்கே இந்த மொக்கை போட்டான்.அதுக்குள்ள அடுத்த கேள்வியா.

3 )நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி.

நியாயப்படி இந்த பதிவின் தலைப்பிலும் சாரு வர வேண்டியது.இந்த மாசம் கோட்டா முடிந்து விட்டது. அதனால் இங்கு போய் படித்து கொள்ளலாம்.

4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?

எல்லா நாதாரித்தனமும் பண்ணுவான்.ஏழு வோட்டும் அவனே போடுவான்.அதுக்கு அவன் கொடுத்த வாக்குமூலம் இங்கே.

5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?

எல்லாமே புனைவு தான்..ஒண்ணுல கூட உண்மை கூடாது.பாருங்க மனசாட்சியையே பொய் சொல்ற அளவுக்கு மாத்தி வைச்சிருக்கான்.

6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

ப்ளாக் எழுதி சம்பாதிச்ச பணத்துல கடலுக்கடியிலே ஒரு வீடு கட்டிட்டான்.காரும் இருக்கு.
 அங்கே போக பாலம் தேவை.அதுக்கு சம்பாதிக்க இப்போ டிவிட்டர்ல மொக்கை போடுறான்.

7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?

அறுக்க மாட்டாதவன் இடுப்பைச் சுத்தி முப்பதெட்டு கறுக்கருவாள்..இந்த ஒண்ணே முடியல..

8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?

கோபமே பட மாட்டான்.ஏன்னா அவனுக்கு கோபமே வராது.வேணா இப்போ அவனுக்கு புதுசா வியில ஆரம்பிக்கிற பெயரில் தோழர்கள் இருக்கிறார்கள்.அவர்களிடம் கேட்கலாம்.

பொறாமை படுவது உண்டு.அதில் முதல் இரண்டு இடத்தில் இருப்பது கென்,காலடி ஜெகநாதன்.(பாருங்க பொறாமையில லிங்க் கூட தர மாட்டான்)

9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..

வந்ததுமே ஒரண்டை இழுத்துட்டான். வால்பையன்,ஜெகன் இப்படி எல்லாம் அதில் தான் அறிமுகம் ஆனார்கள்.

10) கடைசியாக விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்

நான் அவன் இல்லை
நான்
நான் சிகப்பு மனிதன்
நான் மகான் அல்ல

இன்னும் நான் என்று தொடங்கும் படங்கள் வேறென்னயிருக்கு.

யாரையும் கூப்பிட விரும்பவில்லை என்று சொல்வான்.காரணம் அவன் வந்து சொல்வான்.

காரணம் இங்கே சொல்லியிருக்கேன்.நான் கூப்பிட்டால் யாரும் எழுதுவதே இல்லை.அதான் கூப்பிடுவது இல்லை.

மேலும் படிக்க..இன்னும் படிக்க..மீண்டும் மீண்டும் படிக்க..தொடர்ந்து படிக்க..

Tuesday, July 27, 2010

சாரு,டிவிட்டர்,விஜய்,வினவு

சாருவைத் தொடர்ந்து ஜெயமோகனும் டிவிட்டருக்கு வருவார்.சாரு செய்தால் அதை செய்வது தானே வழக்கம்.வருத்தம் - அவர் பெயரில் டிவிட்டர் இருக்கிறார்.    

ஒரு வருடமாக டிவிட் எழுதுபவனும் நானும் ஒன்றா - இப்படி சாரு கேட்காமலிருந்தால் 2012லில் உலகம் அழியாமல் காப்பாற்றி விடலாம்.

ஜெயமோகம் ஆகஸ்ட் 15திற்குப்பின் மலேசியா வருகிறாராம்.உண்மையில் தமிழகத்திற்கு சுதந்திரம் கிடைத்து விட்டது.    

சுதந்திரம் நள்ளிரவில் கிடைத்ததாம்அதை பார்க்க சாருவை படிக்கிறார்களாம் ஜெயமோகன் வாசகர்கள்.சாரு பிரான்ஸ் போனால் சுதந்திரம் தான்.

3 இடியட்ஸ் தமிழில் ஒரு புத்திசாலிகள் என்று பெயர் மாற்றம் # நடந்தாலும் ஆச்சயர்ப்படுவதிற்கில்லை.

3 இடியட்ஸ் - இரண்டு முட்டாள்கள் கிடைத்து விட்டார்கள்.தலைப்பிற்கு பொருந்தமான தேர்வு - விஜய்,சிம்பு    

நடிச்ச விஜய்க்கே இவ்வளவு சேதாரம்னா நடிப்பை ரசிச்சிப் பாத்தவன் உசுரோடு இருப்பான்னு நினைக்கிறீங்க #கைப்புள்ள,உசுப்பேத்தல்,ரணகளம்    

சாருவுக்கு கோபத்தில் ஏ ஜோக் சரியாக சொல்லத் தெரியவில்லை..கொஞ்சம் கொத்து பரரோட்டா,சாண்ட்விச் ஆளுக்கொரு பக்கமாக ஊட்ட வேண்டும்    

வினவுத் தோழர்கள் எதையெடுத்தாலும் போபால் போபால் என்று சொல்வது சரோஜாதேவி கோபால் கோபால் என்று சொல்வது போலுள்ளது

ஜெயமோகன் சந்தேகப்பட்டது போல பாலகுமாரன் பகுதியை மட்டும் நீக்கியுள்ளாரே - அடடே ஆச்சர்யக்குறி    

மூன்று மணி நேர விஜய் படத்தில் லாஜிக் தேடாமல் 140 எழுத்து டிவிட்டில் லாஜிக் தேடினால் தமிழன் எப்படி உருப்படுவான் #ஆதங்கம்    

பெண் வாசனை இல்லாத வீடு..மாற்ற முயற்சிக்கிறார்கள்..குழந்தை திருமணம் தப்பு என்று யாராவது சொல்லுங்களேன்.எனக்கு பதிமூன்று வயது தான் 13 * 2    

நான் தற்கொலை செய்ய முடிவு எடுத்து விட்டேன்.அழகாய் இருக்கிறேன் என்று இரண்டு பேர் சொல்லி விட்டார்கள் - இரண்டும் ஆண்கள் குளித்தது ஒரு தப்பா    

கௌதம் மேனனின் நடுநிசி நாய்கள் பிரீட் என்ற ஆங்கிலப்படத்தின் அட்டைக்காப்பியா #சந்தேகம்    

நிலாவில் ஆரம்பிக்க இருக்கும் நூலகத்தில் என் புத்தகம் இடம் பெறும் வரை நான் எழுத்தாளன் கேட்டகரியில் வர மாட்டேன்    

என்னுடைய டிவிட்டர் முகவரி

Monday, July 26, 2010

சிம்பு, எஸ்.டி.ஆர், சொம்பு,டிவிட்டர்

சிம்பு உங்களுக்கு எஸ்.டி.ஆர் என்ற பெயர் சரியில்லை. விகடனின் லூசுப்பையன் சொன்ன பெயரான வம்பு ஒகே.என்னை கேட்டால் சொம்பு நன்றாக பொருந்தும்.
      
 நான் தற்கொலை செய்ய முடிவு எடுத்து விட்டேன்.அழகாய் இருக்கிறேன் என்று இரண்டு பேர் சொல்லி விட்டார்கள் - இரண்டும் ஆண்கள். குளித்தது ஒரு தப்பா

கௌதம் வாசுதேவ் மேனன் - இப்படி வருடத்திற்கு ஒருமுறை பெயர் மாற்றினால் டிவிட்டரில் உங்கள் பெயரே நிரம்பி விடும்.

நான் வினவுத் தோழனாக மாற வாய்ப்புகள் பிரகாசமாக தெரிகிறது..தமிழ்மண பரிந்துரையில் நிரந்தர இடம்..இதை சொன்னது ஏற்கனவே மாறியவர்கள் அல்ல.

இலக்கியவாதியாக குறைந்தபட்சம் பத்து வருடம் தெருச்சண்டை போட வேண்டுமா - அய்யகோ எனக்கு அது கனவாகவே போய் விடும் போலிருக்கிறதே

படித்து முடித்து ஆறு ஆண்டுகள் ஆகியும் அடிக்கடி பெயிலாவது போல கனவு .கனவில் சூப்பர்வைசராக வந்தது கிறிஸ்டோபர் நோலனா.கல்லா கட்டி விட்டாரே

சாருவின் பல்லை உடைத்தது எந்த ஆண்டு சொன்னால் தான் தெரிந்து கொள்ள முடியும் என் இலக்கிய வாசிப்பின் வயதை.

இலக்கியத்தில் 20 ஆண்டுகள் ஊற வேண்டுமாமே எதிரெதிர் துருவங்களை விமர்சிக்க..உடனே ஊற வேண்டும்..என்ன செய்ய வேண்டும்..

எட்டு ஆண்டுகளுக்கு ஒரு படம் நடித்தாலும் எனக்கு 10000 ரசிகர் மன்றங்கள் கலையாமலிருக்கிறது - கிராமராஜன் #நம்பிக்கை

எத்தனை மொக்கை வாங்கினாலும் விஜய் படங்களின் எண்ணிக்கை குறையவேயில்லையே..நமக்கு பட்டை நாமம் தான் - திரையரங்கு உரிமையாளர்கள் #புரியாத புதிர்

நர்சிம் பிரபல டிவிட்டர் ஆகி விடுவார் போல..சீக்கிரம் ஒரண்டை இழுக்க வேண்டும்

வேலாயுதம் - மெட்ராஸ் பாஷையில் முதல் எழுத்தை மட்டும் மாற்றினால் கிடைக்கும் தலைப்பை ரசிகர்கள் படம் வெளியானப் பின் பயன்படுத்துவார்கள் #ஆருடம்

காவல் - காதல் விஜய் படம் ஓட அதிக வாய்ப்பிருக்கிறது..பத்து வருடத்திற்கு ஒரு முறை ஹிட் கொடுக்கத் தொடங்குவார் #லாஜிக்

நான் டிவிட்,ப்ளாக் எதையும் அழிப்பதில்லை ஸ்கீரின் ஷாட் எடுக்கும் வேலை மிச்சம் - நள்ளிரவில் நன்றாக தூங்கலாம்..

பாரதியின் வரிசையில் பதிவர் மணீஜி இணைந்து விட்டார் - மாட்டுக்கறி

என்னுடைய டிவிட்டர் முகவரி

Sunday, July 25, 2010

பாரதி,சாரு,ஜெயமோகன்,வாசகர் கடிதங்கள்

இணையம் மூலமாக நெருங்கிய நண்பரானவர் அவர்.தற்போது கொஞ்சம் என்ன நிறைய காஸ்ட்லியான நகரத்தில் வசிக்கிறார்.எனக்கு சாருவை பிடித்தவர்களை விட அவரை பிடிக்காதவர்களுடன் நிறைய நெருங்க முடிகிறது.வித்தியாசமான பார்வை கொண்டவர்.தீவிர இலக்கிய ஆர்வமுள்ளவர்.ப்ளாக் எழுதுங்க என்று கெஞ்சி கேட்டாலும் மறுத்து விடுகிறார். இனி அவரிடம் கேட்க வேண்டும் - எனக்காவது எழுதி கொடுங்கள் நம் பதிவுலகின் தங்கங்கள் பாணியில் பெயர் வாங்கி கொள்கிறேன். அதற்கு முன் அவரிடம் எச்சரிக்கை செய்ய வேண்டும் - கடவுச்சொல் பத்திரம் என்று.

நேற்று இன்சப்ஷன் படத்தில் ஆரம்பித்து நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தோம். பாரதி ஆங்கிலேயர்களிடன் மன்னிப்பு கடிதம் கொடுத்திருக்கிறாரே என்ற விவாதம் வந்ததும் சொன்னார். அன்று ஆங்கிலேயர்களுடம் பம்மாதவர்கள் கொஞ்சம் தான் உண்டு. இரண்டு பெயர்களை சொல்லி அவர்களும் எழுதியிருக்கிறார்கள்.பிற்காலத்தில் அரசியல் அவர்களுக்கு என்று ஆனப்பின் அந்த கடிதம் அழிக்கப்பட்டிருக்கலாம் என்று சொன்னார். பாரதி பாப்பான் என்று ஆழமாக எதிர்வினை செய்யப்பட்ட சமீபத்திய பதிவில் ஏன் பாரதி மாட்டுக்கறி சாப்பிட்டதை குறிப்பிடாமல் விட்டு விட்டார் என்று கேள்வி வைத்தார். அது தான் இன்று எல்லோருடைய நிலையும் அவர்களுக்கு தேவைப்படுவதை மட்டும் எதிர்வினை செய்ய எடுத்து கொள்கிறார்கள் என்று நிதர்சனம்.

அடுத்து சாரு - நேற்று இணையத்தில் எழுத ஆரம்பித்தவனும் நானும் ஒன்றா என்று வெளுத்து இருக்கிறார். அதற்கு அவர் பதில் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. அவர் காலத்தில் இணையம் இல்லை. திருவள்ளுவர் காலத்தில் பேப்பர்,பேனா இல்லை.அதற்காக நானும் சாருவும் ஒன்றா என்று திருவள்ளுவர் கேட்க மாட்டார் என்ற தைரியமே இப்படி பேச வைக்கிறது என்றும் இதுவே சுஜாதாவாகயிருந்திருந்தால் இன்று ப்ளாக்கர்களையும்,டிவிட்டர்களையும் தூக்கி வைத்து கொண்டாடியிருப்பார் என்றார். கொஞ்ச நேரம் மவுனித்திருந்தேன்.திறமையாக எதிர்வினை செய்யும் ஆட்கள் எல்லாம் வேடிக்கை பார்க்கிறார்கள் என்பது மட்டும் உண்மை.

வாசகர் கடிதம் பற்றி பேச்சு வந்தது. வாசகனை தன் வசத்தில் வைத்திருக்க எல்லா எழுத்தாளர்களும் முயற்சி செய்வார்கள்.அந்த மயக்கத்தின் நீட்சி தான் வாசகர் கடிதம் என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது சாரு,ஜெயமோகனுக்கு வரும் வாசகர் கடிதம் பற்றி பேச்சு வந்தது. க.நா.சு(ப்ரமணியன்) காலத்திலே இது ஆரம்பித்து விட்டது என்றும் அதாவது அவர்களே அவர்களுக்கு வாசகர் கடிதம் எழுதிக் கொள்வார்கள் என்று சொன்னார்.

உதாரணம் அவர் சாருவை சொன்னார். "சாரு உங்கள் புகைப்படத்தை வைத்து பார்த்துக் கொண்டேயிருக்கிறேன்..தினமும் இருபது முறை உங்கள் தளத்திற்கு வருவேன்.." இப்படி ஆரம்பித்து உருகலாக எழுதப்பட்டிருந்தது.அதை எழுதியது ஒரு பெண்.நிச்சயம் இதை சாரு அல்லது அவருக்கு நெருக்கமானவர்கள் தான் எழுதியிருப்பார்கள் என்று சொன்னார்.

என் பங்கிற்கு நான் ஜெயமோகனை சொன்னேன். அனல்காற்று கதைக்கு பின் ஒரு வாசகர் கடிதம் வருகிறது.அதன் சுட்டியை இங்கு நான் கொடுக்கலாம்.பிறகு இணைய போர்னோ அது இது என்று குத்து டான்ஸ் போட வாய்ப்பிருப்பதால் அதன் சுருக்கம் மட்டுமே இங்கு.

"இந்த கதையில் வருவது போல எனக்கு ஒரு மூத்தப் பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டது.அதுவும் என் இருபத்தைந்தாவது வயதில்.அவள் என்னை பிடிக்குள் வைத்திருந்தாள்.அதிலிருந்து மீண்டு நான் பொறியியல் படித்து முடித்தேன்.தற்போது எனக்கு முப்பது வயது."

இருபத்தைந்தாவது வயதில் பொறியியல் படிப்பா.எந்த ஊரில் கொடுக்கிறார்கள்.சொன்னால் நானும் போய் சேர வசதியாக இருக்கும்.அனல் காற்று கதையிலேயே வயது குழப்பமிருந்தது என்று ஏற்கனவே சுட்டியிருந்தேன். அதனாலே என்னவோ இது ஜெயமோகனே எழுதி விட்டாரோ என்று சந்தேகம் ஏழாமல் இல்லை.

தவிர இருபது வருடம் இருந்தால் தான் இலக்கியவாதி,எழுத்தாளர் இல்லை.முதல்வன் படத்தில் ரகுவரன் சொல்வார் - "எனக்கு முப்பது வருட அனுபவமிருக்கு.." அதற்கு அர்ஜூன் - "எனக்கு முப்பத்தியொரு வருடம் அனுபவமிருக்கு..உன் அனுபவத்தையும் நான் சேர்த்துக் கற்றுக் கொண்டேன்.." என்று சொல்வார். யார் வேண்டுமானாலும் எந்த நேரத்தில் புரட்டிப் போடும் இலக்கியம் படைக்க முடியும் என்பது தான் என்னுடைய எண்ணம்.

யார் வேண்டுமானாலும் எதை பற்றி வேண்டுமானாலும் விமர்சனம் செய்யலாம்.படைப்பை பொதுவில் வைத்து விட்டால் அது படைப்பாளிகளுக்கு சொந்தமில்லை.ஜெயமோகன் சொல்வது எப்படி இருக்கிறது என்றால் முப்பது வருடம் சினிமாவில் இருப்பவரை நேற்று வந்த பதினெட்டு வயது பார்வையாளன் விமர்சிக்க கூடாது என்று சொல்வது போலுள்ளது.முப்பது வருட சினிமாவையும் பார்த்து வர வேண்டுமென்றால் ரொம்ப ஸாரி.

சாரு தன் தளத்திலிருந்து பதிவை நீக்கியது போல ஜெயமோகனும் நீக்கியுள்ளார்.அதில் எழுத்தாளனின் இரத்தத்தில் சுவடை பதித்து கொண்டு கேள்வி எழுப்புவர்கள் உங்களைப் போன்றவர்கள் தான்.ஏன் அந்த பதிவை நீக்கினார் என்று யோசித்து பார்த்தேன். இதற்கு பாலகுமாரனைப் பற்றி எழுதி அவர் வாசகரிடம் இருந்து வாங்கிக் கட்டிக் கொண்டார். வாசகர் என்ன சொன்னார் என்று பார்ப்போம். "பாலகுமாரன் கதையில் வருபவன் தன் முனைப்பு உடையவன், உங்கள் கதையில் வருவதை போல தன் ஆசிரியையே துரத்தி துரத்தி வலுக்கட்டாயமாக உறவு வைக்க மாட்டான், மாமியாரைப் பற்றி கனவு காண மாட்டான்.." இப்படி ஆரம்பித்து வெளுத்திருந்தார்.உடனே ஜெயமோகன் பம்மினாரே பாக்கலாம். வாசகர்களும்,பார்வையாளர்களும் சரி என்றுமே படைப்பாளியை விட புத்திசாலிகள்.திரும்பவும் அந்த வாசகர் ஞாபகத்தில் வந்திருப்பார்.காரணம் நீக்கப்பட்ட பதிவில் பாலகுமாரனைப் பற்றி எழுதியிருக்கிறார்.பழைய சுட்டி அவர் தளத்திலேயே இருக்கிறது.எனக்கு ஸ்கீரின் ஷாட் எடுப்பது வேலையில்லை.முடிந்தால் அதை நீக்கும் முன் படித்து கொள்ளவும்.

வாசகர் கடிதம் எனக்கு நானே எழுதியிருக்கிறேன்.அப்ப நான் இலக்கியவாதியா. எழுத(கிறுக்க) வந்து ஒரே வருடத்தில் உனக்கு நீயே வாசகர் கடிதம் எழுதலாம் என்று இலக்கியவாதிகள் சண்டைக்கு வருவார்களா.நாங்கள் எல்லாம் இப்படி எழுத இருபது வருடம் ஊறியிருக்கிறோம்.(எதுல சொன்னா நானும் ஊறுவேன்).இணையம் கிடைத்தால் தம்மாத்துண்டு எல்லாம் துள்ளிக் குதிக்குது இப்படி சொன்னால் ஆச்சர்யமல்ல.பி.ப சொன்னது போல இப்போதெல்லாம் ஜெ.மோவை நிறைய படிக்கிறேன்.வட நிறைய கொட்டிக் கிடக்கிறது.

