Tuesday, March 30, 2010

அய்யனார்,சுரேஷ் கண்ணன் மீது சங்கம் நடவடிக்கை எடுக்குமா

 அய்யனார்,சுரேஷ் கண்ணன் இருவரும் அங்காடித் தெருவை விமர்சனம் செய்து அவர்கள் பாணியிலேயே படம் பார்க்க வைக்கிறார்களோ என்று சந்தேகம் லேசாகவருகிறது.யார் கண்ணுக்கும் தெரியாத குறியீடுகள்,அளவுகள் இவர்கள் கண்ணுக்கு மட்டும் எப்படி தெரிகிறது.எனக்கு தெரிந்த இன்னொரு குறியீடு பைத்தியக்காரனின் பார்வை.இதற்கு முன் நான் கடவுள் படத்தைப் பற்றி ஒரு நீண்ட பின்னூட்டம்.இரண்டு படத்தக்கும் ஒரு ஒற்றுமை உள்ளது.அது தான் நான் கண்ட குறியீடு.முடிந்தால் சங்கம் இவர்கள் மூவரையும் ஒரு மாதத்திற்கு எங்காவது அடைத்து வைக்கலாம்.அதற்குள் நான் படம் பார்த்து விடுவேன்.(இப்படி எழுத முடிவு செய்து இருக்கிறேன் என்று சொன்னவுடன் நீங்கள் மட்டும் ஒழுங்கா.உங்களையும் அந்த அறையில் அடைக்க வேண்டும் என்ற தோணியில் திட்டு கிடைத்தது.மக்கா எனக்கு இந்த தண்டனை எல்லாம் கொடுக்க வேண்டாம்)

நான் எழுதாமல் இருக்கும் போது ஏன் எழுதவில்லை என்று உரிமையாக குட்டாதவர்கள் தினமும் ஏன் எழுதி எங்கள் உயிரை வாங்குகிறாய் என்று அன்பாக குட்டுபவர்கள் மீது சங்கம் நடவடிக்கை எடுக்குமா.

ஒரு காலத்தில் மைனஸ் ஓட்டுகள் போட்டு என்னை புளங்காகிதம் அடைய செய்தவர்கள் இன்று பெயர் தெரிகிறது என்றவுடன் மைனஸ் போடாமல் இருக்கிறார்களே அவர்கள் யார் என்று சங்கம் கண்டுப்பிடித்து சொல்லுமா.

பதிவு பரிந்துரையில் ஏற இன்னும் ஆறு ஓட்டு வேண்டும் என்று தெரிந்தும் அதற்கு உதவி செய்யாமல் போனால் அவர்களாகவே ஓட்டு போடும் வரை சங்கம் பதிவைப் படிக்க வைக்குமா.

யாராவது நான் இருக்கும் இடத்திற்கு ஆட்டோ அனுப்பினால் சங்கம் அந்த ஆட்டோவை கட் செய்யுமா.

பா.ம.கவின் மக்கள் தொலைக்காட்சியைப் பாராட்டி எழுதிய போது இதை ஐயாவிடம் அனுப்பட்டுமா என்று கேட்காத நண்பர்கள் பா.ம.கவை விமர்சித்த போது இதை ஐயாவுக்கு அனுப்பட்டுமா என்று கேட்டு ஒரு ஜர்க் உண்டாக்கும் அன்பர்களின் ஐ.பியை சங்கம் கண்டுப்பிடித்து தருமா

எதிர்வினை எழுத மாட்டேன் என்று சொல்லி விட்ட பிறகும் நீ எழுதியே ஆக வேண்டும் என்று ஒற்றைக் காலில் நின்ற சங்கத்தின் நிரந்தர(நிராதரவான) தலைவர் சாறு சங்கர் மீது சங்கம் நடவடிக்கை எடுக்குமா.தலைவர் பதவி கிடைக்காத பதற்றத்தில் ஆணியே பிடுங்க வேண்டாம் என்றும்,தண்ணீர் வாங்கி தராமல் வாங்கி தந்தேன் என்று பொய் சொன்ன சாறு சங்கரின் மீது வழக்கு தொடுக்குமா.

சாந்தாமணியின் மீது உரிமை கொண்டாடிய அதிஷாவிற்கு கென் என்னுடைய சாதாமணியை வேணா தர்றேன் என்று என்னை கேட்காமல் சொல்லி விட்டார்.கென்னுக்கு சங்கம் கண்டனம் தெரிவிக்குமா.

