Wednesday, November 4, 2009

மேலாண்மை கும்மாங்குத்து பாடங்கள்

பாடம் 1 :

ஒரு காக்காவுக்கு வேலையே இல்லையாம்.நாள் முழுக்க மரத்து மேல சும்மாவே இருக்குமாம்.அது மாதிரி சும்மா இருக்க ஆசை பட்ட முயலும் "நானும் சும்மா இருக்கலாமா.." இப்படி காக்காவ பாத்து கேட்டு இருக்கு.காக்காவும் சரி உன் இஷ்டம் அந்த அர்த்தம் வருமாறு தலைய ஆட்ட முயலும் மரத்துக்கு கீழ சும்மா இருக்க ஆரம்பிக்கவும்,ஒரு நரி வந்து அது மேல பாயவும் சரியா இருந்து இருக்கு.

அப்புறம் என்ன முயல் சுவாகா..நரி ஏப்பம் விட்டுட்டு இடத்தைக் காலி பண்ணிருச்சி..

நீதி - சும்மா சுகமா உக்கார ஆசை இருந்தா நாம உச்சியில இருக்கனும்..அப்ப தான் முடியும்..

உள்குத்து - அப்ப நம்ம பாஸ் எல்லாம் சாதா காக்காவா இல்ல அண்டங்காக்காவா..தண்ணியக் குடி..தண்ணியக் குடி..

பாடம் 2 :

ஒரு வான் கோழியும் காளை மாடுகிட்ட பேசும் போது..அது ஆசைய சொல்லி இருக்கு.அதோட ஆசை பெருசா ஒண்ணும் இல்ல..அதால பறக்க முடியல.எல்லா பறவை மாதிரி அதுவும் பறந்து மரத்து உச்சியில அதுக்கும் உக்கார ஆசை.ஆனா அதுக்கு உடம்புல சக்தி இல்ல.

உடனே அந்த மாடு சொல்லியிருக்கு.."நான் சாணத்தை சாப்பிடு..நீ மேல பறக்கலாம்..காரணம் அதுல சத்து இருக்கு.."

உடனே அத நம்பி வான் கோழியும்(பேர பாரு..) சாணத்தைச் சாப்பிட்டு விட்டு முயற்சி பண்ண,முதல் கிளை வரை பறக்க முடிஞ்சது.அடுத்த நாள் இன்னும் கொஞ்சம் அதிகமா சாப்பிட..இரண்டாவது கிளை.

அடுத்த நாள் முழுசா சாப்பிட உச்சி கிளைக்கு போக முடிஞ்சது..உருவம் கொஞ்சம் பெருசு..அங்க வந்த விவசாயி கண்ல இது பட..இதோட கொழுத்த கறி அவன் கண்ணை உறுத்த..உடனே தூப்பாக்கி எடுத்து சுட்டு கொஞ்சம் கூட பாக்கி வைக்காம சுக்கா பண்ணி ரொட்டிக்கு தொட்டு சாப்பிட்டு விட்டான்.

நீதி - மாட்டு சாணம் வேணா மேல போக உதவும்..ஆனா உயரத்துல வைச்சி இருக்காது..

உள்குத்து - சாணம் மட்டும் சாப்பிடாம கொஞ்சம் புண்ணாக்கையும் சேத்து அடிக்கணும்..

பாடம் 3 :

கடவுள் மனித உடலை படைத்த உடன் எல்லா உறுப்புகளுக்கும் அந்த உடம்புக்கு தலைவனாக இருக்க ஆசை.ஒண்ணு ஒண்ணும் ஆளுக்கொரு காரணம் சொல்ல உடனே வேற என்ன சண்டை தான்.

மூளை - "நான் தான் எல்லாருக்கும் கட்டளை இடுறேன்..அதனால நான் தான் தல.."

கால் - "அந்த மூளைய எல்லா இடத்துக்கும் தூக்கிட்டு போற நாந்தான் இனிமே தல,,"

கை - "வேல செஞ்சு சம்பாதிக்கிற நாந்தான் தல.."

இப்படி இதயம்,வாய்,நுரையிரல்,கண்,பல்,நாக்கு எல்லாம் ஒரு காரணம் சொல்லியிருக்கு..