Saturday, July 24, 2010

போபால்,போலி கம்யூனிசம்,ஒரு பக்கச் சார்பு,புண்ணாக்கு,போராட்டம் - 2

கார்த்தி,

சீனா கம்யூனிச நாடே இல்லையா அப்பாடி இப்பவாவது ஒத்துக் கொண்டதற்கு நன்றி..

சீனா அருணாசலப் பிரதேசத்தை ஆக்கிரமித்தைப் பற்றி கேட்டால் - கேவலம் வீடியோ பிடிப்பது தான் சாதாரணமாக சொல்லி விட்டாயே. நர்சிம் விவகாரத்தில் பாய்ந்து வந்தாயே ஏன் உனக்கு பிடித்தவர்கள் அவர்களைஆதரித்தார்கள் என்று நினைத்து விட்டேன்.எனக்கு எப்படி கேரள வெறுப்போ(அதுவும் நீ சொன்னது தான்) உனக்கு பார்ப்பனர்கள் மீதுள்ள வெறுப்புத்தான் காரணம் என்று தெரிந்தது.

நம் வீட்டு பெண்கள் யாருமில்லையே அது சாதாரண வீடியோ தான்.உன் வீட்டில் வந்து குப்பையையும்,கழிவுகளையும்,நாயையும் பற்றி விடவில்லையே.அப்ப அதுவும் சாதாரணம் தான்.உனக்கு இருப்பது கேரள கம்யூனிஸ்ட் பாசம் என்று இந்த இடுகை மூலமே தெரிகிறதே. நான் தெளிவாக சொல்லியிருக்கிறேன்.வீட்டில் இருந்து போராட வாருங்கள் என்று சொல்வது எளிது.

எனக்கு வேறு விடயங்கள் தான் முக்கியம்.நான் ஒன்றும் புரட்சியாளன் அல்ல.நேரத்தை கொல்ல இணையம் பயன்படுத்தும் சாதாரண ஆள்.நீங்கள் தான் புரட்சி பேசுவீர்களே ஏன் இதையும் தட்டிக் கேட்க வேண்டாமா என்று கேட்டேன்.

சாதாரண வீடியோ என்று சொல்லும் போதே தெரிகிறதே - உனக்குள் இருக்கும் சமூக அக்கறை.அதனால் சொல்கிறேன் போலிகள் என்று.

போபாலில் நடந்தது திட்டமிட்ட படுகொலை என்று சொல்கிறாயே.இதற்கு முன்பும் கசிவு நிகழ்ந்திருக்கிறது என்று சொல்கிறாயே.ஆதாரத்தோடு சொல்ல வேண்டும்.எத்தனை பேர் இறந்தார்கள் என்று சொல்ல வேண்டும்.கசிவு நிகழ்ந்ததே -  அப்போதே போராட்டம் நடத்தவில்லை.இன்னும் என் தளத்தில் ரஷ்ய விபத்து பற்றி கம்யூனிஸ்ட் காரர்கள் வாயைத் திறக்கவில்லை. நீயாவது சொல் கார்த்தி.நீ நிறைய படித்தவர்.நானோ உங்கள் தோழர் ஏழர சொன்னது போல் முட்டாள் தான்.கொஞ்சம் விளக்கி சொல்ல வேண்டியது தானே.படித்து விட்டு சொல் ஒண்ணும் பிரச்சனையில்லை.

ஏன் அது மாதிரி ஆலைகள் அமைக்க வேண்டும்.மேற்கு வங்கத்தில் போராட்டம் நடத்தி தொழிலாளர்களின் வேலை வாய்ப்பைப் பிடுங்கியது போல ஆபத்துள்ள வேலையும் தடுக்க வேண்டியது. ஏன் மக்கள் சாகும் வரை காத்திருக்கிறீர்கள்.அல்லது கசியும் போதே போராட வேண்டியது தானே.

முதல்ல தமிழ் நாட்டில் நடப்பதையே தட்டிக் கேட்க முடியவில்லை.நீங்கள் எல்லோரும் போய் போராடிய உடன் ஆண்டர்சன்னைத் தூக்கில் போட்டு விட்டு தான் மறுவேலை.முதலில் உன் வீட்டில் இருந்து ஆரம்பி.அப்புறம் மாநிலம்,நாடு என்று போகலாம்.கார்த்தி நீ கம்யூனிஸ்ட் தானே.போபாலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்வளவு காசு மாதமாதம் கொடுக்கிறாய். கொடுப்பதில்லை தானே.கம்யூனிசத்தின் அடிப்படையே எல்லோருக்கும் சமமாக கிடைக்க வேண்டும் என்பது தான்.உன் சம்பளத்தில் பத்தில் மூன்று பங்கை வைத்து விட்டு மற்றவர்களுக்கு உதவி செய். முடியாத உனக்கு அது ஒரு சாதாரண வீடியோ தான்.

என்னிடம் வீடியோ ஆதாரம் உள்ளது..உன்னிடம் எத்தனை முறை வாயு கசிந்தது.எத்தனை முறை கம்யூனிஸ்ட் போராடினார்கள் என்று சொல்ல வேண்டும்.

கடலூர் பிரச்சனைக்கு என்ன செய்தீர்கள் என்று கேட்கக் கூடாது.உங்களுக்கு இதுவும் வீடியோ போல சாதாரண பிரச்சனை தான்.நடந்தப்பின் தான் குதிப்போம் என்று சொல்பவர்கள் நீங்கள்.தவிர உங்களுக்கு இருபது ஆண்டுகளுக்கு முன் நடந்த பிரச்சனையைப் பற்றி பேசும் தொலை நோக்கு உள்ளவர்கள். கடலூரைப் பற்றி உங்களிடம் பேச சொல்லலாமா.அப்புறம் அதை படி.இதை படி என்று சொல்வீர்கள்.

பெண்ணுக்கு எதிராகவே புனைவு எழுதினாலே பொங்கும் நீங்கள் வீடியோ எடுத்ததைப் பற்றி எழுதாதது ஏன் என்று கேட்டால் அது சாதாரண வீடியோ என்று சொல்கிறீர்கள்.அது சரி நீங்கள் அசிங்கமாக திட்டிய லீனா மணிமேகலையும் பெண் தானே.தயவு செய்து இனி பெண்களின் காவலர்களாக நடிக்க வேண்டாம்.அதுவும் நீ நடிக்க வேண்டாம்.

அப்படியே ரஷ்யாவும் கம்யூனிச நாடு இல்லையா என்று அழுத்தி சொல்லவும்.பாருங்க நான் எல்லாம் முதலில் கூரை ஏறி கோழி பிடிப்பவன்.அப்புறம் தான் வைகுண்டம்.நீங்கள் எல்லாம் நேராக வைகுண்டம் போகும் நபர்கள்.

எனக்கு இந்த விடயம் தான் முக்கியம்.இதற்கு முன் எதிலாவது நான் கேரளாவைப் பற்றி விமர்சித்து என் கோபத்தை காட்டினேன் என்று நிரூபிக்க வேண்டும்.சச்சினின் புத்தகம் பற்றி எழுத முடிந்தவர்களால் இதை பற்றி எழுத முடியாமல் போவது சகஜம் தான்.

போபால்,போலி கம்யூனிசம்,ஒரு பக்கச் சார்பு,புண்ணாக்கு,போராட்டம்

முன் குறிப்பு - நான் போபால் பற்றி எழுதப் போவதில்லை. காரணம் அது ஒரு விபத்து என்பதையும் தவிர நான் தட்டிக் கேட்க போபாலை விடவும் பெரிய விடயங்கள் இருக்கிறது. போபாலைப் பற்றி யாரும் எழுதவில்லை என்று வருத்தம் நண்பர்களுக்கு இருந்தாலும் சில உண்மைகளைத் தெரிந்து கொண்டு தான் நாம் பேச வேண்டும்.

போபாலில் நடந்தது ஒரு விபத்து.எப்படி இத்தனை நபர்களின் உயிரை எடுத்த மீதேல் ஐசோ சயனைட் வாயு முதன் முதலில் தயாரிக்கப்பட்ட ஆண்டு 1979.ஐந்து வருடங்கள் ஒன்றுமே நடக்கவில்லை. நாமும் போராடவில்லை. வரும் முன்னே தான் நாம் போராட மாட்டோமே. தவிர விபத்து நடந்த அன்று சுத்தம் செய்ய தண்ணீர் விடும் போது 42 டன் மீதேல் ஐசோ சயனைட் இருந்த தொட்டிக்குள் தண்ணீர் விடப்பட்டுள்ளது. அடுத்த நாள் விசாரணையில் பைப்பில் இருந்த பழுதினால் தான் தண்ணீர் போனது என்று பொய்யான தகவல் தரப்பட்டது. அது விசாரணையில் பொய் என்றும் புதிதாக ஒரு பிரஸர் காஜ் மாட்டப்பட்டது என்றும் தெரிய வந்தது.இருந்தாலும் அது மறைக்கப்பட்டது.

அங்கு அதிகளவில் கோல்மால் நடக்கும் போது அதை அடிக்கடி சென்று பார்க்காதது யார் தவறு. ஒரு பொறியியல் மேலாளரையே காப்பாற்ற அவர்கள் முயற்சிக்கும் போது ஏன் அரசாங்கம் ஆண்டர்சனை காப்பாற்ற பார்க்காது.நம் அரசாங்கத்தின் மீது ஓட்டைகளை வைத்து கொண்டு எழுத வரவில்லை என்று வருத்தப்பட்டால் என்ன செய்ய நான் எழுத மாட்டேன் தான்.காரணம் அதை விட பெரிய ஆபத்துகள் நம்மை சுற்றியிருக்கிறது.

1.தமிழ் நாட்டில் இருந்து எடுத்து செல்லும் மாடுகளைத் தின்று ஏப்பம் விட்டு விட்டு கழிவுகளைத் தமிழக எல்லை பகுதிகளில் கொட்டுகிறார்கள்.இதை ஏன் வினவு போன்ற கம்யூனிஸ்ட்காரர்கள் கேட்பதில்லை.

2. கேரளாவில் பிடிக்கப்பட்ட வெறி நாய்களைக் கொல்லாமல் தமிழக எல்லைப் பகுதியில் விட்ட கேரள வனத்துறையினரைத் தட்டிக் கேட்கவில்லை தமிழக கம்யூனிஸ்ட்காரர்கள்.

3.இரண்டு மாநிலம் தாண்டினால் தான் மகாராஷ்ட்ரா மாநிலம் போய் விதர்பா,சச்சின் எழுதிய ரத்தப் புத்தகம் பற்றி எழுதியதை இங்கிருந்தே காறித் துப்பும் வினவித் தோழர்கள் ஏன் கேரள அருவியில் குளிக்கப் போகும் தமிழகப் பெண்களை நிர்வாணப்படுத்தி வீடியோ எடுத்த கேரள வனத்துறையினர் மீது எந்த விமர்சனமும் வைக்கவில்லை. இல்லை இந்த செய்தி வினவுத் தோழ்ர்களுக்கு தெரியாதா. நான் அந்த வீடியோவைப் பார்த்தேன்.அதிலிருந்த அம்மா கதறிய கதறல் இன்னும் என் காதில் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது. சக நாட்டவர் மீதே இந்த வன்முறை என்றால் அதுவும் ஏன் இலங்கையில் எதிரி என்று பார்க்கப்படும் தமிழர்களின் மீது சிங்கள ராணுவத்தினர் செய்ய மாட்டார்கள்.

கம்யூனிஸ்ட் என்றால் நாங்கள் தட்டிக் கேட்ட மாட்டோம் என்று வினவுத் தோழர்கள் சொல்கிறார்கள். இல்லை சச்சின் போன்றவர்களை விமர்சனம் செய்தால் கூட்டம் கூடுமே என்று நினைக்கிறார்களா. இல்லை நடந்தது அவர்களுக்குத் தெரியாது என்று சொல்வார்களா.

முதல்ல இங்கு இருக்கும் பிரச்சனையை நாம் சரி செய்வோம். பிறகு போபால் பற்றிப் பார்ப்போம். போபால் பற்றி இந்த அளவிற்கு விமர்சனம் செய்ய காரணம் அது கம்யூனிஸ்ட்களுக்கு பிடிக்காத முதலாளித்துவம் மட்டுமே காரணம்.இதே போல் ஒரு பேக்டரியை கம்யூனிஸ்ட் அரசாங்கம் வைத்திருந்தால் ஒன்றும் கேட்க மாட்டார்கள்.

முதலில் கம்யூனிசம்,இத்துப் போன ரசம் பேசுபவர்கள் எல்லாம் கம்யூனிசம் வெற்றி நடைப் போடுகிறது என்று மார்த்தட்டும் சீனாவில் போய் இருந்து வாருங்கள்.பக்கத்து கிராமத்திற்கு போக வேண்டும் என்றாலும் விசா வேண்டும்.அதாவது உங்களுக்கு தெரியுமா.சரி விடுங்கள்.அருணாசலப் பிரதேசம் எங்களிடையது என்று சொல்கிறார்களே.அதை என்றாவது பேசியது உண்டா.

இன்று இந்தியாவை சுற்றி வலை மாதிரி துறைமுகங்கள் பாகிஸ்தான்,இலங்கை,பர்மா என்று கட்டியிருக்கிறார்களே அது பற்றி மக்களுக்கு சொன்னது உண்டா. முடிந்து போன விஷயத்தை வெட்டித்தனமாக பேசுவதை விட(ஒன்றும் கிழிக்க முடியாது என்று தெரிந்தப் பிறகும் பேசுவதை விட)
இது மாதிரி விஷயங்களை பேசலாம்.

கார்த்தி எது பற்றிப் பேசினாலும் உன் நிலையில் இருந்து மாறுவாயே..இன்று போலிகளின் போராட்டத்தனத்தைப் பற்றி நான் கிழித்திருக்கிறேன்.உன் நிலை என்ன. நீ போராடுவாயா.பந்து உன் பக்கமிருக்கிறது.

தூத்துக்குடியில் கழிவுப் பொருட்கள் கொண்டு வரும் கப்பல்களை நாம் வாங்கி உடைக்கிறோம்.அதை பற்றி பேசு.கேரள கம்யூனிஸ்ட்களின் துரோகங்களைப் பற்றி பேசு. தொடர் பதிவு எழுத கூப்பிடு.நான் வருகிறேன். சரி தொடர்பதிவு எழுத அழைக்கும் போது உயிர் நண்பன் என்று இருந்ததே.ஒரே நாளில் அது இல்லை.சரி எப்படியோ போகட்டும்.வெண்ணிற இரவுகள் கார்த்தி நீ என் உயிர் நண்பன் தான்(யார் சொன்னாலும் இதை எடுக்க மாட்டேன்).

கேரள அருவியில் நடந்தது

''துணியை அவிழ்த்துப் போடு... ம்ம்... கழட்டு!''

''ஐயோ வேணாம் சாமீ...''

''ஏய், விடுடி... துணியை விடுடி...''

''வேணாங்க... கால்ல வேணும்னாலும் விழுறேங்க ஐயா... இனிமே இங்கே குளிக்க வரலீங்க... விட்ருங்க...''

''டேய்! இவளை மட்டுமில்ல... இன்னொருத்தி யையும் மதியம் வரை அம்மணமா நிறுத்தி வைக் கணும், தெரிஞ்சுதா? அவ துணியையும் கழட்டி எறி...''

இது ஏதோ திரைப்படக் காட்சி இல்லை. கேரளா வில் கும்பாவுருட்டி அருவியில் குளித்து மகிழக் குதூகலமாகச் சென்ற தமிழகக் குடும்பத்துக்கு நேர்ந்த அவலம்தான் இது. இதை செய்தது, சமூகவிரோதிகளோ ரவுடிக் கூட்டமோ இல்லை. வனத்தையும் வனப்பகுதிக்கு வரக்கூடிய பொதுமக்களையும் பாதுகாக்கவேண்டிய 'வன சம்ரக்ஷண சமிதி' எனப்படும் கேரள வனக்குழு உறுப்பினர்கள்தான் அந்த ஓநாய்கள்! மகளின் மானம் காப்பதற்காக தனது உடைகளைக் களைந்துவிட்டு நிர் வாணமாக தாய் ஓடிக் காட்டியதை கைகொட்டிச் சிரித்து ரசிக்கும் கொடூர மனம் கொண்ட அந்தக் கொடியவர்களின் பிடியில் இருந்து கடைசியில் மகளும் தப்பமுடிவில்லை. அந்தக் குடும்பத் தலைவரின் கண்ணெதிரிலேயே நிகழ்ந்திருக்கிறது அத்தனை கொடுமையும்!

நெல்லை மாவட்டம் செங்கோட்டை வழியாக அச்சன்கோவில் செல்லும் சாலையில் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள கும்பாவுருட்டி அருவி, கேரள வனத் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. எப்போதும் இங்கே ஆர்ப்பரித்து விழும் அருவியில் குளிக்க, சுற்றுப்பட்டுத் தமிழக கிராம மக்கள் செல்வது வழக்கம். மேக்கரையில் அமைந்துள்ள வனத் துறை செக் போஸ்ட்டில் ஐந்து ரூபாய் நுழைவுச் சீட்டு பெற்று, அரை கிலோமீட்டர் அடர்ந்த காட்டுக்குள் நடந்தால், அருவி வருகிறது. ஆள் அரவமற்ற அருவியில் குளிக்கச் செல்லும் தமிழகப் பெண்களிடம் வனத் துறையினர் சில்மிஷச் சேட்டைகளில் ஈடுபடுவதாக அவ்வப்போது புகார்கள் எழுவதுண்டு.

அப்படித்தான் மேலே சொல்லப்பட்ட பெண்களை யும் நிர்வாணமாக்கிக் கதறவிட்டு, அதை செல்போனில் படம் பிடித்தும் ரசித்து இருக்கிறார்கள். வன ஊழியர் ஒருவர், அந்த செல்போனை கடை ஒன்றில் சார்ஜ் ஏற்றத் தந்து, அதை மறந்துவிட்டுச் சென்றபோது... அதை நோண்டிய கடைக்காரரின் கண்ணில் பெண்களை நிர்வாணமாக்கிக் கொடுமைப்படுத்தும் படங்கள் ஏராள மாகச் சிக்கி இருக்கிறது. உடனே, தன் செல்லுக்கு அதை டவுன்லோட் செய்திருக்கிறார். அவற்றில் ஒரே ஒரு காட்சிதான் மேலே விவரிக்கப்பட்டு இருப்பது.

இதை தமிழ் நாட்டில் இருக்கும் குறைந்தப் பட்ச தமிழர்களாவது படிக்க வேண்டும்.அந்த பட்டிகளின் நாடு தேவதைகள் ஆசீர்வதிக்கப்பட்ட நாடாகவே இருந்து விட்டுப் போகட்டும். நமக்கு குற்றாலம் இருக்கிறது முடியாவிட்டால் வீட்டில் குளிப்போம். அங்கு குளிக்க வேண்டுமானால் இப்படி நடக்கும் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொண்டு தேவையான பாதுகாப்போடு போவோம்.

இதை ஏன் வினவு தட்டிக் கேட்கவில்லை.காரணம் விடுங்க விடுங்க.நீங்க என்றுமே ஒரு நிலைச் சார்பு உடையவர்கள்.(உடனே பாருங்கள் தல என்பவர் வந்து மைனஸ் போடுவார்.இதை தானே செய்ய முடியும்.)

Friday, July 23, 2010

பெண்கள் v/s ஆண்கள்

பெண்கள் மற்றும் ஆண்கள் இருவருக்கும் உள்ள வித்தியாசங்கள்

1.பெண்களிடம் பிடித்த ஹீரோ யார் என்று கேட்டால் நிச்சயம் விஜய்,அஜித்,சூர்யா,மாதவன் என்று கல்யாணம் ஆன நபர்களின் பேரே வரும்.ஒரு குரூப்புக்கே (நான்கு முதல் ஐந்து வரை) ஒரே ஒரு ஹீரோவின் பேர் தான் இருக்கும்.இதுவே ஆண்களிடம் கேட்டால் லேட்டஸ்ட் நாயகியின் பேரை மந்திரமாக உச்சரிப்பார்கள் (அவர்களுக்கு கல்யாணம் ஆகும் வரை தான் அதுக்கு அப்புறம் அது போன மாசம் கதைதான்)

2.பெண்கள் பெரும்பாலும் ஒத்த ரசனை உள்ளவர்களிடம் நட்பாக இருப்பார்கள்.( ஒரே சென்ட் உபயோகிப்பார்கள்,ஒரே மாதிரி சாப்பாடு ஆர்டர் செய்வார்கள்)ஆண்கள் மாறுப்பட்ட ரசனை உள்ளவர்களிடம் நட்பாக இருப்பார்கள்.(அப்பதான் விவாதம் என்று வந்தால் டவுசர மாத்தி மாத்தி கிழிக்க முடியும்.)

