Friday, September 3, 2010

காதல் பேருந்து

சேகருக்கு பெரும்பாலும் கல்லூரி பேருந்தில் ஏறிய உடன் தூங்கி விடுவது தான் வழக்கம்.அன்று அரசியல் விவாதம் அனல் பறந்த காரணத்தால் தூக்கம் கலைந்து விட்டது.ராமும் சேகரும் அனல் பறக்க விவாதம் செய்ததில் தலைவர்களின் சரித்திரம் எல்லாம் வெளியே வரத் துவங்கியது.சேகரும் ராமும் அரசியல் செய்யும்,செய்த குடும்பத்தில் இருந்து வந்தவர்கள்.எதிரெதிர் கட்சியில் இருந்தாலும் நெருங்கிய நண்பர்கள்.

"மச்சான் உங்க தலைவர் ரொம்ப யோக்கியமா.." என்று கொஞ்சம் சத்தமாகவே கத்தி விட்டான் சேகர்.

ஏற்கனவே அவன் குரல் "கொஞ்சம்" இனிமையாகவே இருக்கும்.போட்ட சத்ததில் முன்வரிசையில் இருந்து சிலர் அந்த பெண்னை பார்த்தார்கள்.

முதல் முறையாக ராம் பதில் சொல்வதை கூட கவனிக்காமல் திரும்பி பார்த்தவர்களில் ஒருத்தியை வைத்த கண் வாங்காமல் பார்த்தடியே இருந்தான்.

"மச்சி..இதெல்லாம் வேண்டாம்..அவ என் ஸ்டாப்பில் தான் ஏறுகிறாள்..ஏதாவது ஆச்சுன்னா என் கதை கந்தலாகி விடும்.." என்று கெஞ்ச தொடங்கி இருந்தான் ராம்.

"இருடா..மச்சி எனக்கு அறிமுகப்படுத்தி விடுடா அவள.."

"யார.."

"தெரியாத மாதிரி நடிக்காத..உன் ஸ்டாப் பிரியா தான்.."

"டேய்..நீ தான் வேற ஏதோ பெண்ணை காதலிக்கிறதா சொன்ன.."

"ஆமாண்டா..அவ நம்ம பக்கத்து க்ளாஸ்..அவளை பாக்க போகும் வந்த சண்டையிலே அவ முன்னாடியே அந்த க்ளாஸ் பையனை அடித்து விட்டேன்..இனி அவள் கண்டுப்பாளா என்று எனக்கு சந்தேகம் அதான் பிரியாவை வைச்சி பானுவ சமாதானப்படுத்த ஒரு முயற்சி பண்ணலாம்னு பாக்குறேன்.."

"இவளும் நம்ம க்ளாஸ்..அப்புறம் எப்படி.."

"டேய் ராம்..பசங்க போனா தான் அவங்க சண்டை போடுவாங்க..பொண்ணு போனா கூட ஒரு பொண்ணு தான் நினைத்து சும்மா இருப்பாங்க..எப்படி நம்ம ஐடியா.."

"தெரியல..ஆக மொத்த எனக்கு சங்கு ஊதாம விட மாட்ட.."

ராம் அறிமுகப்படுத்தாமல் எப்படியோ தப்பிக்க சேகரே கடைசியில் ஏதோ ஒரு கட்டத்தில் எப்படியோ பிரியாவிடம் பேசி விட்டான்.

பிரியாவும்,சேகரும் நெருங்கிய நண்பர்களாக மாறியிருந்தார்கள்.

"கதை போகிறப் போக்கே சரியில்லையே..சீக்கிரம் மடக்கி விடுவ போல..நல்லாயிருந்தா சரி தான்.." ராம் கிண்டம் செய்து கொண்டு வந்தான்.

பல நாட்கள் கழித்து..

"மச்சான் சக்சஸ்டா..அவ ஒத்துகிட்டா.." என்று சேகர் சொல்ல கட்டிப்பிடித்து வாழ்த்தினான் ராம்.

"எப்படிடா.."

"நான் ஒண்ணுமே பண்ணல..அவளே தான் சொன்னா.."

"அதானே பாத்தேன்..நீயாவது ஆணியப் புடுங்கிறதாவது..சேகர்..டிரீட் எப்போ..

"இந்த வாரம் சண்டே.."

"அவளும் வருவாளா.."

"ம்..ம்..பின்ன அவ இல்லாமலா.."

"அவ பிரண்ட்ஸ் யாராவது வருவாங்களா.."

"டேய் ராம்..ஒவரா பேசாதே.."

"வயிறு எரியுமே.." என்று ராம் தனக்குள் முணங்கி கொண்டான்.

வடபழனியில் ராமும் சேகரும் காத்திருந்தார்கள்.

"சேகர்..என்னடா இவ வர்றா.."

"எவடா.."

"பிரியாடா..பானு எங்க.."

"பானுவா சரியா போச்சு..அது வெறும் ஈர்ப்புடா..பிரியா தான் காதலிப்பதா சொன்னா..நானும் சரின்னு சொல்லிட்டேன்.." என்று சொன்ன சேகரைப் பார்த்து தலையில் அடித்து கொண்டான் ராம்.

"ஏன் என்ன ஆச்சு ராம்.."

"இது தெரியாம நீ பானுவ காதலிக்கிற விஷயத்தை அவ கிட்ட சொல்லிட்டேன்.."

"யார் கிட்ட் பானுகிட்டயா..ஏண்டா இப்படி எல்லாம் பண்றே..இரண்டு பொண்ணும் ஒரே நேரத்துல லவ் டார்ச்சர் பண்ணினா நான் என்ன பண்ணுவேன்.."

"இல்லடா பிரியா கிட்ட..இப்படி வேற நினைப்பு ஓடுதா" என்று சொன்ன ராமை பார்த்து சிரித்தான் சேகர்.

"அதானால தான் பிரியா எங்கிட்ட காதலிக்கிறதா சொன்னாளா..தாங்க்ஸ்டா ராம்.." என்று சொன்னவனை பார்த்து அதிர்ச்சியோடு நின்றான் ராம்.