Friday, September 18, 2009

உன்னைப் போல் ஒருவன்

தாணு - கந்தசாமி முதல் வாரத்தில் 37 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது..

உ.போ.ஒ - நான் இழந்த இருநூறு ரூபாய் திரும்ப கிடைக்குமா ?

விஜய் - எதிர்காலத்தில் அரசியலுக்கு வருவேன்.கலைஞர் இளைஞர் போல உழைக்கிறார்.மரியாதை நிமித்தமாக ராகுலை சந்தித்தேன்.

உ.போ.ஒ - இப்படி சொல்லி ரசிகன ஏமாத்"தல"..கல்யாண மண்டபம் தப்பிரும்.வேட்டைகாரனுக்கு எதிர்ப்பு இருக்காது..ஒரே கல்லுல மூணு மாங்கா..ஒரு தேங்கா..

விக்ரம் - இனி வருடத்திற்கு இரண்டு படங்கள் நடிப்பேன்..

உ.போ.ஒ - அந்த வருசத்தில ஆயிரம் நாள் இருக்குமா?

சுசி கணேசன் - கந்தசாமிக்கு ஒரு ஓட்டெடுப்பு நடத்துவோம்.நான் தோற்றால் இயக்குவதை நிறுத்தி விடுகிறேன்..

உ.போ.ஒ - தபால் ஓட்டு உண்டா..

தங்கபாலு - நதி இணைப்பு விஷயத்தில் ராகுல் சொன்னது அவருடைய தனிப்பட்ட கருத்து.

உ.போ.ஒ - இது உங்க தனிப்பட்ட கருத்தா இல்ல "தண்ணி"ப்பட்ட கருத்தா?

கே.எஸ்.ரவிகுமார் - ஆதவன் படத்தில் சூர்யா பத்து வயது பையனாக நடிக்கிறார்.

உ.போ.ஒ - ஆமா கேக்குறவன் கேனையனா இருந்தா எலி ஏரோப்பிளேன் ஓட்டுதுன்னு சொல்வீங்களே..

சேரன் - யோகி படத்தில் எந்த கதாநாயகனும் செய்ய முடியாததை அமீர் செய்திருக்கிறார்.

உ.போ.ஒ - உங்களால கூட முடியாதா..என்ன கொடும சேரன் இது..

எஸ்.வி.சேகர் - விஜய் தன்னுடைய அரசியல் பிரவேசம் பற்றி இன்னும் தெளிவாக பேசவில்லை; இப்போது, அவர் கூறியிருக்கும் விஷயங்கள், நிச்சயமாக அவருடைய சினிமா வாழ்க்கையின் எதிர்காலத்தைப் பாதிக்கும்.

உ.போ.ஒ - இப்படி என்னைக்காவது நீங்க சட்டசபையிலே தெளிவா பேசியிருக்கீங்களா..கவலைப்படாதீங்க அவர் அரசியலில் உங்களுக்குப் போட்டியா வர மாட்டாரு..விஜயின் சினிமா எதிர்காலம் பாதிப்பதற்கு எதிர்காலத்தில் உங்க பையனும் ஒரு காரணமாக இருப்பாரா..

சேரன் - பாரதிராஜா சமீப காலமாக எந்த பொது மேடை மற்றும் திரையுலக நிகழ்ச்சி மேடைகளிலும் ஏறாமல் மௌனம் காத்து வருகிறார். அவருக்கு ஏன் இந்த கோபம்? அவர் திரையுலகில் சாதிக்க வில்லையா? பிறகு ஏன் இந்த கோபம்?

உ.போ.ஒ - நீங்க மேடையிலே இருக்கும் போது அவர் எப்படி ஏறுவார்.கீழே இருக்கும் போதே தேர இழுக்குறீங்க..மேல வந்தா தெருவுல விட்டுற மாட்டீங்க ..

சஞ்சய் மஞ்சுரேக்கர் - கடந்த ஆண்டு சச்சின் டெண்டுல்கர் திணறியபோது 'ஓய்வறையில் ஒரு யானை' என்று விமர்சித்தேன்.வைத்த விமர்சனத்தை பின் வாங்கப்போவதில்லை

உ.போ.ஒ - அப்ப நீங்க "மை(நி)தானத்தில் ஒரு ஆட்டுப் புழுக்கையா"

ஜெஃப் தாம்சன் - பாண்டிங் சிறந்த கேப்டன் இல்லை..

