Sunday, March 14, 2010

கொஞ்சம் கிரிக்கெட்,கொஞ்சம் சர்ச்சை

ரவீந்திர ஜடேஜா இந்த முறை ஐ.பி.எல் போட்டியில் இருந்து விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளார்.இது இராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு பின்னடைவு என்று சொல்வதை விட பலத்த அடி.காரணம் அவர் வேறு அணிகளுக்கு மாற பேரம் பேசினார் என்பது தான் அவர் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டு.தடை அமலுக்கு வந்ததும் கூப்பாடு போடாமல் நேற்று கூப்பாடு போட்ட அந்த அணிக்கு ஒரு மிதி.அவர்கள் குற்றம் சாட்ட்டுவது மும்பை இண்டியன்ஸ் மேல்.அவர்கள் தான் பேரத்தை ஆரம்பித்தார்கள் என்று.அவர்களை ஒன்றும் செய்யவில்லையே.இந்த கேள்விக்கு நானே பதில் சொல்கிறேன்.பணம் படைத்தவனை யாரும் ஒன்றும் சொல்வதில்லை.அவன் பேச்சை கேட்டு ஆடுபவனுக்கு தான் முதல் ஆப்பு அடிக்கப்படும்.இதுக்கு தான் சொல்றது இருப்பதை விட்டு விட்டு பறப்பதற்கு ஆசைப்படவே கூடாது.மீறி ஆசைப்பட்டால் உள்ளதும் போச்சடா நொள்ளைக்கண்ணா கதை தான்.

யூசுப் பதான் எட்டு ஓவர்கள் நின்றால் போதும் நாங்கள் ஜெயித்து விடுவோம் என்று ஷேன் வார்ன் சொன்னார்.எனக்கு அதை படித்து விட்டு சிரிப்பு தான் வந்தது.நான் பார்க்கும் போதும் யூசுப் பதான் பதிமூன்று பந்துகளில் பதினெழு ரன்கள்.பார்க்க பிடிக்காமல் இறங்கி வந்து விட்டேன்.நான் வந்தப்பின் ருத்ரதாண்டவம் தான் நடந்திருக்கிறது.அவர் அவுட்டாகி விட நான்கு மேட்ச் காலி.கடைசி வரை யூசுப் நின்றால் தான் இது மாதிரி போட்டிகளில் வெல்ல முடியும் என்று வார்ன் சொல்ல வேண்டும்.

சென்னை சூப்பர்கிங்ஸ் மறுபடியும் ஒரு வடையைக் கோட்டை விட்டு விட்டது.சதீஷ் மும்பை இண்டியன்ஸ் அணியில் விளையாடுகிறார்.நேற்று அவரால் தான் அந்த வெற்றி கிடைத்தது.சென்னை அணியினர் ஸ்ரீகாந்தின் மகனை செலக்ட் செய்தால் இப்படி தான் ஆகும்.அருமையான ஒரு ஆட்டக்காரரை நாம் இழந்து விட்டோம்.உடனே பேரத்தை ஆரம்பித்து சதிஷையும் தடை செய்து விட வேண்டாம்.தென் ஆப்பிரிக்காவில் நடந்த ஐ.பி.எல் போட்டியில் யூசுப் சரியாக ஆடவில்லை.இந்த முறை அதை நிவர்த்தி செய்வார் என்பது நிச்சயம்.ரோகித் சர்மா அடித்த ஷாட் இன்னும் கண்ணிலேயே நிற்கிறது.பத்து ரூபாய் மெட் மேட்ச் ஆடபவன் கூட ஒழுங்காக ஆடுவான் என்பது தான் உண்மை.

