Thursday, December 10, 2009

இனி குடிக்கவே கூடாது - உரையாடல் கவிதை போட்டிக்கு

மதுபானக் கடையின் குப்பைகளாக
சிதறிக் கிடக்கிறது உச்சரித்த வார்த்தைகள்
சொல்லிக் கேட்பவர்களின் எண்ணிக்கையும்
கேட்டுச் சொல்பவர்களின் நிதானமும் மட்டும்
பகடை காய் எண்களாக மாறி மாறி விழுகிறது
ஒரு குடிகார இரவில் எடுத்த சத்தியங்கள்
இன்று கண்முன்னே வேறொருவன் கையில் தவழ்கிறது
வாந்தியாய் வெளியேறுகிறது இராஜாங்கத்தின் வார்த்தைகள்
கழுவப்பட்டுக் காத்திருக்கிறது புதியவன் வருகைக்காக
கிளர்ச்சி தரும் வாசனையோடு

டிஸ்கி : இது உரையாடல் கவிதை போட்டிக்காக எழுதப்பட்டது.

27 comments:

வால்பையன் said...

சரக்கடிச்சுட்டு தான் படிக்கனும்!

shortfilmindia.com said...

ஒரே மப்பா இருக்குப்பா..
கேபிள் சங்கர்

நாடோடி இலக்கியன் said...

//ஒரு குடிகார இரவில் எடுத்த சத்தியங்கள்//

இந்த சொல்லாடலை ரசித்தேன்.

angel said...

குப்பைகளாக சிதறிக் கிடக்கிறது உச்சரித்த வார்த்தைகள்

ஒரு குடிகார இரவில் எடுத்த சத்தியங்கள்

so good and wishes to win

அத்திரி said...

மப்பு அழகா இருக்கு

அகல்விளக்கு said...

செம மப்பு தல...

புலவன் புலிகேசி said...

வா தல டாஸ்மாக் போலாம்...போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

மேவி... said...

enakkum tasmaac kkum romba thoram anne...

enakku antha palakkam ellam illainga

Thenammai Lakshmanan said...

/ஒரு குடிகார இரவில் எடுத்த சத்தியங்கள்
இன்று கண்முன்னே வேறொருவன் கையில் தவழ்கிறது//

அருமை இரும்புத்திரை அரவிந்த் வெற்றி பெற வாழ்த்துக்கள்

Unknown said...

நல்லாருக்கு..
வாழ்த்துகள்..

Starjan (ஸ்டார்ஜன்) said...

வாழ்த்துக்கள் அரவிந்த்

நல்ல கவிதை

வெற்றி நிச்சயம்

Unknown said...

நல்லா இருக்கு.., என்ன இனிக்கு ஒரே சரக்கு வாசமா இருக்கு..,

Unknown said...

நல்லா இருக்கு கவிதை.பிடிச்சுருக்கு.

வாழ்த்துக்கள்!

நையாண்டி நைனா said...

கோவில் மண்டபத்துலே வச்சி... நான் சொன்ன கவிதைய.... போட்டிக்கு போட்டுட்டியா... நீயி..
உலகத்துலே யாரை நம்புறதுன்னே தெரியலே...

அறிவு GV said...

நல்லா இருக்கு அரவிந்த். வெற்றி பெற வாழ்த்துக்கள்.
நீங்களும் நேத்து சரக்கா...? :))

கமலேஷ் said...

கவிதை மிகவும் அழகா இருக்கிறது...
வெற்றி பெற வாழ்த்துக்கள்...

Thamira said...

நல்லாதான் இருக்குதுபா.. கிளைமாக்ஸ்லதான் கொஞ்சம் புரியலை.

S.A. நவாஸுதீன் said...

வெற்றி பெற வாழ்த்துக்கள்

பா.ராஜாராம் said...

ரொம்ப பிடிச்சிருக்கு.வெற்றி பெற வாழ்த்துக்கள் அரவிந்த்!

பூங்குன்றன்.வே said...

கருத்துள்ள கவிதை,வெற்றி பெற வாழ்த்துக்கள்.

Vidhoosh said...

ம்ம்ம்ம்.

-வித்யா

கார்க்கிபவா said...

//"இனி குடிக்கவே கூடாது - உரையாடல் கவிதை போட்டிக்கு"//

போட்டிக்காக கவிதை எழுதலாம். அது ஏன் குடிச்சீங்க?

Anbu said...

போட்டி சூடாயிட்டுருக்கு

அன்புடன்,
அன்பு

thiyaa said...

வெற்றி பெற வாழ்த்துக்கள்.

"உழவன்" "Uzhavan" said...

வாழ்த்துக்கள்

நந்தாகுமாரன் said...

கவிதை நல்லா இருக்குங்க ... வெற்றி பெற வாழ்த்துகள்

உண்மைத்தமிழன் said...

கவிதையைப் படிக்கும்போதே சரக்கடிக்கணும்போல தோணுதே..!!!