Friday, April 30, 2010

சுறாவும்,வட போச்சேகளும்

வேட்டைக்காரன் படம் வரும் முன்னால் விஜய் பதிவுகள் மட்டும் பத்து பதிவு எழுதினேன்.சுறாவுக்கு எல்லாம் எழுத ஆசை இருந்தாலும் தலைநகரம் நாய் சேகர் வடிவேலு ஞாபகம் தான் வந்தது."என்னை அடிச்சி டயர்ட் ஆகி ரவுடிகள் எல்லாம் ஊரை விட்டு ஓடிட்டாங்க இப்போ நீங்களா.." அது மாதிரி தான் விஜய் செய்வதும்.எவ்வளவு தான் கை வலிக்க டைப் அடிச்சி நக்கல் அடித்தாலும் அடுத்த படமும் இதே மாதிரி தான் இருக்கும்.இதுல படம் ஓட அரசியலுக்கு வருவேன் என்று பில்டப் வேற.ஒரு நாள் மொத்தமாக வட போக போகுது.அன்னைக்கு தெரியும்.சுறா விமர்சனமா வேட்டைக்காரன் விமர்சனத்தைப் படித்து  கொள்ளுங்கள்.டான்ஸ் ஆடுறேன்னு எக்ஸர்சைஸ் செய்யும் லிஸ்ட்டில் விஜய் சேர்ந்து விட்டாரே.அது ஒண்ணு தான் வரும் என்று நான் நினைத்து கொண்டிருந்தேன்.அந்த வடயும் போச்சா.

தாத்தா இல்லப்பா தாதா - கடந்த மூன்று ஐ.பி.எல் போட்டிகளிலும் அவர் அணி மட்டும் தான் அரையிறுதிக்கு போகவில்லையாம்.தாதா ரசிகர்களும் சரி விஜய் ரசிகர்களும் சரி பழங்கதைகள் பேச அவர்கள் வாய்ப்பு தந்திருக்கிறார்கள்.கங்குலிக்கு கொல்கத்தா டெஸ்ட் மேட்ச், லார்ட்ஸ் சட்டை கழட்டல் போல விஜய்க்கு கில்லி போக்கிரி.இவருக்கு பயந்தே மகேஷ் பாபு படம் நடிப்பது இல்லையாம்.ஷாரூக்கான் கொல்கத்தா அணி கோப்பையை கைப்பற்றினால் நிர்வாண நடனம் போடுவேன் என்று சொன்னார்.நல்ல வேளை அப்படி எதுவும் நடக்கவில்லை. கங்குலி மீது அவ்வளவு நம்பிக்கை.என்ன இருந்தாலும் பஞ்சாப் கூட வடையை மிஸ் பண்ணிட்டீங்களே தாதா.மும்பை அணியின் சவலைப் பிள்ளைகளாக ஆடிய போட்டியில் முழு பலத்துடன் இறங்கிய போது தான் எனக்கு மேட்ச் பிக்ஸிங்காக இருக்கும் என்று தோன்றியது. சச்சின் ரசிகர் அதனால் தான் இப்படி சொல்கிறேன் என்று யாரும் வடையைக் கேட்ச் பிடிக்க வேண்டாம்.

நித்தியானந்தா ஆம்பிளையே இல்லையாம்.என்ன கொடுமைடா அப்புறம் அது எதுக்கு அறுத்து போட்டு விட வேண்டியது தானே.நான் நாக்கை சொன்னேன்.இப்படி சொன்னதை கேட்டதும் சாருவின் காமரூப கதைகளில் ஏதோ பக்கத்தைப் படித்தது போலிருந்தது இதுல ரஞ்சிதாவை இரவில் தான் விசாரிக்க வேண்டுமாம்.ஆமா அப்படியே விசாரிங்க.அப்பத்தான் ஆறு மணிக்கு மேல் எது நடந்தாலும் நடிகர் சங்கம் கேட்காது.அட வடையில் பங்கு கேட்காது என்று சொன்னேன்.

பசில் ராஜபக்சேவை கொரில்லா அறைந்து விட்டதாம்.கொரில்லாவுக்கு கூட தெரிகிறது.அது ரொம்ப அமைதியாம்.யாரையும் அடிக்காதாம். முதலில் அடி வாங்கியதே தானைத் தலைவர் தானாம். கொரில்லா அங்கேயே இருக்கிறதா என்று விசாரிக்க வேண்டும்.இல்லை வெள்ளை வேன் வைத்து கடத்தி விடப் போகிறார்கள்.அப்புறம் மகிந்தா தான் சார்க் கூட்டமைப்பின் தலைவராம் என்று கொடுமைடா இது.இந்த வடையை யாருப்பா அந்த ஆளுக்கு கொடுத்தது.

சன் டிவி வரிசையாக மொக்கை படங்களை ரீலிஸ் செய்ய காத்திருக்கிறது.அடுத்தது சிங்கம் என்று நினைக்கிறேன்.இப்படியே செய்து கொண்டு இருங்கள்.எந்திரன் என்ற பெரிய வடையை பரிமாறும் போது எரிச்சலில் யாருமே சாப்பிட வராமல் போய் விட போகிறார்கள்.

ரெட்டைச்சுழி பார்த்து விட்டேன். பசங்க கதைகளில் வந்தாலும் ஒரு பெரிய காதல் ஜோடிகளின் கதை வேண்டுமா.இமயம்.சிகரம் என்று சொல்லியே ஊசிப் போன வடைகளை எல்லாம் தரக்கூடாது.பசங்களை வைத்து படம் எடுக்க ஆசைப்படுகிறவர்கள் 1994லில் வந்த லிட்டில் ராஸ்கல் படத்தை ஒரு முறையாவது பார்க்கலாம்.பார்த்து விட்டு அந்த வடையை கவ்வ வேண்டாம்.விட்டு விடுங்களேன்.

Thursday, April 29, 2010

வானவில்லின் மங்காத நடு நிறத்தில் அமர்ந்த பட்டாம்பூச்சி

மூன்று பெண்களிருக்கும் வீட்டில் நடுவில் பிறந்தவளை காதலித்து இருக்கீர்களா.படிக்க முடியாமல்(பிடிக்காமல்) தூங்கிய ஒரு மழைநாள் அது. யாரோ எழுப்பியது போலிருந்தது.

"என்ன..தூங்கும் போது எழுப்பாதேன்னு எத்தனை தடவை சொன்னாலும் கேட்க மாட்டாயா.." அம்மாவாக இருக்கும் என்று கண்ணைத் திறக்காமல் பதில் சொல்லிக் கொண்டிருந்தேன்.

"வானவில் பார்க்க வருகிறாயா.." தம்பி நின்றுக் கொண்டிருந்தான்.

"அஞ்சு நிமிஷம்.." படிக்க எழுப்பினால் கூட இதே பதில் தான் வரும்.அந்த அளவிற்கு அது ரெடிமேட் பதிலாக மாறியிருந்தது.

