Friday, July 31, 2009

ஏன் திவ்யா எனக்கு மட்டும் இப்படி எல்லாம் நடக்குது!

தயவு செய்து சொல்லுங்கள் எனக்கு மட்டும் தான் இப்படியா இல்ல உங்களுக்குமா ?

1. எனக்கு இந்தி தெரியாது அப்படி கால்ல விழுந்து கதறினாலும் இந்திலே பேசி பேசி சாக அடிக்கறது. இன்னைக்கு சொல்றேன் கேட்டுகோங்க எனக்கு தெரிஞ்ச இந்தி "ஏக் காவ் மே ஏக் கிசான் ரஹதாத்தா இல்ல ரகுதாத்தா" (இந்தி தெரியாதுன்னு நினைச்சி என்னை இந்தியில் யாரும் கெட்ட வார்த்தையில் திட்டி விட வேண்டாம். ஊர்ல ரயில் ஏறும் போதே இந்தியில் உள்ள கெட்ட வார்த்தைகளை கத்து கிட்டு தான் வந்து இருக்கேன் டேய் நீ மகாராஷ்ரா டாக்சின்னா நான் தமிழ்நாடு ஆட்டோடா)

2. நான் எப்போ எந்த பெண்ணையாவது துரத்தி போய் சைட் அடிச்சாலும் அந்த பொண்ணு நல்லாவே இருக்காது. நான் பார்க்க முடியாம போற பொண்ணு மட்டும் ரொம்ப நல்லா இருக்கு.(அவளை பார்ப்பதற்குள் என் வீடோ,அலுவலகமோ,ஆணியோ குறுக்கே வந்து தொலைத்து விடுகிறது)

3. நான் பதிவு எழுதும் பொழுதோ இல்லை படிக்கும் பொழுதோ மட்டுமே ஆணி புடுங்க கூப்பிட்டு தொலைக்கிறார்கள். சும்மா காத்து வாங்கி கிட்டு இருப்பேன் ஆணி இருந்தாலும் கூப்பிட மாட்டார்கள்.

4.ரயில் ஏற போனா நான் ஸ்டேஷன் உள்ளே வரும் பொழுது வண்டி காலியா காத்து வாங்கிட்டு போகுது. சரி வந்துரும்ன்னு பார்த்தா கூட்டம் சேர்ற வரைக்கும் வராது. அதுக்குள்ள எதிர் திசைல நாலு வண்டி கடந்து போகுது. காலையிலே தான் இப்படினா சாயந்திரமும் இப்படி தான் நடக்குது.

5.நான் சைட் அடிக்கிற பொண்ணுங்களுக்கு மட்டும் உடனே கல்யாணம் நிச்சயம் ஆகி விடுகிறது.(இதுக்கு பயந்தே இப்போ ஒரு பெண்ணையும் சைட் அடிக்கிறது இல்ல)

6.ஏதாவது பாவப்பட்ட ஜீவன் (என்கிட்டே பேசுனா) திடீர்ன்னு நம்மகிட்ட பேசும் ஆனா அன்னைக்கு தான் ஆணி நிறைய இருக்கும்.பேச மாட்டேன். அதுக்கு அப்புறம் பார்த்தாலும் பாக்காத மாதிரியே போகும்.(இந்த பொண்ணு கூட திரும்பவும் முதல்ல இருந்தா அதுக்குதான் வேற பொண்ண கூட பேச முயற்சி பண்ணுவேனே என்று நானும் பேச மாட்டேன் (serious but not sincere))

7.கைகுடுக்கும் போது அழுத்தி பிடித்து ஆளுமையை காட்டுவார்கள். மெதுவாக பிடித்து அன்பானவர்கள் என்று சக மனிதர்களிடம் காட்டலாமே.( அதுக்குத்தான் நான் யார பார்த்தாலும் நம் வழக்கப்படி கும்பிடு போடுவேன் அப்பவும் விடாமல் கையை பிடித்து அழுத்துவார்கள்)

8. பஸ்ல போகலாம்ன்னு பார்த்தா நான் ஏற வேண்டிய பஸ் மட்டும் வராது. சரி நடந்து போகலாம் முடிவு செய்து நடந்தா சரியா இரண்டு ஸ்டாப்பிங் நடுவிலே இருக்கும் போது மூணு பஸ் தொடர்ந்து வரும்.

9. புதுசு புதுசா ஆணிய உருவாக்கி என் தலையிலே கட்டுறாங்க. யோசித்து ஆணிய புடுங்கறது முன்னாடி உயிர் போய் உயிர் வருது(பதிவு எழுத கூட நான் ரொம்ப யோசித்தது கிடையாது). நானும் பார்க்குறேன் நீங்க என்னைக்காவது இந்த வார்த்தைகளை சொல்லுவிங்கன்னு. அது இதுதான் "நீ ஆணியே புடுங்க வேண்டாம்" .

10. நான் நிறைய காசோட போய் எதாவது சாப்பிட கேட்டால் "நீங்க கேட்டது இல்லைன்னு சொல்லி அந்த சர்வருக்கு பிடிச்சத என் தலையில் கட்டுறது" .நான் டீ குடிக்க மட்டும் காசு வைச்சு இருக்கிறபோ "அது இருக்கு இது இருக்கு இப்படி சொல்லியே என்னை வெறுப்பு ஏத்துறது"

டிஸ்கி :

எப்படி தான் மொக்கை போட்டாலும் பின்னுட்டமும், பாலோயரும் கிடைக்கிறது ரொம்ப கஷ்டம்தான்
(என்ன கொடுமை பிரபு இது)

8 comments:

SK said...

பாயிண்ட் பாயிண்ட்டா தான் பதிவு எழுதனும்னு வேண்டுதலா சார் :-)

மணிகண்டன் said...

My first visit. Good Post ! Neenga kuduthu vachavarunnu artham!

நாடோடி இலக்கியன் said...

எட்டாவது பாயிண்ட் நிறைய பேருக்கு நடந்திருக்கும்

Suresh Kumar said...

எப்படி தான் மொக்கை போட்டாலும் பின்னுட்டமும், பாலோயரும் கிடைக்கிறது ரொம்ப கஷ்டம்தான்
(என்ன கொடுமை பிரபு ///////////////

இப்படியெல்லாம் ரெம்ப கவலை படாதீங்க

நிகழ்காலத்தில்... said...

\\பதிவு எழுத கூட நான் ரொம்ப யோசித்தது கிடையாது)\\

அந்த தப்ப மட்டும் செய்திராதீங்க...:))))

நேசமித்ரன் said...

பின்னிப் பெடலேடுக்குரீங்க பாசு..!

வெட்டிப்பயல் said...

Kalakal Boss :)

இரும்புத்திரை said...

நன்றி sk

நன்றி மணிகண்டன் அடிக்கடி வாங்க

நன்றி நாடோடி இலக்கியன்

நன்றி சுரேஷ்

நன்றி நிகழ்காலத்தில்.

நன்றி நேசமித்ரன்

நன்றி வெட்டிப்பயல்