Thursday, December 24, 2009

பிரகாஷ்ராஜ் கற்றுத் தந்த பாடங்கள்

உலகத்திலே சிறந்த சுயசரிதை அல்லது வாழ்க்கைப் பதிவு என்று எடுத்து கொண்டால் நிச்சயம் முதல் பத்து இடத்தில் பாபர் நாமா வரும்.பாபரின் சுயசரிதையில் பயணிக்கும் போது(படிக்கும் போது) பதிமூன்று வயதில் இருந்து போர்களத்தில் இருந்து மகனுக்காக சாவது வரை(இந்த பாதிப்பு வெயில் படத்தில் வரும் தம்பியின் உயிருக்கு பதிலாக என் உயிரை எடுத்துக் கொள் என்று கதறும் பசுபதி) நாம் நிறைய இடத்தில் நம்மை எரிக்க வரும் தீக்குள் விரல் விடாமல் தப்பிக்கலாம்.

அப்படி சினிமாவில் ஜெயித்தவர்களில் சிறந்த சுயசரிதை என்று எடுத்து கொண்டால் முதலில் சேரன்,பிறகு பிரகாஷ்ராஜ்.(இந்த வரிசையில் நான் பெரிதும் கொண்டாடும் பாலாவிற்கு கூட இடமில்லை,அது மாதிரி செல்வராகவனுக்கும் இடமில்லை).இந்த வார்த்தைகளை என்றும் சொல்வேன்.அதில் தவமாய் தவமிருந்து படத்திற்கு பிறகு நடந்த சம்பவங்களை எல்லாம் சேர்த்தால் அது என்னுடைய மதிப்பில் இருந்து இறங்கும். அனால் இன்னும் எதை சேர்த்தாலும் பிரகாஷ்ராஜ் பற்றிய மதிப்பு மாறாது.(பொதுவாக திரைப்படத் துறையினரின் பேட்டிகளைத் தவிர்க்க விடுமுறை நாட்களில் கூட அலுவலகத்திற்கு வந்து யாருமே இல்லாத பிரதேசத்தில் டீ ஆத்தியிருக்கிறேன்.காரணம் ஏதாவது சொல்லும் போது கோபம் வந்தால் அடுத்த நாள் பதிவில் அவர் காய்ச்சி எடுக்கப்படுவார்.குறிப்பாக கமல் நிகழ்ச்சிகளைத் தவிர்ப்பேன்.அப்புறம் அடி விழும்.ஆனால் இதில் இருக்கும் ஒரே விதிவிலக்கு நிறைய நாட்களாக(வருடங்களாக) பிரகாஷ்ராஜ் மட்டுமே)

அம்மாவை எப்படி பார்த்து கொண்டேன் என்பதில் ஆரம்பித்து இந்த தலைமுறைக்கு காதல் கடிதம் கூட எழுதத் தெரியாமல் இருக்கிறதே என்ற ஆதங்களில் இருந்து தெரிந்து கொள்ளலாம் - கொஞ்சம் வித்தியாசமான மனிதர் என்று. ஐந்து பக்கம் கடிதம் கொடுக்காமல் கழிவறையில் கிழித்துப் போட்ட நாட்கள் எல்லாம் நினைத்து பார்க்க ஒரு சந்தர்ப்பம் தந்தது பிரகாஷ்ராஜ் என்ற குரு ஸ்தானத்தில் நான் வைத்திருக்கும் நபர் தான்.

நண்பன் காதலித்த பெண்ணுடன் தனியறையில், கதவை திறக்க சொல்லும் நண்பன்,திறக்காதே என்று சொல்லும் பெண் முடிவில் ஜெயித்தது அந்த பெண்.தோற்றது பிரகாஷ்ராஜ் நண்பனின் தற்கொலையால். இதே மாதிரி வீட்டில் தனியாக நானும்,அவளும் பேசிக் கொண்டிருந்த போது தீடிரென வந்த நண்பர்களிடம் முகம் குடுத்து பேசாமல் போக,நண்பர்களுக்கும் தோழிக்கும் நடந்த ஈகோ போராட்டத்தில் நான் சிக்கிக் கொண்டு முழிப் பிதுங்கி நண்பர்களுக்காக அந்த பெண்ணுடன் சண்டை போட்டது தனிக்கதை.சண்டை போட்டதற்கு இன்னொரு காரணம் - அந்த பெண்ணை நான் காதலிக்கிறேன்..விட்டுக் கொடு என்று கண் கலங்கிய இன்னொரு நண்பன். நான் சண்டை போட்டப் பிறகு அவன் இன்னொரு பெண் பின்னால் போனது அந்த கதையின் கிளைக்கதை.

எடிஎம் கார்டு நிறைய காசு ஆனா சாப்பிட கடை இல்லை. ஒரு தடவை கடை எல்லாம் திறந்து இருக்கு ஆனா சாப்பிட காசு இல்ல அப்ப நானே சிரித்துக் கொள்வேன்.பிரகாஷ்ராஜ் மாதிரி வாழ்கிறேன் என்று கர்வமாக இருந்தது.

