Friday, August 21, 2009

கந்தசாமி - விமர்சனம்

நாயகன் நிறைய படங்களில் சின்ன வேடங்களில் நடித்து இந்த நிலைமையை அடைந்து உள்ளார். நாயகி வெளிமாநிலத்து இறக்குமதி.இன்னொரு நாயகியும் சின்ன வேடத்தில் தான் அறிமுகம் ஆனவர். நாயகியின் அப்பா ஒரு முன்னால் கதாநாயகன்.நாயகனுக்கு வேலை செய்யும் இடத்தில் மூன்று தோழர்களும், வீட்டருகே இரண்டு நண்பர்களும் உண்டு.

டைட்டில் பாடல் மிகவும் அருமை.குளிர் பிரதேசத்தில் படம் பிடித்து இருக்கிறார்கள்.
இசையும் ஒளிப்பதிவும் குறை சொல்ல முடியாத அளவுக்கு பிரமாதம்.

வீட்டருகே இருக்கும் இரண்டு நண்பர்களுக்கும் ஆளுக்கொரு காதல்.

ஒருவன் - விளையாட்டில் சாதிக்க துடிக்கிறான்.

இன்னொரு நண்பன் - வளர்ந்து வரும் துடிப்பான வழக்கறிஞர். போராட்டக் குணமுள்ளவன்.

சிறு வயது முதல் ஒன்றாக வளர்ந்து வரும் நாயகிக்கு நாயகன் மீது காதல்.அவனுக்கு அந்த இரண்டாவது நாயகியின் மீது காதல். இரண்டு நாயகிகளும் பள்ளித் தோழிகள்.

ஹீரோ பணம் கட்டாதவர்களின் வண்டியைப் பறிமுதல் செய்பவன். அப்படி செய்யும் அந்த இரண்டாவது நாயகியை சந்திக்க,மோதல் வருகிறது.பிறகு வேலை கிடைக்க உதவ, நடப்பும் பழகுகிறார்கள்.

வண்டியைப் பறிமுதல் செய்யும் போது பெரும்பாலும் உதையும், சில சமயம் வண்டியும் கிடைப்பது நல்ல காமெடி.

ஒருத் தலைக் காதலோடு முதல் நாயகி நாயகனைப் பார்க்கும் போதெல்லாம் கவிதை அருவியாகக் கொட்டுகிறது.

சில கவிதைகள் நல்லா இருக்கு.சில கவிதைகள் செம மொக்கை.

இதோ ஒன்று என் ஞாபகத்தில் இருந்து ஒரு பாதி மட்டும்

நீ
என்னை துறந்தால்
நானும் துறப்பேன்
உன்னை அல்ல
என் உயிரை!

காதலிப்பவர்களுக்கு இது ரொம்பப் பிடிக்கும்.காதலை வெறுப்பவர்களுக்கு இன்னும் பிடிக்கும்.

தனியாக இரண்டாவது நாயகியை அழைத்துச் சென்றுக் காதலைச் சொல்கிறான்.அவள் இவனை அடித்து விடுகிறாள்.

(தொடரும் ...)

டிஸ்கி : இது விஜய் தொலைக்காட்சியில் 7.30 ஒளிப்பப்பாகும் அன்பே வா தொடர்.நடுவே கந்தசாமி விளம்பரம்.அதனால் இந்த நாடகத்துக்கு இப்படி ஒரு விளம்பரம்.

இன்னைக்கு நம்ம கடை ஈ அடிப்பதால் இப்படி ஒரு கொலைவெறித் தாக்குதல்.

அடுத்த வாரம் குவிக்கன் முருங்கன் பற்றி எழுதிகிறேன். முருகன் குவிக்கா கண் அடிப்பதைச் சொல்லித் தருகிறேன்.

34 comments:

இரும்புத்திரை said...

பாத்து கும்முங்க. இது பிஞ்சி உடம்பு.

Raju said...

நாசமா போக..!
என்னாடா இன்னும் ஃபர்ஸ்ட் ஸ்ஹோ கூட முடிஞ்சுருக்காதேன்னு பார்த்தேன்.
இது தொடர வேற செய்யுமா..?

நையாண்டி நைனா said...

ஏண்டா அம்பி... நோக்கு வேற வேலையே இல்லியோ... இப்படி போடுறியடா...

அசராம அடிடா... நாங்களும் தாங்குவோம்டா...

நையாண்டி நைனா said...

படம் ரிலீசுக்கு முந்தியே விமர்சனமா.... ஆஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

இரும்புத்திரை said...

தொடரும் நாடகத்துலத்தான் பதிவுல இல்ல பயப்படாதீங்க டக்ளஸ்

அன்பே வா விமர்சனம்னு போட்டா யாராவது வருவாங்க சொல்லுங்க நைனா சொல்லுங்க

மகேஷ் : ரசிகன் said...

Yov!

இரும்புத்திரை said...

கோவப்படாதீங்க மகேஷ் தலைப்பு மட்டும் நாறிப் போச்சு இல்ல மாறிப் போச்சு

Anonymous said...

paavi..

naa evlo eagar a read panen nijamave kandhaswamy review nu...

இரும்புத்திரை said...

//paavi//

janani no bad words

Unknown said...

நான் கூட ~சேம் ப்ளட்~ என நினைத்தேன். நேத்து தாங்க நைட் ஷோ போய் வந்தேன். தாங்கலீங்க! :(

இரும்புத்திரை said...