உ.போ.ஒ - அரிய கண்டுப்பிடிப்பு..நோபல் பரிசு நிச்சயமா கிடைக்கும்..அப்பவே கில்கிரிஸ்ட்கு குடுக்க வேண்டியது தானே

டிஸ்கி :

அரவிந்த் - உன்னைப் போல ஒருவன் யார் நடிச்சது..(சாரி கஜினி சூர்யாவுக்கு என்னமோ ஒரு வியாதி உண்டே..அதுவும் மறந்து போச்சே..)

உ.போ.ஒ - பின்ன இப்படி எல்லாம் பதிவு போட்டா அடிக்காம என்ன பண்ணுவாங்க

27 comments:

நீ தொடு வானம் said...

//கே.எஸ்.ரவிகுமார் - ஆதவன் படத்தில் சூர்யா பத்து வயது பையனாக நடிக்கிறார்.//

நீங்க சொன்னா எல்லாம் படம் பாக்க மாட்டோம் எங்க கேபிள் அண்ணன் சொல்லட்டும்

நீ தொடு வானம் said...

//ஒரே கல்லுல மூணு மாங்கா..ஒரு தேங்கா..//

தேங்கா யாரு எஸ்.ஏ.சந்திரசேகரா

லோகு said...

உன்னை போல் ஒருவன் விமர்சனமுனு நெனச்சு வந்தேன்.. இப்படி பண்ணீட்டீங்களே தலைவா..

இதுவும் நல்லாத்தான் இருக்கு..

தினேஷ் said...

//தாணு - கந்தசாமி முதல் வாரத்தில் 37 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது..

உ.போ.ஒ - நான் இழந்த இருநூறு ரூபாய் திரும்ப கிடைக்குமா ?//

பயபுள்ளைக ஏமாத்தி புடுங்கிட்டானுக.. உங்கள் மாதிரிதான் நானும் அழுதிட்டு இருக்கேன்..

ஏதோ சித்த ஸ்ரேயாவுயும் முமைத்கானையுன் கண்ணுல காட்டினதுக்கு வேணா ஒரு பத்து ரூபாய் எடுத்துகிட்டு மீதத்த கொடுத்திடுங்கடா...

நீ தொடு வானம் said...

//அரவிந்த் - உன்னைப் போல ஒருவன் யார் நடிச்சது..(சாரி கஜினி சூர்யாவுக்கு என்னமோ ஒரு வியாதி உண்டே..அதுவும் மறந்து போச்சே..)
//

அடிவாங்காம இருக்க இது ஒரு புதுவழியா நீங்க எப்போ கட்சி ஆரம்பிக்க உத்தேசம்

தினேஷ் said...

இன்னும் 30 வருடங்களுக்கு பிறகும்

விஜய் - எதிர்காலத்தில் அரசியலுக்கு வருவேன்.கலைஞர் இளைஞர் போல உழைக்கிறார்.மரியாதை நிமித்தமாக ராகுலை சந்தித்தேன்.

தினேஷ் said...

தேங்கா யாரு எஸ்.ஏ.சந்திரசேகரா

வேற யாரு... தேங்காய உடைச்சா எல்லாம் சரியாயிரும்

நீ தொடு வானம் said...

//விஜய் - எதிர்காலத்தில் அரசியலுக்கு வருவேன்.கலைஞர் இளைஞர் போல உழைக்கிறார்.மரியாதை நிமித்தமாக ராகுலை சந்தித்தேன்.

உ.போ.ஒ - இப்படி சொல்லி ரசிகன ஏமாத்"தல"..//

நீங்க தல ரசிகரா..

தினேஷ் said...

// இது உங்க தனிப்பட்ட கருத்தா இல்ல "தண்ணி"ப்பட்ட கருத்தா?//

இல்ல தண்ணி போட்ட கருத்து

தினேஷ் said...

//விஜயின் சினிமா எதிர்காலம் பாதிப்பதற்கு எதிர்காலத்தில் உங்க பையனும் ஒரு காரணமாக இருப்பாரா.. //

முடியல சாமி அவர் இப்போ எங்கே இருக்காரு.. ஒருவேளை விஜய் மாதிரி வர உடம்ப குறைக்கிறாரோ?

