Monday, September 28, 2009

சென்னை பதிவர் சந்திப்பில் வடிவேலு

வடிவேலு உளவுபடையின் செய்திகளை எடுத்து சரி பார்க்கிறார்.மும்பையில் இருந்து (இரும்புத்)திரை மறைவில் அமர்ந்து ஒரு பதிவர் வடிவேலுவை நக்கல் செய்யத் திட்டம் போட்டுள்ளதாக ஒரு செய்தி இருக்கிறது.என்ன பதிவு மும்பையில் இருந்து வந்தாலும் எதிர்ப்பதிவு போடுவேன் என்று சபதம் எடுக்கிறார்.நானும் ஒரு ரவுடி தான் இல்ல இல்ல பதிவர் தான் என்று மாறுவேடம் போட்டுக் கொண்டு சென்னை பதிவர் சந்திப்பில் கலந்து கொள்கிறார்.

முதலில் சுண்டல் விற்பவராக வருகிறார்.மேக மூட்டமாக இருந்ததால் பதிவர்கள் கலைந்து பதுங்கி இருக்கிறார்கள். நரசிம் செல்போனில் மதுரை தமிழில்(சென்னை தமிழுக்கு மாறாமல் இருந்தாலே உலக அதிசயம்) பேசிக் கொண்டு இருக்கிறார்.வடிவேலுக்கு மதுரை பாசம் பீறிட்டு அடித்ததால் நர்சிம்மை நெருங்குகிறார்.

வடிவேல் - அண்ணா நீங்க மதுரையா ?

நர்சிம் - ?? (முதல் ?க்கு யார் என்றும் இரண்டாவதற்கு எதற்கு நான் மதுரை தான்.நீங்க என்று அர்த்தம்)

வடிவேல் - நான் ஒரு யூத்து..

நர்சிம் - பாக்க டெலிபோன் பூத்த மாதிரி இருந்துக்கிட்டு நக்கலப் பாரு..(பதிவர்கள் இருக்கும் பக்கம் திரும்பி) யூத்தாமா ?

வடிவேல் - ஹலோ என்ன போட்டுக் குடுக்கிறீங்களா ?.நீங்க மதுரை வேற சொல்லிடீங்க..இந்தாங்க ரெண்டு பொட்டலம்..(சுண்டல் பையனைப் பார்த்து) எங்க ஊரு குடுக்கட்டுமா..

சுண்டல் பையன் - ரெண்டுதானே குடுங்க..

நர்சிம் - இல்ல வேண்டாம்..நான் நண்பர்களோடு வந்து இருக்கேன்..எனக்கு வேண்டாம்..

வடிவேல் - உங்க நண்பர்களையும் கூப்பிடுங்க..நீங்க இப்போ சாப்பிடலைனா நாளைப் பின்ன உங்க வீட்டுக்கு வர மாட்டேன்..

நர்சிம் - சரி சாப்பிடலைனா விட மாட்டீங்க..(வி........சில் அடிக்கிறார்(கொஞ்சம் நீண்ட))

எல்லா பதிவர்களும் காந்தி சிலைக்குப் பின்னால் இருந்து ஓடி வந்து சுண்டலைக் காலி செய்கிறார்கள்.

சுண்டல் பையன் : ரெண்டு பொட்டலம் கொடுக்க சொன்னா கூடையோட சுண்டலத் தூக்கிக் கொடுத்திடியடா பாவி.. என்று வடிவேலுவை துரத்தி செல்கிறார்..

தப்பித்து அடுத்த மாறுவேடத்தில் வருகிறார் வடிவேல்.

சங்கி மங்கி கெட்டப்பில் வருகிறார் வடிவேல்.இந்த முறை நேராக கேபிள் சங்கரிடன் போகிறார்.தயாரிப்புத் தரப்பில் இருந்து கோவமாக இருப்பதால்(பின்ன என்ன ஆறுமுகம் படத்தை கேபிள் அண்ணன் விமர்சனம் செய்யாததால்,கேபிள் சங்கர் பார்க்கவில்லை என்று ஒருவரும் பார்க்கவில்லை) யார் வந்து பேசினாலும் பத்து முறை யோசித்தே பதில் தருகிறார்.

வடிவேலு - நீங்க ஒரு பிரபலம்..

கேபிள் - ஆமா நான் ஒரு பலாப்பழம் தான்.பார்க்க முள் இருக்கிற மாதிரி இருந்தாலும்,உள்ள இனிப்பேன்..

