Wednesday, December 29, 2010

கர்ணபாரதம்

குருஷேத்திர யுத்ததிற்கு திட்டம் போட கௌரவர்கள் கூடியிருக்கிறார்கள். பீஷ்மர் தான் தலைமை என்பதை எல்லோரும் முடிவு செய்து ஒத்துக் கொள்கிறார்கள்.அப்போது நடக்கும் வாக்குவாதத்தில் கர்ணன் பீஷ்மர் இருக்கும் வரை களமிறங்க மாட்டேன் என்று கோபித்து கொண்டு கர்ணன் செல்கிறான். கர்ணன் இல்லாத களத்தில் அம்பை விடவே அர்ஜூனன் யோசிக்கிறான். கிருஷ்ணன் எல்லோரையும் கர்ணனாக நினை என்று யோசனை சொல்கிறான். போர் தொடங்குகிறது. பத்தாம் நாள் பீஷ்மர் சிகண்டியால் சாய்க்கப்படுகிறார். கர்ணன் களமிறங்குகிறான்.

"உன்னை பார்த்தாலே விஜயன் உக்கிரமாக போர் புரிந்திருப்பான். துரியனைக் காக்க நீ வேண்டும் என்பதாலே உன்னை களம் இறக்காமல் நான் பார்த்துக் கொண்டேன்..நீ மாபெரும் வீரன் கர்ணா.." என்று பீஷ்மர் சொல்ல

"தெரியும் தாத்தா..அர்ஜூனனை அழித்து விட்டு தான் மறுவேலை.." என்று கர்ணன் சொல்ல

"கிருஷ்ணன் இருக்கும் வரை அது நடக்காது..அவனை சாய்க்க முடியவில்லை என்றாலும் பரவாயில்லை.. அவனை சேர்ந்தவர்களைக் கொன்று விடு..அவன் தானாக சோர்ந்து விடுவான்.."

பதிமூன்றாவது நாள் யுத்தத்தில் அபிமன்யூம், பதிநான்காவது நாளில் கடோத்கஜனும் சாய்க்கபடுகிறார்கள். அர்ஜூனை அழிக்க வைத்திருந்த ஆயுதம் கடோத்கஜனை அழிக்க உதவுகிறது. கர்ணனும், அர்ஜூனனும் துக்கத்தில் இருக்கிறார்கள்.

குந்தியைச் சந்திக்க வருகிறான் கிருஷ்ணன்.

"என் பேரன்களைக் கர்ணன் கொல்லும் போது பார்த்துக் கொண்டாயிருந்தாய் யசோதா மைந்தா..ஏன் கர்ணனை நீ கொல்லவில்லை.."

"என்னால் கர்ணனைக் கொல்ல முடியாது அத்தை.."

"என்ன காரணம்.."

"அவன் உன் மகன் அத்தை..சூரியனுக்கும் உனக்கும் பிறந்தவன்..என்னால் எப்படி அவனை கொல்ல முடியும்.."

"நான் அவனை உடனே பார்க்க வேண்டும்.." என்று குந்தி அடம் பிடிக்க கண்ணன் மனதுக்குள் சிரித்து கொள்கிறான்.

கர்ணன் பாசறையில் தூங்காமல் அமர்ந்திருக்கிறான்.

"மகனே.." என்ற சத்தம் கேட்டு வெளிச்சமாக்குகிறான். "அம்மா அர்ஜூனன் பாசறை அங்கே இருக்கிறது..வழி தெரியாமல் வந்து விட்டீர்களா.."

"வழி தவறவில்லை..தகர்த்த வழியை நேர் செய்ய வந்தேன்.. நீ என் பிள்ளை.." என்று குந்தி சொல்ல

"நான் தேரோட்டியின் மகன்.."

"கர்ணா.. நீ என் மூத்த மகன் என்று தெரிந்தால் துரியனும்,தர்மனும் சந்தோஷப்படுவார்கள்.. நீ அரியணையில் ஏறலாம்.."

"அரியணை..எனக்கு துரியன் தந்த அங்க தேசமே போதும்..அர்ஜூனன் அம்மாவாக இருங்கள் போதும்.."

"நான் உன் அம்மா தான்.." பாசறையில் இருக்கும் சால்வையை அணிந்து காட்டுகிறாள். "இந்த சால்வையைத்தான் நான் உன்னை ஆற்றில் விடும் போது அணிந்திருந்தேன்.. வேறு யாராவது அணிந்தாலும் எரிந்து போவார்கள்..ஏன் தொடக்கூட முடியாது.." என்று குந்தி சொல்ல அதை தொட்டுப் புண்ணாக்கி கொண்ட பெண்கள் எல்லாம் கர்ணன் நினைவில் வந்து மறைந்தார்கள். "என்னோடு வந்து விடு..பாண்டவர்கள் உன் தம்பிமார்கள்.." என்று குந்தி சொல்ல

"நீ எங்கே அம்மா இத்தனை நாளாக இருந்தாய்..எனக்கு துரியன் தான் எல்லாம். அரண்மனை,அதிகாரம் எல்லாம் அவன் போட்ட பிச்சை..அவனை விட்டு வர முடியாது.."

"சரி வர வேண்டாம்..உன் தம்பிகளைக் கொன்று விடாதே.."

"அர்ஜூனனைத் தவிர.." என்ரு திருத்தம் சொல்கிறான்.

"அர்ஜூனன் மீது நாக அஸ்திரத்தை ஒரு முறைக்கு மேல் பயன்படுத்தக்கூடாது..இது மட்டும் போதும்.."

"சரி அம்மா..நான் உன் பிள்ளை என்று போர் முடியும் வரை வெளியே சொல்லாதே.. நான் இறந்து விட்டால் உன் மடியில் போட்டு இவன் என் மூத்தப்பிள்ளை என்று சொல்வாயா.."

"இப்போதே சொல்கிறேன்..என்னோடு வந்து விடு.."

"நான் இறந்தால் மட்டும் சொன்னால் போதும்..உயிர் உள்ள வரை துரியன் தான்.." கர்ணன் வழியனுப்பி வைக்கிறான்.

பதினெழாவது நாள் போர் நடக்கிறது.கிருஷ்ண,சல்லிய சூழ்ச்சியால் நாகாஸ்திரம் அர்ஜூனனை உரசி செல்கிறது. தேர் சேறில் சிக்கிக் கொள்ள கர்ணன் கொஞ்ச நேரம் அவகாசம் கேட்கிறான்.

"அர்ஜூனா அவனை கொல்.."

"கிருஷ்ணா அவன் நிராயுதபாணியாய் நிற்கிறான்..அவன் ஆயுதம் எடுக்கட்டும்.."

"அபிமன்யூ,கடோத்கஜன் எல்லாம் ஆயுதத்தோடு நின்றார்களா..நீ கொல்கிறாயா நான் கொல்லட்டுமா.." என்று கிருஷ்ணன் சொல்ல அர்ஜூனன் கர்ணனை அம்புகளால் துளைக்கிறான்.கடைசி நாள் போரில் ஒருவரையும் கொல்ல முடியாமல் அர்ஜூனன் தடுமாறுகிறான். கிருஷ்ணனுக்கு போர்க்களத்தில் அவனை காப்பாற்றுவதே பெரும்பாடாய் இருக்கிறது. என் குறி தவற என்ன காரணம் என்று கிருஷ்ணனிடம் கேடுக் கொண்டேயிருக்கிறான்.கேள்வியின் போதெல்லாம் கிருஷ்ணன் முகத்தில் மாறாத புன்னகை வந்த வண்ணமேயிருக்கிறது.

பதினெட்டாவது நாள் போர் முடியும் வரை குந்தி எல்லாவற்றையும் அடக்கி வைத்து கொள்கிறாள். ஈமச்சடங்குகள் நடக்கும் போது கர்ணனை மடியில் போட்டு அழுகிறாள்.
"என் மூத்தப்பிள்ளையைக் கொன்று விட்டாயே கண்ணா.." என்று கண்ணனிடம் கோபப்படுகிறாள்.

"கர்ணன் என் அண்ணனா..இது உனக்கு முன்னரே தெரியுமா அம்மா.." என்று குந்தியிடம் அர்ஜூனன் கேட்கிறான்.

"தெரியும்..கண்ணன் தான் சொல்ல வேண்டாம் என்று சொன்னான்.." என்று குந்தி சொல்ல

"முதல் நாள் போரிலேயே எல்லோரையும் கர்ணனாக நினைத்து கொள் என்று கண்ணா சொன்னாயே..உன்னை கர்ணனாக நினைத்துக் கொண்டு உன்னை கொன்றிருந்தால் என் அண்ணன் இறந்திருப்பானா..நீ தானே அவன் மேல் அம்பு விட சொன்னாய்.." என்று அர்ஜூனன் கோபபடுகிறான்.

