Tuesday, March 23, 2010

என்னை பார்த்தா உங்களுக்கு எப்படி தெரியுது

நான் எதிர்வினை எழுதினா மட்டும் தமிழ்மணத்துக்கே பொருக்காது போல.எப்ப எழுதினாலும் தமிழ்மணம் ஸ்தம்பித்து போய் விடுகிறது.எந்த பதிவை யாரும் பார்க்க கூடாது என்று நினைக்கிறேனோ அது நிச்சயம் பரிந்துரையில் ஏறும்.ஏற வேண்டியது என் ஓட்டையும் சேர்த்து அதே ஒரு ஓட்டிலே நிற்கும்.

நான் ட்ரெயின் பாஸ் எடுக்க போனா மட்டும் பிரிண்டர் வேலை செய்ய மாட்டேங்குது.நானும் பாக்குறேன் நான் என்ன பாஸ் மணிகண்டனா சிவபூஜை நடக்கும் போது பஸ் பாஸ் எடுக்க.போங்கடா நீங்களும் உங்க சர்வீஸூம்.

நான் ரெசும் அனுப்பும் போது இந்த பாழாய் போன நெட்வொர்கிங் பசங்க என்ன பண்றாங்கன்னு தெரியல.அப்ப நெட் வேலை செய்யாது.அட போங்கடா போக்கத்தப் பசங்களா.

நானும் இண்டர்வியூக்கு போறேன்னு அன்னைக்காவது துணியை ஒழுங்கா துவைச்சிட்டு போனா டிரெயின் இவனுங்க வந்து ஓசியிலே இஸ்திரி போடுறாங்க.டேய் நானும் பாக்குறேன் நான் போற அன்னைக்கு தான் உங்களுக்கும் இண்டர்வியூவா இல்ல சும்மா சுத்தப் போறீங்களா.

நான் ஷேர் வாங்கினா கீழே போகுது.வித்தா மேல போகுது.என்ன உசுப்பேத்தி விடுறதுலே இந்த பசங்களுக்கு என்ன ஆர்வமோ தெரியல.கோமணம் கிழிஞ்ச வரைக்கும் போதும்.

சரி எல்லோரும் பஸ்ல கும்மியடிக்கும் போது நான் ஏற வந்தா மட்டும் எவனாவது கிளையண்ட் போன் பண்ணி உயிரை வாங்குறான்.பதிவு படிக்கும் போது கிரெடிட் கார்ட் விக்க வர்றாங்க.நானே கேட்டா மட்டும் தர மாட்டேன்னு சொல்றான்.அப்புறம் எதுக்கு கேக்காதப்போ தர்றேன்னு சீன் போடுறாங்களோ தெரியல.

கதை எழுதலாம்னு தலைப்பு மட்டும் அடிச்சா போதும் சர்வ்ர் ரூம்ல போய் டீ ஆத்த வர் சொல்லி கதற கதற கால் தரையிலே தேய்ற அளவுக்கு இழுத்துட்டு போறாங்க.அங்க போனா ரீஸ்டார்ட் மட்டும் பண்ணிட்டு போலாம்னு சொல்றாங்க.அதுக்குள்ள பதிவு எல்லாம் மறந்து போகுது.

நாளைக்கு லீவு.நிம்மதியா தூங்க விட மாட்டாங்க.எதையாவது தப்பா குடுத்திட்டு குளிக்காம ஆபிஸ் வர வைப்பாங்க.அங்க போறதுகுள்ள சரி பண்ணிட்டோம்னு சொல்றாங்க.பாதி வழியிலே நான் நிற்கும் போது தான் இது நடக்குது.சொல்லுங்கப்பா நான் எங்க போகணும்.

நான் வீட்டுக்கு போகும் போது தான் டீம் மீட்டிங் போடுறாங்க.கடைசி வரைக்கும் ஒரு முடிவுக்கு வராம சொம்புல இருக்கிற தண்ணி காலி ஆனது தான் மிச்சம்.

