Saturday, March 13, 2010

நாய் சேகர் குமுதம்

வெகு ஜன பத்திரிக்கையில் கும்தம் என்றுமே இரண்டாவது இடத்தில் தான் இருந்திருக்கிறது.விஜய் டிவியின் நிகழ்ச்சிகள் எப்படி சன்னிலும் கலைஞர் டிவியிலும் உல்டா செய்வார்களோ அப்படி தான் குமுதமும் செய்யும்.ஆனந்த விகடன் செய்வதை எல்லாம் செய்வார்கள்.சில சமயம் அதற்கு மிஞ்சியும் நிற்பார்கள்.உதாரணம் ஒரு நடிகையின் கதை,ஒரு நடிகனின் கதை என்றெல்லாம் தொடர் வரும்.எதிர்ப்பு தாங்காமல் பாதியில் விடுவார்கள்.

சுகபோனந்தா ஆனந்த விகடனில் எழுதும் போது போட்டிக்கு இந்த நித்தியானந்தாவை இறக்கினார்கள்.ஓ பக்கங்கள் ஆனந்த விகடனின் நிறுத்தப்பட்டதும் குமுதம் அதை எடுத்து கொண்டது.

ஞானி வித்தியாசமாக எழுதுவார்,சிந்திப்பார் என்று அவரே தான் சொல்லி கொள்ள வேண்டும்.எத்தனையோ பெண்களின் மானம் வீடியோவில் ஏற்றப்பட்டுயிருக்கிறது.அப்பொதெல்லாம் அவர்களுக்கு கடிதம் எழுதாதவர் ரஞ்சிதாவுக்கு மட்டும் எழுதுவார்.நாடோடி தென்றல் காலத்தில் ரஞ்சிதாவையும் அட்டைப் படத்தில் போட்டவர்கள் தான் இந்த குமுதம்.ஏன் இப்பவும் நான் என் கடமையை தான் செய்தேன் என்று அட்டைப் படத்தில் போட்டு விற்பனை செய்தார்களே.அவர்கள் மேல் எல்லாம் வழக்கு தொடுக்க சொல்லவில்லையே.நக்கீரனாவது தனது தளத்தில் தான் இந்த காட்சிகளைக் கூவி விற்கிறது.குமுதம் எனக்கு மெயில் அனுப்பி வீடியோவைப் பார்க்க சொல்கிறது.எது அதிகப்பட்ச உரிமை மீறல் கீறல் என்று ஞானி முடிவு செய்து கொள்ளுங்கள்.இல்லை நீங்கள் உங்களை யாராவது அப்படி அழைத்து விடுவார்களோ என்று நினைத்து சாருவுக்கு ஒரு பெயர் வைத்தீர்களே.அந்தப் பொருள் உங்கள் மூளையில் அப்பி விட்டது என்று எடுத்து கொள்ளலாம் தானே.

எப்படியும் கல்லா கட்டுவார்கள் என்று பழைய பதிவில் சொல்லியிருந்தேன்.யார் நித்தியானந்தருக்கு எழுதி தந்தார் என்றும் இதில் இருக்கிறது.எல்லோரும் சாருவை அடிக்கிறார்கள்.தப்பில்லை.அதே அளவு குமுதம்,ஆ.வி இரண்டையும் கேட்க வேண்டும்.

இன்று சில மாதங்களுக்கு முன் அரசு பதிலால் கட்டிப் புரண்ட நீங்கள் பத்திரிக்கை விற்க அவரை வைத்தே வியாபாரம் செய்வது உங்களுக்கு வேண்டுமானால் பெரிய புத்திசாலித்தனமாக இருக்கலாம்.ஆனால் இது நாய் சேகர் சொன்னது போல் திரிஷா இல்லை என்றால் திவ்யா கதை தான்.அதுவும் இல்லையென்றால் நயன்தாரா என்று சொல்வீர்கள் நானும் என் காசை இழக்க வேண்டும்.

