Monday, December 7, 2009

துவையல் - நக்கல் ஸ்பெஷல்

அமீரின் அடியாள் சாட்டில் வந்து "நீங்களும் ஒரு கோமாளி.." என்று சொன்னார்.இப்படி தொடர்ந்து பட்டம் குடுத்தால் எந்த பட்டம் எல்லாம் இன்னும் வாங்காமல் மிச்சம் இருக்கிறது என்று தெரியாமல் போய் விடும்.அதனால் தெளிய வைத்து தெளிய வைத்து பட்டங்கள் கொடுத்து என்னை சந்தோசப் படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இன்னொரு நண்பர் வந்து - "உங்களப் போய் அடியாள் வரிசையில் சேர்த்துட்டாங்களே..ஹே..ஹா.ஹூ.." என்று நக்கல் செய்திருந்தார்.ஏன் நல்லா தானே போய்கிட்டு இருக்கு.அவரே ஆசைப்பட்டு ஜீப்பில் ஏற்றினாலும் நீங்கள் வம்படியாக இறக்கி விடுவீங்க போல தெரியுது.முதலில் இவர் யாருடைய அடியாள் என்று கண்டுப்பிடிக்க வேண்டும்.

என்னுடைய பெருமைக்குறிய அறிமுகம் - வெண்ணிற இரவுகள் கார்த்திக்.நான் அறிமுகம் செய்யும் முன்பே சொன்னேன்."நீ என்னை விட பெரிய ஆளாக வருவாய்..நான் செய்யாமல் போனாலும் உன்னை யாராவது அறிமுகம் செய்வார்கள்..".அது போலவே நர்சிம் அவனுக்கு ஒரு அங்கீகாரத்தைக் கொடுத்துள்ளார்.விரைவில் தலைவரின் தளத்தில் வரவும் வாழ்த்துகள்.

நக்கல் இனிமேல் தான் வருகிறது.ஆள் அடிப்பதில் என்னை மிஞ்சி விடுவான் போல் தெரிகிறது.நான் சாருவின் வாரிசா - இது அவருக்கு தெரிந்தால் அந்த சோகத்தில் ஒரு மாதம் எழுதுவதை நிறுத்தி விடுவார் என்று தோன்றுகிறது.அவன் பதிவுக்கு முன்னால் என் பதிவு அடிவாங்கி விட்டது.எனக்கு மூன்று மைனஸ் ஓட்டுப் போட்டு பரிந்துரையில் இருந்து இறக்கி விட்டார்கள்.அவனுக்கு இரண்டு மைனஸ் குத்தி பரிந்துரையில் ஏறவே விடவில்லை.இப்படி மைனஸ் போட்டு எங்கள் இருவரையும் (அடியாளாக,ரவுடியாக) வளர்த்து விடும் அன்பு நெஞ்சகளுக்கு நன்றிகள்.

நான் செல்ல முத்தம் கொடுத்தது பிடிக்காமல் இரண்டு பேர் விலகி விட்டார்கள்.வெளியில் இருந்து இந்த மைனாரிட்டி பதிவனுக்கு ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இரண்டு சிறுகதைகள் தமிலீஸில் பிரபலம் அடைந்ததும் இனி சிறுகதை எழுத முடிவு செய்துள்ளேன்.அதற்குள் தமிலீஸ் தளத்தில் வைரஸ் இருக்கிறது என்று சொல்கிறார்கள்.ஏன் இந்த கொலைவேறி.

யோகி உலக சினிமாவை பார்த்து அடித்தது இல்லை என்று நைனா சொன்னார்.அதில் தான் பாடல்களே இல்லையே பாடல்கள் எல்லாம் யோசித்து எடுத்து இருக்கிறார்கள் என்று சொன்னார்.அப்ப பாட்டு இருந்தால் அது உள்ளூர் சினிமா.இவருக்கு யாராவது இனிமா கொடுங்கள்.அப்படி தமிழில் பேயோட்டம் ஒடிய படங்களில் இருந்து பாடல்களை மட்டும் வெட்டி எடுத்து விட்டால் அது உலக சினிமா ஆகி விடுமா.

நண்பரிடம் பேசிக் கொண்டிருந்த போது கேட்டேன்.ஏன் பாடல்கள் மட்டும் வெளி நாடுகளில் எடுக்கிறார்கள்.காதைக் குடு சொல்கிறேன் என்றார்.மறுத்தவுடன் சத்தமாக "தம்பி அதே பாடலை அண்ணா சாலையில் எடுத்தால் டிராபிக் ஜாம் ஆகும்.நீங்க உடனே பதிவெழுதி கண்டனம் தெரிவிப்பீர்கள்..அதனால் தான் அயல் நாடு..சரி எதுக்கு நீ காதை கொடுக்கவில்லை.." என்று நக்கலாக சிரித்தார்.கொட நாடு இங்கு பாடல்கள் எடுக்க முடியுமா என்று கேட்க ஆசை.முந்தைய கேள்வியில் பல்ப் வாங்கியதால் அமைதியாகி விட்டேன்.

