Wednesday, August 12, 2009

கவுண்டமணி,செந்தில்,பன்றிக்காய்ச்சல்

கவுண்டமணி ஆல் இன் ஆல் அழகுராஜா க்ளினிக்கில் டாக்டராக வேலை பார்க்கிறார்.செந்தில் ஓடி வருகிறார்.

கவுண்டமணி : ஏன் இந்த பன்னி நாலுக் கால்ல உருண்டு வருதுன்னு தெரியலையே.

செந்தில் : அண்ணே..அண்ணே.. பன்னிக்காய்ச்சல் அப்படினா என்ன?

கவுண்டமணி : அது உனக்கு வராது..மனுஷங்களுக்கு மட்டும் தான் வரும்..

செந்தில் : அப்ப உங்களுக்கும் வராதுண்ணே..ஹி ஹி (சிரிக்கிறார்)

கவுண்டமணி : சரி சொல்றேன் கேட்டுக்கோ அது பன்னிக்கிட்ட இருந்து மனுசனுக்கு வருது..இனிமே உங்க க்ரூப் டெலிவரி ஆகுற இடத்துக்கு அடிக்கடிப் போகதே..

செந்தில் : விளக்கமா சொல்லுங்க அண்ணே..

கவுண்டமணி : அது ஒரு வைரஸ்..

செந்தில் : வைரஸ்னா..

கவுண்டமணி : அது ஒரு கண்ணுக்குத் தெரியாத மிருகம்..தும்மல்..ஜலதோஷம் மூலமா பரவும்..ஹச்..ஹச்..(தும்முகிறார்)

செந்தில் : அண்ணே உங்கள அந்த கண்ணுக்குத் தெரியாத மிருகம் கடிச்சிருச்சு..

செந்தில் கட்டையை எடுத்து கவுண்டமணி மூக்கில் அடிக்க வருகிறார்.கவுண்டமணி சரியான நேரத்தில் கட்டையைப் பிடித்துக் கொள்கிறார்.

கவுண்டமணி : டேய் நீ யாரு எப்படினு எனக்குத் தெரியும்..என்னப் பத்தி உனக்குத் தெரியும்..ஏற்கனவே காலரா ஒரு கண்ணுக்குத் தெரியாத மிருகம்னு சொன்னதுக்கு என் காலை உடச்சவன் நீ..இந்த தடவை நீ நினைக்கிறது நடக்காது..எல்லாத்தையும் செஞ்சுட்டு மூழிக்கறதப் பாரு பச்சப்புள்ள மாதிரி..

ஒரு நோயாளி வர அவருக்கு கவுண்டமணி ஊசிப் போடுகிறார்.

செந்தில் : ஊரு ரொம்ப கெட்டுப் போச்சுண்ணே..

கவுண்டமணி : எப்படிடா?

செந்தில் : ஊசிப் போடுறவன் எல்லாம் டாக்டர்னு சொல்றான்.

கவுண்டமணி பேப்பர் வெயிட்டை துக்கிப் செந்தில் மீது எறிகிறார்.அது சரியாகக் குறித் தவறி நர்ஸ் மேல் விழுகிறது.

கவுண்டமணி : நான் வேணா ஊசிப் போடவா..

நர்ஸ் : டாக்டர்.. மேடம்..

கவுண்டமணி : அவங்களையும் வரச் சொல்லு..ஊசிப் போடுறேன்.

கவுண்டமணி மனைவி வந்து அவர் கையை மடக்கி நாலு அடி அடிக்கிறார்.

செந்தில் : ஹி..ஹி.. (ஆங்கில செய்திதாளுடன் வருகிறார்)

கவுண்டமணி : என்னடா இது..

செந்தில் : நீங்க ஒன்னும் சொல்லித் தர வேண்டாம்..நானே படிச்சித் தெரின்சுகுவேன்.

கவுண்டமணி : உனக்கு படிக்கத் தெரியுமா? பத்து வருசம் நேபாள்ல டாக்டருக்குப் படிச்ச நானே இத வாங்குறதில்ல..நீ வாங்குர.. நீ ஐந்து,பத்துப் பிச்சைக்கு இதெல்லாம் தேவையா ?

செந்தில் : prevention is better than cure..

கவுண்டமணி : இங்கிலீஸு..ஏழாவதுப் படிச்சிட்டு லொள்ளப் பாரு..