" இருவரில் யாராவது ஒருத்தர் தான் இருக்க முடியும்..அவனை கொல்லவில்லை என்றால் அவன் உன்னை கொன்றிருப்பான்..துக்கம் தாளாமல் உன் சகோதர்களும், அம்மாவும் இறந்திருப்பார்கள்..ஒன்றை விட ஐந்து பெருசு அர்ஜூனா.." என்று கண்ணன் சமாதானப்படுத்தினாலும் அர்ஜூனனுக்கு மனசு ஆறவில்லை.

"அவன் என்னை விட வீரன் என்று நீ முன்னர் சொன்ன போது ஒத்துக் கொள்ள முடியவில்லை..இன்று ஒத்துக் கொள்கிறேன்..அவன் என்னை விட வீரன்..என் அண்ணன்..நடந்தது மகாபாரதப் போர் அல்ல..கர்ண பாரதம்..நான் கொன்ற எல்லோருமே எனக்கு கர்ணனாக தெரிந்தார்கள்..கர்ணன் இறந்தப்பின் ஒருவரையும் என்னால் கொல்ல முடியாமல் போனதற்கு இன்று தான் காரணம் தெரிந்தது" என்று சொல்லிக் கொண்டே கர்ணன் சிதைக்கு நெருப்பு வைக்கிறான்.

Friday, December 24, 2010

மன்மதன் அ(சொ)ம்பு

மன்(னார்) மதன்(கோபால்) அம்பு(ஜம்) இப்படி ரொம்ப வித்தியாசமாக தலைப்பு யோசித்த அளவுக்கு கதையை யோசித்திருந்தால் கொஞ்சம் நல்லாயிருந்திருக்கும். படம் தொடங்கும் போதே கமல் அவர் கைவரிசையைக் காட்ட ஆரம்பித்து விட்டார். நிஷா (அம்பு - சொம்புவின் திரைவுலகத்தில் இந்த பெயர்) பாரிஸ் செல்கிறார். நிஷாவின் ரசிகர் சொல்கிறார் - " நான் நல்லா நடிப்பேன்.எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க.உங்க கால் செருப்பா கூட நடிப்பேன்." அதற்கு சங்கீதா(சங்கு ஊதற வயசுல சங்கீதா) "வலது கால் செருப்பா இடது கால் செருப்பா." இது மாதிரி வலிமையான நகைச்சுவை காட்சில் படம் முழுவதும் நிரம்பிக் கிடக்கிறது. இது மாதிரியான காட்சிகளை ரசிக்க முடியாத அளவிற்கு அதீத ரசனைக் குறைபாடு வந்து விட்டதே என்று மனம் வெம்பி சாக கிடந்தேன். உதயநிதி ஸ்டாலின் ஏன் படத்தை கை மாற்றி விட்டார் என்ற சந்தேகம் வந்ததுமே தப்பித்திருக்க வேண்டும். விதி வலியது. ஒண்ணு மட்டும் சொல்றேன்ல எத்தனை சாரு வந்து உங்களைக் கிழி கிழி கிழிச்சாலும் நீங்க எல்லாம் திருந்தவே மாட்டீங்க. அது மட்டும்தாம்லே உண்மை. மன் - அம்பு இந்த வார்த்தைகளைப் பெரிய பாண்ட் போட்டவுடனே மாதவன் தெரிந்திருக்க வேண்டாமா. எப்படியிருந்த நீங்க இப்படி ஆயிட்டீங்க மாதவன். 3 இடியட்ஸ் நடிச்சப்போ கூட நீங்க முட்டாளா எனக்கு தெரியல.ஆனா கமல் படம்னு நம்பி வந்த உடனே தான் தெரிஞ்சுது நீங்க எவ்ளோ பெரிய முட்டாள்னு.ரமேஷ் அரவிந்த் உங்களுக்கு மும்பை எக்ஸ்ப்ரஸ் படத்தில் வாங்கியும் தெரியல போல.

இன்னொரு வசனம்.யப்பா முடியல.திரிஷா மேல மாதவன் சந்தேகப்படுறார். திரிஷா தப்பு செய்ய கேரவன் எல்லாம் வேண்டாம். அதுக்கு வெளிநாடு தான் போவேன்னு ஒரு வசனம் (உபயம் கமலஹாசன்) சொல்வார். அப்படியே கொலைவெறி வந்து "மை டாடி இஸ் நாட் இன் தி குதிர்னு சொல்லாதீங்க கமல்னு கத்தணும் போலயிருந்தது.

கமலுக்கு அவருடைய தோல்விப்படங்கள் எல்லாம் இன்னும் மண்டையில் குடைச்சல் குடுக்குது போல. ஆளவந்தான் படத்தில் வரும் காஷ்மீர் வெளி நாட்டவர் கடத்தல் அதை மீட்கப் போகும் கமல் டீம் இதிலும் கமல் டீம் போகிறது.பாடலை எடுத்து விட்டு ரிவர்ஸில் ஓட விட்டுயிருக்கிறார்கள். நீலளளளளளளளளளளளளளளள வானம். இனி இதை கமல் கண்டுப்பிடித்தது மாதிரி பேசுவார்கள். அதெல்லாம் பத்து வருடம் முன்பு குமுதம் ஒரு பக்க கதையில் வந்த தீம். (முதல் பட இயக்குனர் நாயகிக்கு காட்சியை விளக்கிறார். நாயகிக்கு குழந்தை கிடையாது. ஒரு ஆழகான குழந்தை ஒவியம். அதை படுத்து உருண்டு புரண்டு கலைக்க சொல்கிறார். நாயகி யோசிக்கிறாள். இயக்குனர் சொன்னதை மட்டும் செய்யுங்கள் என்று சொல்ல மனமே வராமல் கலைக்கிறாள். ப்ரிவியூவின் போது அந்த காட்சி ரிவர்ஸில் ஓடுகிறது. கலைந்த கோலப்பொடியைப் படுத்து புரண்டு அழகான குழந்தை ஒவியமாக மாறுகிறது.) அடுத்து குணா படத்தில் அறையைச் சுற்றி வந்து கவிதை பேசுவார். அது மாதிரி சுற்றி வந்து திரிஷாவிடம் கவிதை சொல்கிறார். திரிஷாவின் சொந்த குரலில் கவிதை படிக்கும் போது யாரோ சம்மட்டியால் தலையில் அடிப்பது போலுள்ளது. இதுல கூட சங்கீதா வேற. வாத்து மாதிரி ஒரு நடை. இவ்வளவு திராபையான நாயகியை எந்த சினிமாவிலும் சமீபத்தில் பார்க்கவில்லை. கமல் கூட நடிச்சாச்சி. இனி ஒய்வு எடுக்க வேண்டியது தான். அடுத்து ஹேராமில் வருவது போல கொலை,அஹிம்சை என்று பேசி இம்சை செய்கிறார். தோல்வியடைந்த படங்கள் அவர் காதில் ரீங்காரமிடுகிறது போல.

(ஏலே எவம்ல அது நீ மட்டும் ஒழுங்கான்னு கேக்குறது.ஒரே ஒரு காதல் தோல்வியை வச்சிக்கிட்டு எப்போ கதைன்னு ஒண்ணு எழுதினாலும் லிப்ஸ்டிக் கறை,ரத்தக்கறை,வெள்ளைச்சட்டைன்னு நீயும் எழுதுவ தானே.உன் காதுல இதெல்லாம் கேக்காதாலேன்னு கத்துறது.வந்தேன் பிச்சிப்புடுவேன் பிச்சி.)

இந்த கவிதையைத் தூக்கணும்னு கோர்ட் கேஸ் வேற.முதல்ல அது கவிதையான்னு கண்டுப்பிடிக்க மனு கொடுக்கணும். திரிஷா பாடும் போது கேட்டா காதுல ரத்தமே வருது. தமிழ் மொத்தமா செத்துருச்சி. கடைசியா எதுக்கு கப்பல்,பிரான்ஸ்,ஏதேன்ஸ்,பார்சிலோனா எல்லாம்.இந்த கதையை தான் சிவகுமார், நதியாவை வைத்து எடுத்து விட்டார்களே.சிவகுமார்,நதியா,சுரேஷ் நடிச்ச படத்தோட ரீமேக் போல.

