Saturday, March 27, 2010

இனி எதிர்வினைகள் கிடையாது

தேவைப்படும் போதெல்லாம்
திருடுகிறேன் அது
மனதாக இருந்தாலும்

சண்டைக்கு தயாராக
இறுக்கி கட்டிக் கொண்டேன்
கோமணத்தை
இணையத்தில் அங்காடி தெருவை
விமர்சித்து எதிர்மறையான பதிவு

தப்பானவனாகவே தெரிகிறேன்
ஆடைகளை சீர் செய்ய
நகர்ந்த கைகளைப்
பின் தொடர்ந்ததால்

நல்லவனை நாய்க்குத் தான்
கட்டுவார்கள் - தாத்தா சொன்னது
அவருக்கு தெரியுமா
நாய்கள் தான் முன்வருவதில்லை
நல்லவனைக் கட்ட.

மனது சரியில்லாத சமயம்
உடம்பு பெண் கேட்கிறது
மனதோ பெண்ணின் அருகாமையைக்
கேட்கிறது உடம்பு சரியில்லாத போது
இரண்டு சரியில்லாத போது
சுயமாய் திரிகிறேன்.

அடிக்கடி மறந்து விடுகிறேன்
வரும் பின்னூட்டங்களுக்கு நன்றி சொல்ல
இன்று முதல் சொல்கிறேன்
எனக்கு நானே
பதிவிற்கு நன்றி

5 comments:

நீ தொடு வானம் said...

கவிதை நல்லாயிருக்கு.இப்படி எல்லாம் போட்டா ஒரு பின்னூட்டம் வராது

இரும்புத்திரை said...

நீங்க போடுறீங்களே அது போதும்

மோனி said...

நெஜமாலுமே நல்லாருக்கு நண்பா...

பொற்கோ said...

//நீங்க போடுறீங்களே அது போதும்//
அப்போ நாங்கெல்லாம் போட வேண்டாம்னு சொல்லுறீக, அப்பட் தானே!

இரும்புத்திரை said...

இல்ல நிச்சயம் இல்ல பொற்கோ.