Saturday, December 19, 2009

விஜய்,சன் பிக்சர்ஸ் - இவர்களில் யார் அடுத்த ராமராஜன்

ராமராஜன் படமே இல்லாத நிலையில் அவருடைய பேட்டி குமுதத்தில் வந்தது.அதில் அவர் சொன்ன ஒரு வாசகம் எனக்கு ரொம்ப பிடித்தது."நான் தொடர்ந்து இருபத்தியாறு படம் ஹிட் கொடுத்தவன்.இதை யாராலும் முறியடிக்க முடியாது..". இதை படித்தப் பிறகு உருண்டு புரண்டு சிரித்தேன். கூடிய விரைவில் ராமராஜனின் நிலை விஜய்க்கு வரும் நாள் வெகு தொலைவில் இல்லை. விஜய்யும் பிரசாந்த்,ராமராஜன் போல ஒரு காமெடி பீஸ் ஆகாமல் இருக்க இந்த ஸ்டிரியோ டைப் படங்களைத் தவிர்ப்பது நல்லது.

ஆனால் விஜய் ராமராஜன் ஆக விட மாட்டோம்.ராமராஜனின் கதி எங்களுக்கு தான் நேர வேண்டும் என்று சன் பிக்சர்ஸ் அடம் பிடிக்கிறது.விதி வலியது. வேட்டைக்காரன் இப்படி கேவலமாக இருப்பது தெரிந்தும் சுறாவுக்கு வலை வீசி இருக்கிறார்கள்.

விலை தான் ரொம்ப ஜாஸ்தி.காஸ்ட்லி சுறா.நாங்க எல்லாம் காஸ்ட் கட்டிங்கில் பிழைப்பு நடத்தும் பார்ட்டிகள்.ராமராஜனாவது தொடர் ஹிட் குடுத்து சாப்பிட வழியில்லாமல் இருக்கிறார்.இவங்க எல்லாம் தொடர் மொக்கைகள் குடுத்து என்னை சாப்பிட விடாமல் செய்து விடுவார்கள் போல. ஒவராக மொக்கை படங்கள் வெளியிடாதீங்க.அப்புறம் எந்திரன் கதி அதோ கதி தான்.அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமே நஞ்சு இப்படி மிதமிஞ்சிய விஷத்தைக் குடுக்குறீங்களே. எந்திரன் ஆலாகாலம் விஷமாகி விடும்.

குருவி செத்துப் போச்சு.வில்லு நெளிஞ்சு போச்சு.அப்ப வேட்டைக்காரன் என்ன பண்ணப் போறான் என்று நேற்று நண்பன் சொன்னான். கோட்டிக்காரன் ஆக்கிப் புடுவான் அப்படி சொன்னேன். அதே மாதிரி ஆகிப் போச்சே மக்கா.

இனிமே எப்ப விஜய் படம் பாப்பேன்னா சாரு ஆன்லைன்ல என்னைக்கு விமர்சனம் வருதோ அன்னைக்கு தான் நானும் படம் பாப்பேன்.

ராமராஜன் செய்த தப்பு - எப்ப பாத்தாலும் பாட்டுப் பாடுறது.மாட்டைக் கூட பாட்டாலே அடக்குறது.தெம்மாங்கு பாட்டுக்காரன்,வில்லுப் பாட்டுக்காரன்,கரகாட்டக்காரன்,எங்க ஊரு காவல்காரன் இப்படி நடிச்சே காணாம போயாச்சு.

விஜய் படத்திலையும் அது தான் நடக்குது எதாவது ஊர்ல இருந்து கிளம்ப வேண்டியது - இன்னோரு ஊருக்கு போய் ஆ (இல்ல நீங்க நினைக்கிற மாதிரி இல்ல.) ஆள் அடிக்கிறது.இதை அருண் விஜய் வரை எல்லோரும் பண்ணிட்டாங்க.அதனால் ரூட்டை மாத்துங்க.இல்ல சுறா இறாவாகிரும்.

ராமராஜனாவது எம்.பி ஆனாரு.இப்படியே நடிச்சா அப்புறம் எம்பி கூட குதிக்க முடியாது. சன் பிக்சர்ஸ் வெளியிட்ட தெனாவட்டு படத்துக்கும் வேட்டைக்காரன் படத்துக்கும் அதிகம் வித்தியாசம் இல்லை. ராமராஜனுக்கு டவுசர் என்றால் விஜய்க்கு முக்கா பேன்ட். இந்த படம் நல்லா இருக்குன்னு விஜய் ரசிகர்கள் சொன்னால் அவர் இந்த மாதிரி தொடர்ந்து மொக்கை படம் கொடுத்து இன்னும் கொல்வார்.

