Monday, November 30, 2009

துவையல் - கிசுகிசு ஸ்பெஷல்

முன் டிஸ்கி : கிசுகிசு கூட எழுத தெரியாம இருக்க நான் என்ன குஜராத் பூகம்பம்மா இல்ல மதுரை பாசக்காரங்களா.இது இன்று வந்த எந்த பதிவுக்கும் எதிர்பதிவு அல்ல..அப்படி சொன்னாலும் நம்பவா போறீங்க..

எந்த கிசுகிசு எழுதினாலும் ஒரு க்ளுவாவது கொடுக்கணும் - இது எங்க குரு சொல்லி குடுத்த விதி.இந்த கிசுகிசுவின் நாயகன் பருத்திவீரன் படத்தில் வரும் காமெடி கேரக்டரின் பெயரில் முதலில் எழுத தொடங்கியவர்.அதுக்காக இப்பவும் அதே பெயர் வேறு எங்காவது இருக்கும் என்று கற்பனை செய்தால் நான் பொறுப்பு அல்ல..

அந்த எழுத்தாளர் இப்ப கதைசொல்லி இருக்கிற ஊர்ல இருந்து கூப்பிடு தூரத்தில் தான் இருக்கிறார்(200 கிலோ மீட்டர் தூரம் தான்).காலையிலே வெளியே போது கதை கேக்க வந்துருவாரு.கதை சொல்றவரு உஷாரா எல்லாத்தையும் முடிச்சிட்டு கழுவிட்டு வந்து உக்காருவாரு.ஆனா இவருக்கு இது தெரியாம அவங்க ஊர்காரங்களைப் பத்தி கதை சொல்றவரு ஏதாவது நொள்ளை சொல்றாரா..ஏதாவது நொட்டை சொல்றாரான்னு பாக்க வேண்டியது."தம்பி நான் எதுவும் சொல்லவில்ல..பாரு காயுது பாரு கழுவிட்டு வா.." அப்படி சொன்னாலும் கேக்க மாட்டாரு."நான் கழுவிட்டு வரும் முன்னாடி நீங்க ஏதாவது சொல்லிடீங்கன்னா..நான் போக மாட்டேன் மறுத்து விடுவாரு.அவர் சொம்பு தண்ணி வெயில் பட்டு வத்துற வரை கழுவ மாட்டாரு.சின்ன வயசுல படிச்ச கதை எல்லாம் இங்க தான் பாக்கலாம்.மிச்சம் இருக்கிற தண்ணியில காக்கா கல்லப் போட்டு குடிக்கும்.தண்ணி அவ்வளவு தாந்து கிடக்கு. பின்ன எங்கேயிருந்து கழுவ..

சுரண்டி தான் எடுப்பாரு போல.அடுத்த நாள் கதை கேக்க வந்தவரு விந்தி விந்தி நடந்து இருக்காரு.வந்து கதை சொல்வரைப் பாத்து "இதுக்கு காரணம் நீங்க தான் உங்களை சும்மா விட மாட்டேன்.." என்று சொல்லி விட்டு போனவரு தான்.இன்னைக்கு அவர் கதை சொல்ற அளவுக்கு வளர்ந்துட்டாரு.அதை கேக்க ஒரு கூட்டம்.மக்களே கழுவிட்டு உக்காருங்க..நல்லா பாருங்க மக்கா..கதை சொல்றவரு ஒரு சைடா தான் உக்காந்து இருப்பாரு..

சாயங்காலம் ஆறு மணிக்கு டான்னு வந்து நிப்பாரு.எதுக்கு தம்பி அப்படி கேட்டா போதும்."அண்ணே நீங்க எடுக்கிற கதையில் நான் தான் காமெடியனா நடிக்கணும் சொன்னாரு.தம்பி நம்ம எல்லோரும் காமெடி பீஸூதானே.அப்புறம் என்ன தனியா வேற..இவ்வளவு தான் கதை சொல்லி சொன்னாரு.அவர் லட்சியம் என்ன அப்படி அவர் கிட்ட கேளுங்க..முதல்ல காமெடி..அப்புறம் சோலோ காமெடி..அப்புறம் அஞ்சானெஞ்சன் மாதிரி வரணும் அப்படி சொல்றாரு.

