Monday, December 14, 2009

துவையல் - நையாண்டி ஸ்பெஷல்

சாருவுக்கு இசைப் பற்றி எழுத தான் தெரியும் என்று கொத்துப் புரோட்டாவில் அண்ணன் கேபிள் சங்கர் கொத்தி எடுக்கிறார்.ஆனால் அவன் பதிவுகளை ஒரு இணையத் தளத்தில் காமெடி போஸ்ட் என்று போட்டுக் காமெடி செய்து இருக்கிறார்கள்.ஒரு வேளை அசைவ ஜோக் போடுவதால் இருக்குமோ. கவிதை என்றால் மெதுவாகத் தான் படிக்க வேண்டும் என்று கார்த்திக் கேபிள் அண்ணனுக்கு சொல்லித் தருகிறான்.எண்டர் தட்டி எழுதினால் அது கவிதையாகுமா என்று கேட்டபவர்களுக்கு மத்தியில் எண்டர் கவிதை எழுதியவர் அண்ணன் என்று தெரியாமல் இப்படி எழுதி விட்டாயே கார்த்தி.அலெக்ஸாவில் சாரு,ஜெயமோகனை எல்லாம் முந்தி இருக்கிறார்.அலெக்ஸா ரேங்கில் முதல் ஐம்பதாயிரம் இடத்துக்குள் வர அண்ணன் கவிதை எழுதுவதாக ஒரு வதந்தி.அந்த இணையத்தளத்தில் சாருவுக்கு கூட இடமில்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.அவரு கிட்ட போய் கவிதையை இப்படி படிங்க அப்படி படிங்க அப்படி சொல்லிக்கிட்டு என்ன சின்னப்புள்ளத் தனமா இருக்கு.

பாதி ஆட்டத்தில் எழுந்து உன் கூட எல்லாம் சேர்ந்தா வீட்ல திட்டுவாங்க,என் தங்கச்சி கோவிச்சுக்கும் இப்படி சொன்னா எப்படி - அதனால என்னைப் பற்றி என்று இருப்பதில் பெருங்கோவம் கொண்டவன் அதை எடுத்து விடவும்,பேரன்பு கொண்டவன் அது தான் பொருத்தமா இருக்கும். அரசியல் எழுதக் கூடாதுன்னு சொன்னதுல இருந்து ரஜினி பா படம் மாதிரி நடிக்கணும் கோரிக்கை எல்லாம் பலமா இருக்கு.ஆனா பிடிச்ச படம் என்று பாட்ஷா படம் இருக்கு. ரஜினி வள்ளி என்று ஒரு படம் எடுத்தார்.ஏன் குறிப்பிடவில்லை.பொக்கிஷம் நல்ல படமா.ஏன் இந்த கொலைவெறி.நீ எழுதும் அரசியல் பதிவு நல்லாயிருக்கு மக்கா.பேசாம அப்படியே எழுது.அப்புறம் வாழ்த்துக்கள்.நான் சொன்னது பலிச்சிருச்சி இல்ல.

இப்பவும் எப்பவும் சேரனின் வாழ்க்கை வரலாறு தான் எனக்கு பிடித்தது என்று சொல்வேன்.மாயக்கண்ணாடி பாக்க ஏழு நாள் எடுத்துக் கொண்டேன். பொக்கிஷம் பார்க்க முடியாமல் ஓடி வந்து விட்டேன்.அதைப் பாத்து முடிக்க எத்தனை வருஷம் ஆகுமோ தெரியல.

இனிமே விஜய் பத்தி எழுதவே கூடாது என்று அஜித் ரசிகர் சொல்லி விட்டார்.நானும் அரை மனதுடன் சம்மதித்து விட்டேன்.இனி வராது.கடைசியாக இது.நைனாவிடம் வேட்டைக்காரன் பாட்ஷா படம் மாதிரி இருக்கு என்று சொன்னேன்.உனக்கு ஏன்யா இந்த கொலைவெறி என்று போனை வைத்து விட்டார்.தப்புத்தான் தப்புத்தான் இனிமே சொல்ல மாட்டேன்.