சுரேஷை சிவகுமார் கார் விபத்தில் தெரியாமல் கொன்று விட,சுரேஷின் காதலியான நதியாவை சிவகுமார் எப்படி கல்யாணம் செய்து கொள்கிறார் என்பது தான் கதை.

இங்க தோசையைத் திருப்பி போட்டு இருக்காங்க. கமலின் மனைவியைத் திரிஷா கொன்று விட (அட தெரியாமல் கார் விபத்தில் தான்) மாதவனின் காதலியான திரிஷா கமலை கல்யாணம் செய்து கொள்கிறார்.

கமல் முன்னாடி எல்லாம் ஹாலிவுட் படத்தைத் தான் சுட்டதா சொன்னாங்க.இப்போ தமிழ்ப்படத்தையா. டூ பேட் கமல்.இருங்க சாரு கிட்ட போட்டு குடுக்கிறேன்.பாதி காசாவது திரும்ப தாங்க.பாதி விமர்சனம் வாபஸ்.

இதை இன்னொரு மும்பை எக்ஸ்பிரஸ்னு கணிச்சி சொன்ன பின்னூட்டப் புயல் ஜெமோ புகழ் ராம்ஜி யாகூவிற்கு நன்றி. உதயநிதி நீங்க ஒரு புத்திசாலின்னு மட்டும் எனக்கு தெரிஞ்சது. நெக்ஸ்ட் இளைஞனாமே.அதுவும் பொங்கலுக்கு.

Tuesday, December 21, 2010

வன்மம்

தீடிரென இந்த வன்மம் எங்கிருந்து கொப்பளித்தது எனக்கு ஆச்சர்யமாகயிருந்தது. நிச்சயம் இன்று வந்திருக்க வாய்ப்பில்லை.எங்கோ அடிமனதில் ஒளிந்திருந்தது இன்று வெளியே வந்திருக்கிறது இவன் மூலமாக. ஆழ்மனதில் இதுவரை என்னை துரத்திய சித்ரவதைகளை செயல்படுத்தவே இந்த வேலையில் நான் சேர்ந்திருக்கலாம். மனதளவில் இன்னமும் குழந்தையாகவேயிருக்கும் பெண்ணைக் கற்பழித்து விட்டு சட்டம் செய்கிறவனை என்ன செய்வது என்றே தெரியாமல் அலைபாய்ந்து கொண்டிருந்தது மனது.

"நான் யார் தெரியுமா..அந்த பொண்ணுக்கு பதினெட்டு வயசு முடிஞ்சு நாலு மாசம் ஆகுதுன்னு டேட் ஆப் பெர்த் காட்டுவேன்.." கத்திக் கொண்டிருப்பவனை இங்கேயே சுட்டால் என்ன.தோணிச்சி ஆனா செய்ய முடியாது.ரத்தமாக கிடந்தவள் நினைவுக்கு வந்து வந்து போனாள்.

டீக்கொண்டு வரும் பையனிடம் ஜாடை காட்டினேன்.பேசிக் கொண்டிருந்தவன் மேல் சூடாக டீயைக் கொட்டி விட அவன் பிடிக்கும் முன் பையன் போக்கு காட்ட,பேப்பர் வெயிட் தூக்கி அடிப்பது மட்டும் தான் தெரிந்தது. ஏதோ நெற்றியில் வெடித்தது போல ஒரு உணர்வு. மயக்கத்தில் கூட அவனை என்ன செய்யலாம் என்பது மட்டும் தான் ஓடிக்கொண்டிருந்தது. சின்ன வயதில் காளை மாடுகளுக்கும், கறிக்காக வளர்க்கப்படும் கொழுத்தப் பன்றிகளுக்கும் துடிக்க துடிக்க செய்வது நினைவுக்கு வரவும் முழிப்பு வந்து விட்டது.

வெறி தீரும் மட்டும் அவனை அடிக்க சொல்லி விட்டு வலிக்கு ஊசி போடுவது போல அவனுக்கு கொடுத்த சரக்கில் மயக்க மருந்தை கலக்க சொல்லியிருந்தேன்.பாத்ரூம் எங்கே என்று செய்கையில் கேட்டவனுக்கு கையை காட்டினேன். எங்காவது மயங்கி சரிவான் என்று தெரிந்தே பின் தொடர்ந்தேன். ப்ளஸ் 1 படிக்கும் போது தவளையும்,எலியையும் அறுத்து அறுத்து விளையாடியிருந்தது ஞாபகப்படுத்திக் கொண்டு பன்றிகளுக்கு அவர்கள் செய்ததை நான் இவனுக்கு செய்திருந்தேன். இனி எந்த பெண்ணுக்கும் வயது சான்றிதழ் தேவைப்படாது என்று நினைத்துக் கொண்டேன்.

காலையில் எழுந்த போது ஸ்டேஷனே கொஞ்சம் களேபரமாகயிருந்தது.

"யோவ்..என்னய்யா ஸ்டேஷன் இது..சேகர் ஆளு அவன்..இந்த அடி அடிச்சிருக்கீங்க..அதோட விட வேண்டியது தானே..யாரு இப்படி பண்ணது..அடுத்த மாசம் கல்யாணம் அவனுக்கு.."

"சார்..அவன் பேப்பர் வெயிட் எறிஞ்சதுல எனக்கு இப்போ தான் மயக்கமே தெளிஞ்சுது..என்ன நடந்தது சார்.."

மெதுவாக அடிக்குரலில் எஸ்.பி சொல்லி விட்டு "நீ தான் பண்ணியிருப்பன்னு தெரியும்.." பின் சத்தமாக சொல்லும் போது "டாய்லட் போகும் கீழே விழுந்து அவனுக்கு படக்கூடாத இடத்தில அடிப்பட்டுருச்சியா..ஒருத்தனை அரெஸ்ட் பண்ணினா பொறுப்பா பாத்துக்க வேண்டாம்.."

"சார் இனிமே அப்படி நடக்காம பாத்திக்குவேன்.."

"கிழிச்ச..உன் மேல விசாரணை கமிஷன் இருக்கு..வேற வேலை தேடுற வழியப் பாரு.."

வீட்டிற்கு போனால் எஸ்.பி எதிர்ப்பார்த்து காத்துக் கொண்டிருந்தார்.

"என்ன கோபமா..நீ ஏதாவது செய்வேன்னு தெரியும்..இப்படி செய்வேன்னு தெரியாது..நம்ம ஆளுங்க தான் விசாரணை கமிஷன்ல இருப்போம்..பார்த்துக்கலாம்.."

நெற்றி தெரிந்த வலியினால் தொட்டுப் பார்த்தேன். வீக்கம் குறைய தொடங்கியிருந்தது.கூடவே வன்மமும்.

Thursday, December 16, 2010

ஹேரி பிரவுன் - ஈசனாகுமா

வயதுகேற்ப நடியுங்கள் என்று சொல்லிக் கொண்டேயிருப்பதை விட அதற்கேற்ப கதையையும் நடிகர்களையும் தான் உருவாக்க வேண்டும்.அப்படி கன்னடத்தில் உருவான படத்தைப் பார்க்க ஆவல் எழுந்துள்ளது.

போதையும்,கொலையுமாக ஹேரி பிரவுன் ஆரம்பிக்கிறது. ஈசன் டிரைலரில் வருவது போல ஒரு போலீஸ் அதிகாரி,ஒரு வயதானவர்,இன்னும் இளமை கொஞ்சும் பட்டாளங்கள் என்று ஹேரி பிரவுன் நகர்வதும் இது வேறு மாதிரியான நகரம் என்று சசிகுமார் சொன்னதும் இன்னும் நிரடுகிறது. அமீரின் யோகியும் இப்படித்தான் ஆரம்பித்தது.அமீர் வாங்கிய உதைகளும் அதற்குப்பிறகான மௌனமும் இன்னும் நினைவில் நிரம்பி வழிகிறது. இன்னும் ரெண்டு நாட்கள் தான் எல்லாம் தெரிந்து விடும். மிஷ்கின் காத்துப்பட்டு சசியும் திரும்பியிருக்கிறது போலவே ஒரு உணர்வு.காற்றில் வீசப்பட்ட சாருவின் வாள் மிஷ்கினோடு சேர்த்து சசிகுமாரையும் வெட்டுவது போல அந்திவேளையில் ஒரு கனவு.

