Saturday, June 27, 2009

கோபிக்கு மட்டும் ஏன் புஷ்பா இப்படி...?

உயிரோடை சிறுகதைப் போட்டிக்கு எழுதிய கதை!

கோபி புது படத்தின் கதை விவாதம் பொருட்டு மும்பை வந்திருந்தான் . கூடவே அவன் உதவியாளன் மற்றும் நண்பன் சங்கர் . கோபி நினைப்பதை புரிந்து கொண்டு நடப்பான் சங்கர். தயாரிப்பாளர் மும்பையை சேர்ந்த தமிழன். மும்பை வந்ததில் இருந்து மனதே சரியில்லை. அவள் ஞாபகமாகவே இருந்தந்து கோபிக்கு . கிளம்பும் போதே அவளுடைய முகம் இருண்டு போயிருந்தது .

அவள் - புஷ்பா வயது - 28 பொன்னிறம் . தொழில் - சினிமாவில் துணை நடிகை . தமிழ் சரியாக வராது .

கோபி உதவி இயக்குனராக இருக்கும் பொழுது பட வாய்ப்பு கேட்டு அறிமுகம் ஆகிருந்தாள்.
பின் தொடர்ந்து வந்த பழக்கத்தால் அவள் பெயர் கோபியின் கணினியின் கடவுச் சொல்லாக மாறி இருந்தது .அவளை தொடர்பு கொள்ள தொடர்ந்து அலைபேசியில் முயற்சித்து கொண்டே இருந்தான் . தொடர்ந்து துண்டிக்க பட்டுக்கொண்டே இருந்தது .படம் வெளியாகும் பொழுது அவளை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்திலே எப்பொழுதும் அலைந்தான் . சங்கருக்கு அவளை கொஞ்சம் கூட பிடிக்காது .

***************

சங்கர் பதற்றத்தோடு அறையில் இருந்து அழைத்தான்." கோபி இங்க பாரு... "

உள்ளே நுழைந்தால் தொலைக்காட்சில் ஒரு புது படத்திற்கான பூஜை நேரலையாக ஒளிப்பரபாகிக் கொண்டு இருந்தது. அந்த படத்தின் இயக்குனர் குமரன். கோபியும், குமரனும் ஒரே இயக்குனரிடம் உதவியாளர்களாக இருந்தார்கள் சில வருடங்களாக .இருவரும் நேரெதிர் சிந்தனை, எண்ணம் கொண்டவர்கள் .

சினிமாவில் கவர்ச்சியே தேவை இல்லை என்று கோபி சொன்னால் குமரன் கவர்ச்சி தேவை என்று அரை மணி நேரம் வாதிடுவான். எந்த விஷயத்திலும் இருவருக்கும் ஒத்து வராது. குறிப்பாக பெண்கள் விஷயத்தில் என்றே நினைத்திருந்தான் கோபி .ஆனால் இன்று பொய்யாக மாறி இருந்தது. காசு,வாய்ப்பு வந்த பிறகு கொள்கையாவது மண்ணாவது .குமரனோடு புஷ்பா நின்று கொண்டு இருந்தாள்.

குமரனை அலைபேசியில் அழைத்தான் கோபி .அவன் எடுத்த மறுநொடி " அவ கிட்ட கொடு... நான் உடனே பேசணும்..."

"புஷ்பா ஏன் இப்படி பண்றே..."

"........"

"Yes u r right... Still i am worthless for a penny...then why are staying with me for last 2 years..."

"past is past..."

"you ....." என்று வார்த்தையை சொல்லும் முன் தொடர்பு துண்டிக்கப்பட்டது.

கோபிக்கு ரொம்ப அவமானமாக இருந்தது

சங்கர் ஆறுதல் சொல்லி கொண்டு இருந்தான் ." நான் அப்பவே சொன்னேன்... நீ கேட்கல... சோத்த கூரையில போட்டா ஆயிரம் காக்கா வரும்... போகும்... அதுல ஒன்னுதான் புஷ்பா... விடு மச்சான்..."

குமரனை பற்றி நினைத்த பொழுது சில வருடங்களுக்கு முன்னால் நடந்த விவாதம் ஞாபகத்திற்கு வந்தது .