டிஸ்கி :

பேசாமல் காதலுக்கு மரியாதை படத்தை ரீமேக் பண்ணுங்க.

சன் டிவிக்கு - பசங்க,ஈரம் அது மாதிரி படங்களை வாங்குங்க.இந்த ஈர வெங்காயத்தை எல்லாம் எடுத்து எங்களுக்கு உள்காயம் உண்டாக்காதீங்க.

28 comments:

உண்மைத்தமிழன் said...

[[["நான் தொடர்ந்து இருபத்தியாறு படம் ஹிட் கொடுத்தவன்.இதை யாராலும் முறியடிக்க முடியாது.."]]]

அவர் சொன்னது உண்மைதானே அரவிந்த்..

நான் பார்த்த எந்த ராமராஜன் திரைப்படமும் தலைவலியையும், திருகுவலியையும் தராதவை..

விஜய் படங்களுக்கு ராமராஜனின் திரைப்படங்கள் எவ்வளவோ மேல்..!

இதில் சிரிப்பதற்கு ஏதுமில்லை.

அகல்விளக்கு said...

//உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[["நான் தொடர்ந்து இருபத்தியாறு படம் ஹிட் கொடுத்தவன்.இதை யாராலும் முறியடிக்க முடியாது.."]]]

அவர் சொன்னது உண்மைதானே அரவிந்த்..

நான் பார்த்த எந்த ராமராஜன் திரைப்படமும் தலைவலியையும், திருகுவலியையும் தராதவை..

விஜய் படங்களுக்கு ராமராஜனின் திரைப்படங்கள் எவ்வளவோ மேல்..!

இதில் சிரிப்பதற்கு ஏதுமில்லை.
//

அதானே....

ஏன் தல இதுக்கெல்லாம் சிரிக்கிறீங்க...

மேவி... said...

raittu

sema kalakkal ....

matravai chat la solluren

மேவி... said...

pesamaaa poi avartar parunga....imax la

Prathap Kumar S. said...

சரியாச் சொன்னீங்க... மாஸ் ஹீரோ, மசாலா ஹீரோ அப்படிங்கிறதெல்லாம் சும்மா உதாரு.

ஆனானப்பட்ட மசாலா மன்னர் சூப்பர் ஸ்டாரே ஆறுலிருந்து அறுபது வரை அன்புள்ள ரஜீனிகாந்த் போன்ற நல்ல கதையம்ச கொண்ட படங்களை தந்திருக்கிறார்.

25 வருஷமா சூப்பர் ஸ்டாரும், கமல்ஹாசனும் தராத மசாலா படங்களையா விஜய் தந்துடப்போறாரு... இவருக்கு ராமராஜனே பெட்டர்.

நாடோடி இலக்கியன் said...

//விஜய் படங்களுக்கு ராமராஜனின் திரைப்படங்கள் எவ்வளவோ மேல்..!

இதில் சிரிப்பதற்கு ஏதுமில்லை.//

வழிமொழிகிறேன்.

SIV said...

ராமராஜன் சம்பாதித்த பணத்தை சரியாக திட்டமிடாமல் இன்று மிகவும் கஷ்டப்படுகிறார். ஆனால் விஜய் வெவரமானவருங்னா...படம் ஓடலைனாலும் ராமராஜன் மாதிரி வரமாட்டார்.

அப்புறம் கிட்டதட்ட அனைத்து ராமராஜன் படங்களிலும் கவுண்டர் காமெடி மற்றும் இளையராஜா இசை நல்ல படம் பார்த்த திருப்தியை கொடுத்துவிடும்

ramalingam said...

இன்றைக்கு ராமராஜன் சும்மா இருக்கிறார் என்பதற்காக விஜய், ராமராஜனைவிட பெட்டர் அல்ல.

அகல்விளக்கு said...

ramalingam said...

இன்றைக்கு ராமராஜன் சும்மா இருக்கிறார் என்பதற்காக விஜய், ராமராஜனைவிட பெட்டர் அல்ல.

ரிப்பீட்டுகிறேன்.....

ராஷா said...

Iya ramarajan yentha punj dialago, forighn la poyi shoot panniyo, pala kodikku padam adutho hit pannala erunthalum padam pakkura mathiri erukkum, vijayoda sethu ramarajana kevala paduthatheenga bass...