3.பெண்களுக்கு அனுபவசாலிகளை ரொம்ப பிடிக்கும்( அது தெரிந்து தான் எனக்கு ஏற்கனவே லவ் பெயிலியர் இந்த பிட்ட பசங்க ஆயுதமா போடுறாங்க)ஆண்களுக்கு அனுபவசாலிகளை கண்டாலே பிடிக்காது காரணம் அட்வைஸ்.( அனுபவத்தில் தெரிந்து கொள்ள ஆசை படுவார்கள் நெருப்பு சுடும் என்பதை கையை விட்டு தான் தெரிந்து கொள்வார்கள்.)

4.பெண்களுக்கும் சண்டை வரும் பொழுது ரகசியங்கள் வெளியே வந்தே ஊரே சிரிக்கும். (உதாரணம் குடுத்தா எனக்கு வர்ற ஒன்னு இரண்டு பின்னுட்டங்களில் என் காதில் ரத்தம் வரும்)ஆண்கள் சண்டை போடும் பொழுது சேர்ந்து செய்த "மிக பெரிய தவறை" மட்டும் சாமர்த்தியமாக மறைத்து விட்டு சண்டை போடுவார்கள் (இதுக்கும் உதாரணம் கிடையாது காரணம் இருபாலரும் சமம். மேலே கொடுத்தால் இங்கேயும் வரும்)

5.பெண்கள் பெரும்பாலும் மிக சரியாக யோசித்து தவறாக முடிவு எடுப்பார்கள்.செயல்படுத்தும் பொழுது சரியாக நடக்கும் (girl's thing என்று பந்தா செய்வார்கள்)ஆண்கள் யோசிக்கவே மாட்டார்கள் எண்பது சதவீதம் சரியாக இருக்கும் ஆனால் நடக்காது. இருபது சதவீதம் தவறாக இருக்கும் உடனே நடந்து விடும்.

6.பெண்கள் அவர்களது கருத்துக்கு உடன் படும் ஆண்களை ரொம்ப பிடிக்கும்
(எப்பவும்மே இப்படிதானா).ஆண்களுக்கு எதிர் கருத்து சொல்லும் பெண்களை ரொம்ப பிடிக்கும்.(காதலிக்கும் பொழுது மட்டும் )

7.ஒரு விசயத்தில் பெண்கள் என்னுடைய பாட்டி காலத்தில் இருந்தே மாறவில்லை.(1970 ஆம் ஆண்டு இருந்த பெண் சுதந்திரத்திற்கும் இப்பொழுது இருக்கும் பெண் சுதந்திரத்திற்கும் நிறைய வித்தியாசம் உண்டு இன்னும் வரும் ஆண்டுகளில் இதுவும் மாறும் அப்பொழுதும் எங்களுக்கு சுதந்திரம் இல்லை என்றே சொல்வார்கள்)ஆண்கள் எப்பொழுதுமே பெண்களை புரிந்து கொள்ள முயற்சி செய்வார்கள்.புரிந்து கொள்ளவே முடியாது.
மாறி கொண்டே இருக்கிறார்கள் இந்த விசயத்தில்.ஆண்களை வளர்ப்பதே பெண்கள் தான்.

8.பெண்கள் ஆண்கள் கண்டுப்பிடிப்பதை எடுத்து கொள்வார்கள்.
(ஹைஹீல்ஸ் ஆண்களுக்காக கண்டுப்பிடித்தது)ஆண்கள் வேறு எதாவது செய்ய போய் விடுவார்கள்.(அப்பத்தானே தங்கமணி கிட்ட நல்ல பேர் வாங்க முடியும்)

Thursday, July 22, 2010

ஏதோ தோணிச்சி அதான் சொல்றேன்

சாரு டான்ஸ் ஆடி முட்டி எல்லாம் கழன்று விட்டது என்று சொல்லும் போதே சந்தேகமிருந்தது. குசும்பன் பதிவு பார்த்தப் பிறகு தான் நிவர்த்தியானது. மிஷ்கின் சாருவிடம் மிதி வாங்கும் நாள் தூரத்தில் இல்லை என்பது நிதர்சனம். நடந்து நடந்து முட்டி கழன்று விட்டது போலும். இதுக்கா சாரு பயங்கரமாக பிராக்டிஸ் செய்தார். அப்பாடி நான் குசும்பனுக்கு முன்னாலே இதை பற்றி எழுதி வடையை கேட்ச் பிடித்து விட்டேன். டிவிட்டர்,ஃபேஸ்புக் என்று சுட்டித் தந்து அமர்களப்படுத்தி விட்டார்கள் சாருவின் விசிறிகள். அதன் சுட்டி இதுதான்.

ப்ளாக் எழுதவே கூடாது என்று நினைத்தாலும் சும்மா இருக்க முடியவில்லை. ஆடிய வாயும், சொறியும் கையும் சும்மாவே இருக்காது என்பது மட்டும் உண்மையிலும் உண்மை. சொறிய சொறிய சுகம். அதுவும் அடுத்தவர் சரி வேண்டாம் விடுங்க.ஏதாவது எழுதினால் ப்ளாக் பாலோயர் ஓடி விடுகிறார்கள்.பாலோயர் யாரும் ஓடி விடக்கூடாது என்று டிவிட்டர் மற்றும் பஸ்ஸில் எழுதுவதேயில்லை.ஆனால் தொடரும் நபர்கள் அதிகமாகிக் கொண்டே இருக்கிறார்கள்.என்ன லாஜிக் இது.நான் எழுதாமல் இருப்பது நல்லது என்று சொல்கிறார்களா.

சாருவைப் பற்றி எழுதவே மாட்டேன் என்று உறுதிமொழி எடுத்தாலும் எழுதாமல் இருக்க முடிவதில்லை.அதுவும் குறிப்பாக சிலருக்கு அதிலும் குறிப்பாக எனக்கு. சாரு எழுதுகிறார் என்றால் வாங்காமலிருந்த ஆனந்த விகடன் எல்லாம் வாங்குகிறேன் என்றால் பாருங்களேன். ஸ்கீரின் ஷாட் எடுக்க அவர் தளத்தில் பழியாய் கிடக்குறேன். காலை,மதியம்,சாயங்காலம்,இரவு நேரம் காலம் பார்க்காமல் அங்கேயே தஞ்சம் கிடக்கிறேன்.ஆனாலும் எனக்கு ஜெயமோகன் தான் பிடிக்கும். ஆனால் என்ன செய்ய சாரு பற்றி எழுதினால் தான் இலக்கியவாதிகள் வருகிறார்கள். ஜெயமோகனை பிடித்தாலும் அவரை பற்றி எழுதினால் கல்லா கட்ட முடிவதில்லை.மனங்கொத்தி பறவை சரியில்லையே சிங்க மாமிசம் எல்லாம் எங்காவது கிடைக்குமா என்ன கொடுமை சார் இப்படி வாராவாரம் புலம்பிக் கொண்டு இருக்கிறேன்.ஜெயமோகன் படித்து நல்ல இலக்கியங்களை எல்லாம் அறிமுகப் படுத்த நினைத்தாலும் இந்த கிசுகிசு எழுத்தாளரைப் பற்றி எழுதாமல் இருக்க முடிவதில்லை.அந்த அளவுக்கு தூக்கத்தில் கூட அவர் தான் நிரம்பியுள்ளார். ஒரு வேளை சாரு என்ற பெயர் தான் காரணமாகயிருக்குமோ. ஜெயமோகனை கூட ஜெ என்று சொல்கிறார்கள்.அது இந்த அளவிற்கு வசீகரமாக இல்லையே.நான் என்னை சொன்னேன்.

செல்போன்,கணினி இல்லாத தொண்ணூறுகளின் தொடக்கத்தில் எல்லாம் நாவலாசிரியர்கள் புரட்சி செய்தார்கள்.இன்று எந்த கதையை எடுத்தாலும்,எழுதினாலும் நாயகியைப் புணராமல் விடுவதில்லை. கடைசியாக படித்த இரண்டு ஜெயமோகன் நாவல்களிலும் இதுதான் நடக்கிறது. இதை தாண்டி சிந்தனை வருவதேயில்லை.ஆல் கிரெடிட்ஸ் கோஸ் டூ டெக்னாலஜி. எனக்கு ஜெயமோகனை வாசிப்பதில் ஏதோ ஒரு தடை இருந்தாலும் கொஞ்சம் அவர் பக்கம் வசீகரிக்கப்படுகிறேன். வயதாகி வருகிறதோ என்னவோ.

மற்ற நாடுகளில் இருந்து யாராவது படிக்கும் அடி மனதில் ஒரு சந்தோஷமிருந்தாலும் அதீத சந்தோஷத்தை தருவது அந்த நாட்டு கொடிகள். அந்துமணி ஒருமுறை சொன்னது உண்மை தான். அவருக்கு ஒரு வாசகர் ஆப்கனில் இருந்து கடிதம் எழுதினாராம். அந்த நேரத்தில் தாலிபான் - அமெரிக்கா சண்டை உச்சத்தில் இருந்ததாம். அங்கிருந்து படித்தது அவர் எழுத்திற்கு கிடைத்த வெற்றி என்று சொன்னார். அது தரும் பரவசம் கொஞ்சம் அதிகம் தான்.

வாசகர்கள் தெளிவாக இருக்கிறார்கள். ஒரு பிரபல பத்திரிக்கை. அவர் சொல்வார் ஆணாதிக்கவாதிகளை ஒழித்து கட்ட வேண்டும் என்று. ஆனால் பெண்கள் பத்திரிக்கையைக் கிண்டல் அடித்து அவர் ஆணாதிக்கத்தை வெளியே காட்டினார்.ஒரு வாசகர் வந்து நீங்கள் என்ன ஒழுங்கா என்று எகிறவும் அந்த பக்கம் இணையத்தளத்திலிருந்து காணாமல் போய் விட்டது. அப்படி ரசித்த இன்னொரு கமெண்ட் டேய் ஸ்ரீலங்காவும் இந்தியாவும் என்ன ஹோமோவா எப்பவும் மாத்தி மாத்தி மச்சான் நீ ப்ரியா என்று விளையாடிக் கொண்டு இருக்கிறீர்கள் என்று ஒருவர் சொல்லியிருந்தார். எல்லாம் அரசியல் பாஸ் அரசியல்.

Wednesday, July 21, 2010

மதனும்,சில ரகசியங்களும்

"அமர் ஒரு பொண்ணு கூடயாவது உனக்கு ஒழுங்கா பேசத் தெரியுமா.." மதன் எல்லார் முன்னாலும் நக்கலடித்து கொண்டிருந்தான். விஷயம் ஒன்றுமில்லை. ப்ளஸ் ஒன் பொண்ணு பக்கத்தில் அமர்ந்து தேர்வு எழுதும் போது அவள் சந்தேகம் அவளை கடித்து குதறியிருந்தேன். அந்த கோபத்தில் என்னை பிட் அடிக்க விடாமல் செய்து விட்டாள்.

"அப்படியே இருந்திட்டு போறேன்..உனக்கு எங்க வலிக்குது.." கோபத்தை குரலில் காட்டினேன்.பொதுவாக கேடித்தனம் செய்யும் போது ஸ்கெட்ச் போடுவது மட்டுமே என் வேலை. இன்னைக்கு பாத்து ஒரு வேலைக்கு ஸ்கெட்ச் போட்டிருந்தோம். செயல்படுத்தப் போவது மதன். அதனால் அவனை அடிக்காமல் விட்டிருந்தேன்.

ஜூவாலஜி லேப்பை இடமாற்றம் செய்யத் தொடங்கியிருந்தார்கள். எல்லோரும் கட்டாயம் வர வேண்டும் இல்லை மார்க்கில் கை வைப்பேன் என்று மிரட்டப்பட்டிருந்தோம். மதனும், நானும் போய் லேப் பக்கத்தில் இருந்த அறையில் வெட்டி நியாயம் பேசிக் கொண்டிருந்தோம். பழைய அலுமினி எவனோ அவன் சேர்த்திருந்த தபால் தலைகளை விட்டு விட்டுப் போயிருந்தான். வாத்தி எல்லோருக்கும் கொடுக்க சொல்லியிருந்தாலும் என்னுடைய பென்ச்சில் இருப்பவனே கொடுப்பதாக சொல்லி எல்லாம் அடித்திருந்தான். அவனிடமிருந்து அடிக்க நான் திட்டம் போட்டிருந்தேன். சந்தேகம் வராமலிருக்க வலிய ஒரு சண்டையை நானும்,மதனும் அரங்கேற்றியிருந்தோம்.

ப்ளான் ஏயின் படி மதன் அவனிடம் இல்லாத ஸ்டாம்புகளை எடுத்துக் கொண்டான்.இருவரும் பங்குப் பிரித்துக் கொண்டோம். பிளான் பியின் படி மதனிடமிருந்து நான் கொஞ்சம் எடுத்துக் கொண்டேன். எப்படியும் மதன் மாட்டுவான் என்று உள்மனதில் ஏதோ சொல்ல நான் எல்லா ஸ்டாம்பையும் பெல்டைக் கிழித்து அதில் வைத்து விட்டேன்.

எதிர்பார்த்தது போலவே மதன் மாட்ட, நாங்கள் சண்டை போட்டிருந்த காரணத்தால் எவனும் என்னை கேட்கவில்லை. மதனை காப்பாத்த சுனா.பானா வடிவேல் மாதிரி பஞ்சாயத்து செய்து சாட்சியைக் கலைத்திருந்தோம். மதன் கொடுத்த ஸ்டாம்பில் பாதி கேட்க நான் முடியாது என்று மறுக்க போட்டும் தர முடியாத சூழ்நிலையில் அவனை கொண்டு நிறுத்தியிருந்தேன்.

தீடிரென விருகம்பாக்கத்தில் ஒரு வேலை. இருவரும் போயிருந்தோம். எனக்கு தெரிந்திருந்த ஆனால் பேசியிராத பெண்ணிடம் பேசி மதன் போட்டிருந்த பழியை நீக்க முடிவு செய்திருந்தேன். சந்தியா - அவளுக்காகவே தெருவில் கிரிக்கெட் ஆடுவோம். நான் அந்த ஏரியாவை விட்டு வந்ததிலிருந்து யாரும் கிரிக்கெட் விளையாடுவதில்லையாம். அவள் வீட்டுப்பக்கம் போயிருந்தோம்.

"அமர் கிரிக்கெட் விளையாட வர்றீயா..சின்னப் பசங்களுக்குப் போடுவது மாதிரி மெதுவா போடுறேன்.." சந்தியா நக்கலடித்ததும் கூடயிருந்த கும்பலில் நிறைய பல் தெரிந்தது.

"விளையாடுவோம்.." மதன் பேசத் தொடங்கினான்.

"அவ நக்கல் உடுறா..நீ நேரம் காலந்தெரியா சாமியாடுற.." வந்த கோபத்தை அவனிடம் காட்டி விட்டு நேராக சந்தியாவிடம் போய் "போன வருஷத்திலிருந்து உன்னை எனக்கு பிடிக்கும்.." என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே கூடயிருந்த காயத்ரியை அனுப்பி தாத்தா பாட்டி யாராவது வருகிறார்களா என்று பார்க்க சொல்லியிருந்தாள்.

"அமர்..போயிரு..யாராவது பாத்தா வம்பு.."

"இன்னைக்கு கூட இங்க வந்ததே உன்னப் பாக்கத்தான்..உன் கூடப் பேச அரை மணி நேரமா இங்கேயே நிற்கிறேன் தெரியுமா.."

"என்ன பேசணும்.." வாசலைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

"எனக்கு..நான்.." என்று இழுத்துக் கொண்டிருந்தேன்.

"சொல்லித் தொலை.."

"வந்து..எனக்கு.."

"சொல்லப் போறியா இல்லையா.." அடித்தொண்டையில் கத்தினாள்.

"வந்து எனக்கு அவசரமா பாத்ரூம் போகணும்..பசங்க யாருமில்லை..அதான் உன் வீட்டுல.."

"அய்யோ தாத்தா பாட்டி இருக்காங்க..அவங்க பாத்தா அவ்வளவு தான்.."

"அதெல்லாம் நான் கதவை மூடிக்கிட்டு தான் போவேன்..அப்புறம் எப்படி பாப்பாங்க.."

"அமர் நீ மாறவேயில்ல.." யாரும் பாக்காத நேரத்தில் லேசாக அடித்தாள்.

"டேய் எனக்கு இன்ட்ரோ கொடுடா.." மதன் கெஞ்சிக் கொண்டிருந்தான். கடைசி கொடுக்காமல் கழுத்தறுத்தேன்."சாவுடா..இது மாதிரி எத்தனை நாள் என்னை விட்டுட்டு கடலை வறுத்திருப்ப.." என்று மனதில் நினைத்துக் கொண்டேன். அது மட்டும் காரணமல்ல மதன் சேட்டுப் பையன் மாதிரியிருப்பதும் கூடுதல் காரணம்.

பஸ்ஸில் வந்துக் கொண்டிருந்தோம். தி.நகர் ஏரியாவில் பசங்களைத் தடவி சந்தோஷப்பட ஒரு கும்பலுண்டு. சுற்றி சாரதா வித்யாலயா,ஹோலி ஏன்சல்ஸ், கர்நாடகா வித்யாலயா,பர்கிட் ரோட் சாரதா வித்யாலயா என்று பெண்களிருந்தாலும் பசங்களை தடவி மகிழும் "அவனா நீயி" கூட்டம் ரொம்ப ஜாஸ்தி.

ஏற்கனவே பத்தாவதில் இது மாதிரி ஒரு அனுபவத்தில் சிக்கவிருந்து ஜஸ்ட் மிஸ் ஆனதாலும், சேலம் சித்த வைத்தியரின் விளம்பரத்தாலும் கலவரப்பட்டு அவனா நீயி பார்ட்டிகளிடம் கொஞ்சம் உஷாராகயிருப்போம். அப்படி ஒருத்தன் பஸ்ஸில் தடவ முயற்சிக்க மதனும் நானும் நடுவில் ஷூக்காலாலே சவட்டிக் கொண்டிருந்தோம். பஸ்ஸில் கொஞ்சம் பேர் கேட்கும்படியாக கெட்ட வார்த்தைகளில் அர்ச்சனை செய்து கொண்டே அடித்தோம்.

மதனிடம் சொல்லியிருந்தேன்.யாரிடமும் சொல்லாதே என்று சொல்லியது தான் கேடு. அடுத்த நாள் நான் பள்ளிக்கு போகும் முன் அது பரவியிருந்தது.

ஆனந்த் வந்து கேட்டே விட்டான். "நேத்து ஏதோ நடந்தாமே.."

"யாருடா சொன்னா.." மதனை பார்த்துக் கொண்டே கேட்டேன்.

"அது எப்படிடா மதனை விட்டு விட்டு உன்னை தடவ வந்தான்.."

"அதுக்கு ஆம்பிளைங்களைத் தான் பிடிக்குமாம்..அது எப்படி அதே இனத்தில் உள்ளவனைத் தடவும்.." சொன்னதும் டாபிக் மதனுக்கு மாற்றியிருந்தார்கள்.

ரெண்டு பேரும் பேசிக் கொள்ளாமல் இடத்தை மாற்றிக் கொண்டோம். அடுத்த நாள் கோல்டன் ஸ்பாங்கில்ஸ் டெஸ்ட் செய்ய கெமிஸ்ட்ரி லேப்பில் ஆசிட் மற்றும் சால்டைத் திருடியிருந்தோம்.கூடவே உபரியாக டெஸ்ட் டூப்.

வரும் வழியில் எப்போதும் வீடு வரைக்கும் சேர்ந்து போகும் எங்கள் தெருப் பெண் இருக்க நான் அவளை பார்க்காத மாதிரி மதனிடம் பேசிக் கொண்டிருந்தேன்.

