Thursday, September 3, 2009

கண்டிப்பாக 18+

பல வருடங்களுக்கு முன் ஆனந்த விகடனில் படித்தது.யாருமே பார்க்கவில்லை என்றால் மனிதன் எதற்குமே துணிந்து விடுகிறான்.(திருட,மற்றும் இத்யாதி,இத்யாதி).அப்படி ஒரு கதை.ஐம்பத்து வயதில் இருக்கும் அலுவலக மேலாளரிடம் நெருங்கி பழகுகிறாள் ஒரு இருபது வயது இளம்பெண். ஒருநாள் வீட்டிற்கு அழைக்கிறாள். இரவு 11.55 வரை பேசிக் கொண்டு இருக்கிறார்கள்.அவள் பார்வையில் ஏதோ சொல்வது போல இருக்கிறது.விளக்கை அனைத்து விட்டு பக்கத்து அறைக்கு செல்கிறாள்.இந்த அறையில் இவர் ஆடை முழுவதையும் கழற்றி விட்டு காத்திருக்கிறார்.மணி 12:௦௦௦௦௦௦00.விளக்கு போடப்படுகிறது.அலுவலகத்தில் வேலை செய்யும் அனைவரும் இருக்கிறார்கள். அன்று அவருக்கு பிறந்தநாள். இதோடு நிறுத்தி விட்டார்கள்.இதிலிருந்து ஒரு கதையைத் தொடங்கினால் இன்னொரு கதை வரும்.பிறகு நடந்ததை யாராவது சொல்ல முடியுமா.

முத்தம் குடுக்கும் வழக்கம் வந்தது எப்படி என்று அது ஒரு வித்தியாசமான கதை. பண்டைய கிரேக்க (அ) எகிப்து நாட்டில் பெண்களுக்கு சரக்கு அடிக்க அனுமதி கிடையாதாம்.வெளியே போயிருக்கும் கணவன் வந்து உதட்டோடு உதடு வைத்து கண்டுப்பிடிக்க முயற்சி செய்வானாம்.(சந்தேகம் வந்தால்).இந்த நிகழ்ச்சிக்கு பிறகு தினமும் சந்தேகம் வந்து இருக்கும்.

இன்னொரு வினோதமான பழக்கம்.முதலிரவுக்கு வரும் பெண் ஆயிரம் மூடிச்சி இருக்கும் உடைகளை அணிந்து இருப்பாளாம்.அதை எடுத்தால் தான் எல்லாம் நடக்கும்.அவசரக்குடுக்கைகள் ஒரு கதியை எடுத்து வெட்டி எறிந்து இருக்கும்.ஏதாவது அம்மாஞ்சி விடிய விடிய மூடிச்சிக் கழற்றியதா என்று யாருக்காவது தெரிந்தால் சொல்லவும்.

மேலே சொன்ன தகவல் இரண்டும் ஹாய் மதனில் வந்தது.

அறுக்க மாட்டாதவன் இடுப்பைச் சுற்றி இருபத்தி இரண்டு கருக்கருவாளாம்.எதை நினைத்து இப்படி சொல்லி இருப்பார்கள் - ஒரு அப்பாவி மற்றும் ஒரு அடப்பாவி.

ஒரே ஒரு நண்பர் மட்டும் அந்த ஜோக் வேண்டும் என்று கேட்டு இருந்தார்.அவருக்காக ஜோக்.

ஒரு அமெரிக்கனுக்கு கட்டாயத் திருமணம் செய்து வைக்கிறார்கள். அவன் எவ்வளவோ மறுத்தும் அவனை விடவில்லை.தேனிலவுக்கு ஹவாய் தீவிற்கு அனுப்பி வைக்கிறார்கள். அவனுக்கு ஆண்மையே கிடையாது.என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டு இருக்கிறான்.இரவு வந்ததும் விளக்கை அனைத்து விட்டு வெளியே வருகிறான்.

பணம் கொடுத்து மனைவிக்கு ஒரு ஆளை ஏற்பாடு செய்யத் தேடுகிறான்.

அங்கு இருக்கும் ஒரு வெள்ளைக்காரன் ஆயிரம் ரூபாய் கேட்கிறான்.அவனிடம் தொள்ளாயிரம் தான் இருக்கிறது.ஒரு கருப்பனைக் காட்டி அவனை அழைத்து கொண்டு போ அந்த பணத்திற்கு அவன் தான் வருவான் என்று சொல்ல..வேறு வழியில்லாமல் கருப்பனை அழைத்து வருகிறான்.

பத்து மாதம் கழித்து கறுப்பாக ஒரு குழந்தை பிறக்கிறது.அவர்கள் வசிக்கும் ஊரில் ஒரு கறுப்பர் கூட கிடையாது.

வளர்ந்த பிறகு அந்த பையன் கேட்கிறான்."ஏம்பா நான் மட்டும் கறுப்பாக இருக்கிறேன்.."

அதற்கு வந்த பதில் "அன்னைக்கு மட்டும் ஒரு நூறு ரூபாய் இருந்திருந்தா நீயும் வெள்ளையாதான் இருந்திருப்பே.."

நண்பனும் அவன் தந்தையும் (உண்மையில் நடந்தது)

அப்பா : பாத்ரூம்ல என்னடா பண்ற இரண்டு மணி நேரமா?

