Tuesday, September 7, 2010

நானும் கொஞ்சம் சாத்துறேன்

நர்சிம் சொன்ன குறும்படத்திற்கான கருவில் நான் ஒரு கிளைமேக்ஸ் சொன்னேன்.எல்லாம் ஆதியிடம் உதவி இயக்குனராக சேர்ந்து விடும் ஆசையில் தான்.

கதை - ‘மகன் ஒரு ஆண்மையற்றவன் என்பது தெரியாமல் அவன் தாயார் அவனுக்கு நிச்சயதார்த்த ஏற்பாடுகள் செய்கிறார். எவ்வளவோ மறுப்புகளை வேறு வழிகளில் சொல்லியும் கேட்டபாடில்லை எனும் நிலை. அன்றைய பொழுதில் அவன் மனதில் எழும் எண்ணங்கள். கண்ணாடி முன் நின்று அவன் படும் அவஸ்தைகள்’ இது தான் களம். அரைகுறை மனதோடு சரி என்னதான் நடக்கிறது பார்ப்போம் என்ற மனப்பான்மைக்கு வரும்பொழுது நிகழும் ஒரு சம்பவம் அல்லது பார்க்கும் ஒரு காட்சி, தான் சம்மதித்து தவறு செய்ய இருந்ததை எண்ணி வருந்தவைக்கிறது.’

நிச்சயம் செய்ய அக்காவோடு குழந்தையும் வந்திருக்கிறது.(அக்கா இல்ல என்று மறுக்க முடியாது).

"மாமா உனக்கு கல்யாணமா.." என்று கேட்கிறாள்.

"ம்.." ஒற்றை வார்த்தையில் வார்த்தையில் பதில் சொல்கிறான்.

"அப்போ எனக்கு ஒண்ணு,ரெண்டு,மூணு இல்ல நாலு பாப்பா வேண்டும்.." என்று பத்து விரல்களை  விரித்து காட்டுகிறாள்.(இதுல எல்லாம் லாஜிக் பாத்தாலும் பதில் இருக்கு.அந்த பொண்ணுக்கு கையில பத்து விரல் இருக்கு..வீட்ல தம்பி பாப்பா கேட்டு அவங்க அப்பா உதை வாங்கி இருப்பார்)

இங்க ஒண்ணுக்கே வழியில்லை.இதைத்தான் அறுக்க மாட்டாதவன் இடுப்பை சுத்தி முப்பதெட்டு கறுக்கருவாளாம் என்று சொல்வாங்க.

இன்னும் பாக்யராஜ் பாணியில்,சாரு பாணியில்,ஜெயமோகன் பாணியில்,வாரமலர் பாணியில்  முடிவு சொல்கிறேன்.என்ன கொஞ்சம் காஸ்ட்லி.

*************************

என்றாவது அமர்,ராஜி என்று கதை எழுத ஆரம்பித்தாலே போதும் தோழர்களோடு சண்டை வரும்.சனி, ஞாயிறு என்று இரண்டு நாளும் சண்டையிலே கழிந்து விடும்.இந்த பிரச்சனையே வேண்டாம் என்று தான் மீள்பதிவு,பஸ்ஸில் ஏத்தி விட்டது,டிவிட்டரில் இறக்கி விட்டது என்று எழுதியது எல்லா எழுத்துகளையும் வார்த்தைகளையும் ஒன்று விடாமல் ப்ளாக்கில் வாரிப் போட்டு கொள்கிறேன்.ஐயோ அம்மா அமர்,ராஜி என்று எழுதி விட்டேனே.

அமரால் ஒரு பிரச்சனையும் கிடையாது.என்ன வேண்டுமானாலும் அவனைப் பற்றி எழுதலாம்.அவனுக்கு தமிழ் படிக்க தெரியாது.எழுத தெரியும்.நான் சொன்னது தெரிந்தால் எதிர்வினை எழுதுவான்.கூகுள் டிரான்ஸ்லேஷன் புண்ணியத்தில்.எனக்கு படிக்க வரும்.எழுத வராது. என்ன கொடுமை அமர் இது. உடனே நீதானே அந்த அமர் என்று ஆரம்பிக்கக்கூடாது.நிச்சயம் எனக்கு மகன் பிறந்தால் அமர் என்று பெயர் வைப்பேன்.பெண் பிறந்தால் என்ன பெயர் என்று கேட்பவர்களுக்கு பதில் நிச்சயம் ராஜி கிடையாது.