"அந்த பொண்ணு உன்னப் பாக்குதுடா.."

"டேய் சப்ப பிகராயிருந்தா என்னை பாக்கும் என்று சொல்லுவியே..உனக்கு வேணா நீ பாரு.." என்று சொல்லி விட்டு நாளைக்கு பாப்போம் என்று அந்த பெண்ணிடம் கையாட்டி விட்டு மதன் வீட்டிற்கு போய் கோல்டன் ஸ்பாங்கில்ஸ் பார்த்து விட முடிவு செய்து எல்லாம் கலந்து விட்டு அடுப்பில் காட்டி விட்டு தண்ணீரில் முக்க வேண்டும்.அப்படி செய்யும் போது டெஸ்ட் டூப் வெடித்து விட்டது. களவாணி படத்தில் சிகரெட் கேட்கும் வாத்தியிடம் சிகரெட் இல்லை என்று பாக்கெட்டைத் தூக்கிப் போட்டு விட்டு அவர் போனதும் அதை விமல் எடுத்து வைத்து கொள்வார்.அது மாதிரி மதனிருக்கும் போது எந்த பெண்ணிடமும் பேச மாட்டேன்.

அடுத்த நாள் விசாரணை வளையத்தில் எங்களை சேர்த்திருந்தார்கள்.

"யாருடா..ஆசிட் திருடியது.."

"ஏண்டா மதன்..இப்படி பண்றே..சார் எவ்வளவு நல்லவர்..கேக்குறார்ல சொல்லு.."

"ஏண்டா அமர்..இப்படி பண்றே..நான் தான் உங்கூடப் பேசுறதேயில்லையே..ஏன் எம்மேல் பழியப் போடுற.."

"டேய் நடிக்காதீங்கடா..எல்லாம் எனக்குத் தெரியும்.."

"பாருடா சாருக்கே தெரியுமா..அவர் எப்படியும் நம்மள சேர்த்து வைப்பாரு..சேரலைன்னா கெஞ்சுவாரு..அவருக்காக உன்னை மன்னிக்கிறேன்.." மதன் ஆரம்பித்தான்.

"டேய் அடங்க மாட்டீங்களா..இன்னும்  இன்னும் என்ன என்ன திருடுனீங்க.."

"சார் உங்களுக்கு கோல்டன் ஸ்பாங்கில்ஸ் பண்ணத் தெரியலையேன்னு நான் டெஸ்ட் பண்ணினோம்.. உங்களை மிஞ்சிருவோம் சொல்லி எங்க மேல பழியப் போடாதீங்க.." அவரிடம் நான் சொல்ல.போக சொல்லி விட்டார்.

ஆனந்த் தான் போட்டுக் கொடுத்தான் என்று தெரிந்ததும் "இருடா அடுத்து ஆசிட் திருடி உன் மேல அடிக்கிறேன்.." என்று மதன் அவனை மிரட்டவே கொஞ்சம் அடங்கியிருந்தான்.

அடுத்த மாதம் நிஜமாக சண்டையிட்டு பேசாமலிருந்தோம்.கெமிஸ்ட்ரி வந்து "ஏண்டா இப்படி சண்டை போடுறீங்க..பேசுங்கடா..சாதீக், சந்தீப்.. நீங்களாவது சொல்லக்கூடாது.."

"அவங்க ரெண்டு பேரும் புதுசா வந்திருக்கிற மேக்ஸ் டீச்சரை யார் செட் அடிக்கிறதுன்னு சண்டப் போட்டிருக்காங்க..நீங்க வேற புரியாம பேசுறீங்க.." சாரிடம் போட்டுக் கொடுத்து விட்டான்.

"பாருடா..மேக்ஸ் டீச்சர்னு சொன்னதும் சார் முகத்துல பல்ப் எரியுது.." நான் மதனிடம் சொல்ல

"இனிமே சார் கிட்ட நாம போட்டிப் போடக் கூடாது.. மதன் சொல்ல எல்லோரும் சிரித்து விட்டோம்.

"டேய் ஆர்கானிக் கெமிஸ்ட்ரில.." என்று கேள்வி கேக்க ஆரம்பிக்க நானும் மதனும் அடுத்த திட்டம் போட்டுக் கொண்டிருந்தோம். வழக்கம் போல வெளியே நின்றுக் கொண்டு தான்.அது பிசிக்ஸ் லேப்பில் மெர்க்குரி திருடப் போட்ட திட்டம். ஜூவாலஜி லேப்பில் மட்டும் தான் எதுவும் திருடவில்லை என்று பின்னாளில் மதன் என்னிடம் வருத்தப் பட்டுக் கொண்டிருந்தான்.

Tuesday, July 20, 2010

துவையல் - சந்தேகம் ஸ்பெஷல்

மதராசப்பட்டிணம் படத்தில் கிழவி ஆகி ஆண்டு அனுபவித்தப் பிறகு தான் ஆர்யா ஞாபகம் வருகிறது. தமிழ் சினிமா போல மேஜர் ஆகாத பெண் என்று சொல்லி இங்கிலாந்து அழைத்து போயிருந்தாலும் பிரிந்து போய் ஐம்பது வருடம் வராத நினைவு செத்து சுண்ணாம்பானப் பின் அதுவும் பனிரெண்டு வருடங்கள் கழித்து வருகிறது. ஏன் கல்யாணத்திற்கு முன் வந்திருக்க வேண்டியது தானே என்ற கேள்வி எல்லாம் கேட்க முடியாது. கேட்டிருந்தால் மெளன ராகம் படமும் அதில் கலந்திருக்கும். எதுக்கு இந்தியா வந்தாங்க நேரா சொர்க்கத்திற்கு போயிருந்தால் பரிதியை சந்திருக்கலாம்.இந்த படம் பார்க்கும் போது நண்பனொருவன் அடிக்கடி சொல்லும் பன்ச் பக்காவாக பொருந்தியது. "பெண் எல்லாம் மதில் மேலிருக்கும் பூனை..எந்த பக்கம் குதிப்பாங்கன்னு அவங்களுக்கு மட்டும் தான் தெரியும்.." . உடனே சிக்கிட்டான்டா அடிக்க வர வேண்டாம். நான் ஆணாதிக்கவாதி தான். யாராவது இல்லை என்று சொன்னால் நிச்சயம் அந்த பயபுள்ள யாரையோ காதலிக்கிறான் என்று அர்த்தம்.இதுவும் நான் சொல்லவில்லை.அதே பன்ச் பாஷாவின் டயலாக் தான் இதுவும்.

களவாணி படத்தின் முடிவில் சரண்யா சொல்வார் - "பாருங்க பையன் கம்ப்யூட்டர்ல வேலை பாக்குறான்.." உடனே இளவரசு "நானும் துபாய்ல வேலை பார்த்துயிருக்கிறேன்..அவன் வேலை பாக்குறது பெட்ரோல் பங்குல.." என்று சொல்வார். ஒரு வேளை அறிக்கி ப்ளாக் எழுதும் பழக்கம் வந்திருக்குமோ. பேரன் பிறந்தவுடன் இளவரசுக்கு ஒரு கண்ணாடி மாட்டி கிழவனாக மாற்றியிருப்பார்கள். கொஞ்சம் முன்னர் தான் இளவரசுவின் நண்பர் அவருக்கென்ன இன்னொரு கல்யாணம் பண்ணலாம் என்று சொல்வார். பேரன் பிறந்தாலும் இளமையாக இருக்கலாம். யார் மாதிரி சாரு மாதிரி. அப்போ தான் நள்ளிரவில் நல்லா தூக்கம் வரும்.யாரும் ஸ்கீரின் ஷாட் எடுக்காத நேரத்தில் பதிவு போட முடியும்.

வாரணம் ஆயிரம் படம் பார்த்துக் கொண்டிருந்தேன். சூர்யா சமீராவின் மரணத்திற்குப் பின் ஏர்போர்ட்டிக் அழுதுக் கொண்டிருப்பார். ஒருவர் வந்து தேற்றுவார். அவர் குழந்தை காணாமல் போகும் போது சூர்யா சொல்வார். "என் வாழ்வில் வந்த திருப்பத்திற்கு காரணமே சந்தீப் மேனன் தான்.." ராஜீவ் மேனன் என்று கேட்டுத் தொலைத்தது. இப்படி குறியீடுகளாக எல்லா படத்திலும் கௌதம் கொட்டினால் போதும்.இன்னும் வி.தா.வ மாதிரி "நல்லப் படங்கள்" எல்லாம் நமக்கு கிடைக்கும்.

சாரு திட்டும் போதெல்லாம் ஜெயமோகன் தளத்தில் நேரம் போக்கிக் கொண்டிருந்தேன். விஷ்ணுபுரம் படித்தவர்கள் மட்டும் தான் ஜெயமோகனை விமர்சிக்கலாம் என்று சொன்னப் பின் படித்துக் கொண்டிருந்த இரவு நாவல் அதே இடத்தில் நிற்கிறது. ஏன் இப்படி யாராவது சொல்லுங்களேன்.

பிரேசில் அணியை காலியிறுதியில் ஜெயிக்கும் அணி அது எப்படி சரியாக இறுதிப் போட்டியில் தோற்கிறது. 2010 - நெதர்லாந்து , 2006 - பிரான்ஸ், 2002ல் இங்கிலாந்து ஜெயித்திருக்க வேண்டியது ரொனாடில்னோ அடித்த பனானா கிக்கினால் ஜெயித்து விட்டார்கள். கால்பந்து இடுகை எழுதலாம் என்று நினைத்தால் சமாதானமாக போவதற்கே நேரம் சரியாகயிருக்கிறது.

ஏர்டேல் ஜூனியர் சூப்பர் சிங்கர், சூர்யா அடித்த பல்டி, சீமான் போட்ட குட்டிக்கரணம் எல்லாம் முன்னாலே சொன்னாலும் இணையம் இல்லாத காரணத்தால் வடை போய் விட்டது. சரி தில்லாங்கடி விமர்சனம் எழுதலாம் என்று பார்த்தால் லக்கி எழுதியிருக்கிறார். ஏன் எனக்கு மட்டும் இப்படி நடக்குது. வடிவேலு தான் படத்தை காப்பாற்ற வேண்டும் ஆனாலும் பிரம்மானந்தம் அளவிற்கு முடியாது என்று நினைக்கிறேன்.ஜெயம் ராஜா அலுங்காமல் போடும் ரீமேக் கோடு இந்த தடவை மிஸ்ஸாக வாய்ப்பிருந்தாலும் சன் காப்பாற்ற வந்திருக்கிறது.அதற்கெல்லாம் வட்டியும் முதலும் எந்திரனில் கிடைத்து விடாமலிருக்க வேண்டும். வேலாயுதம் விமர்சனம் எழுதி விட வேண்டியது தான். அதுவும் எனக்கு முன்னால் யாராவது எழுதப் போகிறார்கள்.வழக்கம் போல வடை போகுமா என்று சந்தேகம் வந்து வந்து போகிறது.

Monday, July 19, 2010

குரூரப்பார்வை


வெகு சாதாரணமாக ஆரம்பித்த ஆட்டம்
சிப்பாய்களை காபந்து செய்ய முயன்று
போராட்டமாக மாறியது

எதிரியின் புரவியைப் புணர்ந்த
மந்திரியின் தலை வெட்டுப்பட்டதிலிருந்து
வெறியாக மாறியது

வெட்டப்படும் போதெல்லாம் தெறித்த ரத்தம்
சிகப்பும்,கருஞ்சிவப்புமாய்
சகதியாய் மாறியது

ராணியை இழந்திருந்த நேரத்தில்
இருபக்க இடைவெளியும்
விஸ்தாரமாய் மாறியது

மறுபடியும் சிப்பாயாட்டம்
ராணியாக மாறயிருந்தவ(ளை)னை
யானைகளால் கொலையாய் மாறியது

இன்னொரு ஆட்டம் கேட்டவன்
முகத்தில் தெரிந்த விகாரத்தை ரசிக்க
குரூரமாய் மாறியது

இன்னொரு குரூரத் தருணத்திற்காக
வழியெங்கும் வந்தவர்களின் பிம்பம்
சிப்பாய்களாய் மாறியது

வெட்டுண்ட காய்களும் பலகைகளும்
இன்னொரு யுத்ததிற்காக
சதுரங்கமாய் மாறியது

Sunday, July 18, 2010

மதராசப்பட்டிணம் - மக்கிப் போன பொட்டலம்

ஏற்கனவே ஒரு பதிவில் சொல்லியிருந்தது போல சில படங்களின் காட்சிகளை உருவி எடுத்து ஒரு கலக்கு கலக்கி ஒரு ப்ளேவரில் கொடுத்தால் ஒரு புதுமையான படம் வந்து விடும். அப்படி ஒரு படம் தான் மதராசப்பட்டிணம்.எல்லோரும் சின்ன "ன" போட்டதால் தலைப்பும் புதிதாக தெரிகிறது. மொத்தமாக பார்த்தால் அது ஒரு மக்கிப் போன பொட்டலம்.இப்படியும் படம் எடுக்கலாம்.

எத்தனை பேருக்கு தான் இப்படி ஒரு கதைக்களம் அமைந்து தயாரிப்பாளர் கிடைத்து விடுவார். கிடைத்தும் விஜய் கோட்டை விட்டுள்ளார் என்பது தான் உண்மை. டைட்டானிக் ,அப்போகல்பிடா, லகான் , டெல்லி 6 என்று கலந்தடித்து திகட்டும் அளவிற்கு தந்திருக்கிறார்.

டெக்னீஷியன் டீன் ஒன்று வலுவாக அமைந்தால் கதை என்ற வஸ்துவே தேவையில்லை என்று எல்லோரும் நினைக்கிறார்களோ என்று சமீபகாலப் படங்கள் சொல்லாமல் சொல்வது போலவே தெரிகிறது. பழைய சென்னை எப்படியிருந்தது என்று பழைய சென்ட்ரல் ரயில் நிலையத்தையும்,ட்ராம் வண்டியையும், அண்ணா சாலையையும் தொடர்ந்து காட்டிக் கொண்டிருந்தால் பிரீயட் பிலிம் ஆகி விடுமா என்ன. அப்படியே போலீஸ்காரர்கள் உடை கால் சட்டை அளவிற்கு தானிருக்கும் என்று பழைய புகைப்படங்களில் பார்த்தாக ஞாபகம். ஒரு வேளை மதராசப்பட்டிணப் போலீசார் மட்டும் விதிவிலக்கு போல. விஜய் நீங்கள் பிரியதர்ஷன் எடுத்த சிறைச்சாலை படத்தை இன்னொரு முறை பார்க்கவும்.அதில் இருந்த காதலை விடவா இந்த காதலில் அழுத்தமிருந்தது. நாடோடி தென்றல் படத்தையாவது கொஞ்சம் எடுத்து பார்த்திருக்கலாம். ஆர்யா கழுதைக்குட்டியைக் காப்பாற்றி விடும் காட்சியில் நிறைய கழுதைகள் இருந்தது. கழுதைகளைப் பிடித்த அளவிற்கு கொஞ்சம் கதையையும் பிடித்திருக்கலாம். ஆர்யா தவிர எல்லோரும் மீசை வைத்திருக்கிறார்களே அது ஏன். அடுத்தடுத்த படங்களில் தொடர்ந்து அவர் நடிக்க வேண்டும் என்பதற்காகவா.

மறுபடியும் தாலி செண்டிமென்ட், ஒண்டிக்கு ஒண்டி என்று காட்சிகள் இருந்தாலும் சரி விட்டுத் தொலைகிறது என்று பார்த்தால் கதாநாயகி ஆர்யாவுடன் பழகத் தமிழ் கற்றுக் கொண்டார் என்பது சரி. அதே அளவிற்கு வில்லனும் தமிழ் பேசுகிறாரே. அவரும் சைடில் ஏதாவது கழுதை மேய்க்கும் பெண்ணை காதலித்து விட்டாரா. கவர்னரும் அடுத்த காட்சியில் தமிழ் பேசுகிறார். அதுவும் ஆரம்பத்தில் ஹனீபா சொல்வது கூட புரியவில்லை. அடுத்த கொஞ்ச நேரத்தில் அவரும் தமிழ் பேசுகிறார்.லகான் படத்தை இன்னும் நாலைந்து தடவை பார்த்திருக்க வேண்டியது தானே.அதில் வில்லனாக வருபவன் கடைசி வரைக்கும் ஆங்கிலம் தான் பேசுவான்.

கதை தான் காதல் கதை என்று முடிவு செய்தாகி விட்டீர்களே அப்புறம் எதற்கு நடுவில் புரட்சி, வெடிகுண்டு எல்லாம். சரி சரி நெட்டிவிட்டி மிஸ்ஸாகி விடக் கூடாது அல்லவா.ஆர்யா சலவை செய்வதைத் தவிர எல்லாம் செய்கிறார். இந்த இடத்தில் கார்த்திக் என்று அருமையான நாயகனை சினிமா தொலைத்து விட்டது என்று கசப்போடு ஒத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. மல்யுத்தம் எல்லாம் செய்கிறார்கள் எதற்கு சரி ஏதோ விடுதலை படையில் போராட என்று பார்த்தால் என்றாவது வெள்ளைக்காரி வருவாள் அவளுக்காக அவளை காதலிப்பவன் சண்டைக்கு வருவான் அதுக்கு உதவும் என்று நாசர் பயிற்சி தந்தது போலுள்ளது. இப்படியெல்லாம் கேட்டா தர மாட்டார்கள் என்று அடிக்கடி உதார் விடும் நாசர் கதாபாத்திரம். நேதாஜி என்று வார்த்தைக்கு வார்த்தை சொல்லும் கதாபாத்திரம் ஒரு புரட்சியாளன் ஒரு கட்டிடத்தை வெடி வைத்து தகர்க்கும் காட்சியில் பல்லிளித்து விடுகிறது.

ஆர்யா முதல் படத்திலிருந்து ஒரே விதமாக நடித்து பிரசாந்த்,ஷாம்,ஸ்ரீகாந்த் என்று பீல்ட் அவுட் ஆனவர்களுடன் போட்டிப் போடுகிறார்.விரைவில் அந்த வரிசையில் சேரும் நாள் பக்கத்தில் தானிருக்கிறது. அந்த வெள்ளைக்காரப் பெண் நடித்த அளவிற்கு கூட நடிக்கவில்லை என்றால் என்ன செய்வது. ஆர்யாவை எல்லாம் ஒரு பாலா வந்தால் மாற்ற முடியாது என்று புரிந்தது.ஒரே ஆறுதம் ஹனீபா தான்.லொள்ளு சபா ஜீவா,பாலாஜி அளவிற்கு கூட ஆர்யா நடிக்கவில்லை என்பது தான் உண்மை. ஆர்யா நடித்த இடத்தில் இயக்குனரின் அண்ணன் உதயா நடித்திருந்தாலும் அந்த பெண் உதயாவுக்கு தான். இப்படி சொல்ல காரணம் கதை திராட்டில் தொங்கிக் கொண்டு நிற்கிறது. பிறகு வழக்கம் போல ஒரே காட்சியில் ஆஸ்பத்திரி,பள்ளிக்கூடம் என்று வளர்ந்து விடுவது இன்னொரு நகைச்சுவை. ஆர்யாவுக்கு துணியே சரியாக துவைக்க தெரியாது என்று படத்தைப் பார்த்து தெரிந்து கொண்டேன். இதில் சித்தப்பா (அபியும் நானும் படத்தில் பிச்சைக்காரராக நடித்தவர்) சொல்கிறார். "பாருங்க எவ்வளவு அழகாக இருக்கிறார் எங்க ஐயா..சினிமாக்காரன் பார்த்திருந்தால்.." இந்த படத்திலுமா ஹீரோ வோர்ஷிப்.

ஆர்யா தோற்றுப் போயிருந்தால் நன்றாக இருந்திருக்கும். 1962 களில் அந்த இடத்தை காலி செய்தார்கள் என்று பிறகு சொல்கிறார்கள். அப்பவே காலி செய்திருந்தால் கூவமாவது மிஞ்சியிருக்கும். இந்த கொடுமை தியேட்டரில் ஓட களவாணியைத் தூக்குமாறு களவாணித்தனம் செய்கிறார்கள். இது சேரனின் பொக்கிஷம் மாதிரி திரிசங்கு சொர்க்கத்தில் நிற்கும் இயக்குனரின் சோடையிழந்த இயக்குனரின் வியாபார உத்தி.