கிராமத்தில் இருக்கும் போது அடிக்கடி வானவில் பார்த்திருக்கிறேன். சென்னை வந்தப்பின் பார்த்ததேயில்லை.பார்க்க முடியாமல் போய் விடுமோ என்ற குறுகுறுப்பில் மூன்றாவது நிமிடம் மேலேயிருந்தேன்.நான் பார்க்கும் போது நடு நிறமான பச்சையைத் தவிர எல்லாம் மங்கியிருந்தது.வானவில்லை பார்க்காமல் எதிர் திசையில் திரும்பியிருந்தேன்.இரண்டு பெண்களுக்கு நடுவில் அவள் நின்றிருந்தாள். வான்வில்லின் எல்லா நிறத்திலும் அவள் பரிமளிப்பது போல் தெரிந்தது.கண் இமைக்காமல் திரை விழும் வரை அவளை பார்த்தேன். ஏதோ ஒரு கணத்தில் என்னை கவனித்தாள்.அவள் பார்த்த சமயம் இருந்த வானவில்லின் மங்காத முதல் நிறமாக நான் இருந்திருக்கலாம்.




மூன்று பெண்களில் வித்தியாசமாக அவள் இருந்தாள்.நிறம் குறைவாக,படிப்பு வராதவளாக,நன்றாக சமைப்பவளாக,பொறுப்புமிக்கவளாக,இன்னும் எது செய்தாலும் எனக்கு பிடிப்பவளாக பல்வேறு நோட்டமிடுதலில் மாறியிருந்தாள்.அவளிடம் கேட்டிருந்தால் அவள் காதலித்த மூத்த மகனின் குணாதியங்களைப் பட்டியல் இட்டிருப்பாள்.

நான் உருப்படவே மாட்டேன் என்று எல்லோரும் சொல்லி கொண்டிருந்த காலம். என்னை தவிர யாருக்கும் என் மேல் நம்பிக்கையில்லை.அவள் மட்டும் நம்புவது போல் தெரிந்தது.

இயற்கையாகவே அவள் அழகாயிருந்தாள்.சூரிய வெளிச்சத்தில் மின்னிய பொழுது,காற்றில் கலைந்த கேசத்தைச் சரி செய்த பொழுது,முகத்தில் இரைத்த நீரோடு, கேஸ் தீர்ந்த அடுப்படியில் சமைத்த நெருப்போடு இப்படி ஒவ்வொரு கணமும் கனன்று என்னுள் எரிய தொடங்கியிருந்தது.

அவளுக்கும் என்னை பிடித்திருந்தது போலிருந்தது பின்னாளில் பிரமையாக மாறும் என்று நான் நினைக்கவேயில்லை. எல்லாத் தேர்வையும் முடித்து விட்டு திரும்பிய நாளில் அவள் வீடு பூட்டிக் கிடந்தது. என்னை அவள் கண்கள் தேடியிருக்கலாம்.

மூன்று வருடங்களுக்குப் பின்..

பொழுது போகாமல் மொட்டை மாடியில் உலாத்த முடிவு செய்து போன போது தம்பியும் எதிர் வீட்ட்டுப் பெண்ணும் காற்றில் கிறுக்கிக் கொண்டிருந்தார்கள். மங்காத வானவில்லின் முதல் இரண்டு நிறமாக தெரிந்தார்கள்.

இன்னும் மூன்று வருடங்கள் கழித்து

ஒரு இரயில் பயணத்தின் போது மூன்று பெண்களிருந்த குடும்பத்தோடு பயணித்த போது வித்தியாசமான அழகோடு இருந்த நடுப்பெண்ணின் பெயர் சாரதா என்று தெரிந்து கொண்டேன்.

டிக் டிக் டிக் படத்தில் பெரிய கண்களோடு கமலை காதலித்த மாதவியின் பெயர் கூட சாரதா தான்.அட அதிலும் மூன்று பெண்கள்.இப்படி எல்லா இடத்தில் அவளை பொருத்திப் பார்த்துக் கொண்டேன்.வானவில்லை அதற்கு பின் பார்த்ததாக ஞாபகமில்லை.வானவில்லில் அமர பட்டாம்பூச்சியாய் திரிகிறேன்.

Monday, April 26, 2010

சச்சின் செய்த மேட்ச் பிக்சிங்

தலைப்பில் இருப்பது போல் குரல்கள் கேட்க ஆரம்பித்து விட்டது.எல்லாம் ரெடீப் அனானிகளின் வேலை.சென்னையுடன் தோற்றவுடன் இப்படி சொல்லி விட்டார்கள்.இன்றைய தினம் இரண்டு மனநிலையில் தான் நான் இருந்தேன்.சச்சின் ஆட வேண்டும்.காலிஸை விட அதிக ரன் எடுக்க வேண்டும்.அதே சமயம் சென்னை ஜெயிக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தேன்.இது கிட்டதட்ட சாணியை மெறிச்ச பெண்ணின் மன நிலையை ஒத்து இருந்தது.(கணவன் பெயர் வாங்க வேண்டும்.சொந்த வீடு தோற்று விடக் கூடாது.)

கை குடுத்தால் கூட வலிக்கும் என்ற நிலையில் கூட களமிறங்கிய சச்சின் மேட்ச் பிக்சிங் செய்தார் என்று வாய் கூசாமல் சொல்லி விட்டார்கள்.அடுத்து 20-20 உலக கோப்பை சச்சின் ஆட வேண்டும் கோரிக்கை வேறு.அங்கு போய் ஆடாமலிருந்தால் இந்த வாய்கள் என்ன சொல்லும் என்று தெரியாதா என்ன.

சச்சின் சுயநலவாதி என்று சொன்னவர்களும் அதில் உண்டு.அதிக ரன் எடுக்க போவது யார் என்ற நிலைமையில் கொல்கத்தாவுடன் ஆடவில்லை.அதுவும் அனானி அறிவுஜீவிகளுக்கு மேட்ச் பிக்சிங்காக இருந்திருக்கலாம்.

சென்னையுடன் உடம்பு சரியில்லாமல் களத்தை விட்டு வெளியேறியது கூட மேட்ச் பிக்சிங் வரிசையில் வந்து விட்டதால் என்ன செய்வது என்று தெரியாமல் சந்தேகம் வராமல் மேட்ச் பிக்சிங் செய்ய முடிவு செய்து அரை இறுதியில் அவரே காயம் ஏற்படுத்தி கொண்டார் என்று சொன்னாலும் சொல்வார்கள்.

சச்சின் செய்தது ஒரே ஒரு தவறு தான்.போலார்டை முன்னரே இறக்காமல் விட்டு விட்டார்.அதுவும் அந்த அறிவுஜீவிகளின் கண்ணிற்கு அதுவும் ஒரு காரணமாக தெரியலாம்.அவர் ஒரு திறமையான கேப்டன் இல்லை என்பதற்கு சாட்சியாக மட்டுமே இதை எடுத்து கொள்ளலாம்.தோனி போலார்டை அவுட்டாக்கிய விதத்தில் இருந்து தெரிந்து கொள்ளலாம் அவர் ஒரு திறமையான கேப்டன் என்று.அவர் சொன்ன காரணம் அதிரடி ஆட்டக்காரர்கள் எல்லாம் வித்தியாசமான ஷாட்கள் ஆட மாட்டார்கள் நேராக தான் அடிப்பார்கள் என்றும் அதனால் ஹைடனை மிட் ஆப்பில் நிறுத்தாமல் பந்து வீச்சாளரை ஓட்டியே நிறுத்தியிருந்தார்.இருப்பதிலேயே கஷ்டம் ஸ்ரெயிட் டிரைவ் ஆடிக் கொண்டேயிருப்பது தான்.