பஸ்ஸில் அடித்த கும்மியிலும், அசதியிலும், பாதி மறந்து தொலைத்ததாலும் எழுதவில்லை. எழுதியிருந்தால் ஷூவைக் கிழித்திருப்பார்கள். எழுதி தொலைத்து விட்டேன்.காலையில் ஷூ கிழிந்திருக்கிறதா என்று பார்க்கும் அவசரத்தில் இரண்டு காலிலும் வெவ்வேறு ஷாக்ஸ் போட்டு விட்டேன்.நல்ல வேளை பேண்ட் மறைத்து விட்டதால் நான் செய்த புரட்சி வெளியே தெரியாமல் போய் விட்டது.

*******************************

இரண்டு வாரங்களுக்குப்பின் சனி,ஞாயிறு எந்த சண்டையும் போடாமல் விரக்தியின் விளிம்பிலிருந்தேன். தற்கொலை செய்து கொள்ளும் வந்து விட்டால் என்ன செய்வது. அந்த எண்ணத்தை அழித்தொழிக்க சுறா படம் பார்த்தேன்.முடிவில் தான் தெரிந்தது எவ்வளவோ பார்த்துட்டோம் இதையும் பார்க்க மாட்டோமா என்ன. சுறா பார்த்தப்பின் ஒரு முடிவுக்கு வந்தேன்.அவர்களே உயிரோடு இருக்கும் போது உனக்கு என்ன குறைடா ராஜா.நான் இயக்குனரை சொன்னேன்.என்னால் எல்லாம் ஒரு வாரம் கழித்து மன்னிப்பு எல்லாம் கேட்க முடியாது.

தற்கொலை எண்ணத்தில் இருப்பவர்களுக்கு சுறா நல்ல மருந்து.ஆராய்ச்சியில் கண்டுப் பிடித்திருக்கிறார்களாம். நான் சுறாவைப் புட்டு செய்தால் நல்லது என்று சொன்னேன்.

**********************************

ரோபோ ரஜினி புகைப்படங்களைப் பார்க்கும் போது சாயலில் வடுவேலு தெரிகிறார்.சரியாக சொல்லப் போனால் கிரி வீரபாகு தெரிகிறார். பேசாமல் வடிவேலுவை நடிக்க வைத்திருந்தால் ஷங்கர் அதை எஸ்.பிக்சர்ஸின் இன்னொரு வெற்றிப் படமாக மாற்றியிருக்கலாம்.என்ன ஐஸ்வர்யா ராய்,சன் பிக்சர்ஸ் என்று யாருமே ஆட்டத்தில் இருந்திருக்க மாட்டார்கள். ரஜினியே வடிவேலு மாதிரி தெரிவதால் படத்தில் நகைச்சுவை காட்சிகளுக்கு கருணாஸ் மட்டும் சந்தானம்.ஒரே உறையில் இரண்டு கத்தி இருக்க முடியாது என்பது உண்மை தான்.

மல்லாந்து படுத்துக்கிட்டு விட்டத்தைப் பார்த்து யோசித்தால் என்னமா வருது.நான் தூக்கத்தை சொன்னேன்.

**********************************

ஒரு சந்தேகம் - ஏன் அழியாச் சுடர்கள் வலைப்பூவிற்கு படிக்கும் யாருமே ஓட்டுப் போடவில்லை.நான் உட்பட.ஒரு வேளை சொந்தமாக எழுதினால் தான் ஓட்டுப் போடுவார்களா.அப்படி பாத்தால் வினவிற்கு விழுதே.

********************************

ஒரு டிவிட்டர் -  ___________ ஒரு வேல தானப்பா என்று சிம்பு சொல்லியிருந்தால் பொருத்தமாக இருக்கும். டேஷில் நடிப்பது என்று போட்டு வாசிக்கவும்.

*******************************

2 comments:

நீ தொடு வானம் said...

entha shoo kilinchathu

இரும்புத்திரை said...

valathu kaal shoe..neenga vera ethaiyo ninaichiteenga pola..edathu kaal shovai sonnen