இயக்குனர் ஒருநாள் இருவரிடமும் நண்பன்,எதிரி பற்றி உங்களுடைய கருத்து என்ன என்ற பொழுது

கோபி சொன்னது

நண்பன் - நம் இரகசியங்கள் தெரிந்த எதிரி (என்றாவது மாறினால் )

எதிரி - நமக்கு பிடிக்காத நண்பன் (யாருக்கோ அவன் நண்பன் தானே) என்ற விவாதம்

குமரன் சொன்னது

நண்பன்,எதிரி - அது என் முடிவை பொருத்தது.

இனி நண்பன் என்றால் குமரன் (இரகசியங்கள் தெரிந்த எதிரி ) என்று எழுத வேண்டும் என்று நினைத்து கொண்டான் .

********************

அவள் போனதிற்கு என்ன காரணமாக இருக்கும்? பணம்? புகழ்? யோசித்து யோசித்து கோபம் தான் மிச்சம்.கோபிக்கு கோபத்தில் மனம் ரொம்ப தகித்தது.

உடம்பு சரி இல்லாத பொழுது மனம் பெண்ணின் அருகாமையை நாடுகிறது .மனம் சரி இல்லாத பொழுது உடம்பு பெண் துணையை தேடுகிறது .(Human mind is reversly proportional to Human Body)

சங்கர் அதை புரிந்து கொண்டவனாக விடுதியின் மேலாளரிடம் சொல்லி விட்டு வந்தான் .

கொஞ்ச நேரத்தில் அறை கதவு தட்டப்பட்டது .

சங்கர் கதவை திறந்தவுடன் பெண் உள்ளே வந்தாள்.

வந்தவுடன் சங்கரை பார்த்து கத்த ஆரம்பித்து விட்டாள் " தூ பாகல் ஹை... தோ ஆத்மி ..........."

" ஹிந்தி மாலும் நஹி..." என்ற சங்கரை பார்த்து

" I just can't imagine the situation with two people come one by one ..." எண்டு கூறினாள்.

"u mistake... not me... only he and u..." என்று சங்கர் உளறி வைத்ததை பார்த்து

"என்ன தமிழா... அப்ப நீ கிடையாதா..."

"மீ டூ... சீ... நீ விருப்பட்டா..." என்று சங்கர் வழிந்து கொண்டு இருந்தான் .

சங்கரை வெளியே அனுப்பி விட்டு அவளை பேச விடாமல் இழுத்து அணைத்தான் கோபி. பிறகு ஏதோ ஞாபகம் வந்தவனாக " போயி குளிச்சிட்டு வா... வரும் பொழுது இந்த புடவையை கட்டி கொண்டு வா..." என்று ஒரு புது புடவையை கொடுத்தான்.

புடவை புஷ்பாவிற்காக தாதரில் கடை கடையாக தேடி எடுத்தது.

அவள் வந்தவுடன் " உன் பெயர் என்ன..." என்ற கோபியை பார்த்து

"ஒவ்வொருத்தனும் ஒவ்வொரு மாதிரி கூப்பிடுவாங்க... மாமா என்ன கேசுன்னு சொல்வான்... ஒருத்தன் ஐட்டம்ன்னு... ஓடி போன பொண்டாட்டி பேர்ல... உனக்கு எப்படி கூப்பிடனுமோ அப்படி கூப்பிடு..."

"நீ எப்படி இந்த தொழில்ல..."

"ஏன் புருஷன் வியாபாரம், தொழில்ன்னு அலைவார்... எங்கிட்ட பேச கூட நேரம் கிடையாது... ஒருத்தன் ஆசை வார்த்தையில நம்பி வந்தேன்... கடைசிலே இப்படி ஆயிருச்சி... "

"சங்கர்... சங்கர்..."

"அது சரி அவன் யாரு..."

"சங்கர் என் உதவியாளன்..."

"இந்த விஷயத்திலும் உதவியா?"

"சீ வாய மூடு... " புஷ்பாவை போல இவளும் ஒருத்தனை ஏமாற்றி இருக்கிறாள் என்ற கோபத்தில் கத்தினான் கோபி.