சரி கதைக்கு வருவோம்.ரொம்ப சிம்பிளான கதை.ஒரு சப்வே.அதில் எல்லா காரியங்களையும் செய்யும் இளந்தாரிகள்.யாராவது வந்தால் அடித்து பணத்தைப் பிடுங்கிறார்கள். போதைப்பொருள்,பெண்கள் என்று சக நேரமும் அவர்களால் அந்த நடைபாதை ஆக்ரமிக்கப்பட்டிருக்கிறது.ஹேரியின் மனைவி மருத்துவமனையில் இருக்கிறார்.பார்க்க அந்த நடைபாதை தான் குறுக்குவழி.அங்கே போக வேண்டாம் என்று அவரிடம் சொல்வதால் அவர் சுற்றியே போகிறார்.மனைவி சாகக்கிடக்கிறாள் என்று தொலைபேசி வந்தப்பிறகும் பயத்தினால் சுற்றியே போய் இறப்பதற்கு முன்னால் போய் சேர முடியவில்லை.

பப்பில் தண்ணியடிக்கும் போது நான் அவர்களை தாக்கவே இந்த கத்தியை வைத்திருக்கிறேன் என்று சொல்லும் நண்பன் அடுத்த நாளே கொல்லப்படுகிறார்.போலீஸ் குற்றத்தை நிரூபிக்க முடியாமல் கைது செய்தவர்களை அனுப்பி விடுகிறார்கள்.துக்கம் தாளாமல் போதையில் சப்வேயில் நுழைந்தவரிடம் கொள்ளையடிக்க முயல்பவனை கொன்று விடுகிறார். போலீஸ் நண்பனின் வழக்கில் பெரிதாக முன்னேற முடியாது என்று சொல்ல இவர் பழி வாங்க கிளம்புகிறார். முக்கியமான குற்றவாளி மட்டும் தப்பித்து விட மற்றவர்களை கொன்று கூடவே கொள்ளையும் அடிக்கிறார்.

இவர் பழிவாங்கும் அதிரடியால் போலீஸூம் களத்தில் இறங்க ஒரு இளைஞர்களுக்கும் போலீஸூக்கும் கலவரம் வெடிக்கிறது.(உயர் நீதி மன்ற லாயர் -போலீஸ் சண்டை இந்த இடத்தில் நல்லா பொருந்தும்). கலவரத்தின் போது அங்கு போகும் ஹேரியைத் தடுக்க இரண்டு போலீஸ் அதிகாரிகள் வருகிறார்கள். கலவரக்காரர்களால் தாக்கப்படும் போது ஹேரியால் காப்பாற்றப்படுகிறார்கள். தொடர்ந்து திடுக்கிடும் சாதாரண முடிவில் எல்லோரும் பயமில்லாமல் அங்கு விளையாடுகிறார்கள்.ஹேரி சப்வே வழியாக பயமில்லாமல் தனியே நடந்து போகிறார். சப்வே என்பதை தெருவாக,ஏரியாவாக சசிகுமார் மாற்றியிருக்கலாம். ஹேரி என்ற கிழவனுக்கு பதில் சசிகுமார் இருக்கலாம். இன்னும் கொஞ்ச நேரம் எல்லாம் தெரிந்து விடும். அவரும் மிஷ்கின் மாதிரி சுப்ரமணியபுரம் எதோட இன்ஸ்பிரேஷன் தெரியுமா. அதை ஒன்றும் சொல்லாமல் இதை மட்டும் வெளுக்கலாமா என்று ஆரம்பித்து விடாமலிருக்க வேண்டும்.

Tuesday, December 14, 2010

மிஷ்கின்,சாரு,பஞ்சாயத்து,பாலிடால்

கலைஞர் தொலைக்காட்சி உரையாடலில் ரஷ்யன் படத்தைத் திருடிய ஜகனாந்தனும்,கொரிய படத்தைத் திருடிய சேரனும் ஜப்பான் படத்தைத் திருடிய மிஷ்கினின் ஆற்றல்களைப் புகழ்ந்து தள்ளினார்கள். அதை பார்த்து விட்டு சொன்னது சாரு பத்தி தெரியாம இந்த பயபுள்ள கொஞ்சிக்கிட்டு அலையுது.சாரு வர்ற இரண்டு செகண்ட் சீனும் எடிட்டிங் செய்யும் போது போக போகுது.அப்புறம் தெரியும்.அது இன்னைக்கு நடந்திருக்கு.

இப்படி சரியா பதினாலு நாளுக்கு முன்னாடி சொன்னது இப்போ நடந்திருக்கு.

ஊருல ஒரு பழமொழி சொல்வாங்க.குணம் தெரியாமல் குணட்டிக்கிட்டு அலையிறான்னு. சாரு பத்தி தெரியாம மிஷ்கின் பயபுள்ள துள்ளி விளையாடி இருக்கு.ஆப்பு வாங்கும்னு சொன்னது பலிச்சிருச்சே.

என்ன ஒரு ஞான திருஷ்டி உனக்கு அப்படின்னு யாராவது சுத்தி போடாம இருக்கணும்.

இது ஆறு மாசத்துக்கு முன்னாடி எழுதியது.அது இப்போ நடக்குது.ஸ்டார்ட் மியூசிக்.

அதுல சாருவுக்கு டான்ஸ் வரலன்னு நான் சொன்னேன்.ஆனா மிஷ்கின் நடிப்பே வரலைன்னு சொல்லிட்டார். அது தான் இந்த கும்மாங்குத்துக்கு காரணம்.யுத்தம் செய் படத்தை சாரு நார் நாரா கிழிச்சி போடலைன்னா நான் சரியா சாருவைப் புரிந்து கொள்ளவில்லை என்று அர்த்தம்.இந்த ஜூன் மாச பதிவுல சொன்ன மாதிரி இனி மிஷ்கினுக்கு தொடர்வேட்டு தான். எத்தனை பதிவு வரப்போகுதோ. அவருக்கு நடிப்பு வரலைன்னு சொன்னதுக்கே இந்த கதின்னா தேகம் நாவலை சொல்லியிருந்தா மிஷ்கின் என்னவாயிருப்பார். யொய் பிளட் என்று அமீர் மிஷ்கின் காதைத் தொட்டுப் பார்த்து விட்டு ஷேம் பிளட் என்று சொல்லியிருப்பார்.

நான் நாளைக்கே சாரு யுத்தம் செய் மெமரிஸ் ஆப் மர்டர்ஸ்னு சொன்னா போதும்.அதிர்வேட்டு அடங்க ஒரு மாசம் ஆகும்.சேரனை விடவா சாரு கேவலமா நடிக்கிறார்னு நான் நங்கூரம் மாதிரி அஞ்சாறு பிட்டை சேர்த்து போடுவேன்.

சாருவை சொன்னா போதுமா.ஜெமோவை ஒண்ணும் சொல்லாம விட்டா வரலாறு என்னை ஒரு நாளும் மன்னிக்காது. உள்ளடி வேலை ஜெமோவை செய்றதுல மிஞ்ச முடியாது.நண்பர் பவா செல்லத்துரை சொல்லி மிஷ்கின் கார் அனுப்பி ஜெயமோவை அவர் அலுவகத்தில் படம் பார்க்க வைத்ததாக என்னைக்கு கல் எறிஞ்சாரோ அதுக்கான பலன் இன்னைக்குத்தான் கிடைச்சிருக்கு.ரெண்டு மாங்கா. ஒண்ணு பவா செல்லத்துரை - பார்ட் ஒன்ல சாரு அவருக்கு வைச்ச வேட்டு. இன்னொரு மாங்கா - மிஷ்கின் இனி வரப்போறது எல்லாம் அவருக்குத்தான். ஜெமோ இது உங்களுக்கான அறுவடை காலம்.ஜஸ்ட் ரைப் அண்ட் எஞ்சாய்.இனி மிஷ்கினுக்கும் அறுவடை காலம் தான். யுத்தம் செய் படத்தை நினைத்தால் தான் பாவமாக இருக்கிறது.

சாரு புகழ்ந்த வரிசையில் அமீர்,வசந்தபாலன்,மிஷ்கின் எல்லோரும் வாங்கியாச்சி.இன்னும் புத்தக வெளியீட்டு விழாவிற்கு வந்த சசிகுமார் தான் தப்பித்திருக்கிறார்.அடுத்த வாரம் ஈசன் வருது.அது கூட காப்பின்னு தான் சொல்றாங்க.பாக்கலாம்.ஹேரி பிரவுன் என்ற படம் என்று சொல்கிறார்கள்.டிரைலர் பார்த்தால் கூட கொஞ்சம் டவுட் வருது.அடுத்து சசி தான் போல.புத்தக வெளியிட போனாலே அதிர் வேட்டு தான் போல.இன்னும் இரண்டு நாட்கள் தான்.வெட்ட வெளிச்சாமாகி விடும். அடுத்த வாரம் மன்மதம் அம்பு.சாருவுக்கு இன் பொங்கல் வரை பொங்கல் வைப்பது தான் வேலையாகயிருக்கும்.

