Wednesday, December 2, 2009

நக்கல்,விக்கல்,சிக்கல்

எங்களுக்கு கணிசமாக மக்கள் ஆதரவும்,ஓட்டும் திருச்செந்தூர் தொகுதியில் இருக்கிறது என்று பா.மா.க கட்சி சொன்னாலும் அவர்கள் இந்த இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை.எதுக்கு மக்கள் ஆதரவையும்,ஓட்டையும் வீண் செய்கிறார்கள் என்று கோபம் வருகிறது.வன்னியர் சொத்துகளை எல்லாம் உங்கள் வசம் தான் இருக்கிறதா என்று பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கேட்டப் போது அந்த கட்சியின் நிறுவனர் சொன்ன பதில் "எந்த நாய் சொன்னது..நீங்கள் எந்த பத்திரிக்கை.."(ஆ..மஞ்சள் பத்திரிக்கை) என்று கொதித்து பாதியில் வெளியேறியுள்ளார்.

(இருக்குன்னா இருக்குன்னு சொல்லுங்க..இல்லை இல்லன்னு சொல்லுங்க..அதை விட்டு போட்டு சின்னப் புள்ள மாதிரி கத்தினா எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்று நீங்களே காட்டக் கூடாது..தண்டோரா அண்ணன் பதிவில் சுள்ளிப் பொறுக்கப் போனவர் என்ன ஆனார்..)

எந்த சோதிடர் சொன்னார் என்று தெரியவில்லை.எம்.ஜி.ஆர் மாதிரி நீங்களும் படம் இயக்கினால் முதல்வர் ஆகி விடலாம் என்று சொல்லியிருப்பார் என்று நினைக்கிறேன். கேப்டன் விஜயகாந்த் விருதகிரி என்ற பெயரில் படம் இயக்குகிறார்.

(ஜி..இந்த படத்தை இந்தியில் ரீமேக் செய்வீர்களா..கதை போலீஸ் கதையாக தான் இருக்கும்.அப்படியே அந்த சோதிடர் நடிக்க வேண்டாம் சொன்னால் அவருக்கு கோடிப் "புண்"ணியமாகப் போகும்..)

ரேணிகுண்டா படத்திற்கு விளம்பரம் சீமானிடம் வாங்கி இருக்கிறார்கள்.அவர் சொன்னது எங்கள் மண் தான் வறண்டு இருக்கிறது.மண்டை வறண்டு விடவில்லை என்று சொல்லியிருக்கிறார்.பேசுவதற்கு அவருக்கு சொல்லித் தரத் தேவையில்லை.சிட்டி ஆப் காட் படம் என்று சொல்கிறார்கள்.பாப்போம்.

(சமீபத்தில் அமீருக்கு வறண்டுப் போனது தெரியும்.இப்படி பேசுவதை விட ஈழ மக்களுக்கு ஏதாவது செய்யுங்கள்.ஏற்கனவே குடுத்த உணவே கடலில் மிதக்கிறது என்று சாக்கு எல்லாம் சொல்ல வேண்டாம்.எங்களுடைய உறவினர் என்று சொல்லி அகதி முகாமில் இருந்து சில சிறுவர்களைத் தத்து எடுத்து சினிமா கற்றுக் கொடுங்கள்.அது போதும்.உலகத் தரத்தோடு படம் வரும்.)

விஜய்யும்,சீமானும் கோபம் என்ற படத்தில் இணைகிறார்கள் என்று பேச்சு.

(ஈழ ஆதரவாளர் ஜெகத் கஸ்பரும்,எதிர்ப்பாளர் கார்த்தி சிதம்பரமும் கைக் கோர்ப்பது போல் உள்ளது)

அது என்ன காரணம் என்று தெரியவில்லை.நான் விரதம் இருந்தால் சாப்பாடு நன்றாக போடுகிறார்கள்.பத்து நாட்கள் அசைவம் சாப்பிடவில்லை. போட்டு தாக்கியதாக என் மேலாளர் சொன்னார்.சாப்பிடுவதை நிறுத்தி விடு இன்னும் நன்றாக இருக்கும் என்று நக்கல் செய்கிறார்.

(விரதம் முடிந்தது.சாப்பாடு கூப்பாடு தான்..)

நைனா சமீபத்தில் அலைபேசியில் அழைத்து ஒரு நிமிடம் விடாமல் சிரித்தார்.சர்வேஷன் கதைப் போட்டியில் வாங்கிய குத்துகளைப் பார்த்தே இந்த சிரிப்பு.அடுத்து கவிதைப் போட்டியில் கலந்து கொள்வாயா என்று நக்கல் செய்கிறார்.புண் ஆறி விட்டதா என்று சிரிக்கிறார்.கவிதை எழுது நான் எதிர்கவிதை போட வேண்டும் என்று சொல்கிறார்.கடைசி நாளில் தான் கலந்து கொள்வேன் என்று சொன்னேன்.உன் கவிதைக்கு எதிர்கவிதை எழுதி விட்டு தான் ஒய்வேன் என்று மிரட்டியிருக்கிறார்.என் கவிதையே எதிர்கவிதை மாதிரி தான் இருக்கும்.

(சூட்டோடு சூடாக பைந்தமிழ் மன்றம் நடத்திய போட்டியில் கலந்து விட்டேன்.அது நைனாவிற்கு தெரியுமா என்று தெரியவில்லை.அந்த கதை
பேருந்தின் ஜன்னல் ஒரத்தில்..எத்தனை குத்து வாங்கினாலும் அடங்க மாட்டோம்..)