வடிவேலு - ஹலோ என்ன வைச்சு காமடி கீமடி பண்ணலையே..நான் என்ன கேக்குறேன் நீங்க என்ன சொல்றீங்க..

கேபிள் - ஹலோ உங்கள திரையில பார்த்த உடனே எனக்கு சிரிப்பு வருதுன்னு சொன்னா அது நல்லாவயிருக்கும்..இப்படி உசுப்பேத்தி விட்டு உடம்ப ரணகளம் ஆக்கி விட்டுறாதீங்க..

வடிவேலு - எப்படி கண்டுப்பிடிச்சீங்க..

கேபிள் - உங்க கொண்டைய வைச்சுதான்..

வடிவேலு - வேற ஏதாவது இருக்கா..

கேபிள் - நீங்க பதிவர் ஆனா ஒரு சிரிப்பு பதிவர்..

வடிவேலு - நான் சீரியஸா பேசிக்கிட்டு இருக்கேன்..சிரிப்புப் பதிவரா ?
(போன் போடுகிறார்) ஹலோ செண்பகக்குமாரா? உங்க ஆறுமுகம் படத்துக்கு விமர்சனம் எழுதாம லந்து குடுக்கிறாரு..என்ன பண்ணலாம்னு யோசிங்க..

கேபிள் - (போனைப் போட்டு) ஹலோ விஜய்யா பேசுறது..உங்க எதிரி மங்கி சங்கி வந்து தொல்லை கொடுக்கிறாரு..அவர எப்படியாவது பிடிச்சிட்டுப் போங்க..வேட்டைகாரனுக்கு நல்லா விமர்சனம் எழுதுறேன்..மனதுக்குள்..(எல்லாம் என் நேரம்)

வடிவேலு - நான் அவர் அண்ணன் சங்கி மங்கி.. என்று சொல்லி விட்டு ஓடி விடுகிறார்..

வீட்டிற்கு வந்தவுடன் வடிவேலு - சினிமாவுல கூட அடிச்சிட்டு ரொம்ப நல்லவன்னு சொல்வாங்க..இங்க அது கூட சொல்லல..இவனுகளுக்கு விஜயகாந்தே பரவாயில்ல..ஒரு அறிவிக்கை ரெடி பண்ணு..நாமளும் சிரிப்பு ரவுடின்னு நிருபிப்போம்.

கேபிள் சங்கருக்கு ஒரு போன் வருகிறது.எடுத்து பேசினால் நையாண்டி நைனா..

கேபிள் - தம்பி நல்லா எழுதுற..ஆனா உன் எதிர்க்கவித ஒண்ணுமே புரியல..

நைனா - அண்ணா அது யூத்துக்கு தான் புரியும்..

கேபிள் - எனக்கு புரிஞ்சது..நான் சொன்னது மத்தவங்களுக்கு புரியலன்னு..

நைனா - அது யூத்து மாதிரி இருக்கிறவங்களுக்கும் புரியும்..

கேபிள் சங்கர் அண்ணன் மும்பை புறப்படுகிறார். குஜராத்துக்கும் போக முடிவு செய்கிறார்.

10 comments:

நையாண்டி நைனா said...

Super.

ஸ்பேடு ஜாக்கி said...

ஹெஹெ!

நல்லா இருக்கு!

இரும்புத்திரை said...

நன்றி நைனா..இன்னொரு வடிவேல் போஸ்ட் இருக்கு நீங்க தான் மெயின்

நன்றி ஸ்பேடு ஜாக்கி

Cable சங்கர் said...

ஆஹா.. திரும்பவும் ஆரம்பிச்சிட்டீங்களா..:)

இரும்புத்திரை said...

நன்றி கேபிள் சங்கர்

Nathanjagk said...

இது எதிர்பதிவுதானே? என் மாப்ள ஏனாஓனா எழுதின (http://www.yetho.com/2009/09/blog-post_28.html) பதிவுக்கு எதிர்பதிவுதானே? என்னமோ எதிர்பதிவே ​போடமாட்டேன்னு சத்தியம் பண்ணுனீங்க???? தான் ஆடாவிட்டாலும்..???? ம்?

Raju said...

அதென்ன கடைசியில..?
தூக்கமே வராதா ராசா...?

ஈரோடு கதிர் said...

பின்னி எடுக்கிறியே தம்பி

இரும்புத்திரை said...

நன்றி ஜெகநாதன்

நன்றி ♠ ராஜு ♠

நன்றி கதிர் - ஈரோடு

CM ரகு said...

நல்ல நகைச்சுவை..
சூப்பரோ சூப்பர் அப்பு ..