இன்னும் என்ன ஒற்றுமைகள் என்று பார்த்தால் சாமி கும்பிடுவது இல்ல.கிறிஸ்துவப் பள்ளியில் தான் அதிகம் படித்து இருக்கிறேன்.விபூதி வைத்து கொண்டு போனால் ஒண்ணும் சொல்ல மாட்டார்கள்.சென்னை வந்ததும் முதலில் சேர்ந்தது அக்மார்க் இந்து பள்ளியில் விபூதி வைக்கவில்லை என்றால் அடிப்பார்கள். நான் முதலில் விபூதியை அழித்தேன்.என்னை பார்த்து நிறைய பேர் அழித்தார்கள்.வற்புறுத்தும் பழக்கத்தை விட்டு விட்டார்கள். மரணம் நாலு முறை கிட்டே வந்து குலசம் விசாரித்து இருக்கிறது.இப்போதும் விபூதி இட்டுக் கொள்வது உண்டு பூசுவது என் அம்மாவாக இருக்கும் அல்லது கொடுப்பது நெருங்கிய பெண்களாக இருக்கும்.அவர்கள் நகர்ந்ததும் அழித்து விடுவது வழக்கம்.

பலமான ஒற்றுமை என்னவென்று பார்த்தால் திமிர். இதற்காக என்னை ரசித்தவர்களும், வருத்தப்பட்டவர்களும் உண்டு.உனக்கு நடிக்கத் தெரியவில்லை என்று சொன்னது கேட்டு சந்தோசமாக இருந்தது.சமீபத்தில் ஒரு உறவுக்காரப் பெண்ணுடன் பேசிக் கொண்டிருந்தேன்.சின்ன வயதில் நாங்கள் இருவரும் எலியும் பூனையும் தான்.பார்த்தால் கூட பேசிக் கொள்ள மாட்டோம். ஒருமுறை வீட்டுக்கு அம்மா மிதிச்சிட்டான் என்று அழுது இருக்கிறாள். என்ன மிதிச்சான் என்று கேட்டதற்கு செருப்பை என்று சொன்னாளாம். சமீபத்தில் என்னை பற்றி சொன்னது."நீ ரொம்ப நல்லவன்.." (வீரபாகு வடிவேலு கண் முன்னால் வந்தார்.)நான் அப்படியே தான் இருக்கிறேன் அவள் பார்வை மாறியிருக்கிறது.

பலமான வேறுபாடு - மொழி தான்.இரண்டு வார அவகாசம் குடுத்தால் ஜப்பான் மொழியில் டப்பிங்கெல்லாம் பேசுவேன் என்று சொல்கிறார்.நான் நாலு வருடம் ஆகப் போகிறது இன்னும் "ஏக் காவ் மே ஏக் கிஸான்.." தான்.

இன்னும் தீராத கோபம் - "ஏன் உங்க வாழ்க்கையைப் பத்தி அதிகம் எழுதுவதில்லை.." என்று கேட்ட உதவி இயக்குனரை "அடுத்தவன் படுக்கையறையை எட்டி பாக்கும் புத்தியை மாற்றிக் கொள்.." என்று முகத்தில் அடித்து சொன்னது.இப்படி எழுதியது அந்த சுயசரிதையின் கடைசி அத்தியாயத்தின் முந்தைய அத்தியாயத்தில்.வந்த கோபத்தில் டூயட் மூவிஸ் அலுவலக முகவரி கண்டுப்பிடித்து ஒரு கண்டன கடிதம் அனுப்ப முடிவு செய்தேன்.சாராம்சம் - நாங்களா உங்களை சொல்ல சொன்னோம் என்று ஆரம்பித்து அந்த உதவி இயக்குனர் ஒரு பிரபலமாக இருந்திருந்தால் இப்படி சொல்லி இருப்பீர்களா என்று முடிந்தது.மொழி படம் வந்து அந்த கோபத்தை அடக்கி விட்டது.பிரகாஷ்ராஜிற்கு சரியாக தெரிந்தது எனக்கு தப்பாக தெரிந்தது.

அது போல நான் சொல்ல நினைத்தது ஒன்று சொல்லியது ஒன்று. எனக்கு சரியாக தெரிந்தது மற்றவர்களுக்கு தப்பாக தெரிந்தது.
இனி கவனமாக எழுதப்படும்.

இன்னொரு கோபம் - ஆட்டோகிராப் வாங்க வந்த பையனை துரத்தி பிடித்து அடித்தது.காரணம் பேசிக் கொண்டிருப்பதை இடை மறித்ததால் வந்த கோபம்.

பின் குறிப்பு - இன்னும் நிறைய ஒற்றுமை இருந்தாலும் சொல்ல விடாமல் ஏதோ ஒன்று தடுப்பதால் சொல்லவில்லை.அதையும் மீறி சொல்ல நான் பிரகாஷ்ராஜ் இல்லையே.

3 comments:

வெண்ணிற இரவுகள்....! said...

பிரகாஷ்ராஜ் படித்ததில்லை ......சேரன் படித்தேன் இரண்டு நாள் முன்பு ..............
நல்ல பகிர்வு நண்பா

Unknown said...

பிரகாஷ்ராஜ் எழுதியதில் ஒரே ஒரு அத்தியாயம் மட்டும் படித்திருக்கிறேன்.., அவருடைய தோழியை பற்றியது நிச்சயம் அழகு தான்... சேரன் படித்ததில்லை... நல்லபதிவு

Raju said...

அந்த வெப்சைட்டுக்கு அடிக்கடி போய் படிக்காதீங்க பாஸ்..!
:-)