Sunday, December 12, 2010

பெண் வாசனையில்லாத வீடு

யாருமில்லாத மழை நாளில் வீட்டிற்கு வந்திருந்தாள். ராட்சஸி மாதிரி பம்பரமாக சுழன்று எல்லாவற்றையும் ஒழுங்கு செய்திருந்தாள். இப்படியா வீட்டை வைக்கிறது என்று கோபம் வேறு நடுநடுவே வந்து தொலைத்தது.

"ஒரே ஆம்பிளை வாசனை..இன்னும் கொஞ்ச நாள் தான்..இந்த வீட்ல பெண் வாசனை தான் அடிக்கும்.. நமக்கு பெண் குழந்தையா பிறக்கணும்.."

"ம்.. கேக்க நல்லாதானிருக்கு.."

பக்கத்து வீட்டிலிருந்து தான் சாப்பாடு கொண்டு தருவார்கள். "என்னடா நல்ல வாசனையா வருது.. யாராவது பொண்ணுங்க வந்தாங்களா.."

"இல்லையே..நான் இப்போ தான் குளிச்சேன்.."

"ம்..நானும் பாக்கத்தானே போறேன் எந்த பொண்ணு உன்னை கட்டிக்கிட்டு முழிக்கப் போகுதுன்னு.."

அவள் பிறந்த நாள் பரிசாக மெட்டி பரிசளித்திருந்தேன்.

"என்ன ஒண்ணு தானிருக்கு..இன்னொன்னு எங்கே.."

"அதான் இது.."

"என்ன ஜோக்கா..உதை வேணுமா.."

"இல்ல ஒண்ணு எங்கிட்ட இருக்கு..நீ தான் சமயுரிமை பேசுற பெண் போராளி ஆச்சே..அதான் ஒண்ணு என் செயின்ல டாலரா தொங்குது.."

"கால்ல போட முடியாதே.."

"மோதிரமாக போட்டுக்கோ.."

எத்தனை நாள் மறைத்திருந்தாளோ தெரியவில்லை.அவள் வீட்டில் எப்படியோ பார்த்திருக்கிறார்கள். அவன் தான் வேணும் என்று அவள் சுயேட்சையாக நின்று டெபாஸிட் இழந்திருந்தாள். வீட்டில் யாருமே பேசாமல் மௌனமாக போராட்டம் தொடங்கியிருக்கிறார்கள். அமைதி போரின் முடிவில் அவள் தற்கொலைக்கு முயன்றிருந்தாள்.கடைசி செமஸ்டர் என்பதால் வெளியே யாருக்கும் தெரியவில்லை. நான் பயந்து போய் எங்காவது பதுங்கியிருந்தால் அது வெளியே தெரிந்திருக்கும். குற்றப் பத்திரிக்கையின் பக்கங்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டேயிருந்திருக்கும்.

இயல்பாக இருக்க முயற்சித்து கொண்டிருந்தேன். நடிக்க முடியாமல் உள்ளுக்குள் நொறுங்கி கிடந்தேன். இதோடு ஒரு முடிவிற்கு கொண்டு விட வேண்டும். வீட்டிற்கு நேராக போய் பார்த்து விட வேண்டும் என்று முடிவு செய்து கொண்டு கிளம்பினாள்.

வாசலிலே அவ சின்ன வயது ஆதர்ஷம் என்னை எதிர்ப்பார்த்து இருப்பது போல தெரிந்தது.

"நான் உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்.."

"நானும்.."

"யாருக்கோ உங்க பொண்ணைக் கட்டிக் கொடுக்கப் போறீங்க..ஏன் எனக்கு தந்தா என்ன.. நான் நல்லா பாத்துப்பேன்.."

"முடிச்சிட்டியா..அடி வாங்குறதுக்கு முன்னாடி போயிரு.."

"நீங்க அடிச்சாலும் பரவாயில்லை.. எனக்கு அவ வேணும்.."

"உன்ன அவ கூட பாத்த முத நாளே அடிச்சிருப்பேன்..அடிக்கல காரணம் அவ கண்ல நீ தெரிஞ்ச.. உன்ன அடிச்சிருந்தா நீ வேணும்னு சூசைட் செஞ்சி என்னை மிரட்டியிருக்க மாட்டா..உன் கூட வந்திருப்பா.."

என்ன செய்வது என்றே தெரியவில்லை. கொஞ்சம் புத்திசாலித்தனமான அப்பனாக இருக்கிறான்.அவ கிட்ட பழகும் போது இந்த ஆளை எடை போடாமல் விட்டது தப்பாய் போய் விட்டது.

கையில் வெட்டுக்காயத்தை மறைக்க கை உடைந்தது போல கட்டுப் போட்டிருந்தாள். எல்லோரும் கேட்டதற்கு ஓடும் ரயிலில் இருந்து விழுந்து விட்டேன் என்று சொல்கிறாள். உங்க அப்பன் தான் அந்த ரயில் என்று கத்த வேண்டும் போலிருந்தது.

"எப்படியிருக்க.."

"ம்..உயிரோடு தானிருக்கேன்.."

"என் மேல என்ன கோபம்.."

"ஒரு தடவையாவது என்ன பாக்க வரணும்னு தோணலையா..நான் இருக்கேன்னா செத்துட்டேன்னா கூட தெரியாம இப்போ வந்து கேக்குற.."

"நான் வந்தேன்..உங்க வீட்ல தான் விடல.."

"அப்ப எங்க அப்பா சொல்றது பொய்னு சொல்லுவ போல.."

"ஆமா உங்க அப்பா சொல்றது தான் உண்மை..நான் சொல்றது பொய்..போ போய் உங்க அப்பா பார்த்து வச்சிருக்கிறவனைப் போய் கல்யாணம் பண்ணிக்கோ.."

"தேர் யூ ஆர்..உனக்காக போய் சூசைட்..ச்சீய்..நல்லவேளை நான் சாகல.."

"செத்து தொல..நானாவது நிம்மதியாயிருப்பேன்.." கோபத்தில் வார்த்தை வந்து விட்டது."ஸாரி.." சொல்லி சமாதானப்படுத்தலாம் என்பதற்குள் மொத்தமாக போயிருந்தாள். மெட்டியை என் ஜூனியர் ஒருவனிடம் கொடுத்து என்னிடம் கொடுக்க சொல்லியிருக்கிறாள். அதற்கு முன்பே நான் செயினில் இருந்து வெட்டி எறிந்திருந்தேன்.

"இனி என் வீட்டில் எப்போவுமே ஆண் வாசனை தான் அடிக்கும்னு போய் அவ கிட்ட சொல்லு.." என்று சொல்லியிருந்தாலும் அந்த வாசனை இன்னும் வீட்டிலிருப்பதாக நினைத்து நச்சரித்து வேறு இடத்திற்கு குடி போயிருந்தோம். இருந்தாலும் மழை நாளில் அந்த வாசனை இன்னும் நிரடுகிறது. கனவில் எத்தனை குழந்தை வேண்டுமென கேட்கிறாள். பதில் சொல்வதற்குள் முழிப்பு வந்து விட்டது.வெளியே விடாமல் மழை பெய்து கொண்டிருந்தது.

மழையைத் தானே யாசித்தோம்..
கண்ணீர் துளிகளைத் தந்தது யார்..
பூக்கள் தானே யாசித்தோம்..
கூழாங்கற்களை எறிந்தது யார் யார்..


Saturday, December 11, 2010

நந்தலாலா - குறியீடு தேடி ஒரு பயணம்

சாருவின் பரிந்துரையால் நந்தலாலா பார்த்தேன்.