மும்பையில் தங்கமனியிடம் அடி வாங்கிய ரங்கமணியை காப்பாற்ற வீடியோ எடுத்து உதவியது போல் சென்னையில் தங்கமணி அடி வாங்கும் தங்கமணி புகழ் பதிவரின் அந்த வீடியோவை சங்கம் ஒளிப்பரப்புமா.முடியும் போது ஏ பிலிம் பை __ என்று அவர் பெயர் வர வழி(லி) வகை செய்யுமா.

இந்த பதிவுக்கும் சேர்த்து யாராவது வழக்கு போட்டால் சங்கம் என் கைச்செலவுக்கு பணம் தருமா.

சொல்லுங்க ஏன்னா நான் இப்போ சங்கத்தோட உறுப்பினர்.

12 comments:

- யெஸ்.பாலபாரதி said...

:)

SUREஷ்(பழனியிலிருந்து) said...

சங்க உறுப்பினர் பகலில் செய்யும் செயல்களுக்குத்தான் சங்கம் பாதுகாப்பு அளிக்கும். இரவில் கதவைச் சாத்திக்கொண்டு தனியறையில் அமர்ந்து கொடுக்கும் இடுகைகளுக்கான எதிர்வினைகளை அவரே சந்தித்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் மூடிய அறையில் இருப்பவர்களை உறுப்பினர்களாகக் கருத சங்க விதிகள் இடம் கொடுக்காது.

இரும்புத்திரை said...

நன்றி தல

டாக்டர் நான் என்ன ரஞ்சிதாவா.

Unknown said...

ஐ சாமி பின்னூட்டத்துக்கு பதில் எல்லாம் போடுது??

இரும்புத்திரை said...

பதில் போட்டா எண்ணிக்கை கூடி முப்பதை தொடுமாம் முகிலன் - சொன்னது ஜேம்ஸ்

சங்கர் said...

//எதிர்வினை எழுத மாட்டேன் என்று சொல்லி விட்ட பிறகும் நீ எழுதியே ஆக வேண்டும் என்று ஒற்றைக் காலில் நின்ற சங்கத்தின் நிரந்தர(நிராதரவான) தலைவர் சாறு சங்கர் மீது சங்கம் நடவடிக்கை எடுக்குமா//

உனக்காக ஒத்த காலெல்லாம் நிக்கல, சங்க கூட்டத்துல ரெண்டுமணி நேரமும் நின்னுக்கிட்டிருந்து வந்த கால்வலி வலியே போக வழிய காணும்

சங்கர் said...

//தலைவர் பதவி கிடைக்காத பதற்றத்தில் ஆணியே பிடுங்க வேண்டாம் என்றும்//

முதல் வரில நிரந்தர தலைவர்னு சொன்னே, அப்புறம் தலைவர் பதவி தரலைன்னு சொல்ற,

குரு பேர நல்லா காப்பாத்தற :))))

சங்கர் said...

//தண்ணீர் வாங்கி தராமல் வாங்கி தந்தேன் என்று பொய் சொன்ன சாறு சங்கரின் மீது வழக்கு தொடுக்குமா//

தண்ணீர் தந்த தங்கமே, தாகம் தணித்த வள்ளலேன்னு போஸ்டர் வச்சிருந்ததை எல்லாம் சொல்ல வேணாம்னு பாத்தா விடமாட்டேங்கறியே

சங்கர் said...

//பதிவு பரிந்துரையில் ஏற இன்னும் ஆறு ஓட்டு வேண்டும் என்று தெரிந்தும் அதற்கு உதவி செய்யாமல் போனால் அவர்களாகவே ஓட்டு போடும் வரை சங்கம் பதிவைப் படிக்க வைக்குமா.//

ஏழாவது ஓட்டு என்னோடது, சங்கத்தால இதுதான் செய்யமுடியும்

பிச்சைப்பாத்திரம் said...

எப்படியெல்லாம் பயமுறுத்துறாங்க? :)

அகநாழிகை said...

அப்படியே ஷாக்காயிட்டேன் தலைப்பை பார்த்து.

படிக்கறப்பதான் தெரிஞ்சது.

:)

நடத்துங்க.

Romeoboy said...

\\ஒரு காலத்தில் மைனஸ் ஓட்டுகள் போட்டு என்னை புளங்காகிதம் அடைய செய்தவர்கள் இன்று பெயர் தெரிகிறது என்றவுடன் மைனஸ் போடாமல் இருக்கிறார்களே அவர்கள் யார் என்று சங்கம் கண்டுப்பிடித்து சொல்லுமா//


நான் மைனஸ் ஓட்டு போட்டேன் ..