இவரை மாதிரி எழுத முடியவில்லையே என்று பொறாமை அடையும் ஒரே நபர் - லூசுப்பையன் தான்.(அந்த லூசுப்பையன் இல்லை.இவர் ஆனந்த விகடன் லூசுப்பையன்).மானசீக குரு.விஜய்யின் அரசியல் பிரவேசம் பற்றி அவர் அடித்த கமென்ட் அஜித்திடம் அவரின் நண்பர்கள் சொல்கிறார்கள் - "கோழியே மசாலா பூசிக் கொண்டு எண்ணெய் சட்டியில் குதிக்கப் போகுது..".படம் மசாலா தடவிய கோழி.தலை மட்டும் விஜய்.அஜித்தின் ரேஸ் கார் ஆசையைப் போல விஜய்யின் அரசியல் ஆசையும் இருக்கும் என உள்ளுக்குள் அரசியல் ஆசான் இளிக்கிறார்.இதைப் படித்து விட்டு அவரின் ரசிகனாக மாறி விட்டேன்.இந்த பதிவும் லூசுப்பையனுக்கு சமர்ப்பணம்.

முன்னாடி எல்லாம் உன் லட்சியம் என்னவென்று கேட்டால் உடனே சொல்வேன் - "இவரைப் பார்த்து தான் எழுத வந்தேன்..இந்தப் பதிவைப் படித்து விட்டு கண்கலங்கினேன் என்று யாராவது சொல்ல வேண்டும்..".அது நிறைவேறுமா என்று தெரியவில்லை.அதனால் ஆசையை மாற்றிக் கொண்டேன்.அடுத்தக் கட்ட ஆசை - "அடியாள் சேர்ப்பது.."

டிஸ்கி :

நான் பதிவெழுத தொடங்கிய காலத்தில் மொக்கை பதிவின் சுட்டி எல்லாம் பார்ப்பவர்களிடம் கொடுத்து படிக்கச் சொல்லி துன்புறுத்துவேன்.எனக்கு தமிழ்மணம்,தமிலீஸ்,ப்ளாக் எதுவுமே வேலை செய்யவில்லை.புதிதாக எழுதும் பதிவர்கள் எனக்கு சுட்டி அனுப்பினால் நானும் படித்துக் கொள்வேன்.என் ரீடரில் இணைத்து கொள்வேன்.இதற்கும் அதிகப்பிரசங்கி,திமிர் பிடித்தவன் என்ற பட்டங்கள் வேண்டாம்.

"சாமி கிட்ட தான் அடங்கி போவேன்..சாக்கடை கிட்ட இல்ல.." - இது எங்கள் தலைவரின் பஞ்சர் டயலாக்.அவ்வ்வ்வ்வ்.

11 comments:

அகல்விளக்கு said...

பஞ்ச் டயலாக் சூப்பர் தல.........

Unknown said...

// நான் பதிவெழுத தொடங்கிய காலத்தில் மொக்கை பதிவின் சுட்டி எல்லாம் பார்ப்பவர்களிடம் கொடுத்து படிக்கச் சொல்லி
துன்புறுத்துவேன்.//

நானும் அதான் பண்ணினேன்..,

Raju said...

\\"சாமி கிட்ட தான் அடங்கி போவேன்..சாக்கடை கிட்ட இல்ல.."\\

தப்பாத் தெரியுதே..!
முதல் வார்த்தைல ரெண்டாவது எழுத்து மாறியிருக்கனுமோ..!

Thamira said...

பல வரிகளில் சிரிக்காமல் இருக்கமுடியவில்லை. தொடரட்டும் அடியாள் சேவை.. ஹிஹி.

யுவகிருஷ்ணா said...

//முன்னாடி எல்லாம் உன் லட்சியம் என்னவென்று கேட்டால் உடனே சொல்வேன் - "இவரைப் பார்த்து தான் எழுத வந்தேன்..இந்தப் பதிவைப் படித்து விட்டு கண்கலங்கினேன் என்று யாராவது சொல்ல வேண்டும்..".அது நிறைவேறுமா என்று தெரியவில்லை.அதனால் ஆசையை மாற்றிக் கொண்டேன்.அடுத்தக் கட்ட ஆசை - "அடியாள் சேர்ப்பது.."//

டக்கர் வாத்தியாரே :-)

யுவகிருஷ்ணா said...
This comment has been removed by the author.
ரோஸ்விக் said...

உங்க எழுத்து எப்போதுமே நக்கல் கலந்ததாத் தான் இருக்கும். அப்புறம் என்ன இது நக்கல் ஸ்பெஷல்? :-)

பலமுறை உங்கள் தளம் வந்து செல்வேன் ஒரு வாசகனாக மட்டும். சில இடுகைகளுக்கு மட்டுமே ஒட்டு அளித்துள்ளேன். அவை என்னை மிக மிக கவர்ந்தது.

//"சாமி கிட்ட தான் அடங்கி போவேன்..சாக்கடை கிட்ட இல்ல.."//

மிக அருமை.

எங்க மொக்கை - http://thisaikaati.blogspot.com

dondu(#11168674346665545885) said...

துவையல் நக்கல் நல்ல பொருத்தம். ஆம், துவையலை நக்கித்தான் உண்ண வேண்டும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Cable சங்கர் said...

thuvaiyal nalla taste

மேவி... said...

nalla velai naan adiyal business la illai... athukku yellam yesdaa oda PRO irukkaru

ஆ.ஞானசேகரன் said...

//"சாமி கிட்ட தான் அடங்கி போவேன்..சாக்கடை கிட்ட இல்ல.." -///

சூப்பரூஊஊஊ