Monday, March 29, 2010

துவையல் - கொலைவெறி ஸ்பெஷல்

பதிவர்கள் சந்திப்பிற்கு போய் விட்டு வந்த நர்சிமே கையைக் கட்டிக் கொண்டு வேடிக்கை பார்க்க முடிவு செய்து விட்டாராம்.போகாமல் இருந்த நான் செய்யலாம் என்று யோசித்ததில் அண்ணன் சாறு சங்கருக்கு பதவி கிடைக்கும் வரை அவர் உண்ணாவிரதம் இருப்பார் என்று அறிவிக்கிறேன்.ஏதாவது சொன்னால் இந்த தலைப்பு மாதிரி துவைத்து எடுத்து விடுவார்கள்.சங்கம் தொடங்கும் முன் எல்லோரும் ஒற்றுமையாக இருந்தது மாதிரி தான் தெரிந்தது.சங்கம் ஆரம்பிக்கும் முன்னாடி ஆள் ஆளுக்கு மாற்றி மாற்றி கும்மாங்குத்துகளாக தருகிறார்கள்.எல்லாம் முடிந்த பின் சுபமான முடிவு எடுக்கப்பட வேண்டும் அப்படி நடந்தால் தான் யாரிடமாவது நாம் கேட்கலாம் - "என் சங்கத்து ஆளை அடிச்சது யாருடா..".சாறு சங்கர் சொன்னார் நீங்களும் வந்திருக்கலாம் வடை நிறைய கிடைத்தது.ஒரு வாரத்திற்கு பொழுது போகும் என்றும் நான் வந்திருந்தால் களை கட்டியிருக்கும் என்றும் சொன்னார்.எனக்கு சர்ச்சைகளே பிடிக்காது என்று சொன்னால் அவருக்கு புரியவில்லை.ஆனால் இந்த உள்குத்திலும் பதிவர் விதூஷ் விடாப்பிடியாக வந்தது சாரு நிவேதிதா என்று பதிந்துள்ளார்.ஞானியை விட சாரு பிரபலம் என்று எடுத்து கொள்ளலாமா அது தான் எனக்கு தெரியவில்லை.

தேங்க்ஸ் மா படத்தில் எந்த காட்சியையும் சொல்லி விடக் கூடாது என்ற பதற்றத்தில் சொல்ல நினைத்த ஒரு காட்சியை விட்டு விட்டேன்.ஒரு ஆறு வயது சிறுமியையும் இன்னும் பத்து வருடங்கள் கழித்து என்று கணக்கு போட்டு பார்க்கும் விபச்சார விடுதியில் இருக்கும் மாமாவின் செய்கையால் கொஞ்சம் திகைத்து தான் போனேன்.இது சென்னையில் நான் படித்த ஆண்கள் பள்ளியின் மன நிலையை ஒத்துயிருந்தது.ஆறு படிக்கும் சிறுமியைக் கூட விடாமல்  நக்கல் பறக்கும்.அப்படி சொன்னதற்காக ஏற்பட்ட ஒரு சண்டையின் போது எனக்கு கடியும் பதிலுக்கு அவனுக்கு அடியும் கிடைத்தது.பேருந்தில் இடிப்பவர்களில் பெரும்பாலோனோர் வீட்டில் ஒற்றைப் பிள்ளைகளாகவும்,அல்லது பெண் பிள்ளைகளோடு பிறந்தவர்களாக இருந்தது ஒரு ஆச்சர்யமே.

என்றாவது பேப்பர் படித்தாலும் இந்த கருத்துக்கணிப்பு எடுக்கும் ஆசாமிகள் தொல்லை தாங்க முடியவில்லை.ஆஸ்கர் வாங்கிய உடன் கணவனை விட்டுப் பிரிந்த நடிகைகள் என்று ஒரு பட்டியலே உள்ளது.கேட் வின்ஸ்லட்,சான்ரா புல்லக்,ஹாலி பெர்ரி,ஏஞ்சலினா ஜோலி என்று வருடத்தோடு குடுத்து இருக்கிறார்கள்.இதுவாவது பரவாயில்லை - டேவிட் பெக்காமிற்கு காலில் அடிபட்டதால் அவர் கால்பந்தோடு இன்னொரு விளையாட்டையும் விளையாட முடியாது என்று விளையாட்டு பக்கத்தில் வந்துள்ளது.நாராயணா இந்த கொசுத் தொல்லை தாங்க முடியவில்லை.

ஒரு வழியாக வேட்டைக்காரன் பார்த்து விட்டேன்.பார்த்தால் புது வேலை கிடைக்கிறதாம்.அருமை அண்ணன் நையாண்டி நைனா கூட அந்த வழியில் தான் போனார்.அதனால் வலியை பொறுத்து கொண்டு அந்த படத்தைப் பார்த்து விட்டேன்.தலைவா சுறா பாருங்க.வெளி நாட்டில் வேலை கிடைக்கும். இதை நம்பி இப்படி தொடர்ந்து மக்கள் விஜய் படம் பார்த்தால் வேலை சொர்க்கத்தில் தான்.

