Wednesday, July 28, 2010

நான் மகான் அல்ல - விமர்சனம்

ரஜினிக்குப் பிறகு இந்த தலைப்பு கார்த்திக்கு பொருந்துகிறதோ இல்லையோ தெரியாது. யாருக்கு வேண்டுமானாலும் பொருந்தலாம்.எனக்கும் பொருந்தும்.பொருந்தவில்லை என்றாலும் பரவாயில்லை. ஒரு காலத்தில் தொடர்பதிவிற்கு அழைக்க மாட்டார்களா என்று ஏங்கித் தவித்து இருக்கிறேன். இப்போதெல்லாம் வரவே கூடாது என்று வேண்டிக் கொள்கிறேன்.காரணம் கடைசியில். காரணம் அங்கு தானிருக்கும்.ஓடி விடாது.நேராக அங்கு போக வேண்டாம். இருந்தாலும் எழுத காரணம் அதுவும் அந்த காரணத்தால் புரியும்.(சொல்லித் தொலையேன்..போடுறதே மொக்கை).நான் பிரபல பதிவன் என்று நினைத்து விடக்கூடாது.அழைத்தவரின் பதிவை நான் படித்ததில்லை என்று நினைத்து விடக்கூடாது என்பதால் இந்த சரமாரியான மொக்கை.கோபம் வருதா.இதற்கு காரணமான விதூஷை நல்லா திட்டுங்க.

1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?

சாரு ஒருமுறை அண்ணா பல்கலைகழகத்தின் வானொலியின் நேரலைக்கு போனாராம்.(அவர் குரல் தமிழகத்தில் பிரபலமாக).மேலே இருப்பது போல் கேள்வி கேட்டதும் உங்க புகழே வேண்டாம் என்று கோபத்தோடு எழுந்து வந்து விட்டாராம்.அந்த அளவிற்கு எனக்கு கோபம் வரவில்லை.எழுந்தால் பால்கனி தான். இப்படி எல்லாம் கேள்வி கேட்டு நான் பதில் சொன்னா அதை எதிர்பதிவா போடுவீங்க.அதுவும் வேற ப்ளாக்குல.அப்புறம் மண்டபத்துல பதிவு எழுதி எனக்கெதிரா போராடுவீங்க. தேவையா இது..(டேய் உனக்கெல்லாம் இது ஒவர்..) ஒவர்.. இது அடித்ததே சோர்வாக இருக்கிறது.இனி மனசாட்சி பேசும்.

2) அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?

பெயர் சொல்றதுக்கே இந்த மொக்கை போட்டான்.அதுக்குள்ள அடுத்த கேள்வியா.

3 )நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி.

நியாயப்படி இந்த பதிவின் தலைப்பிலும் சாரு வர வேண்டியது.இந்த மாசம் கோட்டா முடிந்து விட்டது. அதனால் இங்கு போய் படித்து கொள்ளலாம்.

4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?

எல்லா நாதாரித்தனமும் பண்ணுவான்.ஏழு வோட்டும் அவனே போடுவான்.அதுக்கு அவன் கொடுத்த வாக்குமூலம் இங்கே.

5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?

எல்லாமே புனைவு தான்..ஒண்ணுல கூட உண்மை கூடாது.பாருங்க மனசாட்சியையே பொய் சொல்ற அளவுக்கு மாத்தி வைச்சிருக்கான்.

6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

ப்ளாக் எழுதி சம்பாதிச்ச பணத்துல கடலுக்கடியிலே ஒரு வீடு கட்டிட்டான்.காரும் இருக்கு.
 அங்கே போக பாலம் தேவை.அதுக்கு சம்பாதிக்க இப்போ டிவிட்டர்ல மொக்கை போடுறான்.

7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?

அறுக்க மாட்டாதவன் இடுப்பைச் சுத்தி முப்பதெட்டு கறுக்கருவாள்..இந்த ஒண்ணே முடியல..

8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?

கோபமே பட மாட்டான்.ஏன்னா அவனுக்கு கோபமே வராது.வேணா இப்போ அவனுக்கு புதுசா வியில ஆரம்பிக்கிற பெயரில் தோழர்கள் இருக்கிறார்கள்.அவர்களிடம் கேட்கலாம்.

பொறாமை படுவது உண்டு.அதில் முதல் இரண்டு இடத்தில் இருப்பது கென்,காலடி ஜெகநாதன்.(பாருங்க பொறாமையில லிங்க் கூட தர மாட்டான்)

9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..

வந்ததுமே ஒரண்டை இழுத்துட்டான். வால்பையன்,ஜெகன் இப்படி எல்லாம் அதில் தான் அறிமுகம் ஆனார்கள்.

10) கடைசியாக விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்

நான் அவன் இல்லை
நான்
நான் சிகப்பு மனிதன்
நான் மகான் அல்ல

இன்னும் நான் என்று தொடங்கும் படங்கள் வேறென்னயிருக்கு.

யாரையும் கூப்பிட விரும்பவில்லை என்று சொல்வான்.காரணம் அவன் வந்து சொல்வான்.

காரணம் இங்கே சொல்லியிருக்கேன்.நான் கூப்பிட்டால் யாரும் எழுதுவதே இல்லை.அதான் கூப்பிடுவது இல்லை.

மேலும் படிக்க..இன்னும் படிக்க..மீண்டும் மீண்டும் படிக்க..தொடர்ந்து படிக்க..

5 comments:

நீ தொடு வானம் said...

இனிமே யாரும் தொடர்பதிவுக்கு கூப்பிடாதீங்க

இரும்புத்திரை said...

இந்த தொடர்பதிவு கலாச்சாரம் ஒழியும் வரை நான் போராடுவேன்...

வால்பையன் said...

//வந்ததுமே ஒரண்டை இழுத்துட்டான். வால்பையன்,ஜெகன் இப்படி எல்லாம் அதில் தான் அறிமுகம் ஆனார்கள்.//

உங்க ஒரண்டையால தான் நானே நாலு பேருக்கு தெரிஞ்சேன் தல!
உங்களுக்கும் உங்க குரு ஸ்ரீ ஸ்ரீ சாருவானந்தாவுக்கும் தான் நன்றி சொல்லனும்!

இரும்புத்திரை said...

vaal adichi vittaalum alanthu vidanum naan blog pakkam vanthathu 2009 neenga 2007

வால்பையன் said...

லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்துருக்கிங்களே தல!