Monday, December 28, 2009

துவையல் - காமெடி ஸ்பெஷல்

நான் ஒரே ஒரு நாள் அதுவும் ஞாயிறு மட்டும் தான் வரவில்லை.அதற்குள் பதிவுலகம் ரத்தப் பூமியில் மிதக்கிறது.இது எப்படி இருக்கிறது என்றால் நாடோடிகள் படத்தில் டீக்கடை ஆரம்பித்து ஐந்தே நிமிடத்தில் வாழ்விழந்த வாலிபர்களுக்கு வாழ்வளித்த அண்ணன் சின்னமணி அது தான் எனக்கு நினைவுக்கு வருகிறது.சின்ன மணி மாதிரி அந்த பதிவும் ஒரு உச்சக்கட்ட காமெடி பீஸ்.ரொம்ப முக்கியத்துவம் குடுத்தால் மனச்சோர்வு தான் மிச்சம். நானும் படிச்சி தொலைத்து விட்டேன்.அதனால் ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு மாதிரி சொல்லிட்டு கிளம்புறேன்."நற்குடிகள் என்றுமே தாங்கள் நற்குடிகள் என்று பிரகடனம் செய்வதில்லை..".நானும் உன்னைப் போல் ஒருவன் படத்திற்கு ஆதரவாக மூன்று விமர்சனம் போட்டேனே.இதை சொல்ல எனக்கு உரிமை இருக்கிறதா என்று தெரியவில்லையே.(காமெடி சொல்லிட்டு சீரியஸாக கும்மியடிக்கிறதே வேலையா..).இனி ஞாயிறு கூட வந்து யாரும் இல்லாத கடையில் டீ ஆத்த வேண்டும்.உரிமை இருக்கு நான் அந்த வசனத்தை குறிப்பிட்டு நல்லாயில்லை என்று சொன்னேன்.

"அதான் ரெண்டு இருக்கே.." இந்த வசனத்தில் எனக்கு ஒப்புதல் இல்லை..இது வசனம் எழுதியவருக்கு உங்களுக்கு மூன்று குழந்தைகள் இருக்கிறார்கள் ஒன்றை ஒருவன் கொன்று விடுகிறான் என்று வைத்து கொள்வோம்..அதான் மிச்சம் ரெண்டு இருக்கே என்று சந்தோஷமாக இருப்பீர்களா..

யூத் படத்தின் காமெடி பார்த்துக் கொண்டிருந்தேன்.விவேக் சொல்லிக் கொண்டிருந்தார்."எம் பேரு கருத்து கந்தசாமி..ஷார்ட்டா கே.கே என்று கூப்பிடுவார்கள்..".என்னை அறியாமல் சிரித்து விட்டேன்.காரணம் சாரு,ஞானி சண்டை.சுருக்கி கூப்பிட்டால் எப்படி கூப்பிட வேண்டும் என்று பெயர் சொல்லி சாருவை ஞானி அழைக்க,சாரு கோபத்தில் கொத்து புரோட்டா போட, சாரு ஞானியின் மனுஷ்யபுத்திரன் பற்றி சொன்ன கருத்துகளால் ஞானியை கிழித்து தோரணம் கட்ட ஞானி அதை பற்றி ஒன்றுமே சொல்லாமல் எல்லோரும் தெரிந்த விஷயங்களைத் தான் சொல்கிறார்.கருத்து கந்தசாமி ஞாபகம் தான் வந்தது.யாராவது நமக்கு அந்த பட்டப்பெயரை வைத்து விட்டால் என்ன செய்வது என்று பயந்து கிராமத்தில் இருக்கும் போது முந்திக் கொண்டு அந்த பெயரை மற்ற பையங்களுக்கு வைத்து விடுவோம்.அதை தான் ஞானியும் செய்து இருக்கிறார் என்று நினைக்கிறேன்.

நடிகை டெமிமூர் தன்னை விட பதினைந்து வயது குறைவான ஆஸ்டன் கட்சரை மூன்றாவதாக மணந்த போது ஞாபகம் வந்த காமெடி ஏபிசிடி படத்தில் வடிவேல் சொல்வார் - "உன்னை விட லீடிங்கில் இருக்கு.." ஆஸ்டன் கட்சருக்கு அது முதல் திருமணம்.

இன்னொரு காமெடி என் வாழ்க்கையிலே நடக்கும் என்று நானே எதிர்பார்க்கவில்லை.ராத்திரி ஒரு மணிக்கு தண்ணி வராமல் பைப்பைத் திறக்க கிட்டத்தட்ட உடைந்த நிலையில் போக்கிரி வடிவேலு மாதிரி நின்றுக் கொண்டு ஒரு வழியாக அடைத்து முடித்தேன்.

நேத்து தான் கொஞ்சம் ஒழுங்காக பந்து போட்டதாக ஞாபகம்.அதற்குள் பிட்ச் சரியில்லை என்று சொல்லி விட அடப்போங்கப்பா.தம்பி இன்னும் டீ வரல மாதிரி பீல் பண்ணி சொல்லாமல் ஜாலியாக நல்லா தூங்கினேன்.இதுவே அவர்கள் அடி வெளுத்திருந்தால் நம்ம ஆளுங்க சொல்லியிருப்பாங்க - வட போச்சே.

நா ஆட்டோகிராப் படம் பார்த்து விட்டு வெறுத்து விட்டேன்.ரவி தேஜா ஏன் இப்படி.அடுத்து தொடர்ந்து நாடோடிகள் தெலுங்கு ரீமேக்கான சம்போ சிவசம்போ பார்த்து விட்டு சுருண்டு படுத்து விட்டேன்."நல்லா தானே போய்கிட்டு இருந்தது.." கஞ்சா கருப்பாக சுனில் என்று நினைக்கிறேன். "இப்பவே கண்ணை கட்டுதே..".சமுத்திரகனியிடம் சொல்ல வேண்டும் - "நீங்க ஆணியே ..........................." ஆமா அதே தான்.

இதை படித்து விட்டு யாரும் வடிவேலு போல உனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும் அப்படி சொல்லி விட்டு கண்ணை குத்திக் கொள்ள வேண்டாம்.குத்த வேண்டும் என்றால் பதிவுல ஓட்டு குத்துங்க.(சொல்லாமலே மைனஸ் குத்தி விளையாடுவாங்க..இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே)

விட்டத்தை பார்த்து தூங்கினா எவ்வளவு சொகம்மா இருக்கு அதனால டிஸ்கி இல்ல.

4 comments:

Unknown said...

தல... என்ன விளையாண்டு இருக்காங்க... 1/6

லோகு said...

அடப்பாவமே காமெடி ஸ்பெஷலுக்கே 5 மைனஸா... நீங்க நெஜமாலுமே ரவுடிதான்.. எதுக்கும் பார்த்து சூதானமா இருங்க..

cheena (சீனா) said...

ஏம்பா தெரியாம மைனஸ் போடறாங்களோ - எதுலே குத்தறதுன்னு தெரியாம

நல்வாழ்த்துகல் அரவிந்த்

அமுதா கிருஷ்ணா said...

எப்பவும் அலார்ட்டா இருக்கணும் தம்பி...