Saturday, July 17, 2010

களவாணி - மீண்டும் ஒரு ஆண் பாவம்

போன டிசம்பரில் எழுதிய இரண்டு பதிவுகளுக்கு தான் நான் அதிக எதிர்வினைகளை சம்பாதித்தேன். ராமராஜன் பற்றி எழுதிய பதிவுகள் ஒரே வாரத்தில் ஐம்பது மைனஸ் ஓட்டுகள் விழ காரணமாகயிருந்தது. சில ஃபாலோயர்களையும், சில நட்புக்களையும் இழந்திருந்த காலமது. ராமராஜன் படத்தில் அவர் நல்லவனாகயிருப்பார் (மிக) அழகாயிருந்தால் காதலி இல்லையென்றால் தங்கச்சி, வில்லன் குடிகாரன், பொறுக்கி என்று ராமராஜனுக்கு எதிர்மறையாக இருப்பான். இப்படி தொடர்ந்து ஒரே பாணியில் நடித்த காரணத்தால் தான் அவர் காணாமல் போனார் என்று சொல்லியிருந்தேன். நிறைய பேருக்கு என் மேல் கோபம். அந்த சமயத்தில் சாட்டில் வந்த நண்பர் கேட்டார். உங்களுக்கு எந்த படம் தான் பிடிக்கும். அன்று பதில் சொல்லவில்லை.ஆனால் பதிலாகவே ஒரு படம் அமைந்திருக்கிறது. அது தான் களவாணி. நிச்சயம் ஒரு ஆண் பாவம் படத்திற்கு பிறகு காட்சிக்கு காட்சி சிரிக்க வைத்த படம்.  முதல் படத்தில் தான் தன்னுடைய அனுபவத்தை எல்லாம் திரைக்கதையில் கொட்டுவார்கள் என்பது நிதர்சனம். அதற்கு உதாரணமாக அறிக்கி எல்.சி 112 என்று ஒரு காட்சி போகும்.

ஆண் பாவம் படத்துடன் இதை நிச்சயம் ஒப்பிட முடியும். ஹீரோ என்றால் யாருமே கிண்டல் செய்ய மாட்டார்கள். இதில் நாயகியைத் திருமணம் செய்ய வரும் பையனிடம் (கதை மதுரை பக்கமிருந்து ஒரத்த நாடு பக்கம் திரும்பியது மாதிரி வெளிநாடு மாப்பிள்ளை என்றாலே அமெரிக்கா என்பதிலிருந்து சிங்கப்பூர் என்று மாறியுள்ளது) வெ.க.கு சூரி சொல்வார் - " எனக்காவது நிறைய பொண்ணுங்க கிடைப்பாங்க.. அவனுக்கு ஒரு பெண்ணும் கிடைக்க மாட்டாங்கன்னு தான் அதை தேத்தி வச்சிருக்கான்..உனக்கு ஒரு சீன்ச்சி கிடைப்பா.." இப்படி சமீபகாலமாக நாயகனை கிண்டலடித்து வந்த படங்களில் இதுவும் ஒன்று.

படம் முழுக்க மெல்லிய நகைச்சுவை பரவிக் கிடக்கிறது. பென்சில் வாங்கித் தருமாறு தங்கை கேட்க ரப்பர் வச்சதா இல்ல வைக்காததா என்று நக்கல் விடும் காட்சி. கூட வந்த பெண்களை எல்லாம் துரத்தி விட்டு விட்டு நாயகிடம் விமல் பேச முயற்சிக்கும் போது "உன் தோதுக்கு ரெடி பண்ணு.." என்று அதில் ஒரு பெண் சொல்லும் போது லேசாக புன்னகை வந்தது.

விமல், கஞ்சா கருப்பு, சரண்யா (அம்மா கேரக்டருக்கு இனி இவர் தான்), இளவரசு (சென்னை - 28 படத்திற்குப் பின்), ஒவியா , நாயகியின் அண்ணன், நாயகனின் நண்பர்கள் ஏன் ஒரே ஒரு காட்சியில் வரும் பூக்காரன் முதல் எல்லோருமே இயக்குனர் சொன்னதை மிக சரியாக செய்திருக்கிறார்கள்.

பாடல்களே இல்லாமல் ஒரு படம் வராதா என்று ஏங்கும் நபர்களின் நானும் ஒருவன். படத்திற்கு தோய்வே பாடல் காட்சிகள் தான். பாடல்கள் இல்லாமல் இருந்திருந்தாலும் படம் ரசிக்கும் படியாகவே இருக்கிறது. திரைக்கதை சில இடங்களில் நொண்டி அடித்தாலும் அதை பற்றி பெரிதாக எனக்கு ஒன்றும் பிரச்சனையில்லை.(ஏன் படம் பிடித்தது என்று யாரும் காரணம் கேட்க மாட்டார்கள் என்று எனக்கு தெரியும்.இங்குள்ள பிரச்சனையே இதுதான் எனக்கு பிடித்தது உனக்கு பிடிக்காமல் போய் விட்டதா ஏன் எதற்கு உழைப்பு அது இதுவென சொன்னவர்களை வெளுத்து எடுக்கிறோம்.பிடித்திருக்கிறது என்று சொல்லும் போது காரணமே கேட்காமல் நம்முடன் சேர்த்து கொள்கிறோம். அது தவிர யாராவது வெள்ளை காக்கா மேலே பறக்கிறது என்று சொன்னாலும் ஆமாம் என்று சொல்ல பழகியிருக்கிறோம். அது மாதிரி தான் இணையத்தில் விண்ணைத் தாண்டி வருவாயா கொண்டாடப்பட்டதும் அதை பிடிக்கவில்லை என்று சொன்னவர்களை யூத்தேயில்லை என்று சொன்னதும் நடந்தது.)

புத்திசாலியான கதாநாயகன் எந்த இடத்திலும் எந்த சிக்கலிலும் அலட்டிக் கொள்ளாமல் பிரச்சனைக்கு தீர்வு காண்பதும் (இறுதி காட்சி ஒன்றே போதும் - மச்சான் என்று சொல்லி சமாளிப்பது), அம்மா சொன்ன மாதிரியே ஏதோ ஒரு ஆவணியில் டாப்பாக வருவதும் என்று நிறைய நாம் தினம் தினம் எதிர் கொள்ளும் காட்சிகளும் உண்டு.

அம்மாக்களுக்கு மட்டும் தான் பிள்ளைகள் மேல் எவ்வளவு நம்பிக்கை. அவன் கிரகம் தான் இப்படி செய்ய வைக்கிறது என்று சொல்வதும், கணவனை அடக்க தூக்கு மாட்டுமிடத்திலும் சரண்யா என்ற நடிகை எனக்கு தெரியவில்லை. அவன் காசில் டீ குடிக்கும் நிலை வந்தால் செத்துப் போவேன் என்று சொல்லுமிடத்தில் அப்பாக்களுக்கே உள்ள பொறாமை குணத்தை காட்டும் இடத்தில் இளவரசு என்ற நடிகன் மறைந்து விட்டார்.

சில குறைகள் உண்டு. மாசமா என்று உச்சரிக்குமிடத்தில் மாதம் என்று கொஞ்சம் பேச்சு வழக்குல் ஒட்டாத தமிழ் வருகிறது. எல் சி 11 2 என்பதை ஒவியா மாற்றி எழுதுமிடத்தில் அவருக்கு தமிழ் தெரியாது என்பது இடத்தாலும் புத்திசாதித்தனமாக அதில் படம் வரைவது, கல்யாணம் வெள்ளிக்கிழமை இல்ல நாளைக்கு இதை எப்படியாவது அறிக்கிக்கிட்ட சொல்லிருங்க என்று வேலைக்காரரிடம் கெஞ்சுவதும் அவர் சரி என்று சொல்லி விட்டு வெளியே வந்து கசக்கிப் போடுவதும், ஆனால் அண்ணனிடம் இதை பற்றி சொல்லாமல் மறைக்கும் இடத்தில் இயக்குனர் சற்குணம் டபுள் காட் போட்டு அமர்கிறார்.

இளங்கோவாக வருபவர் சில இடத்தில் முகபாவனைகளை மிஸ் செய்திருந்தாலும் (இறுதி காட்சி அண்ணா என்று ஒவியா சொல்லும் போது) படத்திற்கு பெரிய உறுதுணை. ஒவியா பக்கத்து வீட்டுப் பெண் மாதிரி இருக்கிறார். ஆண் பாவம் மாதிரி இறுதி காட்சியில் சாவது போல் நடிப்பது நன்றாக இருந்தாலும் இளங்கோவைப் பார்த்து விட்டு நாயகியுடன் விமல் பஸ்ஸில் சைக்கிளோடு தப்பிப்பது சினிமா சினிமா சினிமா என்று சொல்லியது. திருப்பத்தில் வருபவர்களை விமல் பார்க்கும் போது அங்கிருக்கும் அவர்களும் விமலை பார்க்கலாம்.ஓடும் லாரியில் திருடி விட்டு குதிக்கும் போது விமல் தடுமாறாமல் இருப்பது அதெல்லாம் சினிமாத்தனமாக இருந்தாலும் தொடர்ந்து வரும் கஞ்சா கருப்பு காட்சிகள் நன்றாக இருந்தது.அதை இறுதி காட்சி வரை பயன்படுத்திய இயக்குனரின் உத்தியை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

நிறைய நாட்களுக்குப் பின் தொடர்ந்து சிரித்துக் கொண்டேயிருந்தேன். களவாணி திருடியது ரசிகர்களின் மனதை என்று தான் நினைக்கிறேன்.

Friday, July 16, 2010

அமரின் டைரியிலிருந்து - ஆணாதிக்க காதல்


 raji - "you people are killing me..all men are male savanist including you and my father.."

amar - "all girls are in safer side especially you and your mother.."

raji - "see this is mail savanism..why dont you add your mothers name in safer side.."

amar - "dont talk about her..you.."

ராஜி - "சொல்லு அசிங்கமா சொல்லு..இதான் நீ..தெரியுதா நீ ஒரு சுயநலப் பிசாசு.."

அமர் - "சரிதான் பொதுநலப் பிசாசு சொல்ல வந்துட்டா..பொத்திக்கிட்டுப் போடி.."

ராஜி - "இனி நான் செத்தா கூட என் மூஞ்சில முழிக்காத.."

அமர் - "அதான் என்னக் கொன்னுட்டியே..பிணம் எப்படிடி உன் மூஞ்சில முழிக்கும்.."

ஆணாதிக்க அமரின் 2005 டைரியிலிருந்து



ராஜி சொல்லும் போதே கண்களில் நீர்ப்படலம் தெரிந்தது.முகத்தை வேறு பக்கம் திருப்பியிருந்தேன். அழுபவளைப் பார்க்கும் போதெல்லாம் முத்தமிட தோன்றும். ஏற்கனவே இரண்டு முறை முயற்சித்து வாங்கிக் கட்டியிருந்தேன்.

"அமர்..இருக்கிற எல்லா அரியர் பேப்பரையும் எப்படியாவது படிச்சி நீ எழுதணும்..அப்பத்தான் கேம்பஸ்ல வேலை கிடைக்கும்..அப்பா கிட்ட தைரியமா சொல்லலாம்..அமர் செய்வ தானே..எனக்காக நமக்காக.."

".."

"என் மேல சத்தியம் பண்ணு..முடியும்னு.."

"சத்தியம் எல்லாம் வேண்டாம்..முடியும்.." வார்த்தைகள் பலமிழந்திருந்தது.

"சத்தியம் பண்ணு.." பிடிவாதம் பிடித்துக் கொண்டிருந்தாள்.

"முடியாது..காலையில மத்தியானம்..காலையில மத்தியானம்..இப்படி தொடர்ந்து மூணு நாள் எக்ஸாம்..எனக்கு நம்பிக்கையேயில்ல.."

"பண்ணு.."

சத்தியம் செய்து விட்டு தூக்கமில்லாமல் முதல் இரண்டு பரிட்சையை எப்படியோ முடித்திருந்தேன். பஸ்ஸில் வீடு திரும்பும் போது மட்டுமே கோழித் தூக்கம் தூங்கினேன்.

இரண்டாவது நாள் பரிட்சையின் போதே முகம் சோர்வில் நிறமிழக்கத் தொடங்கியது.இன்னும் ஒரு நாள் தான்.ராஜி ராஜி என்று எண்ணங்கள் நிமிடத்திற்கு ஒரு முறை அலறிக் கொண்டிருந்தது.

இன்னும் பனிரெண்டு மணி என்று மனம் முழுவதும் ஓடும் கடிகாரத்துடனே ஓடியது.அடுத்த நாள் பத்து மணிக்கு மாற்றி விட்டு நிறுத்தியிருந்தேன்.

எப்படியோ தூங்கி விட்டேன்.ராஜி காதில் கிசுகிசுப்பது மாதிரியேயிருந்தது.

"நான் செத்துருவேன்னு பயமாயிருக்கு அமர்.."



அப்படிடே ஓடிப் போய் பாத்ரூம் பக்கெட்டில் தலையை முக்கியிருந்தேன். பேலன்ஸ் இல்லாமல் கதவில் வலது கையை ஊன்றியிருந்தேன்.

மூச்சுத் திணறத் தொடங்கியிருந்தது.விபரீத ஆசை வந்து வந்து போனது.அப்படியே இருந்து விட்டால் ராஜி இல்லை,எக்ஸாமில்லை, போராட்டமில்லை.

யாரோ வெளியேயிருந்து கதவைத் தட்டத் தொடங்கியிருந்தார்கள்.தட்டிய வேகம் வலது கையில் தெரிந்தது.

தலையை வெளியே எடுத்தப்பின் பலமாக இருமத் தொடங்கியிருந்தேன். வெளியே அம்மா கூப்பிடுவது தெரிந்தது. "அமர் என்னடா பண்ற.." குரல் பலகீனமாக ஒலித்தது.

தலையில் தண்ணி வழிந்தடியே வெளியே வந்து நிலைத் தடுமாறி அம்மா தான் பிடித்ததாக ஞாபகம்.

"அம்மா..என்ன மன்னிச்சிருமா.." வார்த்தைகளை முந்திக் கொண்டு கண்ணீர் வந்தது.

"ராஜியாடா.."

கொஞ்சம் ஆச்சர்யம்.யாருக்குமே தெரியாது என்று நினைத்திருந்தேன்.

"இந்த வயசுல நீங்க எல்லாம் அழுதா அதுக்கு காரணம் யாரோ ஒருத்தியா தான் இருப்பா.." அம்மாவை ஆச்சர்யத்தோடு பார்த்துக் கொண்டேயிருந்தேன்.

"இல்லம்மா.."

"சின்ன வருத்தம் தாண்டா..ப்ளஸ்டூ படிக்கும் போது நான் சொன்னதை நீ கேட்கவே இல்லடா..அஞ்சு அஞ்சு நிமிஷம்னு தூங்கி தூங்கி நேரம் கடத்துவ..இன்னைக்கு அஞ்சு நிமிஷம் உன்னால தூங்க முடியல.." அம்மா கை மட்டும் தலையைத் துவட்டிக் கொண்டிருந்தது.

"அம்மா.."  குழந்தை மாதிரி அதையே சொல்லிக் கொண்டிருந்தேன்.

"எல்லாம் நல்லதுக்கு தாண்டா..இனி எல்லா பரிட்சையையும் நீ ஜெயிப்ப..ஒரு பரிட்சையைத் தவிர.." அருள் வந்தது அம்மாவின் வாய் மட்டும் பேசிக் கொண்டேயிருந்தது.

பிரமித்து போயிருந்தேன்.என் மேல் தான் எவ்வளவு நம்பிக்கையிருக்கிறது. பாதுகாப்பை உணர்ந்தேன்.

"ராஜி உனக்கானவ இல்லடா.." அம்மாவை புரிந்து கொள்ள முடியாமல் உலுக்க தொடங்கியிருந்தேன்.  "டீ கொண்டு வர்றேன்..படி.." .அதற்கு பிறகு ராஜியைப் பற்றி அம்மா பேசவேயில்லை.

ஜூன் மாத முடிவில் வந்த முடிவில்  எல்லா அரியரையும் கிளியர் செய்திருந்தேன்.

அமரின் 2004ம் வருட டைரியிலிருந்து.

சாருவிடம் சுரேஷ் கண்ணனுக்காக ஒரு கோரிக்கை

முதல்ல சாருவுக்கு என் கடும் கண்டனம் தெரிவித்து விடுகிறேன். இல்லை இந்த பதிவை படித்தபின் நான் அதற்கு ஆதரவு தெரிவிக்கிறேன் என்று என்னை யாரும் அடித்து ஸாரி நினைத்து விடக்கூடாது என்பதற்காகவே இந்த முன்னெச்சரிக்கை.

நேற்று என்னுடைய பதிவில் இருந்து ஒரு பத்தியை எடுத்து கென்னின் பஸ்ஸில் போட்டிருந்தேன். பஸ்ஸின் தலைப்பே ஏன் சாருவை மட்டும் அதிகம் வெளுக்கிறார்கள்.

சாரு இணையதளம் போனால் மன நோயாளியை சமாளிப்பது எப்படி என்று எழுதியுள்ளார். அதை படித்தால் நான் மன நோயாளியாகி விடுவது உறுதி.சாருவிடம் எனக்கு பிடித்ததே இரண்டு தான்.எழுத்துப் பிழைகள் மிகவும் குறைவு அல்லது அரிது. எதை எழுதினாலும் கீழே வரை வாசிப்பவனைக் கொண்டு வரும் சாத்தியம்.அவர் மற்றவர்கள் சொல்வது போல் பத்தி எழுத்தாளராகவே இருந்தாலும் அது சாத்தியமாகிறது.புரிந்தும் தொலைக்கிறது.எல்லோரும் முழுதாக படித்தவுடன் எதிர்வினை வைக்க கிளம்பி விடுகிறார்கள். இனி அவரிடம் சொல்ல வேண்டும் ஜெயமோகன் மாதிரி புரியாமல் எழுதுங்கள் என்று.சொல்லி விட்டு மீண்டு வந்தால் அடுத்த பதிவு எழுதுகிறேன்.

இதை நான் சொல்லியிருந்தால் என்ன நடந்திருக்கும் என்பது இன்று காலையில் தான் தெரிந்தது.க் அதனால் தான் எதுவும் சொல்வதில்லை.இனி விஷ்ணுபுரம் படித்து விட்டு தான் ஜெயமோகனை விமர்சிப்பேன் என்று சாரு சொல்வதற்கு முன்பே ரோமியோவிடம் புத்தகம் கேட்டிருந்தேன். சாருவே சொல்லி விட்டார் விஷ்ணுபுரம் சிறந்த நாவல் என்று.

அதே பஸ்ஸில் சுரேஷ் கண்ணன் என்ன சொல்லியிருந்தார் என்றால்

சுரேஷ் கண்ணன் - சாருவை மாத்திரம் ஏன் அதிகம் ஓட்டுகிறார்கள்..

1) அவர்தான் இணையத்தில் அதிக பிரபலம்.
2) அவரை ஓட்டினால் உடனடி கவனம் கிடைக்கிறது.
3) அப்படி ஓட்டுவதற்கான காரணங்களை சாருவே ஏற்படுத்தித் தருகிறார்.
4) இணையத்தில் எழுதும் நிறைய பதிவர்களுக்கு சாரு,ஜெமோ,எஸ்.ராவைத்தவிர இணையத்தில் உள்ள அல்லாத மற்ற பல எழுத்தாளர்களைப் பற்றின வாசிப்பு குறைவு.8:22 pm

இந்த வார்த்தைகளின் படி அதாவது மூன்றாவது பாயிண்ட்டின் படி சாருவே வடைகளை அள்ளித் தருகிறார். அதில் இன்னொரு கோணமும் எல்லோருமே சுரேஷ் கண்ணன் உட்பட அந்த வடைகளுக்காக காத்திருக்கிறோம் என்பது தான் உண்மை. நான் இன்னும் ஸ்கீரின் சாட்ஸ் (சுரேஷ் கண்ணன் அளவிற்கு எடுக்க தெரியாத காரணத்தால்) காப்பி பேஸ்ட் செய்கிறேன்.