அன்பு விஜய்,

விக்ரமின் ரசிகன் நான்.தில் இருந்தா என் தலைவன யாராவது நக்கல் அடிங்க பார்ப்போம் .(அப்பாடி விக்ரமை மாட்டி விட்டாச்சு).

ஓவர் பில்டப் உடம்புக்கு ஆகாது.

எனக்குத் தெரியும் அது ஒரு பா.. மாதிரி ஆகும்னு

200 ரூபா மிச்சம்

இரும்புத்திரை said...

சனிக்கிழமை அந்த தொடர் திரும்ப ஒளிப்பரப்பாகும் என் நினைகிறேன்.

dont miss it

IKrishs said...

Yeppadiyo yemara vachuteengha...Kandha samy aiyum Anbe vaa vaiyum relate panna comedyaa yedhachum solli irundha siruchu irukkalam..Neengha solli irukiradhu "PADU MOKKAI"...Siruppu varavillai ...Mannikkavum..Yenakku idhu dhan thonichu..."IDHELLAM ORU POLAIPA?"
Krish

இரும்புத்திரை said...

"IDHELLAM ORU POLAIPA?"

ithuvum oru polaippu

துபாய் ராஜா said...

//தொடரும் ...) //

முடியலை.வலிக்குது. :(

//டிஸ்கி : இது விஜய் தொலைக்காட்சியில் 7.30 ஒளிப்பப்பாகும் அன்பே வா தொடர்.நடுவே கந்தசாமி விளம்பரம்.அதனால் இந்த நாடகத்துக்கு இப்படி ஒரு விளம்பரம்.//

கொடுமை,கொடுமைன்னு கோயிலுக்குப் போனா அங்க ரெண்டு கொடுமை குதிச்சு,குதிச்சு ஆடுச்சாம். :)

//இன்னைக்கு நம்ம கடை ஈ அடிப்பதால் இப்படி ஒரு கொலைவெறித் தாக்குதல்.//

எப்படியெல்லாம் யோசிக்கிறாய்ங்க..
:))

இரும்புத்திரை said...

நன்றி துபாய் ராஜா

ஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன் said...
This comment has been removed by the author.
ஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன் said...

ஆமா... மெய்யாலுமே அந்தப் படம் ரிலீஸ் ஆயிருச்சா? ஒரே கொழப்பமா இருக்குது! சொல்ல முடியாது, இதேக் கதையாக்கூட இருக்கலாம்! கத நல்லாத்தான் இருக்குது

மணிஜி said...

நொந்தசாமி???

இரும்புத்திரை said...

நன்றி M.S.E.R.K.

//தண்டோரா ...... said...
நொந்தசாமி???//

தல படமா பதிவா இல்ல ரெண்டுமேவா

நாஞ்சில் நாதம் said...

:))

இரும்புத்திரை said...

நன்றி நாதம்

வணங்காமுடி...! said...

:-)))))

இரும்புத்திரை said...

நன்றி வணங்காமுடி

Unknown said...

இங்கே பாருங்க

கந்தசாமியைப் பற்றிய கிசுகிசு உண்மை தான்

இப்படிக்கு டிரைலர் பார்த்துக் கதை சொல்லுவோர் சங்கம்

வரதராஜலு .பூ said...

//அடுத்த வாரம் குவிக்கன் முருங்கன் பற்றி எழுதிகிறேன். முருகன் குவிக்கா கண் அடிப்பதைச் சொல்லித் தருகிறேன். //

என்னா கொலவெறி? எப்பா தாங்கல சாமி

இரும்புத்திரை said...

நன்றி சிபி

நன்றி Varadaradjalou .P
சரி அடுத்து ஆயிரதிலே ஒருவன் விமர்சனம் எழுதுறேன்

நையாண்டி நைனா said...

/*தல படமா பதிவா இல்ல ரெண்டுமேவா*/

"தல" படமும் அதை பற்றிய பதிவுகளும் இன்னும் வரவில்லை என்பதனை இந்த மாபெரும் சமூகத்திற்கு அறிவித்து கொள்கிறேன்.

"தல" படம் "அசல்" எப்பப்பா ரிலீசு...?????

இரும்புத்திரை said...

//"தல" படமும் அதை பற்றிய பதிவுகளும் இன்னும் வரவில்லை என்பதனை இந்த மாபெரும் சமூகத்திற்கு அறிவித்து கொள்கிறேன்.//

முதல்ல அவர் சரண் கூட சேராம இருந்தாலே அவருக்கு நல்ல காலம் தான்

இரும்புத்திரை said...

நன்றி மங்களூர் சிவா

இரவுப்பறவை said...

முடியலீங்க..
இதுக்கு நான் கந்தசாமி படமே ரெண்டாவது தடவ பாத்துடுவேன்...
ஹா.. .ஹா..

இரும்புத்திரை said...

ஹா.. .ஹா.. இரவுப்பறவை

வாழ்த்துகள் இப்படி ஒரு நாலு தடவை செஞ்சா தாணு பிழைப்பாரு

ARIVUMANI, LISBON said...

அடப்பாவிகளா !! இப்பிடியும் ஏமாத்துவீங்களா !!
இதவேற நான் 'விறு விறு ' ன்னு படிச்சேன் .. :-((

இரும்புத்திரை said...

நன்றி 'BLUESPACE' ARIVUMANI, GERMANY