Thursday, August 27, 2009

தமிழ்மொழி கூட எனக்கு செய்யும் துரோகம்

அண்ணன் என்ற வார்த்தைகளை அகராதிகள் இருந்து ஒழிக்க வேண்டும்.அப்படி செய்தால் என் கோபம் கொஞ்சமாவது அடங்கும். புராணத்தில் துவங்கி சரித்திரம் தொட்டு சினிமா வரை அண்ணன்களின் பாடு திண்டாட்டம் தான்.பிரிவு,முறிவு எல்லாம் முதலில் அண்ணன்களைத் தான் பாதிக்கிறது.

இராமாயணத்தில் அண்ணனாக இருந்ததால் தான் இராமன் காட்டுக்கு அனுப்பப்பட்டான். லஷ்மணனும் கூட சென்றான் என்று விதண்டாவதாம் செய்யக் கூடாது. அவனும் ஒரு அண்ணன் தான் மற்ற இருவருக்கும்.

மகாபாரதத்தில் கர்ணன் அண்ணனாக இருந்ததால் தான் யாருக்கும் தெரியாமல் தண்ணீரில் அனுப்பபட்டான். தர்மன் துரியோதனனை விட மூத்தவன் என்பதால் காட்டுக்கு அனுப்பப்பட்டான்.


சோழ வரலாற்றில் ஆதித்ய கரிகாலன் கொல்லப்பட்டான். காரணம் அவன் பொன்னியின்செல்வன் மற்றும் குந்தவைக்கு அண்ணன் .

முகலாய வரலாற்றில் சலீமின் மூத்த மகன் குஸ்ரூ கொல்லப்பட்டான். குர்ரம் பதவி ஏற்றான் ஷாஜகானாக. வரலாறு பாடம் கற்றுக் கொடுத்தது ஷாஜகானின் மூத்த மகன் தாராவைக் கொன்று விட்டு அரியணைக்கு வந்தான் அவுரங்கசீப்.

சினிமாவில் தெய்வ மகன் படத்தில் தூக்கி ஏறிவார்கள் மூத்த மகனை. வெயில் படத்தில் பசுபதி ஓடி விடுவார்.கடைசியில் இருவருமே தம்பிக்காக உயிரை விடுவார்கள்.

கலைஞர் சொன்ன ஒரு வாக்கியம் "நீ,நான் என்று சொன்னால் உதடுகள் ஒட்டாது .நாம் என்று சொன்னால் ஒட்டும்".இதை கேட்டாலே எனக்கு ரொம்ப கோபம் வரும்.காரணம் இந்த வாக்கியத்தைப் போல ஒரு வார்த்தை விளையாட்டால் நானும் பாதிக்கப்பட்டேன்.

"அண்ணன் என்று சொல்லிப் பார்த்தால் உதடுகள் ஒட்டாது.இதுவே தம்பி,அம்மா,அப்பா என்று உச்சரித்துப் பார்த்தால் உதடு என்ன உள்ளமே ஒட்டுகிறது."

மேலே இருப்பதுப் போல நான் என் குடும்பத்தை விட்டுப் பிரிந்தே இருக்கிறேன். இன்று முதல் என்னை "தமையன்" என்று கூப்பிடு அல்லது "பிரதர்" என்று கூப்பிடு - சொல்லவேண்டும் என் தம்பியிடம். இன்று முதல் "பிள்ளாய்" என்று கூப்பிடு அல்லது "மை சன்" என்று கூப்பிடு - சொல்லவேண்டும் என் அம்மாவிடம்.அப்படியாவது உங்களுடன் இருக்க விரும்புகிறேன் உங்கள் அருகில்.

இப்படி சொல்வதற்கு காரணம் என் தம்பி.அவனுடம் இருக்க முடியவில்லை என்ற வருத்தம் தான். அவன் என் ரோல்மாடல்களில் ஒருவன் அல்ல.அவன் தான் என் ரோல் மாடலே. அவனுக்கு நான் தம்பியாகப் பிறக்க வேண்டும். அவனிடமிருந்து நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேயிருக்கிறேன்.

இது ஒரு மூத்த மகன் மற்றும் ஒரு அண்ணனின் புலம்பல்.

தயவு செய்து அகராதியில் இருந்து அண்ணன் என்ற சொல்லை எடுத்து விடுங்கள்.

34 comments:

Raju said...

யே...டன்டனக்கா..இந்த டகால்டி வேலையெல்லாம் இங்க நடக்காது பாஸு.

தம்பியும் அண்ணனும் சேர்ந்து செஞ்ச லீலைகள் எத்தனைன்னு எங்களுக்கும் தெரியும்டி.

Raju said...

\\தயவு செய்து அகராதியில் இருந்து அண்ணன் என்ற சொல்லை எடுத்து விடுங்கள்.\\

மதுரையே கொந்தளிக்கும் பரவாயில்லையா பாஸு..?

இரும்புத்திரை said...

