Friday, September 25, 2009

கவுண்டமணி,செந்தில்,உ.போ.ஓ

கவுண்டமணி ப்ளாக்கர் பிரவேஷம் தோல்வியில் முடிந்ததால் செந்திலை உள்ளே விடக் கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கிறார்.

கவுண்டமணி காலையில் எழுந்து மொட்டை மாடியில் நின்று குளிக்கும் பக்கத்து வீட்டு பெண்ணை சைட் அடிக்கிறார்."ஆத்தாடி பாவாட காத்தாட.. குளிக்குது ரோசா நாத்து.." என்று பாடி சிக்னல் கொடுக்கிறார்.

ஒரு அல்லக்கை குறுக்கே வந்து "அண்ணே உங்களப் பாக்க ஒரு புரோடியுஸர் வந்து இருக்காரு.."

கவுண்டமணி - "சும்மா இருக்கும் போது ஒரு நாய் வராது..எப்பவாது தான் இப்படி சான்ஸ் கிடைக்கும்..அத கெடுக்கிறதுக்குனே வந்துருவாங்களே..போ வர்றேன்.."

கவுண்டமணி அந்த பெண்ணிடம் சொல்கிறார்.."ஹேஹேய் நாளைக்குப் பார்ப்போம்.."

அங்கு ஹாலில் முதுகு காட்டி அமர்ந்து இருப்பவரைப் பார்த்து கவுண்டமணி கை எடுத்துக் கும்பிட்டு கொண்டே சொல்கிறார்.."வணக்கம் முதலாளி.."

அவரை பார்க்க வேகமாக வரும் கவுண்டமணியின் காலில் ஒரு நாடா தட்டுப்படுகிறது.."இதை எங்கேயோ பார்த்த ஞாபகம் இருக்கே.." என்று யோசிக்கும் போது அந்த ஆள் திரும்புகிறார்.அது செந்தில்.

கவுண்டமணி - "அட இவனப் பார்த்தா கை எடுத்து கும்பிட்டோம்..முதல்ல கைய கருக்கிறனும்,முதலாளின்னு கூப்பிட்ட வாயை அவிச்சறனும்..நீ எதுக்குடா இங்க வந்தே..எம் ப்ளாக்க நாசமாக்கின நாய் நீ..அதுவும் பொய் சொல்லிட்டு வந்து இருக்க..ஓடிப் போயிரு.."

செந்தில் - "அண்ணே எதுக்கு இப்போ இவ்ளோ கோவம்..ரொம்ப பிஸி போல.."

கவுண்டமணி - "படுவா நக்கல் பண்ணாத..வாயிலே அடிப்பேன்..ஆமா வேட்டைகாரன் படத்துல ஹீரோ நாந்தான்..ரொம்ப பிஸி..ரெண்டு பேரும் சும்மாதானே இருக்கோம்..அப்புறம் என்ன நக்கல்.."

கவுண்டமணியின் மனைவி வந்து "என்னங்க..அரிசி இல்ல வாங்கிட்டு வாங்க.."

செந்தில் - "நான் வேணா வாங்கிட்டு வரட்டுமா.."

கவுண்டமணி - "படத்துல நீ ஏமாத்தலாம்..இது நிஜம்..இந்த டகால்டி வேலையெல்லாம் எங்கிட்ட வைச்சுக்காத.."

செந்தில் - "உ.போ.ஒ படம் பாத்திங்களா..கமல் கேரக்டர் நீங்க பண்ணியிருந்தா நல்லாயிருந்திருக்கும் அண்ணே.."

கவுண்டமணி - "யாரு நானு..படம் எடுக்கிறவனுக்கு தெரியாதா..யார் நடிக்கனும் நடிக்க கூடாதுன்னு..இப்படி மோகன்லால் கேரக்டர்ல நீ நடின்னு நான் திரும்ப சொல்லனுமா.."

செந்தில் - "நான் என்ன சொல்ல வர்றேன்னு உங்களுக்குப் புரியல.."

கவுண்டமணி - "நீ எதுக்கோ அடிப் போடுறது எனக்கு தெரியுது..வேணாம் மண்டையா..இது நல்லது இல்ல சொல்லிட்டேன்.."

செந்தில் - "இந்துத்துவா தூக்கலா இருக்காம் படத்துல..நீங்க உங்க பங்குக்கு ஏதாவது சொல்லுங்க.."

கவுண்டமணி - "நான் என்ன சொன்னாலும் நீ அதுக்கு ஆப்போஸிட் பார்ட்டிகிட்ட மாட்டி விட ப்ளான் பண்ணுவ.."

செந்தில் - "பார்ப்பனீசம் பத்தி ஏதாவது சொல்லுங்க அண்ணே.."

கவுண்டமணி - "டேய் மண்டையா..உனக்கு என்ன வேணும்..சொன்னாத் தான் விடுவியா..வேறும் வயித்தல நாலு டம்ளர் ரசம் குடி..உனக்கே புரியும்.."

செந்தில் - "ஐய்யோ குடல் வெந்துரும்..நான் மாட்டேன்..வேற வழி இருந்தா சொல்லுங்க.."

கவுண்டமணி - "அப்போ விஷத்தக் குடிடா டங்குவார் தலையா.."

செந்தில் - "கட்டுடைப்புனா என்ன.."

கவுண்டமணி - "கரும்பு கட்ட உடச்சு ஒரு கரும்ப எடுப்பாங்க..அதுதான் கட்டுடைப்பு.."

