Friday, March 5, 2010

விஜய்,நித்யானந்தா,கோவா,தோஸ்தானா

விஜய்க்கு அதிர்ஷ்டம் இருக்கு.இல்லைன்னா வேட்டைக்காரனையும்,சுறாவையும் சன் வாங்குமா.போன வாரம் அவர் வீட்டில் இருந்து நித்யாவை தரிசனம் செய்து விட்டு வந்திருக்கிறார்கள்.விஜய் குழந்தை என்பதால் அவரை அடுத்த வாரம் அழைத்து வர முடிவு செய்திருக்கிறார்கள்.அதற்குள் கபாலமோட்சம் வீடியோக்கள் வந்து விட,ஜஸ்ட் மிஸ் என்பார்களே அது நடந்து விட்டது.இதற்கு முன் விஜய் சந்தித்து இருந்தால் சாமியாருடன் இருக்கும் போட்டோவைப் போட்டு சம்பத் - அரவிந்த் ஆகாஷ் ரேஞ்சில் ஒரு புனைவு உருவாகியிருக்கும்.(தோஸ்தானா,கோவா பாணியில்).இப்படியெல்லாம் யாருக்கும் தோணாது என்று யாராவது கதை கட்டி விட்டால் நான் என்ன செய்ய.இதனால் முதல்வர் கனவில் ஓட்டை விழவில்லை.

விஜய் இப்படித்தான் ராகுல் காந்தியை சந்தித்து விட்டு வந்தார்.யூத் காங்கிரஸில்(மன்மோகம் சிங் அவருக்கு வயது அது மாதிரி இரண்டு மடங்கு) சேர வயது தடையாக இருந்தது என்று தட்டி விட்டு விட்டார்கள்.ஜஸ்ட் லைக் தட் மாதிரி தட்டினார்கள்.விஜய்க்கு ஆப்பு வைக்க ஆள் வெளியே இருந்து வர வேண்டியதேயில்லை.அவர் அப்பா போதும்.கெஸ்ட் ரோலில் படம் நடிக்க வைப்பது,அரசியல் ஆசை,நித்யா,கல்கி பஜனை பாடுவது என்று அவரே விஜய்க்கு ஆப்பு வைப்பார்.

அடுத்து சாரு அவருக்கும் வெளியே இருந்து ஆள் வர வேண்டியதேயில்லை.அவரே அவரை கலாய்த்து அல்லது கிண்டலடித்து அல்லது பகடி செய்து கொள்வார் என்பது தெரிகிறது.அதற்கு உதாரணம் தான் நித்யானந்தனுக்கு எழுதிய இரண்டு எதிர்வினைகள்.மூன்றாவது எழுதி இன்னும் டேமேஜ் செய்து கொள்ளாமலிருக்க எல்லா வல்ல போன வாரமும் எனக்கு ஆசாமியாக இருந்த அவரை கேட்டுக் கொள்கிறேன்.நித்யானந்தருக்கு எதிரான இரண்டு எதிர்வினைகளையும் கல்வெட்டில் பொறித்து அது பக்கத்தில் யாரையாவது காவலிருக்க செய்து பின்னால் வரும் சந்ததியினர் படித்து தெளிவார்கள் என்று நினைக்கிறேன்.இனி சூசனுக்கு திட்டு விழாமலிருக்க அவங்க நாட்டு சாமியார் தான் அருள்பாலிக்கணும்.

என்னை மாதிரி வெளியே தெரியாத பதிவர்களையும் மற்றவர்களுக்கு அறிமுகம் செய்ய தமிலீஷ்,இங்கீஷ்,தமிழ்மணம் என்று ஓட்டுகளைக் கண்டபடி குத்தி என்னையும் பரிந்துறையில் நிற்க செய்யுங்கள்.பதிவு தவிர எதிலும் டைப் அடிக்க சோம்பேறித்தனமாக இருப்பதால் இங்கேயே வேண்டுகோள் விடுக்கிறேன்.ப்ளஸ் தான் போட வேண்டும் என்று மைனஸ்,மல்டிபிலிக்கேஷன்,டிவிசன் என்று எதையாவது போட்டு என்னையும் தூக்கி ஆப்கானிஸ்தானில் நிறுத்துங்கள்.மைனஸ் ஓட்டுப் போட்டால் பிரபலமாகவும்,ப்ளஸ் போட்டால் பிராபலமாகவும் ஆக்கி விடுவேன்.எனக்கு தொடர்ந்து மைனஸ் ஓட்டுக் குத்தி ஆதரித்து வரும் ஓவியாவிற்கு இந்த சமயத்தில் என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.மற்றவர்களை கடுமையாக கண்டித்து எங்கள் வீட்டிலே ஏதாவது சமைத்து சாப்பிடலாம் என்று இருக்கிறேன்.

