Thursday, December 31, 2009

2010 - சினிமா,அரசியல் மற்றும் இரும்புத்திரையில் என்ன மாற்றங்கள் நிகழும்

சரியாக எட்டு வருடங்களுக்கு முன் 2002 புதுவருடம் வீட்டில் எல்லோரும் சொந்தகாரர்கள்,நண்பர்கள் என்று தெரிந்தவர்கள் எல்லோருக்கும் தொலைப்பேசியில் வாழ்த்தினார்கள்.நான் மட்டும் ஒரமாக இருந்து கொண்டு இந்திய தொலைக்காட்சியில் முதல் முறையாக படம் பார்த்துக் கொண்டிருந்தேன்.வற்புறுத்தி துன்புறுத்தி என்னை வாழ்த்து சொல்ல சொன்னார்கள்.வேண்டா வெறுப்பாக சொல்லிக் கொண்டிருந்தேன்.அடுத்த நாள் பூகம்பம் வெடிக்கப் போவது தெரியாமல் புது நாள் பிறந்தது.

பதினெட்டு வயதை நான் தொட பதினைந்து நாட்களுக்கும் குறைவாகவே இருந்தது.தோழி வந்தப் போது தான் கவனித்தேன்.முகமே சரியில்லை."நீ ஏன் எனக்கு நேத்து போன் பண்ணல.." முதல் கேள்வியே அதிக பவுன்ஸானது.குனிந்து விட்டு இருக்கலாம்.அதுதான் எந்த காலத்திலும் கிடையாதே. "இவ்வளவு அக்கறை இருக்குல..நீ பண்ண வேண்டியது தானே..".ஒரு நண்பனின் பெயரை சொல்லி - "அவன் பண்ணினான் தெரியுமா.." முகத்துக்கு நேரே புல்டாஸ்."அவன் எல்லோருக்கும் போன் பண்ணுவான்..அதுக்கு நான் என்ன பண்ண முடியும்..ஏன் கம்பேர் பண்ற..". "அவன் எவனோ ஒருத்தன் அவனே பண்ணும் போது உனக்கு என்ன கேடு.." நெஞ்சில் படும் போலத் தெரிந்தது."அப்ப அவன் தான் உனக்கு பொருத்தமாக இருப்பான் பெஸ்ட் ஆப் லக்.." சொல்லும் அவளோடு இருபது வருடங்கள் சேர்ந்து வாழ்ந்த அயர்ச்சி பதிலில் தெரிந்தது.புது வருடத்தோடு நட்பு காலி. வெள்ளைக்காரனின் பின்னால் போய் நம் சுயத்தை இழந்து கொண்டு இருக்கிறோம் என்று இதுவரை புத்தாண்டை பெரிதாக நினைத்தது கிடையாது.

அது மாதிரி எந்த நட்புகளையும் நான் இழக்க விரும்பவில்லை.அதனால் புதிய நாள் வாழ்த்துக்கள்.தூங்கி முழிக்கும் ஒவ்வொரு இரவும் புதிய நாள் தான் புத்தாண்டு தான்.சுயம் கொஞ்சம் போனால் தான் என்ன - புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பர்களே.

இனி என்ன மாற்றங்கள் நிகழும்..

இரும்புத்திரையில் இருந்து ஒரு தொழிலதிபர் உருவாகலாம்.(புண்ணாக்கு,குண்டூசி கூட விற்கலாம்)

சுறாவை சன் வாங்கி வெளியிட்டு மக்களை பதம் பார்க்கலாம்.பதிலுக்கு எந்திரனை மக்களும் பதம் பார்க்கலாம்.

பா.ம.க எந்த கட்சியில் இருக்கிறது என்று குழப்பங்கள் வரலாம்.

குடியாத்தம் தேர்தலில் உடன் பிறப்புகள் வெற்றி பெற்று மைனாரிட்டியில் இருந்து மெஜாரிட்டிக்கு ஒரு படி முன்னேறலாம்.

மகேஷ் பாபு படம் நடித்து வெற்றி பெற்றால் விஜய் 2011லில் ஒரு உண்மையான வெற்றி படம் குடுக்கலாம்.

இரும்புத்திரையில் இருந்து புத்தகம் வரலாம்.(பி.டி.எப் கோப்புகளாக என் பதிவை மாற்றி தருகிறேன் என்ற அர்த்ததில் சொன்னேன்.)

விஜய் பா.ஜ.க இளை ஞர் அணியில் சேரலாம்.விஜயகாந்த் கூட்டணி வைக்கலாம்.(மக்கள் கூடத் தான்)

கேப்டன் டிவியில் விருதகிரி படம் பார்த்து மகிழலாம்.

பொன்சேகா வெற்றி பெற்று குடியரசு தலைவர் மாளிகையில் விருந்து சாப்பிடலாம்.(அதுல கொஞ்சமாக விஷம் கலக்க முடியுமா..) அல்லது ராஜப்பக்சே வெற்றி பெற்று பொன்சேகா நாடு கடத்தப்படலாம்.

உலக கோப்பை கால் பந்து போட்டியில் பிரேசில் வெற்றி பெறலாம்.

சொல்லாமல் கொள்ளாமல் இரும்புத்திரை பதிவுலகை விட்டு காணாமல் போகலாம்.(என்னா சந்தோஷம்..வாய்ப்பு கம்மி தான்..)

வேறு பெயர்களில் பதிவு ஆரம்பித்து கும்மியடிக்கலாம்.(அதானே பாத்தேன்..)

சென்னைக்கு இடம் பெயரலாம்.(ஆபத்து நெருங்குதே..)

டிஸ்கி போடாமல் எழுதலாம்.(போட்டுட்டா மட்டும்..)

அசல் படம் தோரணம் கட்டப்படலாம்.(நான் அவன் இல்லை)

கவிதை ஆனந்த விகடனில் வரலாம்.(அவ்வ்வ்வ்வ்)

சேரன் குமுறாமல் அழலாம்.நந்தலாலா இரும்புத்திரையில் கிழிக்கப்படலாம்.(தெரிந்தது தானே..)

ஜோதியடர் ஷெல்லி மூன்று வருடங்களுக்கு முன் குழந்தை பிறக்கும் என்று சொன்ன கோபிகாவுக்கு குழந்தை பிறக்கலாம்.(எவ்வளவு லேட்..)

விடுமுறைகள் மிகவும் கம்மி என்று கண்டபடி திட்டலாம்.

எதிர்பதிவுகள் அனல் கக்கலாம்.(யாரையோ குறி வைச்சிருக்கு பயப்புள்ள்..)

இப்"போதை"க்கு இவ்வளவு தான்.

எனக்கு நாளைக்கு லீவ் இல்லை.அதனால் என்னை தவிர எல்லோருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.அப்ப எனக்கு இந்த ஸ்டேடஸ் மெசேஜ் தான் - 2011 தேர்தல் வேற நெருங்குதே விஜய் ஆச்சியைப் பிடிப்பாரா.நீங்க சொல்வீங்க தானே - எனக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள் .

2 comments:

Unknown said...

நிறைய விஷயம் கண்டிப்பா நடக்கும்..., ஹம்ம்..., சேரன் அக்சன் ஹீரோ ஆகா போறார்.., இனிமே அழலாம் மாட்டார்..,

cheena (சீனா) said...

அன்பின் அரவிந்த்

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

விருப்பமனைத்தும் நிறைவேற பிரார்த்தனைகள்