Sunday, March 14, 2010

எதிர்வினை

நான் எழுதியதைப் படித்து விட்டு மற்றவர்களுக்கு கோபம் வந்தால் அது தான் என்னுடைய எழுத்தின் வெற்றி என்றே நினைக்கிறேன்.இன்னும் சிலரும் நினைக்கலாம்.என்னை கோபப்படுத்தும் அளவிற்கு யாரும் எழுதவில்லை என்று நான் அடிக்கடி சொல்வதுண்டு.அது நிச்சயம் பொய் என்று இப்பொழுது தெரிகிறது.என் கோபம் லேசாக நிமிண்டப்பட்டுள்ளது.

செல்வேந்திரனின் புத்தக விமர்சனப் பதிவை படித்தப் பின் எனக்கு தோன்றியது உள்ளாடையை ஈரமாக்கும் இரண்டு வயது குழந்தையை உக்காரும் இடத்தில் கழியால் அடிப்பது போலிருந்தது.இரண்டு வருடம் தினமும் தான் இப்படி கழிக்கிறாய் என்று வாதத்தை வைத்து விட்டால் செய்தது சரி ஆகி விடுமா.பதினெட்டு வருடங்கள் அவர் எழுதி வந்தாலும் அச்சில் தனியொரு புத்தகமாக வெளி வருவது இது தானே முதல் முறை.

பதினெழு கதைகளில் ஆறு கதைகள் தேறும் என்று பார்த்தால் அது தேர்ச்சி பெற என்ன சதவீதம் வேண்டுமோ அந்த அளவுகோலை அது தாண்டுகிறது.

ஜெனீபர் கதை பிடித்திருக்கிறது என்று சொன்ன நீங்கள் அதே மாதிரி ஒரு மெலோ டிராமா வகையான கதையை தான் முந்தைய பதிவில் குசலம் என்று எழுதி இருந்தீர்கள்.போன தலைமுறையும் அடுத்த தலைமுறையும் என்றுமே உறவு கொண்டாடும் என்று ஒரு வரியில் முடிய வேண்டியது ஒரு கதையாக மாறியிருந்தது.தயவு செய்து அதில் வந்த பின்னூட்டங்களை நம்பி விட வேண்டாம்.நம்ப மாட்டீர்கள் என்று தெரியும்.எல்லா கதையுமே நாம் எதிர்பார்ப்பது போல் இருந்தால் தான் நூறு சதவீத வெற்றி கிட்டும் என்றால் அது என்றுமே நடக்காது.

பல காலம் சமைக்கிறோம் ஒரு நட்சத்திர விடுதியில் இருந்து நம் சமையல் திறமையை காட்ட ஒரு வாய்ப்பு வந்தால் மறுப்போமோ.இப்படி ஒரு சின்ன அளவுகோலை நீங்கள் உதாரணமாக காட்டாமல் இசையமைப்பாளர்,தலைமை அதிகாரி,திட்டகுழு தலைவர் என்று என்றுமே நடக்காத ஒன்றை உதாரணமாக காட்டுவது நிச்சயம் உங்கள் வாதத்திறமையை காட்டுகிறது.

நூறு சதவீதம் முழுமையாக இருக்க வேண்டும் என்ற அவசியமே இல்லை.மக்கள் மறந்திருப்பதை லேசாக தொட்டுக் காட்டினால் போதும் அது பெரிய வெற்றியை அடையும் என்பதை சமீபத்தில் வந்த தமிழ்ப்படம் செய்து காட்டியது.இதுவே தொடர்ந்து லொள்ளு சபா ஒளிபரப்பாகி கொண்டிருந்தால் அந்த படமும் இன்னொரு வெள்ளிக்கிழமை படமாக மாறி இருக்கும்.அதை தான் தயாரிப்பாளராக தயாநிதி செய்து காட்டினார்.அதே கதை தான் பரிசலின் புத்தகத்தில் பதிப்பாளருக்கும் வாசகர்களுக்கும் நடந்திருக்கிறது.

புத்தகத்தை வாங்கி படித்தப் பின் பத்திரமாக வைத்திருந்தால் அது அந்த புத்தகத்தின் வெற்றி என்று நான் ஒத்துக் கொள்கிறேன்.ஆனால் அது பழைய புத்தகம் விற்கும் கடைக்கே வரக் கூடாது என்றால் அது நடக்கவே நடக்காது.சுஜாதாவின் புத்தகத்தையும்,கல்கியின் பொன்னியின் செல்வன் புத்தகத்தையும் நான் பழைய காயலான் கடையில் பார்த்திருக்கிறேன்.அதற்காக அந்த புத்தகம் தோல்வி என்று அர்த்தமா.

சினிமாவை விமர்சனம் செய்யும் நீங்கள் என்ன ஒழுங்கா என்று என்னை கேட்டால் நான் எந்த அறிமுக இயக்குனர் படத்தையும் கிழிப்பதில்லை.அது மாதிரி அடுத்த புத்தகம் வெளியீட்டின் போது நீங்கள் இதை செய்து இருந்தால் நானும் என் பங்கிற்கு ஒரு ஜால்ராவை எடுத்துக் கொண்டு வந்திருப்பேன்.நல்லவேளை நெடுநாள் கழித்து தான் இந்த விமர்சனத்தை எழுதி உள்ளீர்கள்.முதலிலேயே எழுதியிருந்தால் எல்லோரும் உங்கள் பார்வையிலேயே படித்திருப்பார்கள்.பழைய புத்தகக் கடைக்கு நிறைய புத்தகம் சேர்ந்திருக்கும்.

இதில் மொத்தமாக எனக்கு பிடித்தது 2008ம் ஆண்டு இறுதியில் அவர் பதிவின் மூலமாகத்தான் உங்களை அறிந்து கொண்டேன்.பாரபட்சமில்லாத உங்களுடைய நேர்மையான விமர்சனம் பிடித்திருக்கிறது.மற்றபடி மஞ்சள் துண்டு மளிகைகடை,சுற்றறிக்கை என்பதில் உடன்பாடு இல்லை.இது முதல் முயற்சி என்பது தான் உண்மை.

அடுத்த எதிர்வினை கூட உங்களுக்கே எழுதலாம்.வேண்டுமானால் கேபிள் சங்கரின் புத்தகத்துக்கு விமர்சனம் எழுதலாம்.

4 comments:

நீ தொடு வானம் said...

//வேண்டுமானால் கேபிள் சங்கரின் புத்தகத்துக்கு விமர்சனம் எழுதலாம் //

அவரை சிக்க வைக்காமல் தூக்கம் வராதே

Thamira said...

பல வரிகள் ஏற்புடையவை அல்ல..

Happy Smiles said...

Hello Friend,  Hope everything is fine.
I am a researcher from psychology department. Interested in bloggers, and their behavior. My  research topic is "Bloggers, Internet users and their intelligence".  In connection with my research I need your help.  If you spare your time, I will be sending  the research questionnaire's to your mail Id.   You can give your responses to the questionnaire.  My mail Id is meharun@gmail.com. Kindly cooperate in this survey. Your response will be used only for research purpose.  Please reply. Thank you

 
Meharunnisha
Doctoral Candidate
Dept of Psychology
Bharathiar University
Coimbatore - 641046
Tamil Nadu, India
meharun@gmail.com
 
 

(Pls ignore if you get this mail already)

cheena (சீனா) said...

அன்பின் அரவிந்த்

எதிர்வினை - நிமிண்டப்பட்ட கோபம் - இடுகையாக வெளி வந்துள்ளது - ம்ம்ம்ம்ம் - வாழ்க - நல்வாழ்த்துகள்