துபாய் ராஜா said...

பதிவின் முதல் வரியைப் படித்து உனது படிப்பார்வமும், நியாபக சக்தியும் கண்டு வியந்தேன். தொடர்ந்து படித்தபின் சரியான அரைவேக்காட்டு பதிவு என உணர்ந்தேன்.

ராமராஜன் அவருக்கேற்ற மாதிரி கிராமத்து கேரக்டர்களையே அதிகம் தேர்ந்தெடுத்து நடித்தார். இயல்பான, உறுத்தாத,ஓவர் பில்டப் இல்லாத நடிப்பும் கொண்டவர்.

மாடு மேய்ப்பவர் கேரக்டரில்தான் அவர் மாட்டை பாட்டு பாடி மயக்குவார். அந்த பாடலுக்கு முன் கூட அந்த மாட்டின் பெயர்,மற்ற விவரங்களை கேட்டு தெரிந்து கொண்ட பின்தான் களத்தில் இறங்குவார்.இதில் எந்த லாஜிக் மீறலும் இல்லை.எந்த படத்திலாவது அவர் கையால் தூணை உடைப்பது, காலால் தண்ணீர் நிறைந்த பெரிய சின்டெக்ஸ் தள்ளுவது போன்ற நம்பமுடியாத சேட்டைகள் செய்துள்ளாரா....

ஊரில் மாடு மேய்ப்பவர்கள் கோட்டு, சூட்டா போட்டிருப்பார்கள் தம்பி. மாடு யார் வயலிலாவது ஏமாற்றி இறங்கி விடாமலிருக்க ஓடி துரத்தும்போது வேட்டி,லுங்கி போன்றவை இடைஞ்சலாக இருக்கும் என்பதால் ஓட எளிதான டவசர்தான் மட்டும்தான் அணிந்திருப்பார்கள். எந்த ஹீரோவும் அணியாத டவுசர் கூட அந்த கேரக்டருக்காகத்தான் அணிந்து நடித்தார். கிராமத்தில் இருந்து வந்த உனக்கு இது தெரியாதது ஆச்சரியமே.

பாடல்காட்சிகளில் முக்கா பேண்ட் போடாமல் அழகாக தமிழனின் பாரம்பரிய உடையான வேட்டி அணிந்து நடித்திருப்பார்.

அவர் எம்.பி ஆனது கூட திரையுலக வீழ்ச்சிக்கு பின் தான். உச்சத்தில் இருக்கும் போது அல்ல. அவருக்கென தமிழ் மக்கள் மனதில் தனி இடம் இருப்பதை அண்ணன் உண்மைத்தமிழன் முதல் மற்ற நண்பர்கள் பின்னூட்டம் அனைத்தும் படித்தாலே புரியுமே தம்பி.

இனியாவது பதிவிடும்முன் பலமுறை படித்து பார்த்து பதிவிடு தம்பி.

உங்கள் குருவைப்போல பரபரப்பிற்காக மற்றவரை மிகவும் மட்டமாக விமர்சனம் செய்து எழுதுவதை முதலில் நிறுத்து தம்பி.அடக்கம் அமரருள் உய்க்கும். அடங்காமை அபரித வளர்ச்சியை தடுத்துவிடும்.

பல நாட்களுக்கு பின் நீண்ட பின்னூட்டம் எழுத செய்துவிட்டாய்.

லோகு said...

ராஜா அவர்களின் கருத்தை அப்படியே வழி மொழிகிறேன்..
*********
:((((((((((((((((
நீங்கள் சிறந்த எழுத்து திறமையும், தினமும் பதிவிடும் அளவுக்கு கால அவகாசமும் கொண்டிருக்கிறீர்கள். அதை பயன்படுத்தி எழுத்தின் தரத்தை அடுத்த நிலைக்கு எடுத்து செல்லலாம். மொக்கையும், விஜய் அவர்களை கலாய்த்தலும் ஓர் அளவுக்கு தான் ரசிக்க முடியும்.. அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் ஆலகால விஷம் என்பது உங்களுக்கும் பொருந்துமே...

************
மைனசிலையும் குத்தலை, பிளசிலும் குத்தலை... ஓட்டு போடறதை புறக்கணிக்கிறேன்..

Unknown said...

தல.., எதிர் பின்னூட்டமா இருக்கு ஆன மைனஸ் ஓட்டு இல்லையே...,

chandru / RVC said...