பேசாமல் ஞானியை வைத்து சாருவையும்,சாருவை வைத்து ஞானியையும் அடித்து கொள்ள செய்யுங்கள்.இரண்டு பத்திரிக்கைகளும் விற்கும்.

குமுதம் நித்தியைப் பார்த்து - "பயபுள்ள எப்படி கோர்த்து விடப் பாக்குது.." அந்த பக்கமாக வரும் சாருவைப் பார்த்து "ஏய் சின்னப்பையா வா வந்து டிச்சு கொடு.."

சாரு - "அதெல்லாம் வேண்டாம்பா.."

இரும்புத்திரை - "யூரின் டாங்க் உடையாம குமுதம் திருந்தாது போல.."

இப்படி ஒரு நாள் நடக்கும்.அன்று நீங்கள் மொத்தமாக புறக்கணிப்படுவீர்கள்.தயவு செய்து அந்த வீடியோ இருக்கிறது,இந்த வீடியோ இருக்கிறது என்று யாருக்கும் மெயில் அனுப்ப வேண்டாம்.தேவையென்றால் அதையும் நானே தேடி எடுத்து கொள்வேன்.தனிமனித உரிமை மீறல் என்று ஞானி சொன்னாரே.இந்த கீறல் எல்லாம் அதில் வராதா.

10 comments:

மர்மயோகி said...

ஞானியும், சாருவும், பாமரனும் யாராக இருந்தாலும், தங்கள் சரக்கு விலை போக எந்த பத்திரிக்கையும் தாங்கிப் பிடிப்பார்கள்..குமுதம், ஆனந்த விகடன் போன்ற மஞ்சள் பத்திரிக்கைகளை எதிர்க்க முதுகெலும்பில்லாதவர்கல்தான் மற்றவர்களுக்கு அறிவுரை கூற வருகிறார்கள்..

Unknown said...

சரியா சொன்னீங்க பாஸூ..

வீடியோ இருக்குன்னு மட்டும் மெயிலடிச்சா பரவாயில்ல.. நிர்வாணமாய் நித்யானந்தர்னு ஒரு மெயிலு வேற..

இரும்புத்திரை said...

இந்த முறையும் தலைப்பு தப்பா வந்திரிச்சே.ஆ_ என்று வந்து இருக்க வேண்டும்.நாராயணாஆ நாராயணாஆ

இரும்புத்திரை said...

எதிர்த்தால் டப்பு தேறாதே பாஸ்.ரஞ்சிதாவுக்கு கடிதம் எழுத தெரிந்தவருக்கு குமுதம் பத்திரிக்கைக்கு எழுத முடியவில்லையே.நன்றி மர்மயோகி.

நன்றி முகிலன்.அந்த கருமம் வேற வந்துச்சா.அதை இன்னும் திறந்து பாக்கலை.

Raju said...

அதுக்கு 18 வயசு ஆகனுமா..?
எனக்கெல்லாம் மெயிலே வரல..!

இராகவன் நைஜிரியா said...

நச்சென்ன்று இருக்கு உங்க இடுகை.

மணிப்பக்கம் said...

நச்! ;)

cheena (சீனா) said...

ஆமா ராஜு

எனக்கும் வரல - நாம சின்னப்பசங்களா

சவுக்கு said...

அருமையான பதிவு நண்பரே

சகோதரன் ஜெகதீஸ்வரன் said...

நிர்வாணமாய் ரஞ்சிதான்னு போட்டா இன்னும் கூட பரவில்லை. நித்தியானந்தரைப் பார்த்து என்ன ஆகப்போகுது.

மக்களின் விருப்பமும் இந்த மாதிரி விசயங்களிலே செல்கிறது. அதனால் தான் பத்திரிக்கைகள் திருந்தவில்லை. நடிகைக்கு பதில் வேறு ஆசிரப் பெண் இருந்திருந்தால் இந்தளவு விற்பனை ஆகியிருக்காது.

தமிழர்களுக்கு நடு்ப்பக்கதில் நடிகைகளை போடாமல் புத்தகம் விற்கமுடியாது என்கிறேன் நான்.