எனக்கு போனஸ் குடுக்கும் போது தான், பாருங்க நீங்க ஒரு நாள் கழிச்சி கன்பார்ம் ஆனதால கிடையாதுன்னு சொல்றாங்க.இந்த வருசம் குடுங்கன்னு கேட்டா புதுசா ஏதாவது காரணம் கண்டுப் பிடிக்கிறாங்க.ஏம்பா என்ன பார்த்தா எப்படி இருக்கு.இ.வான்னு எழுதி ஒட்டியிருக்கா.

இதே மாதிரி முன்னாடி எழுதின பதிவு ஒண்ணு இருக்கு.உங்களுக்கு நாள் நல்லா இருந்தா இதை மட்டும் படிங்க.ரொம்ப நல்லா இருந்தா இதையும் சேர்த்து படிங்க.

11 comments:

இரும்புத்திரை said...

காணாமல் போன அந்த பாலோயருக்கு இதை சமர்ப்பணம் பண்றேன்.

இரும்புத்திரை said...

தமிழ்மணம் என்று வைத்தால் தமிலீஷில் தெரிய மாட்டேங்குது.நித்யா கோமணம் என்று வைத்தால் சூடான இடுகையில் வருது

வினோத் கெளதம் said...

கிட்டதட்ட இதே டாபிக்ல கொஞ்ச நாளைக்கு முன்னாடி நான் ஒரு பதிவு போட்டிருந்தேன்..இருந்தாலும் ஒரு ’ரைட்டர்’ அளவுக்கு என்னால எழுத முடியுல..:)

இரும்புத்திரை said...

எல்லாம் அந்த டக்ளஸை வெளுக்கணும்.ரைட்டரா இதுக்கு நீங்க ரெண்டு அடி அடிச்சிருக்கலாம் வினோத்.

இராகவன் நைஜிரியா said...

வொய் திஸ் மச் புலம்பல் யா?

ஓட்டு போட்டுட்டு ரிப்பெரஷ் பண்ணி பார்த்தா 2 ஓட்டு காண்பிக்குதே..

இராகவன் நைஜிரியா said...

வொய் திஸ் மச் புலம்பல் யா?

ஓட்டு போட்டுட்டு ரிப்பெரஷ் பண்ணி பார்த்தா 2 ஓட்டு காண்பிக்குதே..

இராகவன் நைஜிரியா said...

// "என்னை பார்த்தா உங்களுக்கு எப்படி தெரியுது” //

இதெல்லாம் பப்ளிக்கா சொல்லிகிட்டு இருக்க முடியாதுங்க...

Anonymous said...

//நான் ரெசும் அனுப்பும் போது இந்த பாழாய் போன நெட்வொர்கிங் பசங்க என்ன பண்றாங்கன்னு தெரியல.அப்ப நெட் வேலை செய்யாது.அட போங்கடா போக்கத்தப் பசங்களா.//

நீங்க நெட்வொர்கிங் பசங்களால ரொம்ப பாதிக்கப்பட்டு இருக்கீங்கன்னு நினைக்கிறேன்....
ஹி..ஹி.. நானும் networkingla தான் இருக்கேன்,,,,,,


//கதை எழுதலாம்னு தலைப்பு மட்டும் அடிச்சா போதும் சர்வ்ர் ரூம்ல போய் டீ ஆத்த வர் சொல்லி கதற கதற கால் தரையிலே தேய்ற அளவுக்கு இழுத்துட்டு போறாங்க.அங்க போனா ரீஸ்டார்ட் மட்டும் பண்ணிட்டு போலாம்னு சொல்றாங்க.அதுக்குள்ள பதிவு எல்லாம் மறந்து போகுது.//

விடுங்க பாஸ், வாழ்க்கையில இது எல்லாம் சகஜம்.....

y blood ,, same blood...
உங்க பதிவு ரொம்ப நல்லா இருக்கு....

இரும்புத்திரை said...

அண்ணா ஏன் கொலைவெறி..

தலைவா உங்கள சொல்லலை..தொல்லை குடுக்க சிலர் இருக்காங்க

பத்மா said...

பாவங்க நீங்க .

Nathanjagk said...

அந்த ஹாப்பாயி​லைத் திருப்பிப் ​போடறது..??