//முக்கியமாக, அகியின் பாட்டி.அகி பள்ளிக்கூடத்திலிருந்து வரும்வரை அவள் கழிப்பறைக்குச் செல்லாமல் அவனுக்காகக் காத்திருக்கிறாள்.//

என்ன கொடுமை சாரு இது.பேரன் வந்தால் தான் கழிப்பறைக்கு போக வேண்டும் என்பதில்லை.சிறுநீர் முட்டினாலும் போகலாம்.ஐந்து நாள் சுற்றுலா செல்லும் பேரன் வரும் பாட்டி கழிப்பறை போகாமலே காத்திருப்பாளா. சொடக்கு எடுத்து விடவே வேலைக்காரியிடம் காசு தரும் பேரன் மற்ற விஷயங்களை சொல்லவில்லை.காரணம் அதை சொல்லாமலே செய்வாள் என்று. மிஷ்கின் பாசம் கண்ணை மறைக்குது. நியாயம் தான்.ஆனாலும் இந்த அளவுக்கு இருக்கக்கூடாது. சாதாரண காட்சி அது.இயக்குனரே மலைத்து போகும் அளவிற்கு குறியீடு வந்து மிஷ்கின் குறியீடு கிறுக்காக மாறினாலும் ஆச்சர்யமில்லை.

சாருவின் பரிந்துரையால் நந்தலாலா பார்த்தேன்.இதை தமிழின் முதல் படம் என்கிறார்கள் விபரம் தெரியாதவர்கள்.இதை உலகின் முதல் படம் என்று சொன்னால் தான் மனம் ஆறும். தமிழின் முதல் படம் என்று சொல்லி புண்படுத்தி விட்டார்கள். நீங்கள் சாதாரணமாக வைத்த காட்சி கூட சதா ரணமாக மாறி நந்தலாலாவே சரணம் என்று சொல்லும்படி ஆகி விட்டது.

ஸ்னிக்தா பேசும் அந்த ஐந்து நிமிட வாழ்க்கை வரலாறில் உங்களுடைய முந்தைய இரண்டு படமும் குறியீடுகளாக மறைந்து கிடக்கிறது என்ற நீங்கள் அறியாத உண்மையை நான் இன்று தான் கண்டுப்பிடித்தேன். ஒரு கார் டிரைவரை நம்பி ஏமாந்த கதையை சொல்லும் போது கண் விழித்து பார்த்தால் புது இடம்.அங்கே புது சரக்கு மூன்று நாளில் முப்பத்தாறு பேர் வந்ததாக சொல்வாள். அதில் ஒருவராக சித்திரம் பேசுதடி படத்தில் வந்த பாவனாவின் அப்பாவும் இருந்திருக்கலாம்.போலீஸ் ரைடின் போது அவருக்கு பதில் நரேன் மாட்டிக் கொள்கிறார்.அதில் அவர் எந்த பெண்ணிடம் போனார் என்று நீங்கள் காட்டாமல் விட்ட உங்கள் புத்திசாலித்தனத்தை எப்படி மெச்சுவது என்றே தெரியாமல் மெச்ச முடியாமலிருக்கிறேன்.

அடுத்து கிழவன் அவளை கடத்த முயல்வதற்கு ஒரு காரணம் சொல்லி அவன் துரத்துவதால் அங்கு இருந்து தப்பி வந்து விட்டேன் என்று கூறுவாள்.எப்படி தப்பி வந்திருக்க முடியும் என்று யோசித்து பார்த்தேன். அப்போது தான் உங்கள் அஞ்சாதே படம் ஞாபகம் வந்தது.கத்தால கண்ணாலே என்று தொடங்கும் பாடலில் ஆடும் பெண்ணிற்கு இதே மாதிரியிருந்த முகச்சாயலை வைத்து தான் கண்டுப்பிடித்தேன். பாடலின் முடிவில் பாண்டியராஜன் கொல்லப்படும் போது ஏற்படும் களேபரத்தில் அவள் தப்பியிருப்பாள் என்று கண்டுப்பிடித்தேன்.இப்படி உங்களின் முந்தைய படத்திற்கே தொடர்பு இருக்கும் போது ஜப்பானிய படத்திற்கு தொடர்பு இருக்காதா என்ன.

முந்தைய படங்களில் இருந்த கறையை இந்த படத்தில் நீக்குவதாக காட்டும் போது அகலிகையை சாபத்திலிருந்த மீட்ட ராமன் நினைவுக்கு வந்தார்.நீங்கள் ராமனாக இருப்பதால் தான் டிராக்டர் ஓட்டிய அந்த சீதாவை தேடிக் கொண்டு பலூன் விற்பதாக வைத்திருந்த குறியீடு இன்னும் சொல்லாமல் எனக்கு பல கதையை சொல்லியது.

இப்படி எல்லாம் யோசித்து மற்றவர்களையும் யோசிக்க வைத்து சேர்த்த பாவத்தை கழுவ வேண்டும் என்று நினைத்து இரண்டு நாட்கள் ரூம் போட்டு அழ வேண்டும் என்று பக்கத்திலிருந்த தீவிற்கு சென்றேன். அவன் சொன்ன இரண்டு நாள் வாடகை என் பத்து நாள் முருகன் டாலர்கள் என்பதால் அந்த தீட்டத்தைத் தள்ளி வைத்து விட்டு குறியீடு கண்டுப்பிடிக்க கிளம்பி விட்டேன்.

Wednesday, December 8, 2010

கிருஷ்ண உபதேசம் ஆஃப்டர் ராமராஜ நந்தலாலா

நந்தலாலா - ராமராஜன் படங்கள் பொருத்திப் பார்த்தப்பின் நடு பகலில் தூக்கத்திலிருந்து ஸ்கைப்பில் எழுப்பிய நண்பன் நீ மட்டும் ஏன் இப்படி இருக்கிற.ஒழுங்காவே எதையுமே உனக்கு சொல்ல வராதா. எனக்காக எல்லா முகமூடிகளையும் கழற்றி வைத்து விட்டு சாதாரணமாக ஒரு முறை விமர்சனம் செய்ய வேண்டும் என்று சொல்ல. 

எனக்காக - இந்த வார்த்தைகளின் மீது எனக்கு நம்பிக்கையேயில்லை என்று அவனிடம் சொல்ல முடியுமா.எனக்காக செய் என்று யாராவது சொன்னால் கொலைவெறி வந்து விடுகிறது.அப்படியென்ன அடுத்தவன் சுயத்தைப் பாதிக்கும் அளவிற்கு அவன் மீது அன்பு,பாசம். எனக்கு எந்த நேரத்தில் எப்படி தோன்றுகிறதோ அப்படித்தான் செய்வேன் என்று சொல்ல ஆசை தான்.இனியும் அப்படித்தான்.பத்து வருட நட்பை ஒரே நாளில் உடைக்க மனசு வரவில்லை. 

அப்படி சொல்லாமல் இந்த கதையை சொல்லி வைத்தேன்.

கிருஷ்ணரிடம் தர்மன் சொன்னானாம் - "என்ன இந்த ஊரில் எல்லோருமே நல்லவர்களாக இருக்கிறார்கள்.." துரியோதனன் சொன்னானாம் - "என்ன இந்த ஊரில் எல்லோருமே கெட்டவர்களாக இருக்கிறார்கள்..". எனக்கு நல்லவர்கள்,கெட்டவர்கள் என்று பிரித்து பார்க்கத் தெரியாது.ஆனால் அவனிடமிருந்த பதற்றம் தான்(அரியணை போய் விடுமே) அவன் கண்ணுக்கு அப்படி தெரிந்திருக்கிறது.

என்னை பொருத்தவரை நல்லவன் என்றால் இதுவரை சந்தர்ப்பம் கிடைக்காத கெட்டவன் என்று வைத்து கொள்வோம்.கெட்டவன் என்றால் சந்தர்ப்பம் கிடைத்த நல்லவன் என்றும் சொல்லலாம். தர்மருக்கு ஒரு அப்படி வாய்ப்பு வருகிறது.பதினைந்தாவது நாள் போர்.துரோணரைக் கொன்றே ஆக வேண்டிய கட்டாயம்.பீமன் அசுவாத்தாமா என்று யானையை கொன்று விட்டு அசுவாத்தாமாவை கொன்று விட்டேன் என்று கத்துகிறான்.துரோணர் நம்பாமல் தர்மனிடம் கேட்ட அவன் பூடகமாக "பீமன் கொன்றது அசுவாத்தாமா.." என்று இடைவெளி விட்டு "என்ற யானையை.." என்று மெதுவாக சொல்கிறான்.அப்படி சொன்னது துரோணர் காதில் விழாமலிருக்க கிருஷ்ணர் சங்கெடுத்து ஊதுகிறார். துரோணர் ஆயுதங்களை கீழே போட,இதற்கென்றே பிறந்த துருபதனின் மகன் துரோணரை சாய்க்கிறான்.அது வரை நிலத்தில் படாமல் இரண்டு அங்குலம் மேலே ஓடிய தேர் நிலத்தில் இறங்கிறது.