காசு குடுத்தால் முழு வீடியோவும் காட்டுவேன் என்று ஆசை காட்டும் நக்கீரனின் முகத்திரையை நான் ஏற்கனவே கிழித்து இருக்கிறேன்.அதுவும் கமல் பற்றி அவர்கள் விட்ட உடான்ஸ்களை இங்கே தருகிறேன்.நிர்வாண காட்சிகள் வெளியிடும் தளமாக நக்கீரன் மாறும் என்று நான் நினைத்தது கூட கிடையாது.

சன் டிவியின் புத்திசாலித்தனத்தை மெச்ச வார்த்தைகளே இல்லை.முதல்வரும் வழக்கம் போல கடமையை செய்து உள்ளார்.முதல் நாள் ஆர் நடிகை என்று சொல்லி டி.ஆர்.பி ஏற்றிக் கொண்ட சன்னுக்கு நடிகர் சங்கத்தில் இருந்து கண்டனம் வரவில்லை.போலீஸில் புகாரும் கொடுக்கவில்லை.கோபத்தில் உதடு துடிக்கவில்லை.இதே மாதிரி கிசுகிசு எழுதிய தினமலருக்கு எதிராக மட்டும் டான்ஸ் ஆடினார்கள்.விவேக்,சூர்யா,சத்யராஜ்,விஜயகுமார் வாயில் யாரும் எதையாவது போட்டு அடைத்து விட்டார்களா என்று தெரியவில்லை.நடிகர்களை இங்கே கிழித்து இருக்கிறேன்.அடுத்த நாள் ரஞ்சிதா முகம் காட்டப்பட்டது.இன்னும் இன்னும் டி.ஆர்.பி.இனி படுக்கையறையில் பார்த்து தான் தூங்க வேண்டும்.இல்லை வருங்காலத்தில் நம்மையே நாம் தொலைக்காட்சியில் பார்க்கும் அவலம் வரும்.இது சுழற்றிய வாள் ஒரு நாள் திரும்ப வரும்.ரஞ்சிதா தற்கொலை செய்து கொண்டால் அவர் அப்பாவி என்று இரங்கல் கூட்டம் போட்டு விட்டு பொங்கல் சாப்பிடுவார்கள்.அதையும் சன் நேரலை செய்து கொண்டிருக்கும்.மணிரத்னத்திற்கு ரஞ்சிதா இல்லாமல் படம் முடிக்க முடியாது.அவர் படத்தில் கால்ஷீட் குடுத்தால் வேறு படத்தில் நடிக்க முடியாதாமே.இது மட்டும் எப்படி சாத்தியமானது.இதுதான் ஒவர்டைம் வேலையா.அவரவர் கவலை அவரவருக்கு.இதில் ரஞ்சிதா தான் பணம் பறிக்க திட்டம் போட்டர் என்று ஒரு செய்தி வருகிறது.என்ன கொடுமைடா நாராயணா இது.ரஞ்சிதாவுக்கு ஆதரவு தெரிவிக்கலாம் என்று பார்த்தால் அவர் வீடியோவை பேரம் பேசி விக்கலாம் என்று அலைந்து கொண்டிருந்தார் போல.

12 comments:

நீ தொடு வானம் said...

ஆதரவு தெரிவிச்சவங்ககே தப்பிப் பண்ணிட்டாம் என்று யோசிக்கிறாங்க.நீங்களும் விஜய் மாதிரி ஜஸ்ட் மிஸ்.அப்புறம் எப்போ ஆசிரமம் தொடங்குவதாக உத்தேசம்.

இரும்புத்திரை said...