நீங்கள் விஜய் ரசிகராக மாறியதற்கு என்ன காரணம் என்று கேட்கிறார்கள்.நீங்கள் அஜித் ரசிகரா என்று பார்ப்பவர்கள் எல்லாம் கேட்கிறார்கள்.இல்லை என்று காட்டவே இந்த முடிவு.

(அசல் வரட்டும்..ஒரு காட்டு காட்டுறேன்..)

ஆதி பிரதாபனிடம் சர்வேஷன் கதையை மாற்றி விடட்டுமா என்று கேட்டேன்.அன்று போனவர் முடிவு அறிவித்தப் பிறகு தான் வந்தார்.கதையைப் படித்த தாக்கமா என்று தெரியவில்லை.

(ஆதியின் கதை போட்டியில் தேர்வு செய்யப்பட்டுள்ளது..வாழ்த்துக்கள் தல..)

இலங்கை தேர்தல் நெருங்குவதால் கடித்து வைத்த இனிஷியல் உள்ள நாய்கள் "ஒ"நாய்கள் எல்லாம் அவர்களுக்கு உள்ளேயே சண்டை போடுகின்றன. இன்னும் ஒரு மாதத்தில் தெரிந்து விடும் யாருக்கு இரத்தம் குடிக்க பாக்கியம் கிடைக்கும் என்று.

(எல்லா ஊர்களிலும் இதுதான் நிலைமையா..)

யோகி தொடங்கும் சமயத்தில் கதையும் அமீரின் பெயரில் இருந்ததாக ஞாபகம்.படம் வெளி வரும் போது அது இயக்குனர் பெயருக்கு மாறி விட்டது.

(பழியைப் போட ஆள் வேண்டாமா..பழைய பேப்பரைத் தேடி எடுக்க வேண்டும்..)

இனி நைனாவிற்கு நிறைய வேலை இருக்கும்.கவிதைப் போட்டி ஆரம்பித்து விட்டது.எதிர் கவிதைகள் தொடங்கும்.எனக்கு "டிசம்பர் 18" வரை ஒரு வேலை இருப்பதால் பிறகு கலந்து கொள்கிறேன்.எப்படியும் 500 எதிர்கவிதைகள் சேரும் என்பது என் கணக்கு.

(வேலைக்கும் வேட்டைகாரனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை..அப்படி யோசித்தால் நான் பொறுப்பு அல்ல..)

9 comments:

மனிதன் said...

PMK has good base in Vandavasi constituency not in Tiruchendur.I think Ramadoss may said about Vandavasi.Reporter should have basic knowledge or little preparation before going to interview.

நையாண்டி நைனா said...

எங்களை ஜப்பான்லே ஜாக்கிசான் கூப்பிட்டாகோ... அமெரிக்காவிலே அர்னால்டு கூப்பிட்டாகோ...

அகல்விளக்கு said...

//டிசம்பர் 18 வரை ஒரு வேலை இருப்பதால்//

ஓஓஓவ்வ்வ்வ்வ்வ்வ்.........

இதென்ன தல புதுச்சா இருக்கு

:-)

அமுதா கிருஷ்ணா said...

அமீரின் யோகி என்று தான் முதலில் விளம்பரம் வந்தது...இவர் நடிப்பதை பார்த்து அப்படியே கார்த்திக் நடித்து இருப்பார் பருத்திவீரனில்..ஆனால்,அவரை பிடித்தது,,இவரை பிடிக்கலை...

க‌ரிச‌ல்கார‌ன் said...

//(வேலைக்கும் வேட்டைகாரனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை..அப்படி யோசித்தால் நான் பொறுப்பு அல்ல..)//

ரைட்டு அப்புற‌ம் த‌ல‌ சாரி த‌ள‌ப‌தி

க‌ரிச‌ல்கார‌ன் said...

//பாட்டாளி said...
PMK has good base in Vandavasi constituency not in Tiruchendur.I think Ramadoss may said about Vandavasi.Reporter should have basic knowledge or little preparation before going to interview.//

இங்க‌ பாருடா கொடுமைய த‌மிழ்க்குடிதாங்கியோட‌ தொண்ட‌ருக்கு த‌மிழ் தெரியாதா? அய்யா அந்த‌ ச‌வுக்க‌ எடுக்க‌வா?

க‌ரிச‌ல்கார‌ன் said...

//பாட்டாளி said...
PMK has good base in Vandavasi constituency not in Tiruchendur//

ஏது விருத்தாச‌ல‌த்துல‌ இருக்கே அந்த‌ மாதிரியா.....

க‌ரிச‌ல்கார‌ன் said...

//பாட்டாளி said...
Reporter should have basic knowledge or little preparation before going to interview.//

ஏப்பா ரிப்போர்ட்ட‌ர் புண்ணிய‌வான்க‌ளே இனிமே பேட்டிக்கு போகும்போது ந‌ல்ல‌ பாட்டா ஷீ வோட‌ தயாரா போங்க‌

க‌ரிச‌ல்கார‌ன் said...

அர‌விந்த் அண்ணே என‌க்கு ஒரு ட‌வுட்
அபுதாபிக்கெல்லாம் ஆட்டோ வராதுல்ல‌........ஆவ்வ்வ்