யோவ் டக்ளஸ் உங்க அலப்பறைக்கு ஒரு அளவே இல்லையா

பீல் பண்ணி பதிவு எழுதினா அத காமெடியா மாத்துறது

எனக்கே எப்பவாது தான் ஒழுங்கா பதிவு எழுத வருது. அது பொறுக்காதே

நர்சிம் said...

ரசிக்கும் படியான நடை.

நிறைய விவரங்களும்.கரிலான் முதலான.

நிறைய எழுதுங்கள் அர்விந்த். நிறைவாய் எழுதுங்கள்.

வாழ்த்துக்கள்.

தினேஷ் said...

ஏண்ணே எதாச்சும் கரெக்ட் செய்தது அண்ணணேனு சொல்லிருச்சா?

தினேஷ் said...

/\\தயவு செய்து அகராதியில் இருந்து அண்ணன் என்ற சொல்லை எடுத்து விடுங்கள்.\\//

கண்ணாபின்னா ரிப்பீட்டு

தினேஷ் said...

/பீல் பண்ணி பதிவு எழுதினா அத காமெடியா மாத்துறது//

என்ன என்ன ஃபீல்ங்க்ஸா என்ன பீலிங்கு?

இரும்புத்திரை said...

இப்பத்தான் டக்ளஸ் போனாரு இப்ப நீங்களா சூரியன்

மணிஜி said...

"திண்ணை காலியானா?
அண்ணன் காணாம போயிடுவாரு’

அண்ணன் சொல்றேன்..நல்லா எழுதறடா தம்பி...

லோகு said...

இதெல்லாம் உங்கள மாதிரி ஏதோ நல்ல தம்பி வாய்த்த அண்ணனோட கருத்து.. ஆனா என்னை மாதிரி பெரும்பான்மை அண்ணன்கள், தம்பிகள் தொல்லை தாங்காம சுத்திட்டு இருக்கோம்...

இரும்புத்திரை said...

நன்றி நர்சிம்

நன்றி தண்டோரா.நிச்சயம் உங்க பேரக் காப்பாத்துவேன்.

நன்றி லோகு.

நாடோடி இலக்கியன் said...

நல்லாயிருக்கு அரவிந்த்.

உதாரணங்களெல்லாம் பட்டாசு.

ஆமா,நீங்க ஹிரோவா?காமெடி பீஸா கணிக்கவே முடியல.

ஒரு பதிவு ஆஹான்னு எழுதறீங்க. அப்புறம் ஒரு நாலு பதிவு இனிமேல் இங்கிட்டு வருவியான்னு எழுதறீங்க ஒன்னுமே பிரியல தம்பி.

மொத்ததில் இந்த பதிவு குட்.

துபாய் ராஜா said...

//இராமாயணத்தில் அண்ணனாக இருந்ததால் தான் இராமன் காட்டுக்கு அனுப்பப்பட்டான். லஷ்மணனும் கூட சென்றான் என்று விதண்டாவதாம் செய்யக் கூடாது. அவனும் ஒரு அண்ணன் தான் மற்ற இருவருக்கும்.//

சடாரென்று சிரித்துவிட்டேன்.

//அண்ணன் என்று சொல்லிப் பார்த்தால் உதடுகள் ஒட்டாது.இதுவே தம்பி,அம்மா,அப்பா என்று உச்சரித்துப் பார்த்தால் உதடு என்ன உள்ளமே ஒட்டுகிறது."

மேலே இருப்பதுப் போல நான் என் குடும்பத்தை விட்டுப் பிரிந்தே இருக்கிறேன்//

நெகிழ்ச்சியான பதிவு.

:) சிரிப்பாக ஆரம்பித்து சீரியஸாக :(
முடித்துவிட்டீர்கள்.

நான் எங்க வீட்டுல கடைக்குட்டிதான் என்றாலும் குடும்பத்தை பிரிந்து தான் இருக்கிறேன். :(

ஏழையாப் பிறந்தாலும் இளையவனா பிறக்கக்கூடாது.

ராமாயணம்,மகாபாரதம் எல்லாத்திலயும் உதா'ரணம்' இருக்கு.

இருங்க. இருங்க.சீக்கிரம் இளைய மகன்/மகள் யாராவது ஒரு எதிர்பதிவு போடுறோம். :))

இரும்புத்திரை said...

நன்றி நாடோடி இலக்கியன் எனக்கே ஒன்னும் புரியல.நான் சீரியஸா எழுதினா கூட கும்மி அடிக்கிறாங்க

நன்றி துபாய் ராஜா நானே போடுறேன் எதிர்பதிவு இதுக்கும்.

Thamira said...

இப்படி சொல்வதற்கு காரணம் என் தம்பி.அவனுடம் இருக்க முடியவில்லை என்ற வருத்தம் தான். அவன் என் ரோல்மாடல்களில் ஒருவன் அல்ல.அவன் தான் என் ரோல் மாடலே. அவனுக்கு நான் தம்பியாகப் பிறக்க வேண்டும். அவனிடமிருந்து நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேயிருக்கிறேன்.//

மீ ட்டூ..!

Raju said...