தர்மனுக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. வேணுமா நீயும் பதிவு எழுது. நந்தாலாலா அருமை என்று சொல்லு.நான் ஒரு கேள்வி கேக்குறேனான்னு பாரு.அப்புறம் சொல்லு.  அப்படி தர்மருக்கு நல்லவனாக தெரிந்தவர்கள் எனக்கு நந்தலாலா பார்க்கும் போது ராமராஜன் தெரிந்தார். ஆணாதிக்கம் தெரிந்தால் என்ன அர்த்தம் என்று கேட்டால் அதை நான் சொல்லாமல் சாய்ஸில் விடுகிறேன். 

கிருஷ்ணனிடம் பதினைந்தாம் நாள் போருக்குப்பின் தர்மன் கோபப்படுகிறான்."என்னையும் இதற்கு உடந்தை ஆக்கி விட்டாயே என்று.." கிருஷ்ணன் சொல்கிறான் - "அப்படியென்றால் நீ சண்டைக்கே வந்திருக்கக்கூடாது..எனக்கு வெற்றியோ,தோல்வியோ முக்கியமில்லை.என்னால் துரியோதனன் இறந்தாலும் நீ அரியணை ஏறினாலும் எனக்கு பிரச்சனையில்லை.எனக்கு நான் எப்படி யுத்தத்தை எப்படி நடத்துகிறேன் என்பது தான் முக்கியம்.எனக்கு இதனால் ஒரு பலனும் இல்லாவிட்டாலும் நாளை யுத்தத்தில் எப்படி வேண்டுமானாலும் நடத்தலாம் என்பதற்கு நானே உதாரணமாகயிருப்பேன்.."

"ஏன் இப்படி செய்கிறாய்.."

"தர்மா..உனக்கு உன் தேர் தரையில் இறங்கியது தான் பிரச்சனை.இதனால் நீ நரகத்தைப் பார்த்து விட்டு வருவாய்..பிம்பம் உடைந்ததால் நீ வருந்துகிறாய்.பீஷ்மர் சாய்க்கப்பட்ட சமயம் நீ இப்படி கதறவில்லையே..எனக்கு பிம்பமே ஏற்படுத்தாமல் இருப்பதால் நான் நானாகவே இருக்கிறேன்.. பதினெழாம் நாள் கர்ணனை சாய்க்க வேண்டும்.நீ போய் தூங்கு.." என்று அர்ஜூனன் இருக்கிமிடத்திற்கு நகர்கிறான்.

"கிருஷ்ணன் என்ன சொன்னாலும் கேள்வியே கேட்காத அர்ஜூனனாகத் தான் உன்னிடமிருக்கிறேன். நீ தர்மனாக மாறி அப்படி செய் இப்படி செய் என்று சொல்லி எனக்குளிருக்கும் கிருஷ்ணனை எழுப்பாதே.." என்று சொல்லி விட்டு பகல் தூக்கத்தைத் தொடர்ந்தேன்.

Sunday, December 5, 2010

ரத்த தரித்திரம்

கம்பெனி,ஒன்ஸ் அபான் அ டைம் இன் இந்தியா(ராம் கோபால் வர்மா இயக்கவில்லை) - இந்த மாதிரி அரைச்ச மாவையே அரைச்சி அரைவேக்காடாக தருவதை என்று தான் நிறுத்தப் போகிறாரோ தெரியவில்லை.

ஒரே பாணியிலான டெம்பிளேட் கதையில் இரு நாயகர்கள்.இருவரும் கல்லூரியில் படித்துக் கொண்டும் வேலை பார்த்துக் கொண்டும் தம்தமது காதலியோடும் சந்தோஷமாக இருக்கிறார்கள்.ஈகோ பிரச்சனையாலும், பழி வாங்குதலாலும் இருவரின் தந்தையும் கொல்லப்படுகிறார்கள்.  அதை தொடர்ந்த பழி வாங்குதல் கதையை தான் காதில் பூ சுற்றுகிறார்கள்.

முதல் பாகத்தை தமிழுக்காக இருபது நிமிடங்களாக குறைத்திருக்கிறார்கள். அதில் தான் எத்தனை குழப்பங்கள். எடிட்டிங்,ஒளிப்பதிவு,இசை,பாடல்கள்,கதை சொல்லி கௌதம் மேனன் என்று முடிந்த வரை பாடாய் படுத்துகிறார்கள்.புரிகிற கதையில் இந்த கௌதம் மேனன் கதை சொல்லியாய் எதுக்கு அதை இன்னொரு முறை சொல்கிறார் என்று தெரியவில்லை.ரொம்ப வெட்டியா இருக்கார் போல. பழி வாங்குவது பரிசுத்தமானது என்ற மகாபாரத கேப்ஷனையே அசிங்கப்படுத்திட்டேங்களே பாவிகளா.

ராம் கோபால் வர்மா நீங்க பேசாம நித்யானந்தா கதையை எடுக்க போறீங்க தானே அதை எடுங்க. தமிழ்ல வசனம் எழுத கூட ஆள் நாங்களே தர்றோம்.அதை விட்டுப் போட்டு இப்படியா துரத்தி துரத்தி படம் பாக்குறவனை சாத்து சாத்துன்னு சாத்துறது.

மகாபாரதத்தில் வரும் பீஷ்மர் கதாபாத்திரம் மாதிரியே விவேக் ஒபராய் அணியில் ஒருவர். இப்படி எல்லாம் மகாபாரதத்தை ஞாபகப்படுத்தினாலும் கதை என்று பார்த்தால் ஒன்றுமே இல்லை. ககிட்டி,ஆஷிஸ் வித்யார்த்தி,கோட்டா சீனிவாசராவ்,சுதீப்,அபிமன்யூ சிங், சத்ருகன் சின்கா என்று பெரும் தலைகளை எல்லாம் வைத்து அணிவகுப்பு நடத்தியிருக்கிறார்கள்.

அரசியலில் இறங்கியப்பின் பழிவாங்குதலை தற்காலிகமாக நிறுத்தும் விவேக் ஒபராயை சூர்யா சுட்டுக் கொன்று விட்டு அவர் அரசியலில் இறங்குகிறார். கதையில் எத்தனை வருடத்தில் இந்த கொலைகள் நடக்கிறது என்று குழப்பமாகவே உள்ளது.ராதிகாவை விட்டு விட்டு வரும் விவேக் ஒபராய் அரசியலில் இறங்கும் முன் புதிதாக குடி வரும் வீட்டில் ராதிகா இருக்கிறார்.ஆனால் சாகும் போது கைக்குழந்தை தானிருக்கிறது.பிரியா மணி கையில் இருந்த குழந்தையை வாங்கி தந்திருப்பார்கள் போல.

குழந்தை பழி வாங்கும் என்று சிம்பாலிக்காக காட்டுகிறார்கள் போல.இதை தான் கிழக்கு கரை படத்தில் பி.வாசு குழந்தை கையில் துப்பாக்கியைக் கொடுத்து இனி கிழக்கு கரை இவன் கையில் என்று சொல்லி இயக்கம் பி.வாசு என்று போட்டது ஞாபகத்திற்கு வந்து தொலைத்தது.பர்ஸ்ட் பார்ட் பார்த்ததுமே பொத்திக்கிட்டு இருக்க வேண்டியது தானே என்று கனவில் ராம்கோபால்வர்மா வந்து சொல்வார் என்று நினைக்கிறேன்.வரட்டும் ஏ காவ் மே இந்தியைப் பேசி விட வேண்டியது தான்.

Saturday, December 4, 2010

நந்தலாலா - ராமராஜனின் டவுசரின் நீட்சி

டிசம்பர் வந்தாலே கர்னாடக சங்கீதம் களைக் கட்டுவது போல நான் ராமராஜனை ஒரு கட்டு கட்டுவது ஒரு வழக்கம்.ராமராஜன் படத்தில் நாயகன் மிகவும் நல்லவனாகயிருப்பான்.பெண்களுக்கு ஆபத்து என்றால் பொங்குவான் போன்ற டெம்ப்ளேட்டினால் காலியான ஒரு நடிகர் அவர்.இந்த டெம்ப்ளேட்டையும், அம்மாவை பார்த்தால் கேள்வி கேட்க வேண்டும் என்ற மணிரத்னம் பாணி சினிமாவையும்(தளபதி,கன்னத்தில் முத்தமிட்டால்) மக்களுக்கு ஞாபகப்படுத்தினால் போதும் ஒரு தமிழ்ப்படம் தயாராகி விடும். குறியீடுகளையும்,கேமரா கோணங்களையும்,கதையின் போக்கு வித்தியாசமாக வேண்டுமே இருக்கவே இருக்கிறது ஜப்பானிய,கொரிய சிந்தனைகள்.