சங்கர் வந்தவுடன் " சங்கர் நான் வெளியே போறேன்... இரண்டு மணி நேரம் கழித்து வருகிறேன்... அதுக்குள்ள இவள துரத்தி அடிச்சிரு..."

"அப்போ நான் வேண்டாமா..." என்ற அவளிடம்

"குரங்கை மறக்க
கழுதையுடன் கூடலா ?
அது ஏத்திய பொதியை
எந்த காசியில் தொலைப்பது? "

"ஏய் யார பார்த்து கழுதங்ற... இப்போ நான் என்ன பண்ணட்டும்... உன்னால முடியாதுனா நேரா சொல்லு..."

"என்ன ஒன் புருசனா நினைச்சிக்கோ... அவன உன்ன ஏமாத்தின ஒருத்தனா நினைச்சிக்கோ... அப்படியே நான் வர்துக்கு முன்னாடி ஓடி போயிரு..." என்று அவளிடம் கத்தினான் கோபி.

"ஏன் என்னாச்சு..." எண்டு சங்கரிடம் கேட்டு கொண்டு இருந்தாள் .

"லவ் பெய்லியர்..."

"பின்ன இப்படி பேசுனா... எவ இருப்பா ? " என்று கத்தி கொண்டு இருந்தது அறை வெளியே இருந்த கோபிக்கு கேட்டது.

************

கோபி கால் போன போக்கில் சுற்றி கொண்டு இருந்தான் . அப்பொழுது பலத்த மழை வந்து விட

ஒரு மணி நேரம் முன்னதாகவே அறைக்கு திரும்பி இருந்தான் .

மாற்றுச் சாவி கொண்டு கதவை திறந்து வந்தவனுக்கு ஹாலில் கிடந்த சேலை அவனை வரவேற்பு கொடுத்தது.அது அவன் புஷ்பவிற்காக எடுத்தது. கொஞ்ச நேரம் முன்பு வந்தவளிடம் கொடுத்தது .

உள்ளறையில் சங்கரும் அவளும் பேசி கொண்டிருந்ததை கேட்க நேர்ந்தது.

"என்ன அவன் உண்மையிலே ஆம்பிள தானே? என்கிட்டே " வந்து இப்படி நடந்துகிட்ட ஒரே மனுஷன் அவன் தான்..."

"அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை... அவனுக்கு ஏதோ மனகஷ்டம்... அதான் அப்படி நடந்துகிட்டான்..." எண்டு சங்கர் சொல்லி கொண்டு இருந்தான் .

புஷ்பா பிரிந்து போனதற்கு இவள் சொல்வது கூட ஒரு காரணமாக இருக்குமோ என்று நினைத்து வாய் விட்டு அழ ஆரம்பித்தான் கோபி. கையில் அந்த சேலை இருந்தது .

Saturday, June 20, 2009

விஜய் அவார்ட்ஸ் - சில துளிகள்

சென்ற வருடம் சிறந்த பாடலாக தேர்வு செய்யப்பட்டது " அஞ்சல - வாரணம் ஆயிரம் " எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது "கண்கள் இரண்டால் " பாடலை விட சிறந்த பாட்டு என்பதில் சந்தேகம் இல்லை
ஹாரிஸ் ஜெயராஜுக்கு இந்த விருதை கொடுத்தவர் கௌதம் மேனன் . கொடுத்து விட்டு நழுவ பார்த்தார் (கோபிநாத் விடவில்லையே )
எப்போ அடுத்த படத்தில் இணைவீர்கள் என்று கேட்டார் . கூடிய விரைவில் என்ற பதில் கௌதம் மேனனிடம் இருந்து வந்தது .
(Waiting for that film songs)

* சிறந்த பாடலாசிரியர் விருது தாமரைக்கு கொடுக்கப்பட்டது
நல்ல தேர்வு . வெற்றி என்பது வெற்றிடம் என்று கூறினார். தோல்வியை தான் ஆராய வேண்டும் , வெற்றியை அல்ல .வெற்றி(டத்தில்) - இருந்து தான் நாம் கூச்சல் போடுகிறோம் என்பது நூறு சதவீதம் உண்மை .