இரும்புத்திரை said...

நான் விஜய் சார்பா எஸ்.வி.சேகர கேள்வி கேட்டேன் அப்போ நான் விஜய் ரசிகரா?

நான் விக்"ரம்" ரசிகன்

லோகு said...

// ganesh said...

//ஒரே கல்லுல மூணு மாங்கா..ஒரு தேங்கா..//

தேங்கா யாரு எஸ்.ஏ.சந்திரசேகரா//

ரிப்பீட்டு..

thiyaa said...

அருமை அறிமை நண்பரே

நையாண்டி நைனா said...

நல்லா... கலக்கலா கலாய்ச்சி இருக்கீங்க....

Nathanjagk said...

இதுதான்.. இதே.. இந்த.... ​கொலவெறிதான் உங்ககிட்ட எனக்கு ​ரொம்ம்ம்ம்பப் பிடிச்சது!

Nathanjagk said...

// நான் இழந்த இருநூறு ரூபாய் திரும்ப கிடைக்குமா //
200??? ​கொஞ்சம் காஸ்ட்லிதான்! இதுக்கு பட​போஸ்டரை ​லெப்ட் டூ ​ரைட் ​வேகமா பாத்துக்கிட்டே ஓடியிருக்கலாம். படம் பாத்த திருப்தி கிடைச்சிருக்கும் + காசு மிச்சம்!

ᾋƈђἷłłἔṩ/அக்கில்லீஸ் said...

உன்னைப்போல் ஒருவன் பட விமர்சணம்னு நினைச்சு இங்க வந்தேன், ஆனா ஏமாரல. நல்லா காமெடியா இருந்துச்சு அரவிந்த்.. சூப்பர். :)

Raju said...

Dear Mr. Aravind,

i am Reading your Blog For Last 5 years Only..! You r Very Rocking Dude.
You know..Usually I Will not read this tamil blogs. But After saw Your Blog, I have changed my thought. I read your All posts. Great thinking. and Good Writing Style also. Kepp Rocking Dude.

Raju.
Ethiyopiaa.

இரும்புத்திரை said...

dear raju,

i cant spend two hours for editing your letter.Pls avoid spelling mistakes.

aravind
mumbai

இப்படி ஏதாவது எழுதி வர்ற கூட்டத்தக் கலைக்கிறதே வேலையா போச்சு

யோ வொய்ஸ் (யோகா) said...

இத வாசிச்சிட்டு நான் டெரர் ஆகிட்டேன்...

துபாய் ராஜா said...

எங்கயோ கண்ணுக்கு தெரியாத இடத்துல இருந்து கமெண்ட் அடிக்கறீங்க.உஷாரு ராசா, ஐ.பி. அட்ரசுக்கு ஆட்டோ அனுப்பிச்சிறப்போறாங்க... :))

Ashok D said...

:))

க.பாலாசி said...

//உ.போ.ஒ - இப்படி சொல்லி ரசிகன ஏமாத்"தல"..கல்யாண மண்டபம் தப்பிரும்.வேட்டைகாரனுக்கு எதிர்ப்பு இருக்காது..ஒரே கல்லுல மூணு மாங்கா..ஒரு தேங்கா..//

ஹா..ஹா...இப்டியும் இருக்குமோ?...

எல்லாமே நல்லாருக்கு நண்பா...

இரும்புத்திரை said...

அரவிந்த் - இந்த பதிவு திரட்டியில இணையவில்லை

உ.போ.ஒ - அப்படி கொஞ்சம் பேர் படிக்காமத் தப்பிச்சாங்க

மணிஜி said...

இதுதான்.. இதே.. இந்த.... ​கொலவெறிதான் உங்ககிட்ட எனக்கு ​ரொம்ம்ம்ம்பப் பிடிச்சது

//ஒரே கல்லுல மூணு மாங்கா..ஒரு தேங்கா..//

நல்லா... கலக்கலா கலாய்ச்சி இருக்கீங்க....

ஊர்சுற்றி said...

நல்லாயிருக்கு!

CM ரகு said...

செம கலக்கல் போங்க