கடைசியா ஆசனவாய் வந்து நாந்தான் தல..நீங்க எல்லாம் தறுதல..இப்படி சொல்லவும் எல்லா உறுப்புகளும் வேற வழியா சிரிச்சியிருக்கு..

ஆசனவாய்க்கு கோபம் காலுக்கு கீழ(தலைக்கு மேலவுக்கு எதிர்பதம்) வந்து வேலை செய்யாம போராட்டம் பண்ண..கண் சொருக,கை,கால் நடுங்க..இதயம் உதற..மூளைக்கு ஜன்னி வந்திரிச்சி..

உடனே எல்லா உறுப்புகளும் சமாதானத்துக்கு வர,அது போராட்டத்தை வாபஸ் வாங்க..அப்புறம் என்ன பேஸ் பிரஸ்யாயிருச்சி..

மத்த உறுப்பு எல்லாம் கஷ்டப்பட்டு வேலை செய்ய..தல மட்டும் சுகமா உக்காந்து கழிவ வெளியேத்தி விடுது.

நீதி - தலைவனாக இருக்க மூளை வேண்டாம்..போராடும் ஆசனவாயாக இருந்தால் போதும்.

உள்குத்து - அதனால தான் உக்காரும் இடமா பாத்து ஆப்பு வைக்கிறாங்க..

பாடம் - 4 :

பற்வை குளிர்காலத்தில் இருந்து தப்பிக்க சூடாக இருக்கும் இடமாக தேடி பறக்க தொடங்கியிருக்கு.ஆனா குளிரை தாங்க முடியாமல் உறைந்து போய் பறக்க முடியாமல் அப்படியே மயங்கி ஒரு பெரிய வயல்வெளியில் விழுந்து இருக்கு.

அந்த வழியா போன பசு ஒண்ணு இது மேல சுட சுட சூடா சாணம் போட..அந்த சூடு இதமா பதமா இருந்து இருக்கு..மயக்கமும் தெளிய..உடனே குஷி மூட்ல வேறன்ன பாட்டு தான்.

"நல்ல வேளை நான் பிழைத்து கொண்டேன்..".அப்போ இருட்டு வேற..அதனால இந்த பறவை பாடுற சத்தம் துல்லியமா கேட்டு இருக்கு.அந்த வழியா வந்த பூனை இதோட சத்தத்தை வைத்தே கண்டுப்பிடித்து சாணிய தோண்டி பாக்க..அந்த பறவைக்கு ஒரு சோக பாட்ட டெடிகேட் பண்ணிட்டு..அத குளிப்பாட்டி காலையிலே சரியான சாப்பாடு தான்.

நீதி - நம்ம மேல சாணிய எறியும் எல்லோரும் நம் எதிரியும் இல்ல..நம்மை அந்த சாணியில இருந்து வெளியே எடுக்கும் எல்லோரும் நம் நண்பரும் அல்ல..

உள்குத்து - சாணத்தில் ஆழ்ந்த தியானத்தில் இருக்கும் போது வாயை மூடிக் கொண்டிருப்பது சாலச் சிறந்தது..திறந்தா சாணி உள்ள போயிரும்..

4 comments:

Raju said...

அது ஒண்ணுமில்ல...மூக்கு பொடைப்பா இருந்தா, இப்பிடியெல்லாம் யோசிக்கத் தோணும்.
:-)

வனம் said...

வணக்கம் அரவிந்த்

ஐயோ, ஐயோ முடியல

மேல ராஜீ சொன்னதை நானும் ரிப்பீட்டு

இராஜராஜன்

அகல்விளக்கு said...

// ♠ ராஜு ♠ said...

அது ஒண்ணுமில்ல...மூக்கு பொடைப்பா இருந்தா, இப்பிடியெல்லாம் யோசிக்கத் தோணும்.
:-)//

repeatu....

எப்படி தல. உங்களால மட்டும் இப்படியெல்லாம்......

செம தத்துவம்ஸ் எல்லாம்.

நடத்துங்க..

ஈரோடு கதிர் said...

அய்யோடா...

ஏன் இப்புடி