அவரு அஞ்சு பர்சன்ட் அறிவுஜீவி பட்டம் வாங்க கதை சொல்லி கூட சேர்ந்து சுத்துறதா அவரே வாக்கு"மூலம்" கொடுத்து இருக்காரு.இந்த சதவீதம் கத்துக்கவே கழுவாம கதை கேக்குறாரு.முழுசா கத்துக்க என்ன பண்ணுவாரு.யோசிச்சி பாத்தா சிரிப்பாணி பொத்துகிட்டு வருது.(எங்கே இருந்து அப்படி எல்லாம் கேக்க கூடாது.தம்பி பாவம்..)

கதைசொல்லிய வண்டி ஏத்தி விட வந்தவரு "காமெடியன் ரோல் மறந்துராதீங்க.." அப்படி சொல்லி வண்டி ஏற விடாம ஒரு அழுவாச்சி.என்ன பண்ரது.தம்பி நான் சினிமா எடுக்க போகலை வேற வேலையா போறேன்னு சொல்லிட்டு வந்தேன்.அதை நேக்கா மறந்து தொலைச்சிட்டு இன்னமும் அவர் சினிவாவுல தான் இருக்காரு..நாமளும் காமெடியனா "ஆயி"ரலாம்னு ஒரே கற்பனை.

அப்படி போன இடத்துல அவங்க ஊர்காரர் செய்த திருட்டைப் பத்தி இவர் சொல்லி விட..அதுல இருந்து இவருக்கு கோபம்."எனக்கு புண்ணானது கூட வருத்தம் இல்ல..எங்க ஊர்காரர் மேல கை வைச்சா என்ன ஆகும் பாருங்கன்னு சொல்லிட்டு போனாரு.என்ன ஆகும் தம்பி ஆளுக்கொரு பதிவு ஆகும் அப்படி கதைசொல்லி நினைத்து சிரிச்சாரு.

இந்த தடவை ஊருக்கு வந்தவரு "என்ன செஞ்சா சீக்கிரம் பேமஸ் ஆகலாம்னு கேட்டாரு..".கதைசொல்லியும் கிசுகிசு எழுதினா பேமஸ் ஆகலாம்னு சொல்ல அதையும் கால் கழுவாம ஆறு மணி நேரம் கேட்டாரு.என் தம்பி கழுவலையா அப்படி கேட்டா.."பழகிப் போச்சு அண்ணே..சொற்பொழிவுக்குப் போனா நான் என்னையே மறந்து விடுறேன்.

கீழ் கழுவாத டிஸ்கி :

தம்பிக்கு இன்னும் கிசுகிசு எழுத வரலை.கதைசொல்லி இசையைப் பத்தியோ பாடலைப் பத்தியோ எங்கேயும் எப்போதும் பேசியதில்லை.அட பதிவு கூட எழுதியதில்லை.அப்புறம் தம்பி அவரை பாடலாசிரியர் என்று சொல்கிறார்.இது எந்த சொற்பொழிவுல கால் கழுவாம கேட்டதோ தெரியல..

இதனால அண்ணன் கதைசொல்லிக்கும்,தம்பி கிசுகிசுவிக்கும் சண்டை என்று நினைத்து ஏமாந்து விட வேண்டாம்.ரெண்டு பேரு சேர்ந்து நாளைக்கு வேற ஏதாவது ஊர்காரங்களைத் தாக்குவாங்க..

இருங்க கதைசொல்லியோட சாயந்திர சொற்பொழிவு கேக்க தம்பி கழுவாம வர்றாரு..இன்னைக்கு க்ளாஸ் கிசுகிசு ஸ்பெஷல்..அப்பதானே தம்பியும் புத்தகம் வெளியிடும் அளவுக்கு வருவாரு.

4 comments:

ப்ரியமுடன் வசந்த் said...

டக்ளஸூ

டரியலாக்கிட்டாய்ங்களே..

அகல்விளக்கு said...

டக்ளஸ் அண்ணே

இவரு என்ன பண்றாருன்னு பாருங்கண்ணே...

Raju said...

Actually, I am Reading Your Blog posts Daily..! When i Will Come to India, I Want to meet You. At 1989 My Friend has told that you are the Good Writer Like that. Since that I am Reading You. Keep Rockig.

Raju.
Ethiyopia.

ஆ.ஞானசேகரன் said...

கிசுகிசு புரியும் அளவிற்கு ஞானம் இல்லையோ!!!11

நல்லாயிருக்கு ஆனா எனக்குதான் புரியல