Tuesday, January 5, 2010

முத்தம்,யுத்தம்,சத்தம்,மொத்தம்

அழுத்தமான முத்தம் கிடைத்திருக்குமா
யுத்தம் நடக்கும் சமயத்திலும் சாத்தியமா
ஷாஜகான் பக்கங்கள் காற்றில் பிரியும் போது
எழும் பதிலில்லாத கேள்விகள்
தூக்கத்தில் உதடு பிரிந்து
சிரிப்பது எனக்கே தெரிகிறது
கட்டில் ஆடும் சத்தத்தில் கேட்கிறேன்
மும்தாஜின் பதினாலு பிரசவங்களின் அழுகைகளையும்
தாஜ்மஹால் செதுக்கிய உளியின் ஓசைகளையும்
காலையில் நண்பர்கள் சொன்னார்கள்
என் ரசனைகளின் அளவுகளை மொத்தமாக
மார்கெட் போன நடிகையின் பெயரை
விற்பனை செய்தேனாம் தூங்க விடாமல்
ரசனைகளைக் காப்பாற்றவும்,உளறவும்
புதுப் பெயர் கிடைக்குமா சில்லறை விலையில்??

3 comments:

இரும்புத்திரை said...

இது கவிதை தானே

இரும்புத்திரை said...

இது கவிதை தானே

அகல்விளக்கு said...

//இரும்புத்திரை said...

இது கவிதை தானே///


கவிதைதான்...
கவிதைதான்...

நல்லாருக்கு தல...