இந்த வெற்றிக்குப் பின் தோனி சிகப்பு விளக்கு பகுதியில் நின்றாலும் அவரிடம் கையெழுத்து வாங்கும் கூட்டம் அதிகரிக்கும்.அட நான் சொன்னது சிக்னலை.

சச்சின் காயமடைந்த போது இந்தியாவிற்கு விளையாடியது இல்லையாம்.இன்னும் வேறு ஏதாவது இருந்தால் சொல்லவும்.

அட போங்கடா போக்கத்தப் பசங்களா.......................

Wednesday, April 14, 2010

பதின்மத்தின் கதவுகளை என்றோ தட்டியவள்

பள்ளி காலத்தில் என் ஆதர்ஷ ஹீரோக்களில் அவனும் ஒருவன்.ஏதோ ஒரு நாளில்,ஒரு நாளிதழில்,ஒரு பக்கத்தில் வந்த வரதட்சணை கொடுமை என்ற செய்தியின் விரிவாக்கத்தில் அவனுடைய பெயர் இருந்தது.குற்றம் சாட்டியது அவன் காதல் மனைவி.நாத்தனார் என்ற அவள் பெயர் இருக்கிறதா என்று ஒன்றுக்கு பல முறை படித்து பார்த்தும் அதில் அவள் பெயர் இருக்குமோ என்ற சந்தேகத்தில் திரும்ப திரும்ப படித்து கொண்டேயிருந்தேன்.

நான் அந்த பள்ளியில் ஆறாவது புதிதாக சேர்ந்திருந்தேன்.அவள் எட்டாவது படித்து கொண்டிருந்தாள்.அவளுடைய பெயர் ரொம்ப யூனிக்கான பெயர் என்று அடிக்கடி பீற்றிக் கொள்வாள்.அவளை சுற்றி அவள் அள்ளி விடும் பிரதாபங்களைக் கேட்க ஒரு ரசிகர் கூட்டமே அவளுக்கு உண்டு.காமாலை கண்ணுக்கு பார்ப்பதெல்லாம் மஞ்சளாக தெரிவது போல் அவள் எனக்கு என்னுடன் பயணிக்கும் தேவதையாகவே தெரிந்தாள்.மட்டம் தட்டலாம் என்று பார்த்தால் அவளுக்கு ஒன்றுக்கு இரண்டு அண்ணன்கள்.என் வேண்டுதல் பலித்ததோ என்னவோ தெரியவில்லை.ஒருவன் பாஸ்.ஒருவன் பெயில்.ஆக மொத்தம் இருவரும் அந்த வருடமே பள்ளியிலிருந்து வெளியேறியிருந்தார்கள்.அவள் ஊர்க்காரன் மட்டும் தான் பாக்கி.அவனுக்கும் எனக்கும் ஆகவே ஆகாது.போட்டு குடுத்து விட்டால் என்ன செய்வது. அந்த பயமே என்னை தடுத்து அவன் மேல் வன்மம் கொழுந்து விட்டு எரிய காரணமாயிருந்தது.

இப்படியாக அடுத்த ஒரு வருடம் முடியும் போது எனக்கு அவளுடன் நெருங்க ஒரு சந்தர்ப்பமாக அவள் ஊர்க்காரனும் அந்த ஆண்டு பள்ளியை விட்டு விலகியிருந்தான்.பள்ளி ஆண்டு விடுமுறைக்கு பின் அவள் இன்னும் கொஞ்சமே கொஞ்சம் அழகாய் தெரிந்து தொலைத்தாள்.அழகின் ரகசியத்தை எல்லோருக்கும் புகைப்படமாக காட்டினாள்.எனக்கும் மட்டும் காட்டவேயில்லை.என் ஊர்ப்பெண்ணிடம் அந்த போட்டோவில் என்ன இருந்தது என்று கெஞ்சிக் கூத்தாடியப் பின் தான் சொன்னாள்.அவள் பெரிய மனுஷியாகி விட்டாள் என்று.என்னிடம் காட்ட வெட்கப்பட்டாளா என்னவோ தெரியாது.அவள் மேல் ஒரு ஈர்ப்பு கூட அது இன்னொரு காரணமாகயிருந்தது.வசந்திடம் சுற்றி வளைத்து கேட்டு கொண்டிருந்தேன்.அவனுக்கு ஒரு பெண் அப்படி செய்தது போல் கதையை மாற்றி அவன் என்ன சொல்லுவான் என்று அவன் வாயையே பார்த்துக் கொண்டிருந்தேன்.அவன் எங்களுடைய வகுப்பில் எல்லாம் தெரிந்த ஏகாம்பரம்.பெண்கள் மத்தியில் அவனுக்கு அப்படி ஒரு கிரேஸ் இருந்தது.அப்ப அந்த பெண்ணுக்கு அவன் மேல் ஏதோ ஈர்ப்பு இருப்பதாக அவன் தீர்ப்பு எழுதியிருந்தான். அது எனக்கு சாதகமாக இருந்த காரணத்தால் அவன் சொன்னால் சரியாகயிருக்கும் என்று நினைத்து கொண்டேன்.

தேனெடுக்கும் போது பாதுகாப்பான இடத்தில் நின்று கொண்டு கல் எறிவோம்.மிஷன் என்றுமே தோல்வியைத் தழுவியதில்லை.அவள் நினைப்பிலேயே ரெக்கை கட்டி பறந்ததில் நான் தேனீக்கள் வராத இடத்திற்கு போக மறந்து விட்டேன்.பசங்களும் கல் எறிந்து கலைத்து விட்டார்கள்.வசமாக நின்று கொண்டிருந்த எனக்கு நிறைய கொட்டு கிடைத்தது.போதாத காரணத்திற்கு பசங்களுடன் சேர்ந்த பாவத்திற்காக வீட்டில் மொத்தும் கிடைத்தது.அதை ஏதோ போரில் விழுப்புண்கள் கிடைத்தது போல் அவளிடம் காட்டி கொஞ்சம் அவளிடம் நெருங்கியிருந்தேன்.அப்படி செய்தது தான் பிற்காலத்தில் உடையாத கை உடைந்த மாதிரி கட்டுப் போட்டுக் கொண்டு நிறைய பெண்களிடம் சீன் போட முடிந்தது.