* சிறந்த ஒப்பனை - வாரணம் ஆயிரம் படத்திற்காக கொடுக்கப்பட்டது
நான் எங்கே தசாவதாரம் படத்திற்கு கொடுத்து கெடுத்து விடுவார்களோ என்று பயந்து விட்டேன் .
எனக்கு ஒப்புதல் இல்லாத சில விருதுகள்

* சிறந்த ஒளிப்பதிவாளர் - கதிர் (சுப்ரமணியபுரம் )
அதை விட சிறந்த ஒளிப்பதிவு கொண்ட படங்கள் இரண்டு இருக்கிறது தசாவதாரம்,வாரணம் ஆயிரம்

* சிறந்த புதுமுகம் - சாந்தனு
அலிபாபா கிருஷ்ணாவுக்கு விருது கொடுத்து இருக்கலாம்
விஜய் தொலைகாட்சி எடிட்டர் சில தவறுகளை செய்து இருந்தார்
சிறந்த புதுமுகங்கள் விருது கொடுக்க தமன்னா மற்றும் சின்ன தளபதி (கைப்புள்ள) பரத் சென்று இருந்தார்கள்

விருது கொடுக்கும் பொழுது விஜயை காட்டினார்கள் பக்கத்தில் தமன்னா இருந்தார் (எப்படி இரண்டு இடத்தில இருந்தார் என்பதற்கு விஜய் தொலைகாட்சிக்கே வெளிச்சம் )

* ஜெய் , சசிகுமார் இருவருக்கும் ஆங்கில வகுப்பு எடுத்த கதையை ஜேம்ஸ் வசந்தன் சொல்லி முடித்த பிறகு சசிகுமார் - நாங்கள் தமிழன் என்றார் .அரங்கமே அதிர்ந்தது

* ஜெய் மைக் கொடுத்தவுடன் இப்போ எல்லாம் பேசவே பயமாய் இருக்கிறது என்று கூறியவுடன் கோபிநாத் திரும்பவும் மைக் கொடுக்க சொன்னார்

* சிறந்த படம் , சிறந்த இயக்குனர் , சிறந்த குழு - விருகளை சசிகுமார் பெற்று கொண்டார் .சசிகுமார் இந்த விருதிற்கு மிக பொருத்தமானவர் - இந்த மூன்று விருது வாங்க அவர் பத்து முதல் பதிமூன்று வருடம் உழைத்து இருக்கிறார் (சேது - சுப்ரமணியபுரம்). குரு தட்சணையை அழகான முறையில் கொடுத்து இருக்கிறார் .(பாலா அமீர் மற்றும் ஜேம்ஸ் வசந்தன் )

எனக்கு போன வருடத்தில் வந்த படத்தில் பெரிதும் ஈர்க்காத படங்கள் - சுப்ரமணியபுரம் மற்றும் தசாவதாரம்.

தசாவதாரம் - அன்பே சிவம் (சில கமல் ரசிகர்களுக்கு பிடிக்காத படம் ) கவர்ந்த அளவுக்கு எனக்கு இந்த படம் பிடிக்கவில்லை (கவர்ச்சி காட்ட மல்லிகா செராவத்தின் பாடல் (the rock என்ற ஆங்கில படத்தில் இருந்து "சில" காட்சிகளை உருவி இருப்பார்கள் 1996 வருடம் வந்த படம் chemical weapon என்ற மூடிச்சில் தொடங்கும் கதை)

சுப்ரமணியபுரம் - நமக்கு வன்முறை மிகவும் பிடிக்கும் என்பதை நிருபித்த படம் இதற்கு வன்முறையை மறைத்து காண்பித்த அஞ்சாதே மற்றும் வன்முறையே இல்லாத பொம்மரில்லு (சந்தோஷ் சுப்பிரமணியம் ) சிறந்தது என்பது என் கருத்து.

