Friday, December 18, 2009

கண்ணு கெட்டுறப் போகுது

ஐந்து வயதில் இருந்தே இந்த வார்த்தைகள் என்னை நோக்கி சீறிப் பாய்ந்து இருக்கிறது.சிறுவர்மலர் புத்தகத்திற்காக வெள்ளி கிழமைகளில் இருட்டு விலகுவதற்கு முன் நான் போர்வையில் இருந்து விலகியிருப்பேன்.பேப்பர் போடுபவர் சைக்கிளை நிறுத்துவதற்குள் நான் அவரை நெருங்கியிருப்பேன். இருட்டில் வார்த்தைகள் தெரிகிறதா என்று துலாவிப் பார்ப்பேன்."கண்ணைக் கெடுக்காம அடங்க மாட்ட.." என்ற வசவுகள் என்னை தாண்டிச் செல்லும்.

அப்புறம் எங்கும் புத்தகம்,துண்டு காகிதம் கிடைத்தாலும் வாசிப்பது - சாப்பிடும் போது,பஸ் பயணத்தில்.அதிலும் எதை வாசிப்பேன் என்றால் பயணத்தின் போது புத்தகம் வாசிக்கக் கூடாது இப்படி இருக்கும் வரிகளை இரண்டு முறை படிப்பேன். என் ஆர்வக் கோளாறால் அப்பா நூலகத்திற்கு அழைத்து செல்ல அங்கு குடுத்த புத்தகத்தை நிமிர்ந்து கூட பாக்காமல் ஒரு மணி நேரத்தில் முடித்திருந்தேன்.இவ்வளவு வேகம் கூடாது.கண் பார்வை பாதிக்கும் என்று மிரட்டினார்.உண்மையான காரணம் நான் அடுத்த புத்தகம் கேட்டேன்.

தொல்லை தாங்காமல் பத்து வயதிலேயே தண்ணித் தெளித்து விட்டார்கள்.அம்புலிமாமா எல்லாம் பெரியவங்க படிக்கும் என்று சொன்ன ஒரு பெண்மணியைப் பார்த்து பயங்கரமாக சிரித்தேன்.காரணம் அன்று காலையில் படித்திருந்த மண்குதிரை நாவல். கதை - அம்மா,பெண் இருவரையும் காதலிக்கும்,மயக்கும் அவர்கள் வீட்டில் வாடகைக்கு இருக்கும் ஒருவன்.மாலையில் அம்மா தரும் டிகாஷன் என்றால் இரவில் பெண்ணிடம் சேர்ந்து குல்பி. இப்படி சதிராடும் வேளையில் மாடியில் இருந்து இறங்கி வரும் பெண்ணைப் பார்த்து அதிர்ச்சியாகிறாள்.காலையில் யாரும் இல்லாத பொழுது தீக்குளித்து விடுகிறாள்.பெண்ணுக்கு விஷயம் தெரிந்து அவனை அடித்து துரத்துகிறாள்.இந்த நாவலை பதுக்கி பதுக்கி படித்தேன்.போர்வைக்குள், இருட்டில் எவ்வளவு வேகமாக முடியுமோ அத்தனை வேகம். இதே பாணியில் இதற்கு நேர் மாறான கதை டிஸ்கியில்.

பிறகு தொலைக்காட்சி கறுப்பு வெள்ளையில்.கிராமத்தில் அரிதாக புழக்கத்தில் இருந்தது. வீட்டின் சொந்தகாரன் என்பதால் இருக்கும் இரண்டு சேனல் மாத்த அருகிலேயே அமர்ந்து எல்லோருக்கும் தொல்லை குடுப்பேன்.சென்னை வந்தப் பிறகு பதின்ம வயதின் படிக்கட்டுகளில் நடக்கவேயில்லை.ஓடினேன். விஜய் தொலைக்காட்சியில் சென்ஸார் செய்யாத காட்சிகள் வரும். அதை பார்க்க டி.வியின் முன் நின்று கொள்வேன். யாராவது வந்தால் சேனல் சேஞ்சுவேன்.இப்படி டிவி பாத்தா கண்ணு என்னத்துக்கு ஆகும் என்று யாராவது அங்கலாய்ப்பார்கள்.

2004லில் சிஸ்டம்.ஒரு நாள் செமஸ்டர் தேர்வை வைத்துக் கொண்டு விடிய விடிய கேம்ஸ்.முடித்து விட்டு ஒய்ந்தேன்.அந்த தேர்வில் தான் அதிக மதிப்பெண்.

2006லில் மும்பை வந்தவுடன் பெண்கள் அணிந்த ஆடையைக் கண் கொட்டாமல் பார்த்தது நினைவுக்கு வருகிறது.அதுவும் வெள்ளி கிழமைகளில் சிறுவர் மலர் படிக்க காத்திருந்த அனுபவம் தான்.

2008லில் இருந்து இணையக் கிறுக்கு பிடித்து ஆட்டுகிறது.ஒரு நாளைக்கு எத்தனை படிக்கிறேன்.எழுதுகிறேன் என்று எனக்கே தெரியவில்லை.
ஆனா கண் கெட்டு விடும் என்று சொல்வதற்கு தான் அருகில் யாருமில்லை.

டிஸ்கி :

மண்குதிரை கதைக்கு நேர் மாறான கதை - புளிக்காரக்கா நர்சிமின் கை வண்ணத்தில்.படித்துக் கொண்டிருக்கும் போது யாரோ வருவது போலத் தெரிய நேராக பின்னூட்டங்களுக்கு வந்து விட்டேன்.தல அடுத்த இன்னிங்க்ஸ் தொடங்கி இருக்கிறார்.நான் அவரிடம் ஒரு குறி சொல்லி இருக்கிறேன். பலிக்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை.

மண்குதிரையில் அம்மா தற்கொலை செய்து கொள்வாள்.நர்சிம் கதையில் பெண்.

அங்கே பெண் அடித்து துரத்துவாள்.இங்கே அம்மா வர சொல்கிறாள்.

பேய் தொடக்கம் தான் மெதுவாக இருந்தது.முடிவில் மராத்தான் ஓடுவது போல ஒரு உணர்வு.

ஏதாவது ஒரு கதை படிக்கும் போது பழைய நினைவுகளில் மூழ்கினால் அது தான் அந்த கதயின் வெற்றி.நர்சிம் எழுதிய பல பதிவுகளில் அதை நான் அனுபவித்தேன்.

மண்குதிரையும் சரி,நர்சிம் கதையும் சரி இரண்டையும் ஒளித்து வைத்து தான் படித்தேன்.

3 comments:

Raju said...

இதெல்லாம் நாங்க எப்புடி நம்புறதாம்..!
கணேஷையும் சிபியையும் கூப்புடுங்க...கேட்கலாம்.

அமுதா கிருஷ்ணா said...

சரி, சரி ..நாற்பதில் கட்டாய்ம் கண்ணாடி தான்..

துபாய் ராஜா said...

போர்வை போல நல்ல அடர்த்தியான கோர்வையான சம்பவ தொகுப்பு.

இன்னும் 13 நாள் - 14 பதிவு. டார்கெட் மறந்திடாம டார்ச்சர் பண்ணு ராசா.... :))