Thursday, January 28, 2010

ஆயிரத்தில் ஒருவனை கொலை செய்வது எப்படி

தூக்கமில்லா இரவின் நீட்சி
ஆச்சர்யமான கொலைக்கானத் திட்டம்
விஷம் கலந்து வைக்கலாமா
பொறி மட்டும் போதுமா
மயக்க மருந்து கொடுத்து
தண்ணீரில் அழுத்தி ம் ம்
நினைக்கும் போதே பரவசத்தில்
கண் மூடி அரை நிமிட உறக்கம்
செயல் படுத்தப்பட்ட கடைசி திட்டம்
தண்ணீரில் முக்கும் சமயம்
சற்றே மிச்சமிருந்த
பெயர் தெரியாத வருத்தம்
கொசுவாக இருந்தால் ரீமாவாக்கி விடலாம்
எலியாயிற்றே கொஞ்சமாவது லாஜிக் வேண்டுமே
நல்லத் தூக்கத்திற்காக அழுத்தினேன்
ஒருவனின் பெயரை நினைத்து கொண்டு

2 comments:

இரும்புத்திரை said...

எலி மர் கயா..

ஆத்தா ஆடு வளத்தா,கோழி வளத்தா எலி மட்டும் வளக்கலையே..

போர்வையை எலி கடிச்சிரிச்சி..

நான் நல்லா தூங்க எதுவுமே தப்பில்ல..

லோகு said...

//தூக்கமில்லா இரவின் நீட்சி
ஆச்சர்யமான கொலைக்கானத் திட்டம்
விஷம் கலந்து வைக்கலாமா
பொறி மட்டும் போதுமா
மயக்க மருந்து கொடுத்து
தண்ணீரில் அழுத்தி ம் ம்
நினைக்கும் போதே பரவசத்தில்
கண் மூடி அரை நிமிட உறக்கம்
செயல் படுத்தப்பட்ட கடைசி திட்டம்
தண்ணீரில் முக்கும் சமயம்
சற்றே மிச்சமிருந்த
பெயர் தெரியாத வருத்தம்//


இது வரை இருந்த ஒரு அட்டகாச கவிதையின் அழுத்தம், ரீமாவால் கெட்டு விட்டதென நினைக்கிறேன்.

நீங்கள் பயன்படுத்துகிற வார்த்தைகளில் பாதி கூட எனக்கு தெரிந்திருக்காது. ஆனால் நீங்கள் ஏன் ஆயிரத்தில் ஒருவன், வேட்டைக்காரன் என குறுகிய வட்டத்தில் நிற்கிறீர்கள். அடித்து விளையாடுங்க தலைவா.. பிரபல பதிவர் என்ன? பிரபல கவிஞரேஆகிடலாம்.