சுப்ரமணியபுரம் - We can call this success as One Song Wonder (கண்கள் இரண்டால் )பருத்தி வீரன் படத்திற்கும் இதற்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு (காதல் வந்த பிறகு பருத்தி வீரன் கார்த்தி இப்படி தலை ஆட்டுவார் இந்த படத்தில் தொடக்கத்திலே ஜெய் தலையை ஆட்டுவார்)

சுப்ரமணியபுரம் பிடிக்காமல் போனதற்கு இன்னொரு காரணம் - படத்தை முழுமையாக காட்டவில்லை. (ட்ரைலர் பார்த்தவர்களுக்கு தெரியும் சசிகுமார் சுவாதியை கத்தியுடன் துரத்தி செல்வார்) என்ன நடக்கும் என்றால் அவர் சுவாதியின் கண்களை பிடுங்கி எடுத்து விடுவார் பிறகு என்ன நிர்பந்தமோ ( பெண் பார்வையாளர்கள் அல்லது சென்சார் ) அந்த காட்சி வெட்டப்பட்டது .இருந்து இருந்தால் இன்னும் மிக பெரிய வெற்றியை பெற்று இருக்கும் .

சிறந்த நடிகர் சூர்யா - என் குழந்தை சாப்பிடும் பொழுது எனக்கு ஒரு வாய் ஊட்டும் அது போல கமல் எனக்கு இந்த விருதை விட்டு கொடுத்து உள்ளார் என்ற உவமை அழகாக இருந்தது .

விருது வாங்கும் பொழுது சூர்யாவின் குடும்பமே மேடையில் இருந்தது . மிக அழகான குடும்பம் .

சிறந்த உடை அலங்காரம் விருது - கௌதமி வாங்கினார் ( சிறந்த உடை அலங்காரத்தை விழாவிலும் காட்டினார் கண் கொள்ளா காட்சி) நன்றி - விஜய் தொலைகாட்சி ஒளிப்பதிவாளர் மற்றும் எடிட்டர்
என்ன சொன்னாலும் விஜய் முகத்தில் ஒரு சலனமே இல்லை - நான் மிக ஆச்சர்யப்பட்ட ஒரு திறமை

கமல் என்ற பல்கலைகழகத்தில் நான் ஒரு கடைசி பெஞ்ச் மாணவன் என்று விஜய் கூறினார் (நீங்க பல்கலைகழகத்திற்கு வெளியே நிற்கும் மாணவன் )

மக்களுக்கு மிகவும் பிடித்த படங்களின் வரிசை - பீமா , ஏகன் , குருவி (என்ன கொடுமை சார் இது )

கோபிநாத்தின் நிகழ்ச்சி தொகுப்பு யூகிசேதுவின்( சென்ற வருடத்தின் நிகழ்ச்சி தொகுப்பு ) அளவிற்கு இல்லை

அரங்க அமைப்பு மிக அருமையாக இருந்தது .LED (Light Emission Diode) வைத்து விளையாடி இருந்தார்கள் .

பின் குறிப்பு

இந்த நிகழ்ச்சி பார்க்க நான் எட்டு மணி நேரம் செலவு செய்தேன் . இதை எழுத ஒரு இரண்டு மணி நேரம் எடுத்து கொண்டேன்

Thursday, June 11, 2009

இன்னொரு ஆட்டோகிராஃப் - ஒரு எதிர்வினை

உங்களுக்கு சாதகமா ஆட்டோகிராஃப் படத்த எடுத்து விமர்சனம் விமர்சனம் செஞ்சுடிங்க . ஏன் மத்த படங்களையும் விட்டு வைக்கணும்

படம் 1:
அஞ்சாதே படத்துல வர்ற பிரசன்னா கேரக்டர ஒரு பொண்ணு பண்ணி
இருந்தா ?சகிக்க முடியல இல்ல?

படம் 2:
சுப்ரமணியபுரம் படத்துல ஜெய்க்கு பதிலா சுவாதி தலைய ஆட்டிகிட்டு "கண்கள் இரண்டால் " பாட்டு பாடுனா ?
ரசிக்க முடியல இல்ல?