ஆரம்பிக்கத்தான் வேணும்.இனிஷியல் பேமண்ட்,இடம் எல்லாம் வேணுமே.ஆனா ஓண்ணு உங்களை கிட்ட சேக்க மாட்டேன்.கேமராவை நீங்களே வைச்சுட்டா.

Sakthi Doss said...

அன்பர் அவர்களுக்கு நான் புதிதாக வலைப்பதிவை ஆரம்பிதுள்ளேன் எனக்கு விடை தெரியாத ஒரு கேள்வி உள்ளது அது யார் இந்த சாரு நிவேதிதா? எல்லாரும் கடுமையாக விமர்சனம் செய்கிறார்களே தயவு செய்து சொல்லுங்கள்...

வால்பையன் said...

கலந்து கட்டி அடிச்சிருக்கிங்க!

Rengarajan giri said...

இவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது இவர்களை கண்டிக்க. நித்யானந்தா ஊருக்கு உபதேசம் பண்ணிவிட்டு தப்பு காரியம் பண்ணினார்.கருணாநிதி வகையறாக்கள் மக்களுக்கு சேவை செய்வதா சொல்லிக்கொண்டு தங்கள் குடும்பத்தை நன்கு வளமாக்கிக்கொண்டார்கள்.நித்யானந்தா செய்த தவறுக்கு பொதுமக்கள் அவருடைய போஸ்டரை செருப்பால் அடித்து தங்கள் குமறல்களை தீர்த்துக் கொண்டார்கள். கருணாநிதி வகையறாக்களுக்கு அவர்கள் செய்கின்ற தவறுகளுக்கு யார் தண்டனை அளிப்பது? நித்யானந்தா போன்றவர்கள் செய்கின்ற தவறுகளால் தனி மனிதர்கள் யாரும் பாதிக்கப்படுவதில்லை. ஆனால் இவர்க ள் செய்கின்ற தவறுகளால் நாட்டையே பாழாக்குகிறார்களே அதை யார் தட்டி கேட்பது.

இராகவன் நைஜிரியா said...

என்னால முடிஞ்ச உதவி.. தமிழ் மணம், தமிழிஷ் இரண்டிலும் ஓட்டுப் போட்டுட்டேன்.

ஆசிரமம் ஆரம்பிக்கும் போது நம்மளையும் கவனிச்சுகுங்க..

Lakshmikanthan said...

நித்தியானந்தர் போன்றவர்கள் மீது எனக்கு நம்பிக்கை கிடையாது.அவரது செயலை நான் நியாயப்படுத்தவும் இல்லை.ஆனால் ஒருவர் தன்னுடைய படுக்கை அறையில் செய்த விஷயத்தை படம் எடுத்து நொடிக்கு ஒரு தடவை தொலைக்காட்சியில் போட்டது அயோக்கியத்தனம்.நித்தியானந்தரும் ரஞ்சிதாவும் படுக்கையில் புரண்டதால் சமூகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை.வயதுக்கு வந்த இருவர் பரஸ்பர சம்மதத்துடன் உறவு வைத்து கொள்வதில் என்ன தவறு இருக்கிறது?நித்தியானந்தர் தன்னை ஒரு பிரம்மச்சாரி என்று கூறிக்கொண்டதால் அவரை நம்புபவர்களுக்கு வேண்டுமானால் அவருடைய இந்த செயல் மன வருத்தத்தை கொடுத்திருக்கலாம் மற்றபடி இது பெரிய விஷயமாக படவில்லை.மேலும் சன் டிவி குறிப்பிட்ட அந்த வீடியோவிற்கு கொடுத்திருந்த நேர்முக வர்ணனைதான் மிகவும் ஆபாசமாக இருந்ததே அன்றி வீடியோ அப்படி ஒன்றும் ஆபாசமாக இல்லை.முழு உடையோடு இருக்கும் பெண்ணுடன் செக்ஸ் வைத்து கொள்வது தமிழ் திரைப்படத்தில் மட்டும்தான் சாத்தியம்.இன்று மனிதர்களுக்கு இருக்கும் பிரச்சினைகளையோ அவர்களுடைய துக்கங்களையோ பகிர்ந்து கொள்ள யாருக்கும் நேரமோ பொறுமையோ இல்லை.இத்தகைய சூழ்நிலையில் நித்தியானந்தர் கற்பித்த தியானமுறைகளால் கடுமையான மன உழைச்சல் மற்றும் டிப்ரஷன் ஆகியவற்றில் இருந்து மீண்டு வர முடிந்ததாக உலகெங்கிலும் உள்ள அவரை நம்பும் லட்சக்கணக்கான மக்கள் கூறுகின்றனர்.இப்படி உலகில் ஒரே ஒரு மனிதனின் வாழ்க்கையில் ஒரு நல்ல மாற்றத்தை கொண்டு வரும்படியான ஏதாவது ஒரு நிகழ்ச்சி சன் குழும தொலைக்காட்சிகளில் வெளி வருகிறதா?தமிழகத்தையே தங்கள் குடும்ப சொத்தாக மாற்றி விட்ட ஒரு கூட்டம் தங்களை ஏதோ பெரிய கலாச்சார காவலர்களாக காட்டி கொள்வது வெட்க கேடு.மெலும் ஏதாவது உள் நோக்கம் இல்லாமல் இவர்கள் இதை வெளியிட்டிருக்க கண்டிப்பாக வாய்ப்பே இல்லை.இதை பார்த்துவிட்டு துள்ளுபவர்களுக்கு உங்களில் பாவம் செய்யாதவர்கள் முதலில் கல்லால் அடிக்கலாம் என்ற இயேசுநாதரின் மொழியை நினைவூட்டுகிறேன்.