அவள் பத்தாவதும் நான் எட்டாவதும் படித்து கொண்டிருந்தோம்.எனக்கு குண்டு வைக்க புதிதாக வேறு ஒருவன் வந்து சேர்ந்திருந்தான்.நான் அவள் பக்கத்தில் இருக்கும் போது அவன் நடுவில் வந்து தொல்லைகள் கொடுப்பான்.ஏதோ ஒரு காரணம் சொல்லி இதற்காக அவனை அடித்து விட்டேன்.அவனுக்கு சப்போர்ட் செய்ய வந்த அவள் வகுப்பு பையனை வசந்தை வைத்தே மிரட்டினேன்.பரிட்சையில் காட்டுகிறேன் என்று வாக்கு தந்திருந்தேன்.அவன் என்னை விட அதிகமாக மார்க் வாங்கி தொலைத்திருந்தான்.எனக்கு அதெல்லாம் பெரிய விஷயமாக தெரியவில்லை.

அவளுக்கு நாவல் படிக்கும் பழக்கமிருந்தது எனக்கு கொஞ்சம் வசதியாகயிருந்தது.அதுவே நான் அவளிடம் நெருங்க காரணமாகயிருந்தது. மற்ற வீடுகள் மாதிரி அதை படிக்காதே.இதை படிக்காதே என்று தடை எங்கள் வீட்டில் இருந்தது கிடையாது.பாலகுமாரன் எல்லாம் உச்சத்தில் இருந்த காலகட்டம்.அவளுக்கு ஒரு நாவல் குடுத்தேன்.கதை ஒரு சுவாரஸ்யமான மூடிச்சுகள் உடையது.கணினி பெரிதாக வெளியே தெரியாத காலத்தில் எல்லோரிடமும் கற்பனை வளம் கொட்டிக் கிடந்தது என்பதற்கு அது ஒரு சாட்சி.விவாகரத்தான கணவன் - மனைவி, விவாகரத்திற்கு பின் அவள் காதலிக்கும் ஒருவன் என்று சடுகுடு ஆடிய கதை. ஆங்கில வார்த்தைகள் நிறைய வரும்.தெரிந்தும் தெரியாமலும் படித்து விட்டு அவளிடமே அர்த்தம் கேட்டேன்.உன் அம்மாவிடம் சொல்லி விடுவேன் என்று மிரட்டி விட்டாள்.

அவளிடம் பிடித்த விஷயமே ஒரு நாள் கூட என்னை தம்பி என்று சொன்னதேயில்லை.எனக்கோ அக்கா என்று கூப்பிட வேண்டும் என்று தோன்றியதேயில்லை.இதுவே வயதுக்கு சின்னப் பெண்களாக இருந்தால் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் அண்ணா என்று சொல்லி அசிங்கப்படுத்துவார்கள்.அதனால் அவர்களுடன் சகவாசமே வைப்பதில்லை.

பத்தாவது படித்து கொண்டிருந்ததால் அவள் மாலையில் பள்ளி பேரூந்தில் வர மாட்டாள்.புதிதாக பள்ளியில் எனக்கு ஜூனியராக சேர்ந்த பெண்ணை எனக்கு பிடித்திருந்தது.சர்வ நிச்சயமாக தெரியும்.அவளும் என்னை விட பெரிய பெண் என்று.சீனியரும் "ஜூனியரும்" சேர்ந்து இருந்தால் யாரிடம் பேசினாலும் பிரச்சனை என்று இருவரிடமும் பேசாமல் தூங்கி விடுவேன்.

நடுவில் ஜூனியரிடம் முட்டிக் கொண்டதால் நான் அவளிடம் பேசாமல் இருந்தேன்.வழக்கம் போல பத்தாவது படிப்பதால் அவளுக்கு ஸ்பெஷல் கிளாஸ்.நான் அமரும் ஜன்னலுக்கு கீழே நின்று என்னுடம் பேசிக் கொண்டிருந்தாள்.தீடிரென தண்ணீர் குடித்தாள்.தண்ணீர் சிந்தி அது கொட்டிய இடமெல்லாம் பார்வை போய் கொண்டிருந்தது.நானும் வேறு எங்கோ பார்த்து முடியாமல்.. அவளிடம் என் ஜூனியர் வில்லி போட்டுத் தர ஒரு வெறுமையான பார்வை பார்த்தாள்.தாங்க முடியாமல் பார்வையை எங்கோ திருப்பினேன்.அவளை அன்று தான் கடைசியாக பார்த்ததாக ஞாபகம்.

நான் சென்னை வந்து விட்டேன்.வெறுமையான பார்வையை மறக்க முடியாமல் அந்த வருடம் யாரும் என்னை ஈர்க்கவில்லை.பத்தாவது படிக்கும் போது அதை மறக்கடிக்கும் விதமாக இன்னொரு பிரதாபங்களை அள்ளி வீசும் பெண் என் பதின்ம கதவை தட்டத் தொடங்கியிருந்தாள். கொடுமையான விஷயம் அவளும் எனக்கு இரண்டு வருடம் சீனியர்.ஆறுதலான விஷயம் அவளுக்கு அண்ணன்களே இல்லை.

Tuesday, April 13, 2010

எதிர்பாராத வினை

யார் யாரோ சொன்னாங்க.கெஞ்சி கேட்டாங்க.அம்மா கூட சென்னை வரும் போதெல்லாம் பேசவே மாட்டேன்னு இப்படி ப்ளாக்கைக் கட்டிப் பிடிச்சிட்டு கிடந்தா பேச எப்படி நேரம் இருக்கும்,மும்பை போய் பேசவேயில்லையே பேசவே இல்லைன்னு போன் பில்ல ஏத்துவ இப்படி சொல்லி பாத்தும் கேக்காத நான் கென் குடுத்த அதிர்ச்சி வைத்தியத்துல தெளிஞ்சி போயிட்டேனே.

ஒரு நாளைக்கு மூணு பதிவு எல்லாம் எழுதி படிக்கிறவங்க உயிரை வாங்கி இருக்கிறேன்.இப்போ நாலு நாளைக்கு ஒரு பதிவு கூட எழுத முடியாம கற்பனை வறட்சியில் கிடக்குறேன்.(வடிவேலு நேத்து தான் சொன்னார்.என் மேல பொய் வழக்குப் போட்டு நகைச்சுவை திறமையை எல்லாம் அழிக்க பாக்குறாங்க.இது காமெடியா இருந்தா நான் சொன்னதும் காமெடி தான்.)வடிவேலு சொன்னது சீரியஸ் தான் என்றால் அது மாதிரி இதுவும் சீரியஸ் தான்.

தெரியாமல் அவரை ரைட்டர் கென் என்று சொல்லி விட்டேன்.அதுக்கு அவர் ஓட்டுறப் பஸ்ல எல்லாம் ரைட்டர் என்று என்னை சொல்லனுமா.அப்படி சொன்னதுல இருந்து எனக்கு பதிவு எழுத வரவே மாட்டேங்குது.நானூறு பதிவு எழுதி ஜேம்ஸைப் படிக்க வைக்கலாம்னு பாத்தா இப்படி சொல்லி சாய்ச்சு போட்டீங்களே மக்கா.ஒரு அனானி நான் புக் ரீலிஸ் பண்ணவில்லை என்ற வருத்தப்பட்டு ஆறாயிரம் ரூபாய் தர்றேன் என்று சொன்னார்.நான் அதில் பாதியை அவருக்கு  தருகிறேன் என்று சொன்னேன்.அவரை புத்தகம் வெளியிட வைத்து உண்மையான ரைட்டர் ஆக்கி விடலாம் என்று பார்த்தால் சிக்குவேனா பார் என்கிறார்.