படம் 3:
பூ படத்துல ஸ்ரீகாந்த் இடத்துல பார்வதியையும் , பார்வதி இடத்துல ஸ்ரீகாந்தும் கேரக்டர் மாறி செஞ்சு இருந்தா ?
மனதில் ஒட்டவே இல்லை இல்ல?

ஒரு பெண்ணின் ஆட்டோகிராஃபை அறிந்து கொள்ள நம் எத்தனை பேருக்குவிருப்பம், அல்லது தைரியம் இருக்கிறது?

இந்த கேள்விக்கு பதில் ஆட்டோகிராப் படத்துல சிநேகாவுக்கு ஒரு காதல் தோல்வி இருக்கும் . சேரன பார்த்துதான் சினேகா அவங்க பழைய காதலன் கிட்ட இருந்து மீண்டு வந்தேன் என்று சொல்வாங்க .

இதே இடத்துல வேற ஒரு படத்த பொருத்தி பாக்கணும் தோணிச்சு
அந்த படம் அவள் அப்படித்தான்.

ஸ்ரீப்ரியா - ரவீந்தரின் காதல் தோல்விக்கு பிறகு சிவசந்திரன் ஸ்ரீப்ரியாவ ஏமாத்தி கடைசில "நீ ஏன் தங்கச்சி " அப்படின்னு சொல்வார் அதுக்கு ஸ்ரீப்ரியா ஒரு பதில் சொல்வாங்க - அருமையான பதில் .

பெண்களின் ஆட்டோகிராப் தெரிந்து கொண்டால் அவள் நிலைமை என்னவாகும் என்பதற்கு எடுத்துகாட்டு அவள் அப்படித்தான்.

இதுதான் பெண்களின் ஆட்டோகிராஃப் .மிக பெரிய வெற்றி .இயக்குனர் ரூத்தரையா தான் காணாம போய் விட்டார் .

இன்னும் பெண்களுக்கு ஆதரவா பெண்களை மையமாக வந்த படங்கள்
அவள் ஒரு தொடர்கதை , அவர்கள் , அபூர்வ ராகங்கள் - எல்லா படமும் வெற்றி படங்கள் வரதட்சனை கொடுக்க மாட்டேன் என்று சொன்ன ஏன் கல்லூரி தோழி அதிக பணம் வரதட்சனை கொடுத்து அமெரிக்காவில் இருக்கிறார் .

"நான் வீட்டுல இருந்து குழந்தைய பார்த்துகிறேன் நீ வேலைக்கு போ இந்த நிபந்தனைக்கு ஒத்து கொண்டால் நாம் திருமணம் செய்து கொள்ளலாம் " என்று ஒரு வாத போட்டியில் நான் சொன்னதால் எனக்கு முறிந்த "நெருங்கிய " நட்பும் உண்டு .

"இந்த பொண்ணுங்களை படிக்க அனுப்ப கூடாது " என்று சொன்ன நண்பனிடம் "முதலில் உன் தங்கையின் படிப்பை நிறுத்து அதற்கு பிறகு மற்றவர்களை தடுக்கலாம் " என்று நான் சொன்னதால் இரண்டு மாதங்கள் இருவரும் பேசி கொள்ளவில்லை .

ஆண்கள் வளருவதே பெண்களிடம் தான் முதலில் ஆண் - பெண் பேதங்களை விதைப்பதே பெண்கள் .

ஆண் அழுதா "ஆண் பிள்ளை அழ கூடாது என்று தடுத்து விடுவார்கள் "
நான் உங்களிடம் கேட்கிறேன் "அப்ப நான் அழ வேண்டும் என்றால் பெண்ணாக தான் பிறக்க வேண்டுமா ?"

பெண் இயக்குனர் எடுத்த விஷ்வதுளசி என்ற படத்தை பெண்கள் எத்தனை பேர் பார்த்து இருக்கிறார்கள் ?

ஜானகி விஸ்வநாதன் எடுத்த குட்டி படம் எத்தனை பேருக்கு தெரியும் ?
நமக்கு தெரிந்தது எல்லாம் மீரா நாயரும் , தீபா மேத்தாவும் தான் .