எளிய கிராம மக்களின் கலையான கரகாட்டமும், வில்லுப்பாட்டும், தெம்மாங்கும் இளையராஜா-கங்கை அமரன் - ராமராஜன் கூட்டணியில் தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் மக்கள் மனதில் மீள்பதிவு செய்யப்பட்டது. அவரளவில் அந்த பாத்திரங்கள் என்ன செய்யுமோ, எந்த மாதிரியான உடை,இதர அமைப்புகள் தேவையோ அதையே செய்தார். இன்றும் கூட ராமராஜனின் திரைப்படங்கள் தொ.காட்சியில் பார்த்தால் சேனல் மாற்றாமல் தொடர்பவர் அநேகம்.

‘கரகாட்டக்காரனில் அதிர்ந்த இசை தமிழ்மக்களின் தொன்மங்களை மீட்டெடுக்கும் மரபான இசை’ என அகநாழிகையில் அஜயன்பாலா சித்தார்த் குறிப்பிட்டுருந்தார். ராமராஜனின் இடம் இன்று வரை எந்த ஒரு நாயகனாலும் நிரப்பப்படவில்லை என்பதே உண்மை. காலத்தின் முன் தோற்று நிற்கும் ஒரு கலைஞனைக் கேவலப்படுத்துவது நியாயமில்லாத செயல். ‘ஒரு ஸ்டாம்புக்குப் பின்னாடி கதைய எழுதிரலாம். ஆனா அந்த வரிக்கு இவர் திரைக்கதை எழுதுனா படம் 100 டேஸ். இந்தியாவின் சிறந்த திரைக்கதை ஆசிரியர்கள்ல ஒருவர். ஆனா சமீபத்துல் வேட்டிய சரியா மடிச்சுக்கட்டாம விட்டதுல விழுந்துட்டாரு” என்று ஒரு விருது வழங்கும் விழாவில் திரு.பாக்யராஜை மேடைக்கு அழைக்கையில் அறிமுகம் செய்கிறேன் பேர்வழி என்கிற பெயரில் மேற்கண்டவாறு கேவலப்படுத்தி சராமாரியாய் வாங்கிக்கட்டிகொண்ட திரு.விவேக்- ன் கதை ஞாபகத்துக்கு வருகிறது.

Starjan (ஸ்டார்ஜன்) said...

ஐயோ பாவம்

Ashok D said...

நானும் உ.த. அண்ணனுக்கு ரிபிட்டு போட்டுக்குனு அப்பீட்டு ஆகறேன்

Tech Shankar said...

ஆனால் ராமராஜன் படத்தில் காமெடி நல்ல இருக்கும். நாம் சிரிக்கலாம்.

//
நான் பார்த்த எந்த ராமராஜன் திரைப்படமும் தலைவலியையும், திருகுவலியையும் தராதவை..

விஜய் படங்களுக்கு ராமராஜனின் திரைப்படங்கள் எவ்வளவோ மேல்..!

இதில் சிரிப்பதற்கு ஏதுமில்லை.

Unknown said...

ராமராசன் ஒரு டைரக்டர்,நடிகர்,கதையாசிரியர்
அவர் வெற்றி யதார்த்தம்தான்
கிராமம்,அதன் பலம் தெரிந்து கதை நகரும்
ஒரு கனவு, ஒரு சண்டை,இப்படி

Unknown said...

"விஜய்: நா அடிச்சா தாங்கமாட்ட, நாலு மாசம் தூங்கமாட்ட....
ஒரு குரல்: டேய், நீ அடிச்சாக்கூட பரவால்லடா! நீ நடிச்சாத்தாண்டா தாங்கவும் முடியல, தூங்கவும் முடியல..!".

அரைத்த மாவையே திரும்ப அரைக்கும் வேட்டைக்காரன் அட்டர் பிளாப்பு.

வில்லு,குருவி லிஸ்டுல வேட்டைக்காரன்.


விஜய் மாறவில்லை. மாறவும் போவதில்லை.
படமும் ஓட போவதில்லை.

டப்பா படம்.குப்பை படம்

IKrishs said...

ராமராஜன் படங்களில் காமெடியும் பாடல்களும் நன்றாகவே இருக்கும்.அப்போது திரை உலகம் இருந்த சூழலுக்கு ஏற்ற படங்களில் இயல்பாக தான் அவர் நடித்தார். "கட்சி" பாதிப்போடு வந்த படங்கள் தான் கொஞ்சம் கடி.மற்றபடி கௌண்டமணி வீட்டில் சாப்பாட்டில் புகுந்து விளையாடும் காமெடி க்கு நீங்கள் சிரித்தது கிடையாதா?