செந்தில் : நான் ஏழாவதுப் பாஸு..நீங்க டாக்டர் படிச்சுப் பெயில்.. பாஸ் பெரிசா.. பெயில் பெரிசா

கவுண்டமணி : டேய் வெளிய சொல்லாத..இந்தாடா 1000 ரூபா..

கவுண்டமணி செந்திலை மாட்டி விடத் திட்டம் போடுகிறார்.

கவுண்டமணி : நாம் ஊரு நாட்டாமைக்கு பன்னிக்காய்ச்சல்..நீ போய் எதாவதுப் புத்திசாலித்தனமாப் பேசு..அப்படியே இந்த மருந்தப் போடு..

பத்து நிமிடம் கழித்து செந்திலை எல்லோரும் அடித்து இழுத்து வருகிறார்கள்.

நாட்டாமை : நானே பயத்துல மாஸ்க் போட்டுகிட்டு இருந்தா..நீங்க தீவிரவாதியான்னு கேட்குறான்..இவன இனிமே இங்க பார்த்தேன் உன் ஆஸ்பத்திரில ஒரு செங்கல் கூட இருக்காது..

கவுண்டமணி : என்னடா சொன்ன ?

செந்தில் : நாட்டாமைக்கு வாயுத் தொல்லை..கேஸ் உட்டாரு..நான் இது மூலமாவும் பன்னிக்காய்ச்சல் பரவுமானு கேட்டேன்..

கவுண்டமணி : வேற என்ன சொன்ன..

செந்தில் : நாம இப்படி மாஸ்க் போடுறதுக்கு பதிலா ஜலதோஷம் இருக்கிற பன்னிங்களுக்கு போட்டிருந்தா நமக்கு வரவே வராதுல்ல..இது கூட தெரியல நீயெல்லாம் ஒரு நாட்டாமையான்னு கேட்டேன்..

கவுண்டமணி : அதுவாடா மருந்து போடுற பையனுக்கு இவ்வளவு அறிவானு உன் மேல அந்த பயலுகளுக்கு பொறாமை..

செந்தில் : அக்காண்ண..

கவுண்டமணி : இத நீ கல்வெட்டுல பொறிச்சு வைச்சிட்டுப் பக்கத்திலே இரு..உனக்கு பின்னாடி வர்ற சந்ததியர் அதப் பார்த்துப் படிச்சு உஷாரா இருப்பாங்க..

ஆஸ்பத்திரிக்கு வெளியே வந்தவுடன் செந்திலுக்கு எட்டி ஒரு உதை விடுகிறார்.

கவுண்டமணி : என்ன ஒரு தொழில கூட செய்ய விடவே மாட்டியா..இனிமே இங்க வந்த உன் நாக்க புடுங்கிடுவேன்.

செந்தில் : பாஸ் பெரிசா..பெயில் பெரிசா.. என்று கவுண்டமணியின் ரகசியத்தை ஊர் முழுக்கப் பரப்ப ஓடுகிறார்.

கவுண்டமணி செந்திலைத் தடுக்கத் துரத்திக் கொண்டு ஓடுகிறார்.

9 comments:

கோவி.கண்ணன் said...

நகைச்சுவை நல்லா இருக்கு !
:)

கைப்புள்ள said...

ஹி...ஹி...நல்லாருக்குங்க. அங்கங்கே கவுண்டர் சொல்ற மாதிரியே பன்னி காய்ச்சல் மண்டையா, ஸ்வைன் ஃப்ளூ தலையான்னு எல்லாம் போட்டிருந்தீங்கன்னா இன்னும் கொஞ்சம் தூக்கலா இருக்கும்.
:)

துபாய் ராஜா said...

நகைச்சுவை நல்லா இருக்கு !

:)

நையாண்டி நைனா said...

super nanba. super.

ரமேஷ் said...

supper நகைச்சுவை நல்லா இருக்கு !

Nathanjagk said...

ரொம்ப நாள் கழிச்சு க-செ காமெடி "பாத்த" திருப்தி!

Raju said...

படிக்கும்போது ஏகப்பட்ட படம் ஞாபகத்துக்கு வருது பாஸ்.

நாஞ்சில் நாதம் said...

:))

இரும்புத்திரை said...

nandri kovi.kannan

nandri kaippulla

nandri dubai raja

nandri naina

nandri ramesh

nandri duglas

nandri ronin

nandri thala

nandri naanjil naatham