அதை தொடர்ந்து பை.கா பஸ்ஸிலும் கென் பஸ்ஸிலும் நாலு முறை கமெண்டினேன்.ஒன்று மேலே இருக்கிறது.அடுத்த மூன்றும்..

suresh kannan athikam chaaru padikkaatheenga..ellorum solra maathiri avar paathippu theriyuthu :-))))))))))))))) - பை.கா பஸ்ஸில் நான் எழுதியது.

பை.கா பஸ்ஸில் சு.கவை விமர்சித்து விட்டேனே..எனக்கு அவர் மேல் எந்த வெறுப்பும் கிடையாது.அங்க வேணா போய் பாருங்க..ஸ்மைலி எல்லாம் போட்டு இருக்கேன்.

innoru inaiya aalumai suresh kannan..ithuvum serious (பாருங்க ஸ்மைலி கூட போடவில்லை)

இது இரண்டும் கென் பஸ்ஸில் நான் எழுதியது.

அதனால் எனக்கு எந்த தனிப்பட்ட வெறுப்பும் சுரேஷ் கண்ணன் மீது கிடையாது. அவருடைய அதி தீவிர வாசகன் நான் (என்ன சிரிப்பு சின்னப்புள்ளத்தனமா).

டிசம்பர் மாதம் ஒரு சின்ன சண்டையில் வெண்ணிற இரவுகள் கார்த்தி சாருவின் அடியாள் (அதற்கு முன் நான் அப்படி சொன்னேன்.மறைத்து விட்டேன் என்று பின்னூட்டத்தில் சண்டைக்கு வரக்கூடாது) அது சாருவின் தளத்தில் வந்தது.தொடர்ந்து தண்டோரா பதிவும்.

டிசம்பர் மாதம் சாருவுக்கு சுரேஷ் கண்ணன் எதிர்பதிவு எழுத, யாரும் அதை பெரிதாக எடுக்கவில்லை. ரோசா வசந்த் இது சாருவுக்கான எதிர்வினையே இல்லை என்று சொல்லி விட்டார். சுரேஷ் கண்ணன் ஏதோ ஒரு இடத்தில் சாருவை ஆதரித்து மொக்கையாக ஜால்ரா தட்டினால் கூட போதும்.அவர் தளத்தில் வந்து விடும். இன்று பயன்படும் என்று அன்று தெரியாத காரணத்தால் அதை ஸ்கீரின் சாட் எடுக்கவில்லை.

ஜனவரி மாதம் இளையராஜாவின் இசையை சாரு கேலி செய்து அவர் தளத்தில் எழுத எதிர்வினை சுரேஷ் கண்ணன் எழுத சாரு அதை வெளியிட்டு சுற்றி வளைத்து விவாதம் செய்துள்ளார் என்று போகிற போக்கில் இடது ஒரமாக ஒதுக்கி வண்டியை லாரியால் தட்டுவது போல தட்டி விட்டு போய் விட்டார். கூடவே சரவணகுமரனின் சுட்டியும் அதில் இருந்தது. சாரு சுட்டி தந்தார் என்பதற்கு ஆதாரம் - லக்கியின் பின்னூட்டம் தான்.அது சுரேஷ் கண்ணனின் பதிவிலே இருக்கிறது.

அதற்குப்பிறகு நித்தியின் விளைவால் சாரு அந்த தளத்தைத் தூக்கி விட அதையும் ஸ்கீரின் சாட் எடுக்கும் பாக்கியம் எனக்கில்லாமல் போய் விட்டது. நித்தியின் விஷயம் பெரிதாக விவாதிக்கப்பட்டது கூட சுரேஷ் கண்ணன் சாருவுக்கு எதிராக ஒரு எதிர்வினையையும் வைக்கவில்லை.அவர் தளத்தில் சாரு என்ற லேபிளை சுட்டவும். அடுத்த எதிர்வினை மே மாதத்தில் தான் வருகிறது அடுத்து ஜூன்.அடுத்தது இன்று என்று தொடர்ச்சியாக வந்தது. அப்போதெல்லாம் எத்தனை முறை ஸ்கீரின் சாட் எடுத்திருக்கலாம், எத்தனை எதிர்வினை எழுதியிருக்கலாம் ஏன் எழுதவில்லை.காரணம் சுட்டியின் மகிமை என்றே எடுத்துக் கொள்ளப்படுகிறது.

மே மாதம் எழுதிய பதிவு கூட பகடி தான் என்று அடுத்த மாத எதிர்வினையில் அவர் சொன்னப் பிறகு தான் எனக்கு புரிந்தது.

சாருவுக்கு கோரிக்கை வைக்கும் படலம் இங்கு வருகிறது - நீங்கள் தயவு செய்து எது எழுதினாலும் சுரேஷ் கண்ணன் அவர்களுக்கு நான்கு மாதங்களுக்கு ஒரு முறை சுட்டி கொடுத்து விடவும்.இப்படி ராத்திரி நேரத்தில் துப்பறியும் வேலைகளும் எதிர்வினைகளும் இருக்காது. சுட்டு மகிமை அப்படி. இதை நான் அடுத்த பதிவில் பகடியாக எழுதினேன் என்றெல்லாம் சொல்ல மாட்டேன்.

அவரை மாதிரி நல்ல இணைய எழுத்தாளர்கள் எங்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் தான் கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் தயவு செய்து அவருக்கு சுட்டி தந்து விடவும். தராமல் போனால் சட்டிகளோடு வந்து உங்கள் வீட்டின் முன் போராட வேண்டியிருக்கும்.

அப்புறம் தல என்பவருக்கு ஒரு வேண்டுகோள் இந்த பதிவிற்கு மட்டும் மைனஸ் போடாதீர்கள்.நல்ல இலக்கியவாதி இலக்கில்லாமல் போய் விடக் கூடாதே என்ற நல்ல எண்ணத்தில் தான் இந்த பதிவு. அப்படியும் மைனஸ் போட வேண்டும் என்றால் போடவும். உங்களுக்கு கோபம் வரும் அளவிற்கு நான் எழுதுகிறேன் என்பது எனக்கு மகிழ்ச்சியே.

Thursday, July 15, 2010

அனல் காற்று,சாரு,ஜெயமோகன்,பாலு மகேந்திரா

நான் ஜெயமோகன் படிப்பதேயில்லை.ஊமைச் செந்நாய் என்ற நல்ல குறுநாவல் படித்த பின்னும் பெரிய ஈடுபாடு எல்லாம் வரவில்லை என்று சொல்வது தான் உண்மை. தவிர மும்பையில் வேலை பார்க்கும் போது ஜெயமோகனின் தளம் தடை செய்யப்பட்டிருந்தது.(பின்னூட்டத்தில் வந்து கேக்கக் கூடாது..உங்க தல தளம் வேலை செய்ததா என்று..பதில் ஆமாம்).பிறகு நைஜீரியாவில் நடந்த படுகொலை பற்றி எழுதிய போது எதிர்வினை எழுதி விட்டு ஜெயமோகன் ஆதரவாளர்கள் யாராவது வந்து கேள்வி கேட்டால் என்ன செய்வது என்று பயந்து(யாரு நீயி) அதை மூன்று நாட்கள் கஷ்டப்பட்டு படித்து முடித்தேன்.இங்கு வந்தபின் நேரத்தை கொல்ல வழியில்லாமல் அவர் தளத்தில் மேயத் தொடங்கினேன். இந்த நேரத்தில் சைடில் சாரு இணையதளம் போனால் மன நோயாளியை சமாளிப்பது எப்படி என்று எழுதியுள்ளார். அதை படித்தால் நான் மன நோயாளியாகி விடுவது உறுதி.

சாருவிடம் எனக்கு பிடித்ததே இரண்டு தான்.எழுத்துப் பிழைகள் மிகவும் குறைவு அல்லது அரிது. எதை எழுதினாலும் கீழே வரை வாசிப்பவனைக் கொண்டு வரும் சாத்தியம்.அவர் மற்றவர்கள் சொல்வது போல் பத்தி எழுத்தாளராகவே இருந்தாலும் அது சாத்தியமாகிறது.புரிந்தும் தொலைக்கிறது.எல்லோரும் முழுதாக படித்தவுடன் எதிர்வினை வைக்க கிளம்பி விடுகிறார்கள். இனி அவரிடம் சொல்ல வேண்டும் ஜெயமோகன் மாதிரி புரியாமல் எழுதுங்கள் என்று.சொல்லி விட்டு மீண்டு வந்தால் அடுத்த பதிவு எழுதுகிறேன். ஜெயமோகன் கன்னட எழுத்தாளர் விவேக்கின் சிறுகதையை மொழி பெயர்த்திருந்தார். சாருவிடம் இருந்த இரண்டு இவரிடம் இல்லாத காரணத்தால் சிக்கித் திணறி பாதியிலே ஓடி வந்து விட்டேன்.

அனல் காற்று கதை பாலு மகேந்திராவிற்காக ஜெயமோகன் எழுதியுள்ளார் என்று அவர் தளத்தில் இருந்த விமர்சனம் பார்த்ததுமே படிக்க முடிவு செய்து படிக்க ஆரம்பித்ததும் முதல் அத்தியாயத்தின் ஆரம்பத்திலேயே மூச்சுத் திணற ஆரம்பித்து விட்டது.எழுத்துப் பிழை மற்றும் கதையின் கோர்வையின்மை இரண்டும் சேர்ந்து ஸ்டார்டிங் டிரபிள் தந்தாலும் அடுத்த அத்தியாயத்தில் இருந்து சூடு பறக்க ஆரம்பித்தது. விமர்சனத்தில் கதையை தெரிந்து கொண்ட காரணத்தினாலும் இருக்கலாம். முக்கோண காதல் காமக்கதை என்பதால் தொடரவில்லை. பாலகுமாரன் எழுதாமல் விட்டதையா ஜெயமோகன் இது மாதிரி கதைகளில் தொட்டு விடப் போகிறார்.இது மாதிரி உறவுச்சிக்கல் கதை நிறைய படித்திருப்பதால் சில இடங்களில் பாலகுமாரன் தெரிகிறார்.கலைஞர் சொன்னது சரிதான் - "படைப்பு என்பது இன்னொரு படைப்பில் இருந்து உருவாகிறது..அது இன்னொரு இன்னொரு படைப்பிலிருந்து..".இப்படி முடிவில்லாத பயணம் நடந்து கொண்டேயிருக்கும்.

முதல் மூன்று அத்தியாயம் முடிந்தபின் அடுத்தது ஏழாவது,ஒன்பதாவது,பதினான்கு மற்றும் கடைசி அத்தியாயம் மட்டும் தானிருந்தது.நடுவில் இருந்தது எல்லாம் அன்று வரவில்லை.கொஞ்சம் கொஞ்சமாக வர ஆரம்பித்தது.படிக்க வேண்டுமானால் அந்தப் பக்கத்தை மெயில் அனுப்பச் சொல்லியிருந்தார்கள். அப்படி முயற்சி செய்தும் ஒன்றும் பலனில்லை.பிறகு கேடித்தனம் படித்து முடித்தேன். நான் இந்த கதையை படித்தபின் உறுதியெடுத்துக் கொண்டேன்.எழுத்துப்பிழை இல்லாமல் மற்றும் கோர்வையாக எழுதுவது என்று. அப்படி முடியாமல் போகும் பட்சத்தில் ஜெயமோகனே அப்படித்தான் எழுதுகிறார் என்று உதாரணம் காட்டி விடக்கூடாது என்ற பயம் தான்.

முரண்கள் நிறையவேயிருக்கிறது - அருணிடம் சந்திரா சொல்கிறாள் "உன் அப்பா மீது அம்மாவிற்கு முப்பது வருட வன்மம் இருக்கிறது என்று.."

அருண் சுசியிடம் சொல்கிறான் - " எனக்கு நாலு வயதாகயிருக்கும் போது அப்பா செய்த தவறால் அம்மா பிரிந்து விட்டாள் என்று.." இந்த இரண்டு வாதங்களை வைத்துப் பார்த்தால் அருணுக்கு முப்பத்து நாலு வயதாகிறது. சந்திராவிற்கு நாற்பது வயது என்று வருகிறது.

சந்திரா சொல்கிறாள் - "நீ நான் பார்த்து வளர்ந்த பையன்..பதினைந்து வருடமாக உன்னை எனக்குத் தெரியும்..நான் உன்னை என் இடுப்பில் தூக்கி வளர்த்திருக்கிறேன்.."

அருண் சொல்கிறான் - "நான் சந்திராவிடன் கல்லூரியில் படித்தவன்.."

34 - 15 = 19 பத்தொன்பது வயது பையனை இடுப்பில் தூக்கி வளர்த்திருக்க வேண்டுமென்றால் சந்திரா பெரிய ஆள் தான். தவிர சந்திராவின் மகன் நவீன் வயதிலும் சிறு குழப்பம்.

இப்படி நிறைய சின்னதாக குறைகள் இருந்தாலும் கதை எனக்குப் பிடித்திருந்தது. பெண்கள் வன்மத்தில் எப்படி பேசுவார்கள், வேண்டுமென்ற பட்சத்தில் எப்படி அழுவார்கள் என்று சொல்வதில் ஜெயமோகன் நூறு அடிக்கிறார். அதுவும் அசராமல் அடிக்கிறார்.

இதில் ஜோ என்ற கதாபாத்திரம் ஒரு இடைச்செருகல் என்றாலும் கதையை கொஞ்சம் நீளமாக காட்ட உதவியுள்ளது. அம்மா வயதுள்ள பெண்ணுக்கும் மாமா மகளுக்கும் இடையில் கிடந்து அல்லல் படும் கதையின் நாயகன்.

இந்தியப் படங்களில் பண்டிட் குயின் படத்தில் தான் அது மாதிரி கெட்ட வார்த்தைகளைக் கேட்டுருக்கிறேன் . தமிழ்ப் படமாக பாலு மகேந்திரா எடுத்து இருந்தால் சந்திரா அருண் பேசும் வசனங்களுக்கு பீப் பீப் என்ற சத்தம் கேட்டே எரிச்சலைக் கிளப்பியிருக்கும்.

இது மாதிரி பாணியில் பாலு மகேந்திரா ஏற்கனவே படம் எடுத்துள்ளார்.அதுவும் தமிழில் முதல் படமாக எடுத்திருக்கிறார். படம் அழியாத கோலங்கள். உறவுச்சிக்கல்களை வெளிப்படுத்திய படங்கள் அதாவது இரண்டு பெண்கள் - கோகிலா (கமலின் இன்றைய தேதி வரை அவர் நடித்ததில் சிறந்தப் படங்களில் ஒன்று), ரெட்டை வால் குருவி, மறுபடியும், சதி லீலாவதி, வண்ண வண்ணப் பூக்கள், ஜூலி கணபதி என்ற பட்டியலில் இது சேர்ந்தாலும் வ.வ.பூக்கள்,ஜூ.கணபதி மாதிரி படு மொக்கயாக இருந்திருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம். காரணம் நினைத்ததை எல்லாம் இங்கு எடுக்க முடியாது. இந்த மாதிரி கதைக்கு எந்த படத்தை உதாரணம் கொடுக்கலாம் என்றால் அதற்கு பொருந்தி வரும் படம் - த ரீடர். அப்படி எடுத்தாலும் பாலு மகேந்திரா,ஜெயமோகன் அவர்களுடைய வயதிற்கு திரும்ப வேண்டும் என்று ஆனந்த விகடன் தலையங்கம் எழுதும்.

நிறைய இடத்தில் கோட்டை விட்டிருந்தாலும் எனக்கு இந்தக் கதை மிகவும் பிடித்திருக்கிறது. கதையின் சில இடங்களில் என்னை பொருத்திக் கொள்ள முடிந்தது. அதற்கு சின்ன எ.கா

"புறநானுரிலே ஒரு உவமை வருது வில்லிலேருந்து அம்பு போறப்ப அதன் நெழலும் கூடவே போகும்னு. ஆனா அம்பு நேரா போகும், நிழல் காடுமேடு குப்பைகூளம்லாம் விழுந்து பொரண்டு போகும். ரெண்டுமே போய் தைக்கிற எடம் ஒண்ணுதான்..”

இந்த இடத்தில் நானே கட்டுண்டேன். இந்த உவமை போதும் கதையை முழுதும் சொல்லி விட.

தங்கை மீது கோபம்.அவளை சீண்ட வழி கிடைக்காமல் நான் சொன்னேன் - " நான் ரமணிச்சந்திரனை விட( நான்?) நன்றாக எழுதுவேன்..".போனை வைத்து விட்டாள்.

என் மீதுள்ள கோபத்தில் நிறைய நண்பர்கள் "ஏன் சாரு மாதிரியே பேசுறீங்க.." என்று சொல்வார்கள். இனி வரும் காலத்தில் "ஏன் ஜெயமோகன் மாதிரி பேசுறீங்க.." என்று கேட்டு விடுவார்களோ என்ற பயம் தான். காரணம் கொஞ்சம் கொஞ்சமாக நிறைய இடத்தில் ஜெயமோகனை ரசித்தேன். எனக்கும் வயதாகிறதோ என்னவோ அடிக்கடி இப்படி பேத்துகிறேன்.

Wednesday, July 14, 2010

திசையன்விளை - பதின்மத்தின் அடியாழத்திலிருந்து

மலேசியாவில் மழை எப்போது பெய்யும் என்று கணிக்க முடியாத அளவிற்கு இங்கு தீடிரென மழை பெய்யும்.அப்படி ஒரு மழை நாளின் ஒதுங்க டைம்ஸ் ஸ்கொயருக்குள் நுழைந்திருந்தோம்.

"பாஸூ..இங்க தான் குருவி ஷூட்டிங் எடுத்தாங்க..விஜய் கூட திரிஷா பிடிச்சிக்கிட்டு மேல இருந்து குதிப்பாரே.."

"அப்ப விஜய் வந்ததில் இருந்து தான் கூட்டமேயில்லையா.." விஜய் ரசிகர் போலிருக்கிறது. நான் சொன்னதை ரசிக்கவில்லை.

இந்தியா மாதிரி வி.ஜி.பி கோல்டன் பீச்சில் நுழைய காசு எல்லாம் குடுக்க வேண்டாம். எங்கு வேண்டுமானாலும் நுழையலாம். ஏதாவது விளையாடினால் மட்டும் பர்ஸை தொட்டால் போதும்.

காலையில் தான் எச்சரித்திருந்தார்கள்.கொஞ்சம் ஏமாந்தால் உருவி விடுவார்கள். புல் தந்தூரி நாலு ரிங்கட் என்று போட்டிருந்தார்கள். பசி எடுக்கவே அதை சாப்பிட்டு விட்டு போகலாம் என்று கூட வந்தவரிடம் சொல்லிக் கொண்டிருந்தேன்.

"பாஸ் உங்களுக்கு கோழி ரொம்ப பிடிக்குமா.." கேள்விதொணியில் ஒன்றும் வித்தியாசம் தெரியாத காரணத்தால் நானும் ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே மதன்பாப் மாதிரி கோழி புராணம் பாடிக் கொண்டிருந்தேன்.அவர் சிரிப்பை அடக்குவது போல் தெரிந்தது.

கடைசியில் விளம்பரத்தில் கோழி சைஸில் படம் போட்டு விட்டு தரும் போது கவுதாரி மாதிரி மினியேச்ச சைஸில் இருந்தது.சின்ன காலாயிருந்தாலும் நல்லாயிருக்குடா அப்படி கூட சொல்ல முடியாத அளவில் அந்த விளம்பரக் கோழி இருந்தது.

வீட்டிற்கு வரும் வழியில்

இன்னொரு நண்பரிடம் சொல்லிக் கொண்டிருந்தார் - "பாஸூக்கு கோழின்னா ரொம்ப பிடிக்கும் போல.."

"எந்த நாட்டுக் கோழி பாஸ்.."

அப்போது தான் புரிந்தது.கோழி என்றால் இங்கு கோர்ட் வேர்ட் போல.

இனி பிளாஷ்பேக்..