Prosaic said...

இது போன்ற த்ராபையான ஆராய்ச்சிப்பதிவுகளுக்கு ஏகன், ஆழ்வார், ஆஞ்சநேயா, திருப்பதி, கிரீடம், பரமசிவன், ஜி, அட்டகாசம், ராஜா, ரெட், ஜனா போன்ற தலைவலி திருகுவலி படங்களே மேல்!!

Anonymous said...

எழுத்தில் காரம் அதிகமாக இருக்கிறது. குறைத்திருக்கலாம்.

அத்திரி said...

நடத்து ராசா

Lakshmikanthan said...

துபாய் ராஜாவின் கருத்தை ஆமோதிக்கிறேன்.சுற்றி இருந்த ஜால்ராக்களால் அண்ணே அடுத்த சி.எம் நீங்கதான் என்று ஏற்றிவிடப்பட்டதுதான் ராமராஜனின் வீழ்ச்சிக்கு காரணம்.இதற்காக ராமராஜனின் எல்லா படங்களுமே சிறந்தவை என்று கூற மாட்டேன்.ஆனால் மக்கள் விரும்பும் பல அம்சங்களை கொண்டவை ராமராஜனின் படங்கள் என்பதை மறுக்க முடியாது.ஒரு கோடிக்கும் குறைவான செலவில் தயாரான கரகாட்டக்காரன்,எ.ஊ.பாட்டுக்காரன் போன்ற படங்கள் வருடக்கணக்கில் ஓடியதால் பலனடைந்தவர்கள் ஏராளம்.ஆனால் இன்று பல கோடிகளை நடிகர்களுக்கு கொடுத்து 10 20 கோடி பட்ஜெட்டில் தயாராகும் படங்களை ஹீரோக்கள் தங்கள் இமேஜை தக்க வைத்து கொள்வதற்காக தியேட்டர்காரர்களிடம் விநியோகஸ்தர்களிடம் அடுத்த படம் உங்களுக்குதான என்று வாக்குறுதி அளித்து கூட்டமே இல்லாவிட்டாலும் ஓட்டும் கேலிக்கூத்தான நிலை உள்ளது.யானை மீது படப்பெட்டியை வைத்து ஊர்வலம் நடத்தி போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தும் மனநோயாளிகள் இருக்கும் வரையில் விஜய் போன்ற நடிகர்களின் காட்டில் மழைதான்.

வந்தியத்தேவன் said...

என் பதின்ம வயதுகளில் இசைராஜாவின் பாடல்களுக்காகவே இராமராஜன் படம் பார்த்தேன். அவரது பல படங்களில் நல்ல கதை,திரைக்கதை இருந்தது. ஆனால் விஜயின் தற்போதைய படங்களில் அதே பழைய அரைத்த கதைதான். இன்னொரு பூவே உனக்காக, லவ் டுடே, காதலுக்கு மரியாதை, ப்ரியமுடன், துள்ளாத மனமும் துள்ளும் போன்ற படங்களை விஜய் எப்போ தருவார்?

Unknown said...

Ivargal iruvarai(vijay,sun pictures)kattilum ramarajan evvalavo melaanavar......ramarajanudaya garagattakaran unmayaaga 700 natkal odiyadhu....aanal ivanudaya(vijay) mokka kuruvi padam 150 natkal odinadham....
"eru otturuvan illicha vayana irundha
maadu machanu koopidumaam"

En sir ramarajana ivanugaloda compare panni avar maanatha vaangireenga............

மிரட்டல் said...

நேற்றைய ராமராஜன் ரசிகர்கள்தான் இன்றைய விஜய் ரசிகர் மன்றங்களில் பெரிய ஆளாயிருக்கின்றார்கள்.
எத்தனையோ ராமராஜன் ரசிகர் மன்றங்கள் இன்றைக்கு விஜய் ரசிகர் மன்றங்களாக மாறியிருக்கிறது.
கரகாட்ட"காரன்" மாதிரி இந்த வேட்டைக்"காரன்"ம் ஹிட் ஆகுமா?

Unknown said...

Nanum irumbuthiraiai NAKKAL, NAYYANDI pannikittu than irrukken. Poluppu illathavan seiyara seial. Ungal comment ennai ellalavum touch seiavillai. veru thozhil iruntha pannungo. Pls.