Lakshmikanthan said...

சாரு நித்தியானந்தரை நம்பியது அவருடைய சொந்த விஷயம். ஆனால் பாண்டியிலும் பிடதி ஆசிரமத்திலும் ஒரே நேரத்தில் நித்தியானந்தர் இருந்ததாக சாரு அவருடைய இணையதளத்தில் எழுதியிருந்தது என்னை மிகவும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.அதற்கு பின் அவருடைய இணைய தளத்தில் நித்தியானந்தர் குறித்த கட்டுரைகளை நான் படிப்பதில்லை.அதே இணையதளத்தில் இன்று அவன் நடிகையின் குண்டியை நக்கினால் நான் என்ன செய்ய முடியும் என்று சாரு எழுதியிருப்பது உலக மகா பல்டி.பாண்டியிலும் பிடதி ஆசிரமத்திலும் ஒரே நேரத்தில் நித்தியானந்தர் இருந்ததாக சாரு எழுதியதற்கு பின்னால் பொருளாதாரம் சார்ந்த காரணங்கள் இருக்குமோ என்ற என்ற சந்தேகம் தவிர்க்க முடியாமல் எழுகிறது.

Subu said...

அட....

தனிமனித விவகாரத்தில் எப்படி தலையிடலாம் .... இவங்களுக்கு மட்டும் ஒழுக்கம் உண்டான்னு நான் கமெண்டு எழுத வந்தா...அதுக்குள்ள இம்புட்டுப் பேர் அதையே சொல்லி இருக்காங்களே !!

மக்கள் உஷார் தான்

R.G.S.International said...

Lakshmikanthan,giri...dont create any panic with public.This nithyanandha bastard done stupid thing.he had sex with many young girls.not only ranjitha...also he is having some criminal advanced idea.he is using that and he is cheating the public.don't tell that is personal with them..we should not involve in that.he has spoiled many young girls life.that is not come out.beacuse they are richest girls.they want to hide it.thing about all

R.G.S.International said...

Lakshmikanthan,giri...dont create any panic with public.This nithyanandha bastard done stupid thing.he had sex with many young girls.not only ranjitha...also he is having some criminal advanced idea.he is using that and he is cheating the public.don't tell that is personal with them..we should not involve in that.he has spoiled many young girls life.that is not come out.because they are richest girls.they want to hide it.thing about all

R.G.S.International said...

வயதுக்கு வந்த இருவர் பரஸ்பர சம்மதத்துடன் உறவு வைத்து கொள்வதில் என்ன தவறு இருக்கிறது?...i m warning lakshmikanthan..you should not said like this.we are humans.not like animal.we are having culture respect.we should to have sex with only our life partner.not like any human.thing about our nation leader the great Mr.Gandhiji...he was following our indian culture and he was not done any illegal thing.like that our all indians should follow.In my life I promise i will follow the gandhiji way.I want to be like a lord RAMA