திசையன்விளையில் நான் ஏழாவது படித்துக் கொண்டிருந்தேன். சென்னைக்கு சுற்றுலா செல்வதாக ஏக மனதாக முடிவு எடுத்திருந்தார்கள். வழக்கம் போல ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் தான் அதில் அதிகம். அந்த வகுப்பில் இருந்த ஒரு டெரர் தான் பிரகாஷ். டாக்டர் பிரகாஷ் என்று சொன்னாலும் பொருத்தமாக இருக்கும்.நல்ல கலர்.ஆளும் குள்ளமென்பதால் சின்னப் பையன் போலிருப்பான்.

சென்னை போய் சேர்ந்ததும் பள்ளியின் கரஸ் பையனையும் எங்களோடு அனுப்பியிருந்தார்கள். பிரகாஷ் ஏக எரிச்சலில் இருந்தான். எது செய்தாலும் அவன் போய் போட்டுக் கொடுத்து விட்டால் இவன் கதி என்னாவது. அவனை வம்பிழுத்து பயங்கராம வெறுப்பேத்தி அடுத்த நாள் பெண்களோடு போகும் படி செய்து விட்டான்.

"ஏற்கனவே அவன் பையனால ஒரு பொண்ணைக் கூட பாக்க முடியல..ஒரு நாள் போயிருச்சே.." பஸ்ஸில் வரும் போதே புலம்பிக் கொண்டிருந்தான்.

"ஏண்டா அப்பனை மாதிரியே பிள்ளையும் இருக்கான்.." எண்ணெய் ஊத்திக் கொண்டிருந்தோம். காலையில் முதலில் கிஷ்கிந்தா. 3 டி படம் பார்த்து கொண்டிருந்தோம்.படம் பிடிக்கவில்லை. படம் முடிந்ததும் எல்லோருடைய கண்ணாடியையும் வாங்கி பிரகாஷ் உடைத்து போட்டு விட்டான்.

வெளியில் கண்ணாடி கேட்டார்கள்."சீட்டில் வைத்து விட்டோம்.." என்று சொல்லி சமாளித்து விட்டான்.

வெளியே வந்ததும் தான் கவனித்தோம். பிரகாஷ் தனியாக வந்திருந்த மூன்று பெண்களுக்கு கையாட்டிக் கொண்டிருந்தான். யாருக்காவது தெரிந்து விட்டால் என்ன செய்வது என்று கோழியைப் பாருங்கடா என்று சொல்ல ஆரம்பித்து விட்டான்.

கொஞ்ச நேரத்தில் அந்த பெண்களுடன் பேசி அவர்கள் அடுத்து வண்டலூர் போகிறார்கள் என்று தெரிந்து கொண்டான். அடுத்தது நாங்களும் அங்கு தான் போவதாகயிருந்தது.

வண்டலூர் போகும் வழியில் சாப்பிட்டு விட்டு பஸ் ஏறும் போது அந்த பெண்கள் அங்கிருந்ததைப் பார்த்து ஒவராக கத்தி விட்டான்.

"அங்கப் பாருங்கடா அந்த கோழிகளை.." இப்படி அவன் கத்தியது அங்கிருந்த எல்லோர் காதிலும் விழுந்து தொலைத்தது.

"ஏண்டா இப்படி அலையிறீங்க.." அவன் கிளாஸ் பொண்ணு சொல்ல

"நீங்க எல்லாம் அழகாயிருந்தா நான் ஏன் கோழி கோழின்னு அலையிறேன்..ஒழுங்கா உன் வேலையைப் பாரு.."

"மிஸ் இங்க பாருங்க..பிரகாஷ் கோழி கேக்குறான்.." இப்படி போட்டு கொடுத்து விட்டார்கள்.

"என்னடா கோழி..நீ சொல்லு..நீதான் அந்த செட்லையே நல்லவன்.." என்று என்னை கேட்டார்கள்.

"பாரு சாட்சிக்குப் பிடிச்ச ஆளை.." என்று பிரகாஷ் நக்கல் அடித்து கொண்டார்கள்.

"இல்ல..மத்தியானம் சாப்பாட்டுல கோழி இல்லையாம்..அதான் சொன்னான்.." எப்படியோ சமாளித்து விட்டேன்.

வண்டலூரில் திரும்ப அந்த பெண்களுடன் சுத்திக் கொண்டிருந்தான். கொஞ்ச நேரம் ஆளையே காணோம். தேடினால் ரொம்ப சோகமாக வந்தான்.

விசாரித்து பார்த்தால் அந்த கும்பலில் இருந்த பெண் யாருமில்லாத இடத்தில் இவன் முதுகைத் தடவி பார்த்து விட்டு "போடா சின்னப் பையா.." என்று திட்டி விட்டாளாம்.

"எப்படி அது முதுகைத் தடவி பார்த்து கண்டுப்பிடிக்க முடியும்.." எங்களுக்கு எல்லாம் சந்தேகம். கடைசியில் பார்த்தால் பிரகாஷ் ரொம்ப கலராயிருந்ததால் பூணூல் போட்டுயிருக்கிறானா என்று தடவிப் பார்த்திருக்கிறார்கள். இல்லை என்றதும் சின்னப் பையன் என்று துரத்தி விட்டார்களாம்.

பசங்களிடம் சொல்லாமல் கொள்ளாமல் போனதில் கோபத்தில் இருந்தார்கள்."சைவ கோழி.." என்று பிரகாஷைக் கிண்டல் செய்து கொண்டே வர..

கோழி என்பது கோர்ட் வேட் என்று எல்லோருக்கும் தெரிந்து விட்டது.உடனே பிரகாஷ் "டேய்..இனி கோழி ராசியில்லை..புலி என்று மாத்தி விடுவோம்.." என்று சொன்னதும் தான் தாமதம்.

"கோழியா இருக்கப் போய் ஒரு கீறல் கூட இல்லாம வந்திருக்க..அதுவே புலியாயிருந்தா.." திருநெல்வேலி வந்து சேரும் வரை ஒரு வழி பண்ணியிருந்தோம்.

அவனை பார்த்தால் கேட்க வேண்டும்..இன்னும் சின்னப் பையன் என்று தான் சொல்கிறார்களா என்று. முதலில் புலி என்றால் ஏதாவது சங்கேத வார்த்தையா என்று இங்கு விசாரிக்க வேண்டும்.

Tuesday, July 13, 2010

இனி என் பதிவு பரிந்துரையில் சம்மணம் போட்டு உக்காரும்

அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ ·
1 2 3 4 5 6 7 8 9 0
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z
க் ங் ச் ட் த் ப் ர் வ் ய் ற் ம் ஞ் ந் ன் ண் ழ் ல் ள்

இப்படி கூட எனக்கு தெரிஞ்ச மொழியில உள்ள எழுத்தை எல்லாம் கூட கஷ்டப்பட்டு எழுத வேண்டாம். வெறும் புள்ளி இல்லன்னா கமா வைச்ச பதிவு நான் போட்டா கூட இனி பரிந்துரையில் நிற்கும், உக்காரும், கழியும், கூட்டும்.

ஏற்கனவே ஒரு பதிவின் பின்னூட்டதில் சொன்னது இங்கே..

சில முழுவேக்காடுகள் வந்து ஓட்டு,ஹிட்ஸ்,அதிக பின்னூட்டம் என்று பேசி எனக்கு எதையாவது உளறி எனக்கு வரும் பின்னூட்டத்தின் எண்ணிக்கைகளை உயர்த்த வேண்டாம்.பிரோபைல் காட்ட தெரியாத அறிவுஜீவிகள் எல்லாம் தமிலீஷ் பற்றியும்,ஹிட்ஸ் பற்றியும் பேசுகிறது.(நான் கிளிக் பண்ணிலாலும் ஹிட்ஸ் எண்ணிக்கை கூடும்,என்னால் தமிலீஷில் பத்து வோட்டுகள் போட முடியும்.சந்தேகம் இருந்தால் அடுத்த வாரம் ஏதாவது பதிவில் போட்டு காட்டுகிறேன்.அப்படியே பின்னூட்டத்தின் எண்ணிக்கையும் கூட்ட முடியும்.).இது ஏப்ரம் மாதம் சொன்னது.


அதில் ஒரு மாற்றம் இரண்டு கணினி வேண்டாம்.இப்போது ஒரே கணினி போதும்.

ஜனவரி மாதம் சொன்னது இங்கே

தமிலீஷ்,தமிழ்மணம்,சங்கமம் எல்லாவற்றிலும் கள்ள ஓட்டு குத்த முயற்சி செய்தேன்.பக்காவாக எல்லா திரட்டியிலும் விழுந்தது.காரணம் கோல்மால் செய்வது எனக்கு புதிது அல்ல.பழகிய ஒன்று தான்.என்னால் தமிழ்மணத்தில் நாலு ஒட்டுக் குத்தி பரிந்துரையில் நிற்க முடியும்.ஆனால் செய்யவில்லை.இருபது ஓட்டுக் குத்தி மகுடத்திலும் ஏற முடியும்.செய்யப் பிடிக்கவில்லை.தமிழ் மணம் இந்த ஓட்டு முறைகளை நிறுத்தி விட்டு சுழற்சி முறையில் எல்லோருடைய பதிவுகளையும் கொண்டு வரலாம்.நிறைய புதியவர்களை அடையாளம் கண்டுக் கொள்ளலாம்.நான் ஏதோ சும்மா சொல்கிறேன் என்று நினைக்க வேண்டாம்.சங்கமம்(tamil.blogkut.com) போய் நிறைய ஓட்டு வாங்கிய பதிவுகளைப் பார்க்கலாம்.முதல் ஆறு பதிவும் என்னுடையது தான்.கள்ள ஓட்டே போட முடியாது என்று நினைத்த சங்கமத்திலே இந்த கோல்மால் சாத்தியம் என்றால் தமிழ்மணம்,தமிலீஷ் எல்லாம் என்ன கதியாகும் என்று யோசித்து கொள்ளலாம்.இனி புதியவர்களும் அவர்களே நாலு ஓட்டுக் குத்திக் கொண்டால் பரிந்துரையில் நிற்கும்.எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ள ரூபாய் ரெண்டாயிரத்தை எனக்கு அனுப்பி வைக்கவும்.குஜராத் பதிவர் என்றால் நாலாயிரம்.பிம்பிளிக்கி பிலாப்பி அதாங்க பத்தாயிரம் ஆவதற்குள் அணுக வேண்டிய முகவரி - 13ம் நம்பர் வீடு, வியட்நாம் காலனி,அண்ணா நகர் முதல் தெரு,சென்னை - 600028.


ஆராய்ச்சி முழு வெற்றி.எனக்கு குழு எல்லாம் வேண்டாம்.ஏழு அல்ல நூறு ஓட்டு என்னால் எல்லா திரட்டிகளில் போட முடியும். இது தமிழ்மணம் யோசிக்க வேண்டிய நேரம் என்று நினைக்கிறேன்.தமிழிஷ் திரட்டியை விட தமிழ்மணம் டிராபிக்,அலெக்ஸா என்று எல்லாவற்றிலும் பின் தங்கியிருக்க காரணம் முகப்பு பக்கத்தில் அதுவும் பரிந்துரையில் எப்போதும் தெரிந்து கொண்டிருக்கும் பதிவர்களே. கொஞ்சம் அல்ல நிறைய யோசித்து பரிந்துரையைத் தூக்கி விடுங்கள். அடிக்கடி பிரச்சனை வர காரணங்கள் தொடங்கும் இடமே பரிந்துரை தான். ஏன் என்றால் அங்கு தான் குழுக்கள் பிறக்கின்றன.

கோவி.கண்ணன் மற்றும் நான் சொல்வது போல எல்லோரும் கோல்மால் செய்தால் அல்லது குழு அமைத்து ஓட்டுப் போட்டால் என்னவாகும் என்று யோசியுங்கள்.இன்னும் அதை நான் செயல்படுத்தவில்லை. செயல்படுத்த என்னை செய்து விடாதீர்கள்.ஒரே ஐடியில் இருந்து இரண்டு ஓட்டுக்கள் கூட போட முடியும்.ஆக இதற்கு தேவை ஏழு ஐடிகள் தான்.

Monday, July 12, 2010

இப்படி எல்லாம் அழிச்சாட்டியம் பண்ணினா தான் பிரபல பதிவரா

கிராமங்களில் பெயர் வைப்பதற்கு மிகவும் சிரத்தை எடுத்துக் கொள்ள மாட்டார்கள்.
அப்படிதான் இவளுக்கும் பெயர் வைத்தார்கள்.அந்த குடும்பத்திலே மிகவும் வெள்ளையாகப் பிறந்ததால் இந்த பெயர்.நான் பழகியதில் ரொம்ப தைரியமான பெண் என்று தான் நான்கு வருடங்களுக்கு முன் வரை நினைத்து வந்தேன்.

பதினாலு வருடங்களுக்கு முன்..

ஊரில் சின்னப் பசங்களுக்குள் எந்த சண்டை(சண்டை மட்டுமே) நடந்தாலும் குற்றப்பத்திரிகையில் என் பெயர் முதலாவதாக இருக்கும்.சாட்சியங்களோடு அந்த இடத்தில் இல்லை என்று நிரூபித்தால் மட்டுமே அடுத்த பையன் மீது விசாரணை நகரும்.அப்படி ஊருக்குள் நல்லப் பெயர் எடுத்தவன்.அப்படி இருக்கும் என்னோடு விளையாட பசங்களே யோசிப்பார்கள்.இதில் கண்ணன் என்ற உறவினன் தான் எனக்கு எல்லாமே.அவனும் சேர்ந்தால் விளையாட்டுக்களம் ரணகளம் ஆகும்.
அப்போ ஊரில் பேமஸான விளையாட்டு கிரிக்கெட்டுக்கு முன்னோடி குச்சிக்கம்பு.(சென்னை மொழியில் கில்லிதாண்டா)

நாங்கள் இரண்டு பெரும் சேர்ந்து ஒரே அணியில் ஆடினால் பெரியப் பசங்களே அலறுவார்கள்.(அப்படியொரு சர்ப்ரைஸ் காம்போ).அப்புறம் பெண்கள் கேட்கவே வேண்டாம் நாங்கள் இறங்கினால் ஆட்டத்தில் இருந்து விலகுவார்கள்.அதிலும் ஒரு விதிவிலக்கு தான் வெள்ளச்சி எங்களுடன் மோத விரும்புவாள்.

அப்படி ஒருநாள் எங்களை விளையாட்டுக்கு யாரும் சேர்க்காதக் கோவத்தில் ஆட்டத்தைக் கலைத்து விட்டு சோகமாக நாங்கள் இருவரும் உக்கார்ந்து இருந்தோம்.

கோவத்தில் ஒருவன் - "டேய் இருங்கடா உங்க மாமா கிட்ட சொல்றேன்.."

கண்ணன் - "ஆமா நீ சொல்லி அஞ்சாறு ம....ச்சி"(அப்போ அந்த வார்த்தையைக் கூட கெட்ட வார்த்தையாக நினைத்தேன்..சென்னை வந்த ஒரே மாதத்தில் அதெல்லாம் ஒரு கெட்ட வார்த்தையே இல்லை என்று ஆகி விட்டது.ராகத்தோடு ரைமிங்காக பேசுவேன்)

மாமா என்றாலே எனக்கு பயம்.இந்த பசங்களுடன் சேர்ந்து விளையாடுவதைப் பார்த்தால் எனக்கு அடி விழும்.பயத்தில் நான்.

"கண்ணா..உன்ன விட்டுருவாரு எனக்கு அடி விழும்..ரொம்ப பயமாயிருக்கு.."

அந்த சமயம் வெள்ளச்சி வந்து சேர்ந்தாள்..

"என்ன நீங்க ரெண்டு பெரும் இங்க உக்கார்ந்து இருக்கீங்க.."

"விளையாட யாருமேயில்லை.." - இது நான்

"சரி நான் வர்றேன்..விளையாடுவோமா.."

"வெள்ளச்சி விளையாடுறதிலப் பிரச்சனை இல்ல..நீ மட்டும் தான் இருக்க..நாங்க இரண்டு பேர்.." - நான் அவளைத் துரத்துவதிலே குறியாக இருந்தேன்.

"இரண்டு ஆட்டமும் நானே ஆடுறேன்.."

"வேண்டாம் வெள்ளச்சி..இன்னொரு நாள் விளையாடலாம்.."

கண்ணன் காதில் கிசுகிசுத்தான் - "கோழியே வந்து என்னை சாப்பிடுன்னு கத்துது..நீ கெடுத்துருவப் போல.."

"சரி எவ்வளவு பாயிண்ட்.." - நான் வெள்ளச்சியிடம் கேட்டேன்.

"ஐந்நூறு.."

டாஸ் போடுவதற்குக் கண்ணன் கல்லைத் தேடிக் கொண்டியிருந்தான்.(அந்த கல் ஒரு பக்கம் வெள்ளையாக இருக்கும்..இன்னொரு பக்கம் வேறு நிறத்தில் இருக்கும்)

"அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் நீங்க முதல்ல விளையாடுங்க.." என்று அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுத்து கொண்டேயிருந்தாள் வெள்ளச்சி

பொதுவாக பெண்கள் தான் முதலில் விளையாடுவார்கள்.அவர்கள் தோற்பது போல் இருந்தால் அசந்து இருக்கும் சமயம் வீட்டைப் பார்த்து ஓடி விடுவார்கள்.துரத்திப் பிடித்து தலையில் கொட்டி ஆத்திரத்தைத் தீர்த்துக் கொள்வோம்.(அது ஒரு தனி வழக்காக உருவாக்கப்படும்)

குச்சிக்கம்பு நேர்த்தியாக விளையாடுபவர்கள் தோற்றவர்களை முடிவில் அலைக்கழிப்பார்கள்.அது பாவம் பார்த்து விட்டால் தான் உண்டு.ஆட்டம் அரைமணி நேரத்தில் முடிந்து விடும்.அலைக்கழிப்பு ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடக்கும்.

அவளை நினைத்தால் பாவமாக இருந்தது.

கண்ணன் அவள் மேல் நம்பிக்கை இல்லாமல் அவள் புத்தகப்பையை வாங்கிக் கொண்டான்.

முதலில் நான் இறங்கினேன்.முதல் முறையாக டக் அவுட்.அதிர்ச்சி.கண்ணன் அடுத்து விளையாடினான்.பேரதிர்ச்சி.அவனும் டக் அவுட்.

அவளை ரொம்ப அலட்சியமாக எதிர்கொண்டது தான் காரணம்.(அக்தர் அறிமுகப் போட்டியில் டிராவிடையும்,சச்சினையும் அடுத்தடுத்த பந்தில் போல்டாக்கினார்.)இன்னொரு காரணம் அவளுக்கு எதிராக நாங்கள் விளையாடியது அதுதான் முதல் முறை.

கண்ணன் - "டேய் என்ன அவகிட்ட வம்பு இழுத்திருவோமா..ஆட்டையக் கலச்சுருவோம்.."
"இரு பாக்கலாம்" - அவளையும் டக் அவுட் செய்து விடலாம் என்று நினைத்தேன்.இந்தியாவுக்கு எதிராக மட்டும் நன்றாக விளையாடும் வீரர்களைப் போல அவள் வெளுத்துக் கொண்டியிருந்தாள்.

"இன்னைக்கு நம்ம மானம் போகப் போவது உறுதி.."

அடுத்தப் பத்து நிமிடத்தில் அவள் நானூறு எடுத்து இருந்தாள்.இன்னும் நூறு தான்.அப்போது தான் அவள் விளையாடும் முறையை கவனித்தேன்.கம்பைத் தரையில் தேய்த்துக் கொண்டேயிருந்தாள்.லகான் படத்தில் வரும் பவுலரைப் போலக் குச்சியைக் கொஞ்சம் உயரமாக வீசினேன்.அவள் கம்பை அடித்தப் பிறகு குச்சி கீழே விழுந்ததால் அவள் அவுட்.இரண்டாவது நபருக்கு அவள் விளையாடினாள்.இந்த முறையும் அதே பாணியில் அவுட் செய்தேன்.

கண்ணன் அவள் பையைப் பத்திரமாக எடுத்து வைத்து கொண்டான்.நான் இறங்கி ஐநூறு பாயிண்ட் எடுத்து விட்டேன்.