சென்னை இனி வரும் எல்லா போட்டிகளையும் ஜெயிக்க வேண்டும்.நடக்கிற கதையா.ஹர்பஜன் சிங்கிடம் பேட்டிங் கற்றுக் கொள்ள பதிரிநாத்தையும்(45 பந்தில் 55 ரன்கள்),இன்னும் சிலரையும் அனுப்ப வேண்டும்.இன்னும் ஒரு சிக்ஸ் அடித்திருந்தால் ஹர்பஜனும் அதே ரன்களை சமன் செய்திருப்பார்.சச்சின் பேட்டை வைத்து ஆடினார் என்று சொன்னார்கள்.என்ன நடந்தாலும் நான் கிரிக்கெட் பார்க்கப் போவதில்லை.

அமீரை சொன்னால் சிலருக்கு இன்னும் கோபம் வருகிறது.நியாயமாக பார்த்தால் அந்த ஆப்பிரிக்க படத்தின் இயக்குனருக்கு தான் கோபம் வர வேண்டும்.இரண்டு மூன்று பதிவுகளில் பார்த்தேன்.பழைய கதைகளை அப்படியே உல்டா அடித்திருக்கிறார்கள்.கட் காப்பி பேஸ்ட் அடிச்சா நன்றி போடணும்.சொந்தமாக யோசித்தது மாதிரி போட கூடாது.சிக்கினால் அமீரின் நிலையை விட மோசமாக போய் விடும்.நண்பர் ஆதாரங்களைக் காட்டிய போது கொஞ்சம் அதிர்ச்சி தான்.நடக்கட்டும் எத்தனை நாளைக்கு என்று பார்ப்போம்.இதை விட உச்சக்கட்ட அதிர்ச்சி போன வருடம் நடத்திய உரையாடல் கதை போட்டியில் அப்படியே எஸ்.ராமகிருஷ்ணனின் கதை ஒன்று உருவப்பட்டிருந்தது.

12 comments:

நீ தொடு வானம் said...

கருத்து கந்தசாமி உங்க ஆள் ஒருத்தர் வரவில்லை.அவர் வந்திருந்தால் துவையலா வந்திருக்கும் எதிர்வினை வந்திருக்கும்.

இரும்புத்திரை said...

முதல் பின்னூட்டமே இப்படி இருந்தா வில்லங்கத்துல தான் முடியும்.ஏற்கனவே சொல்லிட்டேனே எதிர்வினை எழுத மாட்டேன் என்று.

இராகவன் நைஜிரியா said...

ஒன்னுமே புரியலை...

துவையல் சரியா அரைக்கவில்லை என நினைக்கின்றேன்..

எல்லாம் திப்பி திப்பியா இருக்கு

இரும்புத்திரை said...

நடுவில் ஒரு எலியோட தொல்லை.பாதி மறந்து விட்டது.திப்பி திப்பியாக இருந்தால் தானே கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும் அண்ணா.

சங்கர் said...

//தேங்க்ஸ் மா படத்தில் எந்த காட்சியையும் சொல்லி விடக் கூடாது என்ற பதற்றத்தில் சொல்ல நினைத்த ஒரு காட்சியை விட்டு விட்டேன்.//

நீ படத்தோட பேரையே ஒழுங்கா சொல்லல:)))

சங்கர் said...

//சச்சின் பேட்டை வைத்து ஆடினார் என்று சொன்னார்கள்.//

என்னாதிது ??

இரும்புத்திரை said...

தலைவா நீங்க வர்ற போர்ஷனுக்கு ஏதாவது சொல்லுங்க.

நந்தாகுமாரன் said...

செம காமேடிங்க

இரும்புத்திரை said...

பதிவா நானா தெளிவா சொல்லுங்க பாஸ் எது காமெடி

சங்கர் said...

//அண்ணன் சாறு, சங்கருக்கு பதவி கிடைக்கும் வரை அவர் உண்ணாவிரதம் இருப்பார் என்று அறிவிக்கிறேன்//

இப்புடி தானே படிக்கணும் :))

Unknown said...

////சச்சின் பேட்டை வைத்து ஆடினார் என்று சொன்னார்கள்.//

என்னாதிது ??

//

ஆமா சங்கரு கடைசியில நன்றி கூட சொன்னாரே சச்சினுக்கு பேட் குடுத்ததுக்கு..

வரதராஜலு .பூ said...

//ஹர்பஜன் சிங்கிடம் பேட்டிங் கற்றுக் கொள்ள பதிரிநாத்தையும்(45 பந்தில் 55 ரன்கள்),இன்னும் சிலரையும் அனுப்ப வேண்டும்.//

நிஜம். கேம் ஸ்பிரிட்டோடு விளையாடினார் பாஜ்ஜி

//சச்சின் பேட்டை வைத்து ஆடினார் என்று சொன்னார்கள்.//
ஆமாம்.