முதலில் பெண்களுக்கு படம் எடுக்க ஒரு பெண் கூட தமிழ்நாட்டில் இல்லை (பிரியா , ரேவதி இவர்கள் எல்லாம் கணக்கில் இல்லை )

பெண்களுக்கு படம் எடுக்க ஆண்கள் தான் இருக்கிறார்கள் .பெண்கள் வந்து ஆட்டோகிராஃப் படம் எடுத்தால் நாங்கள் கை தட்டி வரவேற்ப்போம்.

ஆனால் அதை எடுக்க ,ஆதரிக்க எந்த பெண்களுக்கும் தைரியம் இல்லை .

Wednesday, June 3, 2009

வன்முறையின் தொடக்கம்

இதுவரை பயிற்சி கொடுப்பதிலும் ,கட்டளை இடுவதிலும் காலத்தை ஓட்டி கொண்டிருந்த சரணுக்கு இது பெரிய வாய்ப்பு. கடைசி கட்டத்தில் ஏதோ அவசர வேலையாக விக்ரம் தீவிரவாதி முகாம்களை அழிக்கும் பொறுப்பில் இருந்து விலகி இருந்தான். அந்த பொறுப்பு தற்சமயம் சரணுக்கு கொடுக்கப்பட்டது . அதுவரை விக்ரமின் மூளையாக இருந்த சரண் மிக சாதுர்யமாக மிச்சம் இருந்த ஏழு முகாம்களை அழித்து இருந்தான் . இந்த வெற்றியால் சரணுக்கு மேஜர் என பதவி உயர்வு கிடைத்தது .

வெற்றியும் ,பதவி உயர்வும் தந்த போதையில் எதை தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலைமை சரணுக்கு. அடுத்த கட்டமாக பக்கத்துக்கு ஊரில் அடிக்கடி தாக்குதல் நடத்தும் மக்கள் இயக்கத்தை ஒடுக்கும் வேலை கொடுக்கப்பட்டது . விக்ரம் இதற்கு பலத்த எதிர்ப்பு தெரிவித்தான் .

" என்கிட்டே குடு. நீ வழக்கம் போல யோசனை சொல்லு இது வேண்டாத வேலைன்னு எனக்கு தோனுது "

"விக்ரம் நாந்தான் இப்ப மேஜர் . எல்லா முடிவையும் நாந்தான் எடுப்பேன் . நீ சும்மா வேடிக்கை மட்டும் பாரு "

" நமக்கு இங்க வேற வேலை இருக்கு நாம ஏன் அவங்களுக்கு உதவி செய்யணும் "

" சாகசம் பண்ணலாம் . மலை,ஆறு ,கடல் இப்படி எல்லா இடத்துலயும். நீ கொஞ்ச நேரம் உன் வாய பொத்திக்கிட்டு இரு "

"என்னவோ பண்ணு சரண் "

போன தடவை போல் இல்லாமல் இது எங்களுக்கு புதிதாக இருந்தது . மரண அடி வாங்கி கொண்டு இருந்தோம் . அரிதாக நங்கள் சில இடங்களில் அவர்களை துரத்தி அடித்து இருந்தோம் .அவர்கள் கொரில்லா தாக்குதல் செய்ததில் எங்களுடைய ஆயுதம் ,சாப்பாடு மிகவும் குறைந்து இருந்தது .

என்னுடைய கோபம் அப்பாவி மக்கள் மீது திரும்பி இருந்தது . விக்ரம் எச்சரித்து கொண்டே இருந்தான் .

" சரண் நம்ம கிட்ட பிரச்சனை செய்யாத மக்களை சுடாதே "

"எதிரின்னு வந்துட்டா எல்லாரும் ஒன்னுதான் திரும்பவும் சொல்றேன் வேடிக்கை மட்டும் பாரு "

சில நேரத்தில் சரண் யோசனையை விக்ரம் கேட்க மாட்டான்.அந்த கோபத்தை சரண் இப்பொழுது காட்டி கொண்டு இருந்தான் .