இதுவாது பரவாயில்ல.உங்களுக்கு இருக்குற வாசகர் வட்டமும்,பின்னூட்ட அளவுகளும் என்று கிண்டலாக சொல்கிறார்.ஏன் வெந்தப் புண்ல வேல் பாய்ச்சுறார்னு சாந்தாமணி கேட்டு சொல்லட்டும்.ரைட்டர் இந்த வார்த்தைக்கு இவ்வளவு சக்தியா.

நானே இங்க இருக்கிற ஒரு ரைட்டரைப் பார்த்து ரைட்டர் ஆகணும் என்று ஆசைப்பட்டேன்.அதுக்கு தண்டனை இவ்வளவு பெருசா.அடுத்து யாரு தினமும் எழுதுறார் என்று பார்த்து அவரை அப்படி கூப்பிட்டால் எழுதுவதை நிறுத்துவாரா என்று டெஸ்ட் செய்து விடலாம்.

ரைட்டர் ஜெயமோகன்.

ரைட்டர் ஜெயமோகன்.

ஆகா ஸ்மைலியை விட்டு விட்டேனே.கென் சொல்லும் போது ஸ்மைலி போடுவாரே.

ரைட்டர் ஜெயமோகன் :-)))))))

ரைட்டர் ஜெயமோகன் :-)))))))

இப்படி எழுதியதால் யாருக்காவது கோபம் வந்து பாயைப் பிராண்ட  வேண்டாம். கோபமிருந்தால் கென்னை தொடர்பு கொள்ளவும்.தல கென் நீங்க சொன்ன மாதிரியே டெஸ்ட் பண்ணிட்டேன்.

Friday, April 9, 2010

துவையல் - சென்ற வருட ஸ்பெஷல்

பதிவு எழுத ஆரம்பித்து ஒரு வருடம் ஆகி விட்டது.போன வாரத்தில் இருந்து இரண்டாவது வருடம்.கவனிக்க மறந்து விட்டேனே.பெரிதாக ஏதாவது சாதனை என்றால் நண்பர்களைத் தவிர எதுவும் இல்லை.போன வருடமும் பதிவு எழுத ஆரம்பித்த நாளில் பதிவர் சந்திப்பு நடந்தது.இந்த வாரமும் நடக்கிறது.அடுத்த வருடமும் நான் எழுத வேண்டும்.பதிவர் சந்திப்பும் நடக்க வேண்டும்.எல்லாம் ஹாட்ரிக் ஆசை தான்.இந்த வருடமாவது கருத்து சண்டை வராமல் உருப்படியாக எழுத வேண்டும் என்று உறுதிமொழிகள் எல்லாம் எடுக்கவில்லை. தினமும் பதிவு எழுத வேண்டும் என்ற கொலைவெறியை ஒரே நாளில் விட்டொழித்தது எனக்கே கொஞ்சம் ஆச்சர்யம் தான்.அப்படியே உருப்படியாக எதையாவது எழுதி படிப்பவர்களையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தலாமா என்று நினைத்து பார்த்தால் எனக்கே என்னை பார்க்க பயமாகயிருக்கிறது.நோ டென்ஷன் பீ ஹேப்பி.

பசங்க படத்தை அடுத்து பாண்டியராஜ் இயக்கும் படம் வம்சம்.முதல்வரின் பேரன் அருள்நிதி நடிக்கிறார் என்பது எல்லாம் எனக்கு விஷயமேயில்லை.படத்தின் நான் எதிர்பார்ப்பது பாடல்களை தான்.இசை ஏ.ஆர்.ரகுமானிடம் உதவியாளராக இருந்த தாஜ் நூர்.பெரிய திறமைசாலி.நண்பரின் நண்பர்.பெரிதாக வர வேண்டும்.ஏ.ஆர்.ஆரின் இரண்டு உதவியாளர்கள்(பிரவீண் மணி,ரபீக்(ஜக்குபாய்)) செய்த தவறே ஏ.ஆர்.ஆர் பாணி இசை தான்.அதை தாஜ் நூரும் செய்து விடக்கூடாது.

ஸ்ரீசாந்த் - நோ பால் போட்டு விட்டு பயபுள்ள என்ன வறுத்து வருது.நடுவரையே கைத்தட்டி பகடி செய்கிறது.வெறும் இருபது சதவீதம்(நாலே நாலு லட்சம்) போட்டி ஊதியத்தைப் பிடிங்கி விட்டார்கள்.அப்ப சம்பளம் என்னவென்று கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் யோசித்ததில் இருபது லட்சம் என்று கணக்கு சொன்னது.ஏன் சிறுவர்கள் எல்லாம் கோச்சிங் கேம்பில் பணம் குடுக்கிறார்கள் என்று ஸ்ரீசாந்த் மூலம் தெரிந்து கொண்டேன்.இவ்வளவு பணம் தந்தால் விளையாடினால் என்ன விளையாடாமல் இருந்தால் என்ன.தேவை பணம் தான்.

அவள் பெயர் தமிழரசி.எனக்கு படத்தில் ஒன்றே ஒன்று மட்டும் தான் பிடித்திருந்தது.அது நாயகியின் அத்தை பெண்ணாக வரும் செண்டு.பெயரே ஆயிரம் கதை சொல்லியது.உடனே பிளாஷ்பேக் என்று நினைத்து விட வேண்டாம்.அந்த பெண்ணும் அழகு.நடிப்பும் வருகிறது.இரண்டு மாற்றங்கள் செய்திருந்தால் எனக்கு படம் பிடித்திருக்கும்.கதையிலா என்று கேட்டால் இல்லை. நாயகனையும், நாயகியையும் மாற்றி இருக்க வேண்டும்.நடிக்க சொன்னால் இரண்டும் படத்தில் "வாழ்ந்திருக்கிறார்கள்".