கண்ணன் பையை என்னிடம் கொடுத்து விட்டு அவளை அலைக்கழிக்க ஆரம்பித்தான்.அவள் முகம் கொஞ்சம் கொஞ்சமாக மாறிக் கொண்டே வந்தது.இன்னும் கொஞ்ச நேரத்தில் எப்படியும் அழுது விடுவாள் போல இருந்தது.(இதற்கும் ஒரு வழக்கு வருமே என்று பயம் வேறு..)

"கண்ணா அவள விடு வீட்டுக்குப் போகலாம்..இந்தா எடுத்துக்கோ.." என்று பையை அவளிடம் கொடுத்தேன்.

"நீ அலைக்கலையா.." என்றவளிடம் "ரொம்ப நல்லா விளையாடின..அதுக்கு நான் தரும் மரியாதை" என்று சொன்னேன்.

அடுத்த இரண்டு வருடத்தில் நான் சென்னைக்கு வந்து விட்டேன்.சில வருடங்கள் கழித்து ஊருக்கு போனப் போது தாவணி எல்லாம் அணிந்து ஆளே மாறியிருந்தாள்.

அவள் வீட்டிற்கு போனேன்.பணியாரம் கொடுத்தாள்.சாப்பிடத் தொடங்கியவுடன் "இது கூட சரியா சாப்பிடத் தெரியல.." என்று கறுப்பாக இருந்ததை எல்லாம் எடுத்து விட்டு சாப்பிடத் தந்தாள்.

இரண்டு வருடம் கழித்து அவள் தற்கொலை செய்து கொண்டாள் என்று கேள்விப்பட்டேன்.காதல் தோல்வியாம்.அந்த பையன் இருக்கிறதிலே கேனை மாதிரி இருப்பான்.

அவள் இறந்தப் பிறகு ஒரு முறை ஊருக்குப் போனேன்.வீட்டை விட்டு வெளியே போகவில்லை.அவள் பேயாக அலைகிறாள் என்று வதந்தி வேறு.

மும்பை வந்த பிறகு ஒரு ஊர்காரனைப் பார்த்தேன்.அவள் சாவோடுப் போராடியக் கணங்களை விவரித்தான்.அன்று விளையாடிய ஆட்டம் ஞாபகத்திற்கு வந்தது.

அன்று எனக்கு இருந்த கருணை கூட அந்த முட்டாள் கடவுளுக்கு இல்லை.

பின்குறிப்பு :

கண்ணன் குடும்பத் தகராறில் எனக்கு எதிரியாக மாறி இருந்தான்.அவன் அப்பா ஒரு பேராசை பிடித்தவன்.அவன் யாருக்கோ வைத்த மின்சாரத்தில் கண்ணன் மாட்டிக் கொண்டு இறந்து விட்டான்.

Sunday, July 11, 2010

ஐஸ் காபி வித் ராஜி

விடுமுறைக்கு வீட்டில் எல்லோரும் திருநெல்வேலிக்கு போயிருந்தார்கள்.எனக்கு செமஸ்டர் மே மாதம் வரை நீண்டிருந்தது.எதிர் வீட்டில் சாப்பாடு சொல்லியிருந்தார்கள்.ஆனால் ராஜி சமைத்து கொண்டு வருகிறேன் என்று சொன்னதால் சாப்பிடாமல் காத்திருந்தேன்.அவளை வரவேற்க லேசாகத் சாறலோடு மழை அடிக்கத் தொடங்கியிருந்தது.அவள் உள்ளே நுழையவும் மழை வலுத்திருந்தது.உள்ளே வரும் அவசரத்தில் வலது காலை எடுத்து வைத்தாளா என்று தெரியவில்லை.வந்ததும் திட்டுதான்.

"வீடு எப்படி அலங்கோலமாக வைத்திருக்கிறாய்.."

"..."

"பாத்திரம் கழுவியிருக்க மாட்டாயே.."

"..."

"சரி நான் குத்து விளக்கு ஏத்துகிறேன்.." சொல்லும் போது லேசான வெட்கம் தெரிந்தது.தீப்பெட்டி ஜன்னலரோமாகயிருந்தது மழையில் நனைத்து பத்தவேயில்லை.அன்று அது ஒன்றும் பெரிதாக தெரியவில்லை.இன்று யோசித்தால் அர்த்தம் புரிகிறது.

"சார் பீர் பாட்டில் ஒண்ணும் காணோம்..அது மட்டும் ஒளிச்சிருப்பியே..எங்க ஊது.." வழக்கம் போல ஆரம்பித்திருந்தாள்.

சாப்பிட்டு முடிக்கவே நாலு மணி ஆயிருந்தது.

"காபி.." தலையை முடிந்து கொண்டு கேட்டது இன்னும் வசீகரமாக நினைவில் இருக்கிறது.

"நான் போடுறேன் என் செல்ல .." அவளை நகர்த்தி விட்டு சமையலறைக்குள் நுழைந்திருந்தேன்.

"என் செல்ல ராட்சஸியா..என்ன சொல்ல வந்த.."

"காபி தான்.. ஆனால் ஐஸ் காபி.." ஆச்சர்யத்தில் அவள் முகம் விரிந்தது பிடித்திருந்தது.

இங்கு வந்தப்பின் தான் தெரிகிறது.ஐஸ் காபி போடும் முறை வேறு என்று.அது தெரியாமல் ஃப்ரீஸரில் இருந்த பாலை எடுத்து சூட வைக்காமல் நேராக காபி பொடியைக் கலந்தால் அது கரையவேயில்லை. மிக்ஸியில் அடித்து சீனி கலந்து குடிக்க தந்தேன்.

"அமேசிங்..இனி எனக்கு சமையல் பிரச்சனையில்லை.." லேசாக கண்ணடித்து சிரித்தாள்.

நாளை வருவதாக சொல்லி விட்டு சென்றப்பின் எனக்கு காய்ச்சல் அடிக்கத் தொடங்கியிருந்தது.நிற்க முடியாமல் சரிந்து விட்டேன்.பிறகொரு நாள் தெரிந்து கொண்டேன்.மிக்ஸியில் அடித்தால் ஓத்துக் கொள்ளாதாம்.

சாவியை உள்ளே வைத்து அடிக்கடி பூட்டி விடுவதால் அவளிடம் ஒரு சாவியைக் குடுத்து வைத்திருந்தேன். அடுத்த நாள் சேலை கட்டி வருவதாக போனில் சொல்லியிருந்தாள்.

காலிங் பெல் சத்தம் தொடர்ந்து கேட்டது.எந்திரிக்க முடியாமல் சுருண்டியிருந்தேன்.ராஜி திறந்து வந்து நானிருந்த கோலத்தைப் பார்த்து அதிர்ந்திருந்தாள்.

"என்னாச்சு.." தொட்டுப் பார்த்து விட்டு கோபமாக ஏதோ சொன்னாள்.

"ஐஸ் காபி ஒத்துக்கல.."

"முட்டாள்..உனக்கெல்லாம் ஏன் வேண்டாத வேலை..வா டாக்டர் கிட்ட போகலாம்.."

"இல்ல..நீ ஏன் கூடவே இரு..உனக்கு ஒண்ணும் ஆகாததே எனக்கு சந்தோஷம் தான்.." கைகளை விடாமல் சொன்னேன்.

"நீ தந்ததால் என்னை விஷம் கூட ஒன்றும் செய்யாது.." அவள் சொன்னது இன்று நினைத்தாலும் உதட்டில் லேசாக சிரிப்பை வரவழைக்கிறது.

அவளே ஏதோ சமைத்து சாப்பிட வைத்து விட்டு ரொம்ப நேரம் கழித்து போகும் போது நெற்றியில் முத்தமிட்டாள்.என்ன நிறத்தில் சேலை கட்டியிருந்தாள் இன்று நினைத்தாலும் நினைவுக்கு வரவில்லை.

மறுநாள் மேக்ஸ் சொல்லிக் கொடுத்து கொண்டிருந்தாள்.எனக்கு வேறு சிந்தனை ஓடிக் கொண்டிருந்தது. தூக்கம் வராமல் படித்த பாலகுமாரனின் நாவலில் தான் கவனமிருந்தது.போகும் போது முத்தமிட வந்தவளைத் தடுத்துக் கொண்டிருந்தேன்.

"உனக்கு உடம்பு சரியில்ல..அதனால சும்மா விடுறேன்..இனி குறுக்கே கை நீட்டின..கையிருக்காது.." என்று மிரட்டியது சிரிப்பாக இருந்தாலும் பாலகுமாரனின் தாக்கம் தான் என்று பெரிதாக தெரிந்தது.

செமஸ்டர் முடிவு வந்த போது அவள் மேக்ஸ் பேப்பரில் அரியர் வைத்திருந்தாள்.நான் கிளியர் செய்திருந்தேன். இருட்டு சந்தில் ரொம்ப அழுதாள்.என்ன சமாதானம் சொன்னாலும் தேற்ற முடியாது. அவள் அழகாகயிருப்பது போல் தெரிந்ததோடு முத்தமிடவும் மனது சொன்னது.

"உனக்கு இந்த நேரத்தில் கூட இதான் நினைப்பா.." என்று கேட்டு விட்டாள்.அந்த நினைப்பே என்னை கூனிக் குறுக செய்ய அவளை தோளில் சாய்த்துக் கொண்டேன்.போன முறை தான் கவனித்தேன். அந்த இடம் பெரிய அப்பார்ட்மெண்டாக மாறியிருந்தது.

வீட்டில் விட்டு வரும் போது தான் கவனித்தேன்.கண்ணீரோடு கண்மையும்,எச்சிலோடு உதட்டுச் சாயமும் வெள்ளை சட்டையில் ஓட்டியிருந்தது.துவைத்தால் போய் விடும் என பயந்து துவைக்காமல் யாருக்கும் தெரியாமல் பத்திரப்படுத்தி வைத்திருந்தேன்.

நடுவில் சில பிரச்சனைகளால் இருவரும் சொல்லாமல் கொள்ளாமல் பிரிந்திருந்தோம்.பிறகு நான் மும்பையில். அவள் என்ன செய்கிறாள் என்றே தெரியாமல் காலத்தை நகர்த்தி கொண்டிருந்தேன். அவள் தந்திருந்த மொபைல் நம்பரை ரோமிங் என்றாலும் மாற்றாமல் வைத்திருந்தேன்.

மழை நாளில் ஐஸ்கீரிம் சாப்பிட்டதில் கடுமையான சூரம்.தெரிந்து சிக்கன் சாப்பிட இன்னும் அதிகமானது.எழுந்திருக்க முடியாமல் படுத்தப் படுக்கையாகயிருந்தேன்.

"எனக்கு பயங்கர காய்ச்சல்..சரியாக நீ சேலையில் வர முடியுமா..ஒரு முத்தம்....." மேற்கொண்டு அடிக்க முடியாமல் மயங்கி சரிந்திருந்தேன்.

இரண்டு நாட்கள் கழித்து சரியானதுடன் முதல் வேலையாக அவளுக்கு அனுப்பாமல் வைத்திருந்த குறுஞ்செய்தியை அழித்ததும் தான் கொஞ்சம் நிம்மதியாகயிருந்தது.

கல்யாணம் செய்து கொண்டாள் என்று அது நடந்து வெகு நாட்கள் கழித்தே எனக்கு தெரிந்தது. மனதில் அவள் நினைவுகள் இருந்த இடமெல்லாம் தூசிப் படிந்திருந்தது.

வேறு வேலை.மலேசியா.ஐஸ் காபி,டீ என்று புதிய வாழ்க்கை. ஐஸ் காபியும்,டீயும் தூசியை விலக்கி அவள் நினைவுகளை தெரிய வைத்தது.எல்லோருக்கும் அதிர்ச்சி.வந்ததில் இருந்து ஐஸ் காபியும்,டீயுமாக வாழ்கிறானே என்று. ரொம்பவும் பிடித்து விட்டது என்று நினைத்து விட்டார்கள்.ஐஸ் காபி போடும் முறையே இங்கு வந்து தான் தெரிந்து கொண்டேன்.சூடாக காபி போட்டு விட்டு அதில் ஐஸ்கட்டிகளைப் போடுகிறார்கள்.

ஏனோ தெரியவில்லை. கனவில் அவளிடம் காதலை சொன்னது காட்சியாக விரிந்திருந்தது.

ஒரு மழை நாளில் அவள் வீட்டிற்கு போகும் போது தான் சொன்னேன்.யாருமில்லாத தெருவில் கையைப் பிடித்து சொன்னேன்.

"காதல் இருக்கிறது எனக்கு உன் மேல.." கோர்வையாக சொல்லாமல் எப்படியோ சொல்லி விட்டேன்.

"சொல்ல இவ்வளவு நாளா.." பதில் கிடைத்ததும் தான் தாமதம் அவளை இறுகக் கட்டிப் பிடித்தேன்.

"தெரியுமே க்ரீன் சிக்னல் விழுந்ததும் சீறிப் பாய்வீங்களே.." என்று கைகளைத் தட்டி விட்டாள்.

அதை கலைக்கும் விதமாக போன் அடிக்க ஆரம்பித்திருந்தது.

"பாஸ் நீங்க சொன்ன எஸ்.எம்.எஸ்..என் ஆளுக்கு அனுப்பினேன்..செம சந்தோஷம் அவளுக்கு..கடைக்கு வாங்க பார்ட்டி தான்.."

"நீ - திமிர்
நான் - புதிர்
நாம் - திமி(று)ரும் புதிர்.."
என்று அவள் நினைவாக எழுதியிருந்ததை எஸ்.எம்.எஸ்ஸாக அடிக்க கொடுத்திருந்தேன்.

கடைக்கு போனால் "என்ன வேணும்..டைகர்,கின்னஸ்.." என்று ஆரம்பித்து எல்லா சரக்கு பெயரையும் சொல்ல

"ஐஸ் காபி.." முகத்தை வேறு பக்கம் திருப்பியிருந்தேன்.

மலேஷிய எஃப்.எம் நம்பர்களைத் தேடிக் கொண்டிருந்தேன்.இன்னும் பத்து நாளில் வரப் போகும் அவள் பிறந்த நாளுக்காக இந்த பாட்டை போட வேண்டும்.

"உன்னோடு நானிருந்த ஓவ்வொரு மணித்துளியும்..
என் மரணப் படுக்கையிலும் மறக்காது கண்மணியே.."

"பாஸ் இந்தாங்க ஐஸ் காபி.." சிந்தனையைக் கலைந்ததும் அவள் கசப்பான நினைவை மறக்க அதை விட கசப்பான ஐஸ் காபியைக் குடிக்க ஆரம்பித்தேன்.

Saturday, July 10, 2010

நர்சிமின் தயக்கம்

தலைப்பு நிகழ்கால சூழ்நிலைக்கு எவ்வாறெல்லாம் பொருந்தி போகிறது என்பது ஆச்சர்யமே.கதையின் சுருக்கம் கதா நாயகனின் உண்மை சூழ்நிலையையும் காட்டுகிறது.சிறு குறிப்பு - இரண்டு ஆண்டுகளாக சாதித்து விட்டு ஒரு பிரச்சனையின் போது எப்படி தயக்கம் காட்டுகிறான்.இனி புலிப்பாய்ச்சல் காட்டுவானா என்பது இனி தான் தெரிய வரும்.கதை தினகரன் வசந்தத்தில் இருபத்தி இரண்டாம் பக்கத்தில் உள்ளது.வெளியான நாள் ஜூன் ஆறு.

அந்த கல்லூரிக்குள் தயக்கத்துடன் சாதிக் நுழைந்தான்.பயந்து பயந்து எம்.எஸ்சி கெமிஸ்டரி எங்கிருக்கிறது என்று விசாரித்து வகுப்பறை முன் நின்றான்.

"புது அட்மிஷனா..உள்ள வா!" என பேராசிரியர் அழைத்தார்.நுழைந்தவன் காலியான இருக்கையில் அமர்ந்தான்.அவனது பெயர், விவரம், தனித்திறமைகளை பேராசிரியர் கேட்டார். மாணவ, மாணவிகள் மத்தியில் ஆர்வம். சாதிக்கையே பார்த்தார்கள்.

மற்றவற்றுக்கு பதில் சொன்னவன், 'தனித்திறமை'க்கு மட்டும் மவுனமாக இருந்தான். " ஓ... தத்தியா?ஒரு திறமையும் கிடையாதா?" - பேராசிரியர் கேட்க, அனைவரும் கொல்லென்று சிரித்தார்கள்.அந்த நேரம் பார்த்து கல்லூரி பியூன் ஸ்ர்க்குலருடன் வந்தான்.அன்று மதியம் மாவட்ட கல்லூரி மைதானத்தில் மாவட்ட அள்விலான கிரிகெட் போட்டு நடப்பதாகவும், அனைத்து மாணவ மாணவிகளும் கண்டிப்பாக வர வேண்டுமென்றும் கல்லூரி பிரின்ஸிபல் ஆர்டர் போட்டிருந்தார்.

"இந்தாம்மா ரேவதி, நம்ம க்ளாஸ் பசங்க எல்லோரும் மைதானத்துக்கு வர்றாங்களானு நீதான் பார்க்கணும். யாராவது வரலைனா எங்கிட்ட சொல்லு.." என்றார் பேராசிரியர்.

மதியம் மைதானம் மாணவர்களால் நிரமியிருந்தது. ஆனால் சாதிக்கை மட்டும் காணவில்லை. ரேவதி பல்லைக் கடித்தாள். "புதுப் பையன்...தயங்கித் தயங்கி பேசினப்பவே நினைச்சேன்..." என்று அவன் முணுமுணுத்த போது ஒலி பெருக்கி அதிர்ந்தது.

"நம் மாவட்டத்தின் கேப்டனும், நம் கல்லூரியில் புதிதாக சேர்ந்திருப்பவருமான சாதிக் பாட்ஷா, டாஸில் வென்று விட்டார். இதோ, நம் அணி பேட்டிங் செய்ய களம் இறங்குகிறது..." பலத்த கரகோஷத்துடன் ஓபனிங் பேட்ஸ்மேனாக சாதிக் களம் இறங்கினான். ரேவதி உட்பட அனைவரும் திகைப்புடன் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள்.

அன்று ஆரம்பித்த சாதிக்கின் சாதனைகள் அடுத்து வந்த இரு வருடங்களிலும் தொடர்ந்தது. கிரிக்கெட் மட்டுமல்ல, படிப்பிலும் அவன் கில்லாடியாக இருந்தான்.

ஒருநாள் ரேவதி அவனிடம் கேட்டாள். "இந்த ரெண்டு வருஷத்துல நாம எவ்வளவோ பேசியிருக்கோம். ஆனா தயக்கம் இல்லாம நீ என்கிட்ட ஐ லவ் யூன்னு சொல்லவே இல்ல... ஏன் சாதிக்?"

"தயக்கம்னா என்ன ரேவதி?"

"எதுக்கெடுத்தாலும் பயந்து பேசாம் இருக்கிறது?"

"யெஸ்...நீ நாளைக்கு என்ன ஆகப் போறங்கிற பயமோ, இன்னிக்கு ராத்திரிக்கு என்ன சாப்பிடலாம்கிற கவலையோ உனக்கு இல்ல... ஆனா, எனக்கு இருக்கு. என்னோட இந்த நாள் எங்க அப்பாவோட முப்பது வருஷ கூலி, அவர் ஒரு நாள் கூட இரும்பையோ நெருப்பையோ பாத்து வேலை செய்ய தயங்கினதே இல்ல...அவரு வெல்டிங்ல ஒட்ட வைக்கிறது இரும்வ இல்ல...என் வாழ்க்கைய...நான் தயங்காம இருந்திருந்தா பத்தாவதுலயே லவ் பண்ணி இருப்பேன்..."

"சாதிக்..."

"சில நேரங்கள்ல சில விஷயங்களுக்குத் தயங்கினா தப்பே இல்ல...இப்போ நாம எப்படியும் ஃபர்ஸ்ட் கிளாஸ்ல பாஸ் பண்ணப் போறோம்.கிரிக்கெட்டும் அடிஷனலா இருக்கு. ஸோ, ஸ்போர்ட்ஸ் கோட்டாவுல வேலை கிடைக்கும். அப்ப தயக்கமில்லாம வந்து உங்க வீட்ல பொண்ணு கேட்பேன்.இப்ப நான் தயங்கறது, அப்ப தயக்கமில்லாம இருக்கத்தான்..."

சொல்லிவிட்டு சென்ற சாதிக்கை காதலுடன் பார்த்தாள் ரேவதி.