மைக்கேல் க்ளார்க் ஆஸ்திரேலிய துணைக் கேப்டன்.நியூசிலாந்து உடனான போட்டியில் ஆளைக் காணவில்லை.என்னாச்சு எதாச்சு என்று விசாரித்து பார்த்தால்.அவருடைய காதல் அம்மணியின் படம் நிர்வாண கோலத்தில் பத்திரிக்கையில் வெளியாகி உள்ளதாம்.உடனே கல்யாணத்தை நிறுத்த டவுசரை மாட்டிக் கொண்டு கிளம்பி விட்டார்.யார் எடுத்தது என்று பிங்கில் பேட்டி தந்துள்ளார்.அவருடைய காதலராம் 2005 வருடம் இருந்த காதலராம்.கேஸ் போடப் போகிறாராம்.நான் சொல்வது ஒரு விஷயம் தான்.அவன் எவ்வளவு நெருக்கமாக இருந்தாலும் இந்த மாதிரி சமயத்தில் கேமராவில் போட்டோ எடுப்பதை தடுக்க வேண்டும்.அவன் இது மாதிரி சமயத்தில் போட்டோ எடுத்தாலே யோக்கியன் கிடையாது என்பது என் தாழ்மையான கருத்து.(நெட்டில் போட்டோ கிடைக்காத வருத்தத்தில் இப்படி சொல்கிறான் என்று பின்னூட்டம் வந்தால் கிளார்க் அடுத்த வருடம் உலகப் கோப்பையில் ஆடும் போது அவர் அடிக்கும் பந்து சொன்னவர் வாயிலே வந்து விழும் என்று சாபம் இடுகிறேன்.)

சைமண்ட்ஸ் கூட லாரா பிங்கிலின் முன்னாள் காதலர் தான்.இதில் எழுந்த முட்டல் மோதல் தான் பின்னாள் சைமண்ட்ஸின் ஒழுக்கயின்மைக்கே காரணமாக அமைந்தது.பங்களாதேஷ் சுற்றுப் பயணத்தின் போது கிளார்க் தான் கேப்டன்.அது பிடிக்காமல் சைமண்ட்ஸ் எங்கோ சுற்றித் திரிய ஆப்பு அடித்து விட்டார்கள்.நல்ல வேளை சைமண்ட்ஸ் அந்த படத்தை எடுக்கவில்லை.இல்லை படித்துறையில் பாவாடை நாடா திருடிய கேஸும் சேர்ந்து அவர் மேல் சுமத்தியிருப்பார்கள்.

பிரித்தியின் முன்னாள் காதலர் பாம்பே டையிங் ஒனர் தென் ஆப்பிரிக்காவில் ஒரு பெண்ணிடம் சில்மிஷம் செய்து உதை வாங்கினார்.அம்மணியுடன் சுற்றினார் என்று வந்த சந்தேகத்திலேயே யுவராஜ் சிங்கிற்கு கேப்டன் பதவி காலி.பிரித்தி இருக்கும் ஏரியாவில் குடியேறினாராம் யுவராஜ்.இப்படி எல்லாம் செய்வதால் அவர் விளையாடுவதில்லை என்று அண்ணனிடம் இருந்த பதவியைப் பிடிங்கி சங்ககாராவிடம் கொடுத்து விட்டார்கள்.பாஸ் நீங்களும் கட்டிப்பிடி வைத்தியம் எல்லாம் செய்ய வேண்டாம்.பிறகு மகிளாவிடம் பிடிங்கி கொடுத்து விடுவார்கள்.

3 comments:

நீ தொடு வானம் said...

உங்க மொபெல்ல இருக்கிற கேமிராவோட மெகா பிக்சல் எவ்வளவு பாஸ்

இரும்புத்திரை said...

தலைவா ரெண்டு நாளைக்கு முன்னாடி நீங்க கொளுத்திப் போட்டதே இன்னும் அடங்கல..அதுக்குள்ள அடுத்த வெடியா..

Happy Smiles said...

Hello Friend,  Hope everything is fine.
I am a researcher from psychology department. Interested in bloggers, and their behavior. My  research topic is "Bloggers, Internet users and their intelligence".  In connection with my research I need your help.  If you spare your time, I will be sending  the research questionnaire's to your mail Id.   You can give your responses to the questionnaire.  My mail Id is meharun@gmail.com. Kindly cooperate in this survey. Your response will be used only for research purpose.  Please reply. Thank you

 
Meharunnisha
Doctoral Candidate
Dept of Psychology
Bharathiar University
Coimbatore - 641046
Tamil Nadu, India
meharun@gmail.com
 
 
(Pls ignore if you get this mail already)