அம்மாவிடம் கேள்வி கேட்க வேண்டும் என்பதற்கு பதில்(மணிரத்னம் அது மாதிரி இரண்டு படம் எடுத்தார்) ஒருவனுக்கு முத்தம் வாங்க வேண்டும்,மற்றவனுக்கு ஒரு அறை கொடுக்க வேண்டும். கொடுக்கல்,வாங்கல்(நேரெதிர் சிந்தனை - இதுவும் குறியீடு தான்) சிந்தனையோடு இருவரும் ஒன்றாக பயணிப்பதே கதை.

இதில் கதாநாயகன் மிக மிக நல்லவன். பெண்களுக்கு ஆபத்தோ விபத்தோ நடக்கும் போது மனநிலை பாதிக்கப்பட்டிருந்தாலும் அதை எதிர்க்கும் அள்விற்கு புத்திசாலித்தனம் உடையவன். ஒரு பள்ளி மாணவி சைக்கிள் ஓட்டும் போது கீழே விழுகிறாள்.உடனே எச்சில் தொட்டு வைத்துக் கொள் என்று சொன்னதும் தொடர்ச்சியாக ஒரு பாட்டு.ராஜ்கிரண் பாணியிலான உப்புமூட்டை சுமக்கிறான்.கூழாங்கற்களைக் கொடுத்ததும் நெஞ்சில் செல்லமாக குத்தும் அசட்டுத்தனமும் உண்டு.கூழாங்கற்களுக்கு நான் குறியீடு சொல்லா விட்டால் நான் என்ன விமர்சகன்.நான் என்ன இலக்கில்லாவாதி.பொதுவாக நீர் ஓடிக் கொண்டேயிருக்கும் இடத்தில் மட்டும் தான் இந்த கற்கள் உருவாகும்.அது மாதிரி வாழ்க்கையில் நிறைய அடிப்பட்டால் நீயும் எல்லோரும் விரும்பும் கூழாங்கற்களாய் இருப்பாய் என்று மன நலம் பாதிக்கப்பட்ட மிஷ்கின் கதாபாத்திரம் சொல்கிறது.(உஸ் முடியல). அடுத்து புதுமணத் தம்பதிகள்.அவர்களை கேலி செய்பவர்களில் ஒருவனை பாட்டிலால் அடிக்கும் அளவிற்கு பெண்களுக்காக போராடுபவன்.அடுத்து கற்பழிப்பு மற்றும் கடத்தலில் சிக்கிக் கொள்ளும் பெண்களையும் காப்பாற்றுகிறான். இன்னும் ஒரு கிழவி தான் மிச்சம்.அதையும் செய்து கன்னத்தோடு கன்னம் வைத்தால் அடுத்த முதல்வர் மிஷ்கின் வாழ்க என்று நானே கோஷம் போடுவேன். ராமராஜன் படத்தில் ராமராஜனை ஒரு தலை பட்சமாக விரும்பும் பெண்ணை வில்லன் கெடுத்து விடுவான்.உடனே ராமராஜன் பொங்கி எழுந்து "தங்கச்சி" அவனை உனக்கு கட்டி வைக்காமல் ஒய மாட்டேன் என்று கிளம்பி விடுவார்.இதையே ரஜினிகாந்தும் செய்திருக்கிறார்.இங்கு விபச்சாரம் செய்யும் ஸ்னிக்தாவை அம்மா என்று சிறுவன் ஏற்றுக் கொள்கிறான். நம்ம நாயகன் பாஸ்கர் மணி என்ன செய்கிறான். அவன் புத்தி தெளிந்ததும் பேச மாட்டானா என்று ஏங்கும் ஸ்னிக்தாவைப் பார்த்து சிரித்து விட்டு எங்கே இன்னும்  கொஞ்ச நேரமிருந்தால் கல்யாணம் செய்யும் நிலை வந்து விடுமோ என்று ஓடுவது போல் இருக்கிறது பாஸ்கர் மணியின் பலூன் விற்கும் வேகம். இதுவே அந்த பள்ளி மாணவியை சந்தித்திருந்தால் - என்ன நடக்கும். எச்சில் வைத்தாயா என்று கேட்டே காதல் வந்திருக்குமோ என்னவோ.

சிறுவனின் அம்மா இன்னொரு கல்யாணம் செய்து கொண்டதற்கு அடிக்கும் மிஷ்கின் அவன் அப்பாவை ஒன்றும் செய்யவில்லையே என்ன ஒரு ஆணாதிக்கம் என்றெல்லாம் நான் சொல்ல மாட்டேன். அது ராமராஜன் போன்ற பெண்களுக்கு அறிவுரை சொல்வார்கள்.இதில் இவர் அடித்து விடுகிறார்.சரி போய் தொலையுது என்றாலும் மனசு கேட்க மாட்டேங்குதே.பைத்தியமாய் இருக்கும் அம்மாவிற்கு மொட்டை அடித்து குளிக்க வைத்து விடுதியில் சேர்க்கும் மிஷ்கினுக்கு இடுப்பில் இருக்கும் பேண்டை கட்ட தெரியாமல் போவது நல்ல நகைமுரண் தான்.

கூழாங்கற்கள்,மலைபாம்பு,வெள்ளை வீடுகள்,காலணிகளை மாற்றுவது எல்லாம் மிஷ்கின் மூளையில் உதித்திருக்கும் என்றால் நான் நம்பவே மாட்டேன்.நிறைய புத்தகங்களையும்,படத்தையும் பார்த்தாலே இந்த இழவு குறியீடுகளை வைத்து தொலைத்து விடலாம்.

இளையராஜாவிற்கு வருவோம். மிக பெரிய ஏமாற்றம்.ராமராஜனின் படத்தில் கூட இதை விட நல்ல பாடல்களிருக்கும்.நம் படைப்புகளைத் திருடினால் கதறும் மனசு அடுத்தவன் படைப்பைத் திருடினால் அறிவுஜீவி பட்டம் கொடுக்கிறது.பக்கத்து வீட்டில் எரியும் தீ நம் கூரைக்கு மாற எவ்வளவு நேரம் ஆகும். மிக திராபையான கிளிஷே காட்சிகளை எல்லாம் வைத்து நம் ஊருக்கு ஏற்றார் போல அடுத்தவனின் சிந்தனையைத் திருடும் கலையும்,அதற்கு ஆதரவாக ஒரு மூன்று இலக்கியவாதிகளுமிருந்தால் இழவு பேரரசு கூட அறிவுஜீவியாக மாறி விடலாம்.முக்கியமாக அவருக்குள் இருக்கும் நாயகன் கனவும் பலித்து விடும்.

ஜப்பானிய இயக்குனருக்கு நன்றி என்று போட்டு விட்டால் இந்த திருட்டு இல்லை என்று ஆகி விடாது. எதையுமே செய்யா விட்டாலும் பரவாயில்லை நான் அவர் கூட உட்கார்ந்து படம் பாக்கணும்,சில காட்சிகள் அப்படியே அவர் மாதிரியே எடுத்திருக்கிறேன் காரணம் அது தான் அவருக்கு செய்யும் கைமாறு விளக்குமாறு என்று பேசாமலே இருந்தாலே போதும்.அடுத்து உங்க யுத்தம் செய் மெமரிஸ் ஆப் மர்டஸ் என்ற கொரியன் படத்தின் காப்பியாமே.அந்த இயக்குனர் பக்கத்திலும் அமர்ந்து படம் பார்க்க உங்களுக்கு தோணும்.டிரிபியூட் செய்ய அப்படியே காட்சிகளை வைத்திருப்பீர்கள். பேசாமல் நன்றி என்று போட்டு விடுங்கள்.இன்னும் உங்கள் சார்பாக இன்னும் சிலர் வரலாம்.

மிஷ்கின் திறமையாக திருடுவது எப்படி,மாட்டிக் கொண்டால் எப்படி பேசுவது என்று உங்கள் உதவி இயக்குனர்களுக்கும் சொல்லி கொடுங்கள்.பாருங்க உங்க முன்னாள் உதவி இயக்குனர் பேங்க் ஜாப் படத்தை நாணயம்(பெயரை பாருங்கையா) என்று எடுத்து பப்படம் கொடுத்து விட்டார்.அதனால் உங்களை மாதிரி நேர்மையாக திருட சொல்லித்தாருங்கள்.