தமிழ்மணம் விருதுகளுக்காக இரண்டு பதிவுகள் தேர்வு செய்ய சொன்னார்கள்.எனக்கு எதை தேர்வு செய்ய என்று தெரியவில்லை.பின்ன கொஞ்ச நஞ்சமா எழுதி படிக்க வைச்ச அப்படி நீங்க சண்டைக்கு வர்றது தெரியுது.

நோ சொல்லியிருக்கார்.ப்ளாக் எழுதுறதை வைச்சே ஆள் எப்படி என்று சொல்லி விடுவேன் என்று அதுக்கு தான் அன்னிக்கு வந்து என் வலைப்பூவில் மேய்ங்க என்று அழைப்பு விடுத்தேன்.வரவில்லையே.ஏன் எனக்கு மட்டும் இப்படி எல்லாம் நடக்குது.கென் அடிச்ச அடியில அண்ணனை ரொம்ப நாளா காணோம்.

ரீத்திஷ் எம்.பி சொன்னது தான் எனக்கு பிடிச்சியிருக்கு.சீட் கொடுக்கும் போது உன் தொகுதிக்கு செலவு செய்வாயா என்று கேட்டவுடன் ரீத்திஷ் சொன்னாராம் - "பக்கத்து தொகுதிக்கும் சேர்த்து செலவளிப்பேன்..".அது நட்சத்திர தொகுதி.விரைவில் தல நடிக்கும் படத்தை சன் பிக்சர்ஸ் வாங்கி வெளியிடும் காலம் வெகு தூரத்தில் இல்லை.கூப்பிடு தூரத்தில் தான் உள்ளது.(கூப்பாடு என்று படித்தால் அவருக்கு கானல் நீர் படம் அனுப்பப்படும்.)

நமீதா கனவில் வர மாட்டார் என்று சொன்னாலும் சொன்னேன்.குஜராத் மோடி மஸ்தான் என் பதிவு பக்கம் வருவதில்லை.வந்தாலும் பின்னூட்டம் போடுவதில்லை.எனக்கு என்னமோ இவர் குஜராத்தில் இருப்பது போல் தெரியவில்லை.அலெக்ஸாவில் பார்த்தால் டான்சானியா என்று காட்டுகிறது.

டிஸ்கி :

உரையாடல் போட்டி கவிதைகளுக்கு நைனா எதிர்கவிதை போட மாட்டாராம்.என்னுடைய கவிதை தப்பி விட்டது.இனிமே தான் கவிதையே எழுத மாட்டேனே.உரையாடல் போட்டுக்கு மட்டும் தான் எழுதுவேன். அப்ப என்ன பண்ணுவார்.

கவிதைப்போட்டி,கதை எழுதும் போட்டி எங்க நடந்தாலும் நான் கலந்துக்குவேன்.ஆறுதல் பரிசாவது கிடைக்கும் வரை கொலைவெறி தொடரும்.

7 comments:

Cable சங்கர் said...

இன்னைக்கு துவைக்க நான் தான் கிடைச்சேனா.. நலலாருங்கப்பா..

சங்கர் said...

துவையல் அரைக்க சொன்னா, துவைச்சு எடுத்திருக்கீங்க

Ganesan said...

சாரு நிவேதிதாவின் 10 நூல்களின் வெளியீட்டின் தொகுப்பும் , புகைப்படங்களூம்

http://kaveriganesh.blogspot.com/2009/12/10.html

துபாய் ராஜா said...

துவையல் - புலம்பல் ஸ்பெசல்...??!!

வெண்ணிற இரவுகள்....! said...

நண்பா கிழிச்சு தொங்க விட்டுட்டா

Unknown said...

வேட்டைக்காரன் வரட்டும் வெயிட் பண்ணுங்க..,

அத்திரி said...

சாரு, விஜய் ,கேபிள்,நைனா இவங்கயெல்லாம் இல்லாம உன்னால் பதிவே எழுத முடியாதா?