Friday, March 26, 2010

ஒரு மழை நாள் இரவு

எல்லோருடைய காதலும் விவாதிக்கப்பட்டது
அமைதியாக இருப்பவன் காதல் லேசுபாசாகவும்
கோபப்படுபவன் காதல் இன்னும் அதிகமாகவும்
கிளறப்பட்டு தொடுபொருளாக மாறத் தொடங்கியது
அப்பா அம்மா நாய்க்குட்டி என வார்த்தைகளில் ஆரம்பித்தது
எவனோ ஒருவன் எடுத்ததில் எழுத்துகளாக சிதறியது
தேவைப்பட்ட வார்த்தைகளுக்காக கழுவப் பொறுக்கினால்
மழையில் அடித்து செல்லப்படும் போது
இடம் மாறி புரியாத பாஷையில் ஏதோ சொன்னது
கடைசியாக அவள் கண்களில் பார்த்த மினுமினுப்பு
ஓடைத் தண்ணீரில் இழுக்கப்பட்ட சொற்களில் தெரிந்தது
இன்னொரு மழைநாள் இரவிற்காக

காத்திருக்கிறேன்
 அவர்களும் காத்திருக்கலாம்

2 comments:

நீ தொடு வானம் said...

கவிதை மாதிரி தெரியுது

இரும்புத்திரை said...

ம் சந்தோஷம் கவிதை மாதிரி தெரிந்தற்கு