Thursday, September 23, 2010

கூகுள் பஸ் = மூத்திரசந்து டிவிட்டர் = முட்டுசந்து

யாரு கிட்டயாவது சிக்கிட்டா முதலில் ஐந்து பேர் தான் அடிக்கிறாங்க..அப்புறம் ஒரு நாலைஞ்சு பேர் வந்து லைக்குறாங்க..

லைக்குறாங்களா.. பிரியலையே..

தள்ளி விட்டு விளையாடும் முன்னாடி லைக்குவாங்க..

அப்புறம்..

மூச்சுத்திணற  திணற அடிக்கிறாங்க..

ச்சே..

அப்புறம் ஃபாலோ பண்ணாதவங்க கிட்ட எல்லாம் மச்சி நீ ப்ரீயான்னு கேட்டு அவங்களை வரவழைச்சி வெளுத்து எடுக்கிறாங்க..

ஐயோ பாவம்..அடிச்சிட்டு விட்டுடாங்களா..

விட்டா தான் பரவாயில்லையே..முதல்ல இருந்து அடிக்கிறாங்க..ரெஸ்ட் ரெஸ்ட் எடுத்து அடிக்கிறாங்க..நானும் எவ்ளோ நேரம் தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது..

அப்புறம் இவன் ரொம்ப நல்லவன்னு சொல்லிட்டாங்களா..

அப்படி சொன்னாலும் பரவாயில்லயே..டேய் இவன் திரும்ப திரும்ப பேசுறாண்டான்னு சொல்லிட்டாங்க..அவ்வ்வ்வ்வ்வ்வ்..

அப்புறம் எப்படித்தான் தப்பிச்சீங்க..

பஸ் ஓனர் என் மேல பாவப்பட்டு பஸ் கதவை அடிச்சிட்டாரு..

ஒத்தடத்திற்கு பின் அடுத்த நாள்

தல அடி ரொம்ப பலமோ..வாயிலே போட்டாங்க போல..

ஆமா அடி வாங்கும் போது ஒருத்தரும் வராதீங்க..இப்ப வாய் கிழிய பேசுங்க..

அடி கொடுத்தவனுக்கே இவ்ளோ காயம்னா அடி வாங்கியவன் உசுரோட இருப்பானா..

இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்பை ரணகளம் ஆக்கிருவாங்களே..

ஒரு புது பஸ்ஸர் வருகிறார்..

அடிக்க ஆள் அனுப்பிடாங்கடா..சங்கத்தைக் கலைங்க..நெக்ஸ்ட் மீட் பண்ணுவோம்..

சார் இந்த மூத்திர சந்து எங்கே இருக்கு..

தம்பி நான் எல்லாம் எவ்ளோ பெரிய பஸ்ஸர் தெரியுமோ..எந்த பேரை நசுக்கு நசுக்குன்னு நசுக்கி தூக்கி எறிஞ்சிருக்கேன் தெரியுமா..இது ரத்தப் பூமி..

சட்டை எல்லாம் கிழிஞ்சிருக்கு..

சண்டையிலே கிழியாத சட்டை எங்கேயிருக்கு..

புது பஸ்ஸர் போனப்பின்..

டேய் இனி அவங்க எரியாவுல போய் கோட்டைத் தாண்டி வராதேன்னு சொல்லக்கூடாது..தெரியாமல் பார்டரைக் கிராஸ் பண்ணனும்..

பார்டரைக் கிராஸ் செய்யும் போது..

பாஸ் அந்த வழியா போகாதீங்க..இங்க வாங்க..

வெளிச்சம் இல்லையே..தீக்குச்சியைக் கிழிக்கிறார்..

யோவ் எந்திருச்சிருவாங்க..அணைச்சிட்டு என் பின்னால வாயா..

நீ யாரு..

நானும் ஒரு பஸ்ஸர்..பார்டர் தாண்ட வந்தேன்..

நான் அப்படி இல்லடா..

யோக்கியனுக்கு இருட்டுல என்ன வேலை..

பஸ் ஓனர் முழித்து கொண்டு புது பஸ்ஸரைப் பிடித்து கொள்கிறார்.

பாஸ் என்னை விட்டுட்டு போகாதீங்க..

திரும்பவும் மூத்திர சந்தில் விட்டு வெளுக்கிறார்கள்.பஸ் ஓனர் கதவை மூடும் வரை இது நடக்கும்.

9 comments:

vasu balaji said...

இப்புடி வேறயா:))

எல் கே said...

ஹிஹிஹ்

Paleo God said...

ஏன் அர்விந்த் நாலரைப் பாலா குடிக்கறீங்க?

இரும்புத்திரை said...

இங்கே பால் கிடைக்கிறது இல்ல

அபி அப்பா said...

ஆகா மூத்திரசந்திலே அடிவாங்குவது பத்தி ஒரு ஆராய்சியே நடந்திருக்கே முனைவர். இரும்புத்திரை அய்யா:-)))

மங்களூர் சிவா said...

:)))

Ahamed irshad said...

யாஹீவை ட்ரெயின் அப்படின்னு ஒன்னு விடசொல்லலாமே.. எது செஞ்சாலும் குற்றம் கற்பிப்பது சிலருக்கு நல்லாவே வரும்ங்க..

சங்கர் said...

அண்ணே

டேய்,

அண்ணே,

அப்போலேருந்து நொண்ணே, நொண்ணேன்னு மட்டும் சொல்ற, அடிவாங்கினத ஏண்டா சொல்லல?

அண்ணேன்னு மட்டும்தான் சொல்ல வருது, அடிவாங்கினது சொல்ல வர்லண்ணே,

வந்தாலும் நீ சொல்லியிருக்க மாட்டியே, நானும் வாங்கட்டும்னு தானே விட்டுருப்ப

Anonymous said...

செம ரகளையா இருக்கு சூப்பர்