வெற்றியாளன் என்ன சொன்னாலும் உலகம் நம்புகிறது.இது எனக்கு இரண்டு கதையை நினைவு படுத்தியது.வாரமலரில் சில வருடங்களுக்கு முன் எல்லாம் வெளியாகும் சிறுகதையில் ஒரு தரம் இருக்கும். முதல் படம் வெற்றி அடைந்தவுடன் அது வரை ஏழையாக கஷ்டப்பட்ட இயக்குனர் நான் பிறந்ததே பணக்கார குடும்பத்தில் என்று பேட்டி தருவார்.மனைவி ஏன் இந்த பொய் என்று கேட்பார்.என்னை மாதிரி யாரும் கஷ்டப்படக் கூடாது என்று சொல்வார்.அந்த கதையை நான் கிழித்து எறிந்தேன்.அப்படி ஒரு படம் தான் மாயக்கண்ணாடி.அதை ரசிகர்களே நிராகரித்து ரசனை இல்லாதவர்கள் என்று சேரனிடம் பட்டம் வாங்கி கொண்டார்கள்.அடுத்த கதை - கணவனும்,மனைவியும் காரில் செல்வார்கள்.காலில் செருப்பில்லாமல் பள்ளிக்கு செல்லும் சிறுவன் லிப்ட் கேட்பான்.இவன் தராமல் வந்து விடுவான்.மனைவி கோபப்படுவாள்.கணவன் சொல்வான் - "இப்படி செய்தால் தான் அந்த வெறியில் அவன் நாளை கார் வாங்குவான்".எனக்கு இந்த கதை மிகவும் பிடித்திருந்தது.என்னை பொறுத்தவரை விமர்சனங்கள் தான் வெற்றியாளனை உருவாக்குகிறது.பொய்கள் அல்ல.அவமானமும்,அலட்சியமும் வெற்றியாளனை உருவாக்கினாலும் வெற்றி கிடைத்தப் பின் அவன் சொல்லும் பொய் நிச்சயம் அவனை கீழே தள்ளும்.வசந்த பாலனும்,கௌதம் மேனனும் இன்னொரு விக்ரமனாக மாறும் காலம் நிச்சயம் பக்கத்தில் தான் இருக்கிறது.

சச்சினை வளர்த்தது திறமையா விமர்சனமா என்று கேட்டால் விமர்சனம் தான் என்று சொல்லுவேன். சச்சின் அளவிற்கு யார் மேலும் இந்த அளவிற்கு விமர்சன வெப்பம் பாய்ந்தது கிடையாது.திறமை என்பது அவர் 1992 ஆஸ்திரேலியப் பயணத்தின் போதே நிரூபித்து விட்டார்.அதற்கு பின் அவரை வளர்த்தது எல்லாம் விமர்சனம் தான்.2005ம் வருடத்தின் போது எண்டூல்கர் என்று லண்டம் டைம்ஸ் ஆங்கிலப் பத்திரிக்கை பகடி செய்தது.கதறி அழுதேன் என்று சச்சினே சொல்லி இருக்கிறார்.அதன் பிறகு எடுத்த விஸ்பரூபம் நாம் பார்த்தது தான்.இன்னொரு காரணம் காம்ளி அணியில் இருக்கும் போது காம்ளி ஆடியப் பிறகே சச்சின் களமிறங்குவார்.சச்சின் அளவிற்கு திறமைசாலி.காணாமல் போனதற்கு காரணம் விமர்சனங்களை அவர் சரியாக எடுத்து கொள்ளாததே.என்னையும் விமர்சனம் செய்யலாம்.ஒருமுறை அதிஷா என்னிடம் சொன்னார் - "நானாவது ரஜினி,கமல் என்று விமர்சனம் செய்கிறேன்.பாவம் இவர்கள் அதிஷாவை விமர்சனம் செய்கிறார்கள்".

Wednesday, April 7, 2010

தமிழ் சினிமாவின் யதார்த்தம்

தமிழ் சினிமா யதார்த்தமாக மாற வேண்டும் என்றால் முதலில் சில கிளிஷேகளை விட்டு தொலைத்தால் தான் முடியும் என்பது மட்டுமே யதார்த்தம்.இரண்டரை மணி நேரத்தில் அரை மணி நேரம் பாடல்களுக்கே ஒதுக்கப்படுகிறது.அடுத்தது சண்டை வைக்க வேண்டுமே நாயகனின் வீரத்தை நிரூபிக்க அது தேவைப்படும்.மிக முக்கியமாக காதல்.இது மூன்றும் இல்லாவிட்டால் கதையை யோசிக்க முடியாதா என்ன.

நிஜ வாழ்க்கையில் கஷ்டம் வரும் போது அல்லது சந்தோஷம் வரும் போது உணர்ச்சி பொங்க ஏதாவது பாடல்களை வேறு ஒருவர் குரலில் பாடுகிறோமா.நாயகனுக்கு எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் தான்.நன்றாக படிப்பான்,பாடுவான்,ஆடுவான்,சண்டை போடுவான்(இரும்பு கம்பியால் இருபது அடி வாங்கிய பிறகும் கடைவாயில் லேசாக தக்காளி சாஸ் வழியும்),ரொம்ப நல்லவனாக இருப்பான்.(சுத்தி இருப்பவனை கெட்டவனாக காட்டி விட்டால் இன்னும் நல்லவனாக தெரிவான்).

கமல் சொன்னது இது தான் - எல்லோரும் போகும் வழியில் நாமும் போனால் மாற்று சினிமா வராது.நாம் வேறு திசையில் ஓட வேண்டும்.சொல்லி பல வருடம் ஆகி விட்டது.அவரே அந்த பாதையில் ஓடுவதில்லை என்பது தான் அதிக வருத்தம் தருகிறது.

ஆஸ்கர் என்று வாயை பிளக்க தான் தெரியும்.முதலில் லகான் வாங்காமல் போனதற்கு கூட பாடல்கள் தான் காரணமாக இருக்கும்.இந்திய சினிமாக்களைத் தவிர எந்த நாட்டு சினிமாவிலும் இந்த பாடல்களை வெளி நாட்டில் காக்கா வலிப்பு வருவது போல் எடுப்பதில்லை.இந்தி சினிமா கூட மாறி விட்டது.பாடல் வேண்டும் என்றால் அது பிண்ணனியில் தான் ஒலிக்கும். அங்கு எந்த கட்டை குரல் நாயனுக்கும் பாடும் போது இனிமையான குரல் வருவதில்லை.(இஷ்கியா படத்தில் நஸ்ரூதீன் ஷா காதல் வசப்படும் போது வரும் பாடலை கவனித்தாலே தெரியும்)

அங்காடி தெரு படம் பார்க்கும் போது உச்சக்கட்டத்தில் எரிச்சல் அடைந்தது."உன் பெயரை சொல்லும் போது.." என்ற பாடல் காட்சியில் தான்.நடனம் ஆடத் தெரியாத நாயகன் - நாயகி இப்படி தான் ஆடுவார்களா.(ஒரு முறை அழகன் மம்மூட்டியையும்,ரெயின்போ காலனி ரவி கிருஷ்ணாவையும் சென்னை 600028 சிவாவையும் ஆடும் போது இயக்குனர் கவனித்து இருக்கலாம்).யதார்த்த படம் என்றாலும் பாடல் காட்சியில் அஞ்சலியின் இடையை காட்டியே ஆக வேண்டுமா.அங்கு கேமரா இருக்கும் என்று அங்கு வேலை செய்யும் என்று குழந்தைகளுக்கு தெரியவே தெரியாதா.