செந்தில் - "பின் நவீனத்துவம்மா என்ன சொல்லுங்க பாப்போம்.."

கவுண்டமணி - "உன்னப் பின்னாடி நவீனமா மிதிப்பேன்..அதுதான் நீ கேட்டது.."

செந்தில் - "கட்டவிழ்ப்புனா என்ன.."

கவுண்டமணி - "நேரம் வரும் போது உனக்கே தெரிய வரும்..இதோட நிறுத்திக்கோ.."(மனசுக்குள்) "அந்த பொண்ணு குளிச்சியிருக்கும்.."

செந்தில் - "அண்ணே எதிர்கருத்து சொன்னா தான் விவாதம் சூடு பிடிக்கும்.."

கவுண்டமணி - "ஓடிப் போயிரு..நான் விவாதம் பண்ணுவேன்..ஆனா உன் கூட மட்டும் கிடையாது..இதெல்லாம் நீ படம் பார்த்து தோணிச்சா இல்ல யார் கிட்டயாவது கேட்டுப் போட்டு வந்து லந்து கொடுக்கிறீயா.."

செந்தில் - "அந்த நாய் என்ன முறைக்குதுண்ணே.."

கவுண்டமணி - "பின்ன முறைக்காம என்ன பண்ணும்..அது லஞ்ச்சுக்கு போட்டியா ஒருத்தன் வந்துடான்னு நினைக்குது.."

செந்தில் - "போன தடவை வந்தப்போ நாய் இல்லையே.."

கவுண்டமணி - "உன்ன மாதிரி பன்னிகளைப் பிடிக்க தான் வாங்கினேன்.."

செந்தில் - "யார் கிட்ட இருந்து வாங்கினீங்க.."

கவுண்டமணி - "ஜப்பான் நடிகை ஜில் ஜில் ஜிகா கிட்ட இருந்து வாங்கினேன்.."

செந்தில் - (காதுக்குள்) "................................."

கவுண்டமணி - "யாரப் பாத்து இந்த கேள்வியக் கேப்ப..பன்னாட..பரதேசி.."

செந்தில் - "நாய்க்கு என்ன சாப்பாடு வைப்பீங்கன்னு கேட்டது தப்பா.."

கவுண்டமணி - "டேய் மாத்தி பேசாத..உன்னப் பத்தி எல்லார்க்கும் தெரியும்..நீ என்ன கேட்டு இருப்பேன்னும் தெரியும்.."

செந்தில் - "அண்ணே..நீங்க தெலுங்கு உன்னைப் போல் ஒருவன் படத்திலையாவது கமல் கேரக்டர் பண்ணியிருக்கலாம்.."

கவுண்டமணி - "மறுபடியும் முதல்ல இருந்தா..ராஜா நீ கட்டவிழ்ப்பு பத்தி கேட்ட மாதிரி ஞாபகம்..இரு உனக்கு காட்டுறேன்.."

நாயை அவுத்து விடுகிறார்..அது செந்திலைக் கடிக்காமல் செந்திலுடன் ஓடிப் போகிறது..

கவுண்டமணி கோபம் தாங்க முடியாமல் செந்திலை அடிக்க ஓடுகிறார்.நாய் கவுண்டமணியைக் கடித்து செந்திலைக் காப்பாற்றுகிறது..

முப்பது நாட்களுக்கு விரதம் இருக்க வேண்டும் என டாக்டர் சொல்லி அனுப்புகிறார்..அதை எப்படியோ தெரிந்து கொண்ட குளியல் பெண் "முத்துக் குளிக்க வாரீகளா.." என்று பாடி கவுண்டமணியை வெறுப்பேத்துகிறார்

10 comments:

Robin said...

:)

நையாண்டி நைனா said...

அட்டகாசம்...

thiyaa said...

சூப்பர்

தினேஷ் said...

கவுண்டமணி - "டேய் மாத்தி பேசாத..உன்னப் பத்தி எல்லார்க்கும் தெரியும்..நீ என்ன கேட்டு இருப்பேன்னும் தெரியும்..

ஹ ஹ ஹ மறக்கமுடியுமா?

தினேஷ் said...

முப்பது நாட்களுக்கு விரதம் இருக்க வேண்டும் என டாக்டர் சொல்லி அனுப்புகிறார்..அதை எப்படியோ தெரிந்து கொண்ட குளியல் பெண் "முத்துக் குளிக்க வாரீகளா.." என்று பாடி கவுண்டமணியை வெறுப்பேத்துகிறா


ஜூப்பரு

ஈரோடு கதிர் said...

ச்ச்ச்ச்சூப்பர்!
ச்ச்ச்ச்சூப்பர்!!
ச்ச்ச்ச்சூப்பர்!!!

Unknown said...

அருமை..

:-D

Raju said...

செம காமெடி..!
கவுண்டமணிய பிரிச்சு மேஞ்சுருக்கீங்க.

ப்ரியமுடன் வசந்த் said...

கல கல காமெடிங்ணா...அட்டகாசமா இருக்கு

கிருஷ்ண மூர்த்தி S said...

அங்கே இங்கேன்னு அழுகாச்சி காவியமாப் படிச்சுட்டு இங்க வந்தா. நல்ல காமெடி! செம ரிலீஃப்!

பதிவுலக கவுண்டமணி வாய்க!வாய்க!!