" நாம இப்படி சரண் அடைஞ்சவன் கூட பாக்காம சுட்டா அவன் உயிர தப்பிக்க நம்ம எல்லாரையும் திருப்பி சுடுவான் சரண் "

"அவன விட்டு வைச்சாலும் இதை தான் செய்வான் விக்ரம் "

விக்ரம் பேச்ச கேட்காம அப்பாவி மக்களை ஆண் ,பெண், குழந்தைன்னு பாக்காம எல்லாரையும் சுட்டு தள்ள ஆரம்பிச்சான் சரண் .

"டேய் அவங்க வெடிகுண்டு வீசுறாங்க. இன்னும் ஒரு நிமிசத்துல இந்த இடத்தை காலி பண்ணனும். சீக்கிரம் ஓடி வா சரண் "

வெடிகுண்டு வீசியதில் எங்களின் முக்கிமான ஒரு நபரை கொன்று இருந்தார்கள் .

" நான் அப்பவே சொன்னேன் கேட்டியா இப்போ எல்லாம் போச்சு எல்லாம் உன்னால தான்டா ___ "

"விக்ரம் மரியாதையா பேசு "

இது நடந்து பதினெட்டு நிமிடத்தில் அவர்களை அழிக்க உதவி செய்யப்பட்டு மக்கள் இயக்கத்தை கிட்டதட்ட அழித்து இருந்தார்கள் .

"உனக்கு என்னடா மரியாத ___ சொல்ல சொல்ல கேட்கலியே "

வந்த கோபத்தில் கையில் இருப்பதை எல்லாம் கீழே போட்டு விட்டு விக்ரமுக்கு நாலு அடி அடித்து விட்டு அந்த அறையை விட்டு வெளியே வந்தான் சரண் .

******

"யம்மா இங்க பாரு தப்பு தப்பா கேம் விளையாடி நான் ஸ்கோர் பண்ணதே எல்லாம் கெடுத்துட்டான் . அவன் பேர பாரு கர்னல் சரண்ணு சேவ் பண்ணி இருக்கான் . கான்ஸ்டபிள் ஆக கூட துப்பு கிடையாது . ஒழுங்கா விளையாடு சொன்னதுக்கு என்னை அடிச்சிடான் " என்று அம்மாவிடம் அழுது கொண்டே சொன்னான் விக்ரம் .

"சரி அழாதே அண்ணன் தானே செஞ்சான் . திரும்ப விளையாடு "

"சும்மா அவனுக்கே சப்போட் பண்ணாதே. நான் அப்பவே சொன்னேன் அந்த போனஸ் லெவல் விளையாட வேண்டாம்ன்னு அவன் கேட்கல என்னை அடிச்சிட்டு கேம்ல ஒரு பைல்ல வேற டெலிட் பண்ணிடான் "

"பின்ன அவன்கிட்ட ஏன் விளையாட கொடுத்த "

"பாத்ரூம் போயிட்டு வரதுக்குள்ள அவன் இடத்த புடிச்சிடான் "

"திரும்ப அந்த கேம்ம கம்ப்யூட்டர்ல போட முடியாதா ? "

"சரி பண்ண ரொம்ப நேரம் ஆகும்மா முதல்ல இருந்து இன்ஸ்டால் பண்ணனும் " என்ற விக்ரமை அணைத்து கொண்டாள் அம்மா .

******

இப்படி கதையை முடித்தாலும் இதில் இலைமறை காய்மறையாக சொல்லி இருக்கும் கடைசி இருவத்தைந்து ஆண்டு கால ஈழ போராட்டம், இந்தியாவின் தலையீடு , ராஜீவ் படுகொலை , வன்முறையின் தொடக்கம் எல்லாம் மக்களுக்கு புரியுமா ? என்று கதை சரி பார்த்துக் கொண்டிருந்த எழுத்தாளன் மனதில் தோன்றி மறைந்தது .

"கதையில் வர்ற அந்த விக்ரம் கேரக்டர் சொன்ன மாதிரி இந்த உலகத்த திரும்ப படைச்சா தான் அந்த பழைய அமைதியான இலங்கையும் , செத்து போன மக்களும் திரும்ப கிடைப்பார்களா ? அதுக்கு ரொம்ப காலம் ஆகுமா ? " என்று யோசித்து கொண்டே படுக்க சென்றான் .

******

'(உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது)