Wednesday, December 16, 2009

தனி குலுங்கானாவைத் தொடர்ந்து தனி பைலாபுரம்

குலுங்கானா கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக் கொள்ளவதாக அறிவித்த காரணத்தால் நாடு முழுவதும் கோரிக்கைகள் வருகிறது. தனி குர்க்காலேண்ட் வேண்டும் என்று ஆட்சியில் இருக்கும் சாயாவதியும் கேட்கிறார்.அதை பார்த்ததும் தைலாபுரத்தில் பரபரப்பு.நாம இப்படியே இருந்தால் மரம்வெட்டி,பச்சோந்தி என்ற பட்டங்கள் தான் மிஞ்சும்.எப்படியும் முதல்வர் என்ற பட்டம் வாங்க வேண்டும் என்று முடிவு செய்து பைலாபுரம் செயற்குழு கூடி கும்மியடித்து உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்கிறது.

குண்டாக இருக்கும் தொண்டன் - "ஐயா,குலுங்கானா ஐம்பது வருஷக் கோரிக்கை.அதனால் தான் மத்திய அரசு ஒத்துக்கிட்டாங்க..நாம தைலாபுரத்தைத் தனி ஸ்டேட்டா கேட்டா தருவாங்களா.."

ஆமதாஸ் - "வரலாறு தெரியாம பேசாத.. எங்க அண்ணா காலத்திலே நாம தனி நாடு கேட்டாச்சு..கூட்டிக் கழிச்சு பாரு ஐம்பது வருஷம் வரும்..வரலன்னாலும் பரவாயில்ல ரெண்டு மூணு மரத்தை வெட்டிப் போட்டு சேத்துக்கோ.."

கூடுகட்டி - "பைலாபுரம் தனி ஸ்டேட்டா மாறிச்சுன்னா..எனக்கு கூடுகட்டிய தனி மாவட்டம் என்று அறிவிக்கணும்..எனக்கு வரலாறு தெரியும்.."

ஆமதாஸ் - "அந்தப் பெட்டியத் தூக்கியது நீ தானே..அப்புறம் வழக்கம் போல எல்லைப் பிரச்சனை செய்து இடத்தை விஸ்தரிக்க வேண்டியது.."

கூடுகட்டி - "அதுக்கு என்ன பண்ணப் போறீங்க.."

ஆமதாஸ் - "அதான் ஆவ் காட்டிய வழி தான்..தொடர் உண்ணாவிரதம் தான்.."

கூடுகட்டி - "இருங்க அரை மணி நேரத்தில் வந்து விடுறேன்.."

ஆமதாஸ் - "எங்கப் போற.."

கூடுகட்டி - "உண்ணாவிரதம்னு சொன்ன உடனே வயிறு கலங்கி விட்டது..இருங்க "லைட்டா" சாப்பிட்டுப் போட்டு வர்றேன்.."

ஒட்டுக் கேட்கும் உள்ளூர்த்துறை தலைவருக்கு பேக்ஸ் அனுப்புகிறது.

ஏற்காடு சாமி - "தலைவரே பேக்ஸ் வந்து இருக்கு.."

ஆசிரியர் - "முதல்ல அதை கிழிச்சிப் போடு.."

கிழித்துப் போட்டவுடன் உள்ளூர்த்துறை ஐ.ஜியை போனில் லெஃப்ட் ரைட் வாங்குகிறார்.

ஆசிரியர் - "இனி எதுவா இருந்தாலும் தந்தி தான் அனுப்பணும்..முதல்ல அந்த தத்திப் பசங்களை மாத்துங்க.."

தந்தி வந்ததும் படித்து விட்டு ஏற்காட்டார் காதில் கிசுகிசுக்கிறார்.

பேக் டூ பைலாபுரம்..

ஆமதாஸ் - "ம்..ம்.. உண்ணாவிரதம் தொடங்க வேண்டியது தான்..எல்லாரும் நல்லா சாப்பிடுங்க..காலையில் ஏழு மணிக்கு தொடங்கி மத்தியானம் ஒரு மணிக்கு முடிச்சிரலாம்..எல்லாம் அண்ணன் காட்டிய வழி.."

கூடுகட்டி - "ஐயா..ஒன்பது மணிக்கெல்லாம் முடிக்க முடியாதா..எதுக்கு வெறும் அஞ்சு மணி நேரம்..நூத்தி இருபது நிமிஷம் இருக்கலாமா.."

ஜே.கா.கனி - "நாம அப்படி எல்லாம் உண்ணாவிரதம் இருக்க முடியாது..அவங்க அதுக்கு காப்பிரைட்ஸ் வாங்கிட்டாங்களாம்.."

ஆமதாஸ் - "யார் தடுத்தாலும் இது தொடரும்..ஆளுக்கு அரை மணி நேரம்..ஆள் மாத்தி ஆள் மாத்தி உண்ணாவிரதம் இருப்போம்.."

கூடுகட்டி - "தலைவரே அப்ப நான் தான் கடைசி.."

உண்ணாவிரதப் பந்தலுக்குப் பின்புறம் இரண்டு மரங்களை வெட்டிப் போட்டு அடைத்து விட்டு யாருக்கும் தெரியாமல் சாப்பிடுகிறார்கள்.

முதல் பந்தியில் அமர்ந்த கூடுகட்டி இரண்டாவது பந்தியிலும் தொடர்கிறார்.

பந்தி பரிமாறும் ஆள் - "நீங்க இன்னும் எந்திரிக்கலையா.."

கூடுகட்டி - "உனக்கு ஞாபக சக்தி அதிகம்..எனக்கு ஜீரண சக்தி அதிகம்..தமிழக மக்கள் தான் எல்லாத்தையும் மறந்துருவாங்களே அப்புறம் நீ எப்படி..சட்டிப் பொட்டியத் தூக்கணுமா.."

ப.ப.ஆள் - "நான் ஆந்திரா.."

சாப்பாடு முடிந்ததும்..

கூடுகட்டி - "நிருபர்கள் எல்லாம் வர்றாங்க..ஏடாகூடமா ஏதாவது கேப்பாங்க..நீங்க பேசாம உண்ணாவிரதத்தோடு சேர்த்து மவுன விரதமும் இருங்க.."

ஆமதாஸ் கூடுகட்டியை ஊத்துப் பார்க்கிறார்.

கூடுகட்டி - "என்ன தலைவரே அப்படி பாக்குறீங்க.."

ஆமதாஸ் - "மூக்குப் புடைப்பா இருக்கான்னு பாக்குறேன்..மவுன விரதம் இருந்தா விருத்தாசலத்துல கவுன்சிலர் கூட ஆக முடியாது..தாடியார் கூட தான் கூட்டணி வைக்கணும்"

ஜே.கா.கனி யாரும் இல்லாத கூட்டத்தில் சொற்பொழிவு ஆத்துனு ஆத்துனு ஆத்துகிறார்.எச்சில் தெறிக்கிறது.தீடிரென மேடைக்குப் பின்புறம் இருந்து புகை வருகிறது.

ஜே.கா.கனி - "யாருடா அங்க புகைப் பிடிக்கிறது.."

ஆமதாஸ் காதில் சொல்கிறார் - "பின்னாடி சமையல் வேலை நடக்குது..நீ சாப்பிட்டு வந்துட்டு என்னை சாப்பிட விடாம பண்ணாதே.."

கூடுகட்டி ஆத்த வருகிறார்.எச்சில் லேசாகத் தெறிக்கிறது.

ஆமதாஸ் - "மழை விட்டு விட்டது..தூவானம் அடிக்கிறது.."

பொன்னுமணி உண்ணாவிரதத்தில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கி இருக்கிறார்.

ஆமதாஸ் - "என்ன இங்க இருக்கிற.."

பொன்னுமணி - "என்ன விட்டு விடுங்க..ஒரு மெடிக்கல் காலேஜ் ஆரம்பிச்சி நான் டீனா வேலை பாக்குறேன்..டாக்டரா வேலை பாக்க கே.எஸ் குவிக்குமார் வருவாரா.."

ஆமதாஸ் - "விதையப் போட்டா உன் பேரன் அனுபவிப்பான்..ஆனா மரத்தை வெட்டி பாரு..பலனை நாமளே அனுபவிக்கலாம்.."

பொன்னுமணி - "சீக்கிரம் விதையைப் போடுங்க..நம்ம புள்ளைங்க வெட்ட மரம் இல்லாம போயிரும்.."

நிருபர்கள் நேரம்..

நிருபர் - "தனி மாநிலம் கிடைச்சா என்ன பண்ணுவீங்க..விவசாயம் பண்ணுவீங்களா..அதுவும் குறிப்பா மரம் நடுவீங்களா.."

ஆமதாஸ் - "நீ அந்த டி.வி தானே..மரத்துக்கு கால் வலிக்க கூடாதுன்னு படுக்கப் போட்டா இந்த மாதிரி பேசக் கூடாது.."

நிருபர் - "உங்களுக்கு பிடிச்ச பாட்டு.."

ஆமதாஸ் - "மரத்த வைச்சவன் தண்ணி ஊத்துவான்.."

நிருபர் - "உங்களுக்கு பிடிச்ச பழமொழி.."

ஆமதாஸ் - "தனி மரம் தோப்பாகாது.."

நிருபர் (மனதுக்குள்) - "இருக்க விட்டாதானே தோப்பு ஆகும்.."

ஆமதாஸ் - "மைன்ட் வாய்ஸ் இங்க வரைக்கும் கேக்குது..பசுமை தாயகம் திட்டத்தில் இதுவும் உண்டு..உனக்கெல்லாம் கரண்ட் கட் ஆக மாட்டேங்குதே.."

நிருபர் - "உங்க எதிர்காலத் திட்டம்.."

ஆமதாஸ் - "சிலிக்கான் வேலி மாதிரி மரவேலி அமைப்போம்.."

மாநிலம்,மத்தியில் இருக்கும் இரண்டு அரசுகளுமே கண்டுக் கொள்ளவில்லை.மரம் வெட்டி விறகாக்கி சமைத்து சாப்பிடுவது மட்டும் தொடர்கிறது. புகை ஓசோனில் ஓட்டையை இன்னும் பெரிதாக்க குய்.நா சபையின் தலையீட்டால் தனி மாநிலம் தர மத்திய அரசு முடிவு செய்கிறது.

சிருத்தாலம் தான் தலை நகரம் மற்றும் ஒரே மாவட்டம்.

அதிலும் போட்டியிட்டு குஜயகாந்த் வெற்றி பெறுகிறார்.அவர் முதல்வராகி விட திரும்ப உண்ணாவிரதப் போராட்டம் செய்ய முடிவு செய்கிறார்கள்.

பொன்னுமணி - "என்ன எல்லோரும் வெறுங்கையோடு வர்றீங்க.."

தொண்டர்கள் - "நாம போன முறை செய்த போராட்டத்திலேயே ஒரு சுள்ளியை கூட விட்டு வைக்கவில்லை..பின்ன மரம் எங்கே இருக்கும்.."

பொன்னுமணி - "அடுத்து என்ன பண்ணலாம்..தேர்தல் வேற வருது.."

பக்கத்து மாநிலங்களில் இருந்து மரம் கடத்த முயற்சி செய்து முடியாமல் மரங்கள் டி.வியில் தமிழ் பேசினால் மரப்பாச்சி பொம்மை நிகழ்ச்சி நடத்த செல்கிறார்கள்.

7 comments:

அத்திரி said...

வாவ்.........அட்டகாசம்..............

Unknown said...

ஒரிஜினல் பேரையே உஸ் பண்ணி இருக்கலாம் குழம்பிட்டேன்..., ரெண்டாவது தடவ படிச்சதுல தான் தெரியுது நல்லா எழுதி இருக்கீங்க...

அகல்விளக்கு said...

அதகளம் பண்றிங்க போங்க...

balutanjore said...

saare
onnaglasaanu
shall i email this to both maruthuvar ayyas

balasubramanian vellore

துபாய் ராஜா said...

நல்லா இருக்கு அரவிந்த்...

Marimuthu Murugan said...

////உண்ணாவிரதம்னு சொன்ன உடனே வயிறு கலங்கி விட்டது..இருங்க "லைட்டா" சாப்பிட்டுப் போட்டு வர்றேன்.

.காலையில் ஏழு மணிக்கு தொடங்கி மத்தியானம் ஒரு மணிக்கு முடிச்சிரலாம்..எல்லாம் அண்ணன் காட்டிய வழி.."

ஆளுக்கு அரை மணி நேரம்..ஆள் மாத்தி ஆள் மாத்தி உண்ணாவிரதம் இருப்போம்.."

உண்ணாவிரதத்தோடு சேர்த்து மவுன விரதமும் ..////

வழி நெடுகிலும் இரும்புத்திரை குறும்புகள்...

சூப்பர்...

பெசொவி said...

அரசியல் நையாண்டி நல்லா வருது உங்களுக்கு.....வாழ்த்துகள்!