\\ ஆதிமூலகிருஷ்ணன் said...
இப்படி சொல்வதற்கு காரணம் என் தம்பி.அவனுடம் இருக்க முடியவில்லை என்ற வருத்தம் தான். அவன் என் ரோல்மாடல்களில் ஒருவன் அல்ல.அவன் தான் என் ரோல் மாடலே. அவனுக்கு நான் தம்பியாகப் பிறக்க வேண்டும். அவனிடமிருந்து நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேயிருக்கிறேன்.//
மீ ட்டூ..!\\

தப்பு அங்கிள்.
நீங்க மீ 15.
நான் தான் மீ 2.
இப்போ மீ 16.

இரும்புத்திரை said...

நன்றி ஆதிமூலகிருஷ்ணன்

நையாண்டி நைனா said...

அண்ணா.... அரவிந்து அண்ணா.....

வந்திட்டேண்டா...

நையாண்டி நைனா said...

பதிவுலக அண்ணன்களை தமது பதிவிற்கு வரவைத்த அண்ணன் அரவிந்து வாழ்க.

நையாண்டி நைனா said...

அண்ணன்கள் பாசறை கொண்ட அண்ணன் அரவிந்துக்கு பாசத்திலே ஒரு அரை கொடுங்கள்
இப்படிக்கு தம்பிகளின் பாச அரை.

இரும்புத்திரை said...

நைனா வாங்க நீங்க இல்லாம கல்லா கட்டவே இல்ல

நையாண்டி நைனா said...

ஆமா... தமிழ்மொழி கூட சேர்ந்து உங்களுக்கு துரோகம் செய்யும் அந்த காவாலி யாருண்ணே... சொல்லுங்கண்ணே... தூகிறுவோம்....

நையாண்டி நைனா said...

டேய்.... அண்ணி தமில்மொலிய எங்க அண்ணன் அரவிந்து கிட்டே கொடுதிருங்கடா....

இரும்புத்திரை said...

நைனா நான் உங்க தமி தான் இந்த பதிவுல இருந்து அண்ணன் என்ற பதவியா

நையாண்டி நைனா said...

அண்ணன்களின் அழிச்சாட்டியம் அழிப்போம்...

இப்படிக்கு
தம்பிகளின் தனி தொகுதி வேட்பாளர்.

இரும்புத்திரை said...

அப்படியே போன பதிவுல கொஞ்சம் பாக்கி இருக்கு அங்க கொஞ்சம் கும்மி அடிங்க

kathir said...
This comment has been removed by the author.
நையாண்டி நைனா said...

/*இரும்புத்திரை அரவிந்த் said...
நைனா நான் உங்க தமி தான் இந்த பதிவுல இருந்து அண்ணன் என்ற பதவியா*/

அண்ணன்களுக்கு ஆதரவு திரட்டுவதால் நீங்க இனி அண்ணன் தான்...

அண்ணன் "குவிக்கன் முருகன்" அரவிந்து வாழ்க...வாழ்க...

இரும்புத்திரை said...

என்ன காமெடி பீஸு ஆகுறதுல அவ்வளவு சந்தோசம் நடத்துங்க

ஈரோடு கதிர் said...

அண்ணன் என்னடா தம்பி என்னடா
இந்த அவசரமான உலகத்திலே

எப்ப்ப்ப்பூபூபூபூபூடி

அட நானும் காமெடி பீஸ் ஆக்கிட்டனோ...

ஆனா... அந்த தகவல்கள் சூப்பருங்ண்ணா

நையாண்டி நைனா said...

கடந்த இரண்டு நாளாக நான் ஆற்றாத பதிவுலக கடமைகள் இன்னும் பாக்கி இருப்பதால் உங்களின் தம்பி நைனா பிற பதிவுகளுக்கு செல்ல இருப்பதால்... இதோடு தற்போதைக்கு விடை பெறுகிறேன்...

இரும்புத்திரை said...

குத்துங்க கதிர் குத்துங்க எல்லாம் டக்ளஸ் கைராசி

நையாண்டி நைனா said...

/*ஆமா,நீங்க ஹிரோவா?காமெடி பீஸா கணிக்கவே முடியல.*/

இப்படி கொக்கி போட்டு இழுத்து... எங்க அண்ணன் தேரை இழுத்து நடுத்தெருவிலே விட எத்தனிக்கும் உங்களின் தந்திரத்திற்கு எங்கள் அண்ணன் பலி ஆக மாட்டார், பலி ஆக மாட்டார், பலி ஆக மாட்டார் என்று ஆணித்தரமாக சொல்லிக்கொள்கிறேன்.
மைன்ட் இட்.

இப்படிக்கு
அண்ணன் "குவிக்கன் முருகன்" அரவிந்து அவர்களின் தம்பிகள்.

நையாண்டி நைனா said...

எல்லாரும் பார்த்துகோங்க... நான் லோகு கூட போய் வெள்ளாட போறேன்.

இப்படிக்கு
நையாண்டி நைனா என்று அழைக்க பெரும் டக்ளசு.
டக்ளசு என்று அழைக்க பெரும் நையாண்டி நைனா.