பசங்க குழந்தைகள் படம் என்று சொன்னால் சிரிப்பு தான் வருகிறது.அடுத்தது ரெட்டை சுழி அதுவும் குழந்தைகள் படமா.தேங்க்ஸ் மா என்று ஒரு இந்தி படம் இருக்கிறது.அந்த படத்தில் யதார்த்தமும்,பேப்பர் கட்டிங்களை எப்படி படம் எடுக்க வேண்டும் என்ற நேர்த்தியும் இருக்கிறது.வட்டார மொழி எப்படி இருக்கும் என்று தெரியாமலே அதில் அதிகமாக புழங்கும் வார்த்தைகளை சேர்த்து விட்டால் வந்து விடுமா.வட்டார மொழியில் படம் எடுக்கும் போது இந்தி சினிமாவில் மூன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் வசனம் எழுதுகிறார்கள்._த்தா என்று அடிக்கடி சொன்னால் அது சென்னை பாஷை என்றாகி விடாது.எதையாவது எடுத்து விட்டு யதார்த்தம் என்று சொன்னால் அதை ஒப்புக் கொள்ளவே முடியாது.அது என் குருவாக இருந்தாலும் சரி.

Monday, April 5, 2010

அங்காடித் தெருவும்,சாருவும்

அங்காடித் தெரு - நான் என்ன சொல்ல.சொல்ல ஒன்றுமே இல்லையா என்றால் நிறையவே இருக்கிறது.கிட்டதட்ட இப்படியும் சொல்ல முடியாது.மாயாண்டி குடும்பத்தாரும் அங்காடித் தெருவும் ஒன்று தான்.இரண்டுமே செண்டிமெண்டல் பேத்தல்களால் நிரம்பியது.என்ன மாயாண்டி குடும்பத்தார் படத்தில் மிகை நடிப்பு இருந்தது.இதில் இல்லை அவ்வளவு தான்.ஐம்பதாயிரம் மொய் வைத்து விட்டு திரும்பி பார்க்காமல் நாயகன் நடந்து போகும் இடத்தில் மட்டும் தான் கொஞ்சம் கலங்கி விட்டேன்.இதுவும் அது போல தான்.ஒரே ஒரு காட்சியில் மட்டும் தான் கலங்கி விட்டேன்.அது எது என்றால் ரெயில்வே கிராஸிங் விபத்து காட்சியா,நாயகியிடம் அவளுடைய மேனேஜர் செய்த அத்துமீறலா,ரவுடிகளின் துரத்தல்களா,ஆரம்ப காட்சியின் விபத்தா,செல்வராணியின் தற்கொலையா,தாசியின் குள்ளமான குழந்தையின் காரணமா என்றால் இப்படி எதுவுமே இல்லை.

அந்த காட்சி - எங்க அப்பா இருந்தா நான் இப்படி இருந்திருப்பேனா என்று வெடித்து அழும் காட்சி மட்டும் தான் பாதித்தது.அதில் மட்டும் தான் என்னளவில் அழுத்தம் இருந்ததாக தெரிந்தது.வெயில் படத்தில் நிறைய இடங்களில் இருந்த அழுத்தம் இந்த படத்தில் இல்லை.அந்த படத்தின் தாக்கத்திலே இந்த படத்தை உலகத்தரம் என்று சொன்னால் ஒன்றும் செய்ய முடியாது.அந்த படத்தின் தாக்கத்தால் இதை நிராகரிப்பதாகவும் எடுக்க முடியாது.காரணம் படம் பேப்பர் கட்டிங் செய்திகளால் கோர்க்கப்பட்டிருந்தது.அதை தனித்தனி சிறுகதைகளாக,கிளைக் கதைகளாக பார்க்கும் வித்தியாசமான பார்வை எந்த காலத்திலும் எனக்கு வந்து விடவே கூடாது.

படம் முழுவதும் அவ்வளவு அபத்தம் கொட்டிக் கிடக்கிறது.அதுவும் ஆரம்ப காட்சியில் இருந்து தொடங்கி விட்டது.இட்டமொழி என்பது கிராமமா.என்ன கொடுமை வசந்த பாலன் இது.(சுஜாதா சொன்னது தான் நமக்கு தெரியாத ஊரை எல்லாம் கதைக்குள் கொண்டு வரக் கூடாது).அது என் பெரியப்பா காலத்திலேயே (சுமார் அறுபது வருடங்களுக்கு முன்) சுற்று வட்டாரத்திலேயே பெரிய பள்ளியை கொண்டிருந்தது.என் அம்மா,சித்தி எல்லாம் படிக்கும் போது சொல்லவே வேண்டாம்.நான் படிக்கும் போது அது ஒரு பேரூர்.இப்போது - வசந்த பாலன் பீல்ட் வோர்க் செய்யும் போது சரியாக செய்ய வேண்டும்.

அடுத்தது ஆளியில்லாத ரெயில்வே கிராஸிங் எங்கே இருக்கிறது அதுவும் இட்டமொழி பக்கத்தில் என்று யோசித்தே அந்த "அழுத்தமான" காட்சியை கடந்து வந்தேன்.மகனை அதாவது நாயகனை வேலைக்கு அனுப்ப வேண்டும் என்றால் கட்டட வேலை செய்யும் போது கீழே விழுந்து இறந்ததாக காட்டினால் முடிந்து விடுமே.அதற்கு ஏன் இத்தனை பேரை பலி கொடுக்க வேண்டும்.ஓ பேப்பர் துணுக்கல்லவா மறந்து விட்டேன்.

நடுநடுவே நீளத்தைக் கூட்ட கழிவறை கதை,பழைய துணியை வியாபாரம் செய்யும் கதை எல்லாம் தொய்வு தான் தருகிறது.எங்கே பையை வாங்கி கொண்டு ஓடி வரும் தங்கையின் பிண்ணனியில் ஒரு பஸ் ஹாரன் கேட்டது.இவளும் காலியா என்று ஒரு நிமிடம் பதறி விட்டேன்.நல்ல வேளை அவருக்கு எந்த பேப்பர் கட்டிங்கும் கிடைக்கவில்லை போல.

ஆக யதார்த்தம் என்று சொல்லி நம் சோகங்களை கொஞ்ச நேரம் மறக்க செய்வது போல் படம் எடுப்பது தினமும் டிவி செய்திகள் பார்த்தே நம் சோகங்களை மறக்க முயல்வது போல தான்.அப்படி செய்தால் அது கண நேர வெற்றி தான்.பத்து வருடங்கள் கடந்த பிறகும் தலையில் வைத்து கொண்டாடும் அளவிற்கு இருந்தால் தான் ஒரு யதார்த்தமான சினிமா என்று நினைத்தே வளர்ந்து விட்டேன்.இன்னும் ஆறு மாதம் கழித்து பாருங்கள்.உங்களுக்கு புரியும்.புரியவில்லையா ஆறு வருடங்கள் எடுத்து கொள்ளுங்கள்.

இன்னும் நிறைய விஷயத்தை பேசலாம்.வெற்றி பெற்றவன் என்ன பேசினாலும் இந்த உலகம் நம்புகிறது.அந்த நம்பிக்கைகளை நான் உடைக்க விரும்பவில்லை.ஆனால் ஒரே ஒரு பொய்யை சொல்லாமல் விட்டால் எனக்கு தூக்கமே வராது.பீல்ட் வோர்க் என்று வசந்த பாலன் சொல்லும் அளவிற்கெல்லாம் அவர் எதுவும் செய்யவில்லை என்று இட்டமொழி "கிராமத்தை" அவர் விட்ட மொழியில் தெரிந்து விட்டது.