மகன் : நீங்க சின்ன வயசுல என்ன பண்ணீங்களோ அதத்தான் நானும் இப்போ பண்றேன்.

14 comments:

கோவி.கண்ணன் said...

//அப்பா : பாத்ரூம்ல என்னடா பண்ற இரண்டு மணி நேரமா?

மகன் : நீங்க சின்ன வயசுல என்ன பண்ணீங்களோ அதத்தான் நானும் இப்போ பண்றேன்.//

:)

அதுக்குன்னு 2 மணி நேரம் டூ மச் !

Raju said...

ஹலோ, முதல் ஜோக்குல லாஜிக்கே இல்ல..!
அமெரிக்காவுல எப்பிடி ரூபாய் யூஸ் பண்ணியிருப்பாங்க...?
கேக்குறவன் கேனைப் பயலா இருந்தா, எலி ஏரோபிளான் ஓட்டுமாம்.
:-)

வால்பையன் said...

நல்ல காமெடி!

ஈரோடு கதிர் said...

//அப்பா : பாத்ரூம்ல என்னடா பண்ற இரண்டு மணி நேரமா?

மகன் : நீங்க சின்ன வயசுல என்ன பண்ணீங்களோ அதத்தான் நானும் இப்போ பண்றேன்.//

அப்பாவும் சின்ன வயசில இரண்டு மணி நேரமா குளிச்சாரா!!!???

யாசவி said...

:-)

nice

துபாய் ராஜா said...

:))

தினேஷ் said...

/நண்பனும் அவன் தந்தையும் (உண்மையில் நடந்தது)

அப்பா : பாத்ரூம்ல என்னடா பண்ற இரண்டு மணி நேரமா?

மகன் : நீங்க சின்ன வயசுல என்ன பண்ணீங்களோ அதத்தான் நானும் இப்போ பண்றேன்.//

ஹ ஹ ஹ ரொம்ப லேட் பிக்கப்போ?

தினேஷ் said...

/அலுவலக மேலாளரிடம் நெருங்கி பழகுகிறாள் ஒரு இருபது வயது இளம்பெண். ஒருநாள் வீட்டிற்கு அழைக்கிறாள். இரவு 11.55 வரை பேசிக் கொண்டு இருக்கிறார்கள்.அவள் பார்வையில் ஏதோ சொல்வது போல இருக்கிறது.விளக்கை அனைத்து விட்டு பக்கத்து அறைக்கு செல்கிறாள்.இந்த அறையில் இவர் ஆடை முழுவதையும் கழற்றி விட்டு காத்திருக்கிறார்.மணி 12:௦௦௦௦௦௦00.விளக்கு போடப்படுகிறது.அலுவலகத்தில் வேலை செய்யும் அனைவரும் இருக்கிறார்கள். அன்று அவருக்கு பிறந்தநாள். இதோடு நிறுத்தி விட்டார்கள்.//

இதை வேறிவிதமா காதலன் காதலி மாதிரி படித்திருக்கிறேன்..

தினேஷ் said...

இதுக்குத்தான் முத்தம் கொடுக்குறாங்களா உதடோடு ?

/இன்னொரு வினோதமான பழக்கம்.முதலிரவுக்கு வரும் பெண் ஆயிரம் மூடிச்சி இருக்கும் உடைகளை அணிந்து இருப்பாளாம்.அதை எடுத்தால் தான் எல்லாம் நடக்கும்.அவசரக்குடுக்கைகள் ஒரு கதியை எடுத்து வெட்டி எறிந்து இருக்கும்.ஏதாவது அம்மாஞ்சி விடிய விடிய மூடிச்சிக் கழற்றியதா என்று யாருக்காவது தெரிந்தால் சொல்லவும்.//

பயபுள்ளக இப்படியெல்லாம் கஷ்டப்பட்டுருக்காங்களா ? நல்ல வேளை நாம தப்பிச்சோம்

லோகு said...

நான் நெஜமாலுமே எதையும் படிக்கலை..நம்புங்க நான் படிக்கலை..

லோகு said...

//ராஜு.. said...

ஹலோ, முதல் ஜோக்குல லாஜிக்கே இல்ல..!
அமெரிக்காவுல எப்பிடி ரூபாய் யூஸ் பண்ணியிருப்பாங்க...?
கேக்குறவன் கேனைப் பயலா இருந்தா, எலி ஏரோபிளான் ஓட்டுமாம்.
:-)//

அடப்பாவி.. ரூபாயா இருந்தா என்ன.. டாலரா இருந்தா என்னா?? நீ கதையோட உட்கருத்தையே புருஞ்சுக்கலையா... அநியாயத்துக்கு அம்பியா இருக்காதே..

வில்லங்கம் said...

லாஜிக் இல்லையா??? ஹலோ இது ஜோக்குங்க..... இவங்க அஜித் விஜய் படங்கள்ல கூட லாஜிக் பாப்பாங்க போல..

அரவிந்தா... நல்லா பதிவுறீங்க வாழ்த்துக்கள்....
சொன்னேங்க

Unknown said...

அருமை..

ஜோக் கலக்கல்..

ப்ரியமுடன் வசந்த் said...

:)