நான் எதிர்வினை எழுத மாட்டேன் என்று சொன்னாலும் சொன்னேன்.வடைகளாக கொட்டித் தருகிறார்கள்.லேட்டஸ்ட் வடை சாரு.இஷ்கியா படத்திற்கு சாரு விமர்சனம் எழுதியுள்ளார்.அதற்கு எதிர்வினை வரும் என்று தெரியும்.அதுவும் தப்பாக தான் வருகிறது.இரண்டு காதலர்களாம் என்ன கொடுமை சாரு இது.இரண்டு பேரும் வித்யாபாலனை காதலிப்பார்கள்.வித்யாபாலன் அவர்களை உபயோகித்து கொண்டாலும் அர்ஷாத் வர்ஸியிடம் அவருக்கு ஒரு நெருக்கம் இருக்கும்.இருவருக்கும் உடல்ரீதியாக தொடர்பு ஏற்பட்டதும் ஒரு பாட்டு வரும்.அதில் தெரியும் வித்யாபாலனின் காதல்.கடைசியில் இரண்டு காதலர்களுடன் போவதாக சாரு சொல்லியுள்ளார்.அதுவும் தவறு.நஸ்ரூதீன் ஷாவிற்கும் வித்யா பாலனுக்கும் உள்ள இடைவெளியில் தெரியும் அவர் யாரை காதலிக்கிறார் என்று.அடுத்தது அந்த திருத்தம் குலால் படத்திற்கு இசை விஷால் பரத்வாஜா கலி முத்திடுச்சுடா சாமி.சாருவுக்கு அவரை வெளுக்க சந்தர்ப்பம் கிடைத்தது.ஆனால் சாரு  இரண்டையும் மிஸ் செய்து விட்டார்.சாரு நீங்க பழைய பார்மில் இல்லை.கொலைவெறியோடு விண்ணைத் தாண்டி வருவாயா படத்தையும் ஹிந்தி படப் பாடல்களையும் கோர்த்து சொன்னதை சொல்கிறேன்.நாமெல்லாம் டாக்ஸி டாக்ஸி பாடல்களை சிலாகிப்பவர்கள்.வி.தா.வ படத்தை சிலாகிக்காமல் விடுவோமா.நாம் என்ன தான் பாடல்கள் போட்டாலும் அவர்களை இசையில் மட்டும் அடிக்கவே முடியாது என்று தான் நினைக்கிறேன்.அதற்கு ரஹ்மானின் இந்தி பாடல்களே சாட்சி.யப்பா சாமி இது எதிர்வினை இல்லை.(சாறு சங்கர் புரிந்ததா..)

தெலுங்கு பட வன்முறையையும்,கவர்ச்சியையும் நம்மால் முந்த முடியுமா.அதுமாதிரி இந்தி படத்தின் இசையையும் நாம் தொடவே முடியாது.மற்ற எல்லா விஷயத்திலும் நாம் முந்துவோம்.(ஒளிப்பதிவு - நிறைய பேர் இங்குயுள்ளவர்களே அங்கு பணியாற்றுகிறார்கள்)

Saturday, April 3, 2010

பையா - அடங்கொய்யா



.






அதுக்கு இந்த படங்களே தேவையில்ல.அதனால் இதை பார்ப்பதோடு நிறுத்திக் கொள்ளலாம்.வேலை மெனக்கட்டு டைப் பண்ற அளவுக்கு இது வொர்த் இல்ல.நியாயமா தலைப்புல ரோஜா கூட்டம் படத்துல விவேக் சொன்ன வார்த்தையைப் போட்டு இருக்கணும்.

Thursday, April 1, 2010

லவ்,செக்ஸ்,தோக்கா - இந்தி பட விமர்சனம்

படம் பார்க்கும் போது நம்மை ஒரு மூன்றாவது கண் பார்த்து கொண்டேயிருக்கிறது என்றே எனக்கு தோன்றியது.படம் முழுவதும் ஹேண்டி கேம்மில் எடுத்திருப்பார்கள் போல.நல்ல முயற்சி.படம் படுதோல்வி.இன்னும் விலாவாரியாக போனால் ரங்கநாதன் தெருவுக்குள் எல்லாம் காலடி எடுத்து வைக்க வேண்டும்.அதனால் சின்னதாக.

மூன்று கதைகள்.தொடர்பேயில்லாமல் காட்டப்படுகிறது,முதலில் ஒரு சமூகம் சம்மதிக்காத காதல்.தமிழ்ப்படம் மாதிரி ஷாரூக்கானை வெளுத்து வாங்குகிறார்கள்.தாழ்ந்த ஜாதியை சேர்ந்த இயக்குனருக்கும்,உயர்ந்த ஜாதி நாயகிக்கும் காதல்.அப்பாவுக்கு தெரியாமல் காதலிக்கிறார்கள்.கட்டிப்பிடிக்கும் நாயகனின் கையை உடைத்து விடுகிறார்கள்.காதலிப்பவனை சும்மா விடுவார்களா.ஓடிப் போய் திருமணம் செய்கிறார்கள்.நரித்தனமாகப் பேசி வரவழைத்து இருவரையும் அடித்தே கொல்கிறார்கள்.உச்ச நீதிமன்றமே இதற்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியுள்ளது இன்னும் நாம் கற்காலத்திலேயே இருக்கிறோம் என்பதற்கு ஒரு சாட்சி.

அடுத்தது காமம்.பல்பொருள் அங்காடியில் வேலை பார்க்கும் ஒருவன் கூட வேலை பார்க்கும் பெண்ணை வசியப்படுத்தி அவளுடன் இருக்கும் பொழுது அதை வீடியோவாக எடுக்கிறான்.அதற்கு முதல் கட்டமாக அவள் நம்பிக்கையை அடைகிறான்.காதலிக்கிறான்.சண்டையிடுகிறான்.இதை பார்த்தாவது ஒரு நாலு பேர் திருந்தினால் சரி.

அடுத்த கதை துரோகம்.டிவி சேனலில் வேலை பார்க்கும் இருவர்,அவர்களிடம் கிடைக்கும் வீடியோ அதை வைத்து சம்பந்தப்பட்டவனை மிரட்டுகிறார்கள்.வீடியோ எப்படி எடுத்தார்கள்.அது என்ன துரோகம் என்றால் இதிலும் ஒரு பெண்.காஷ்மீர் அழகியின் நிஜ கதையை இதில் படமாக்கியிருக்கிறார்கள்.

எப்படி இந்த கதைகள் வந்து ஒரு புள்ளியில் இணைகிறது என்பது மட்டும் தான் பல்ப் பிக்சன் பாணியில் இருந்தது.செய்தி தாள்களில் வரும் செய்தியை வைத்தே தோரணம் கட்டியிருக்கிறார்கள்.தமிழில் இது ஒரு முயற்சி நடந்தது.அது பாலசந்தரின் ஒரு வீடு இரு வாசல்.அந்த படத்தை எடுத்தால் இன்று மூன்று மெகா சீரியல்கள் தேறும்.

இன்னும் இருக்கிறது.அவசர வேலை காரணமாக அவை ஒத்தி வைக்கப்படுகிறது.