Monday, September 7, 2009

துவையல் - பதிவர்கள் ஸ்பெஷல்

கேபிள் சங்கர் அண்ணனும்,ஜாக்கி சேகரும் அலெக்ஸா ராங்கில் முன்னேறி கொண்டு இருக்கிறார்கள்.விரைவில் முதல் ஒரு லட்சத்திற்குள் வர வாழ்த்துகள்.இது என்னுடைய புது பிராஜக்ட் seo (search engine optimisation) செய்யும் பொது பார்த்தது.

வால்பையன் ஒரு வாரமா கவிதை(ஒரிஜினல் சரக்கு) எழுதி கொண்டிருந்தார்.நாம ரெண்டு பேரும் சாட் செய்ய ஆரம்பித்து ஒரு வாரம் தான் ஆகியிருந்தது.இரும்புத்திரையும் ,சாட்டிங்கும் தான் காரணம் என்று சொன்னார்.இப்போ ஒரு வாரமா சாட் பண்ணல.அவரும் இரும்புத்திரை பக்கம் ஆளக் காணோம்.அதான் வால்பையன் நல்லா புல்லா பதிவர் சந்திப்பு,எதிர் கவிதை என்று கலக்குகிறார். யாருக்காவது திரும்ப ஒரிஜினல் சரக்கு வேணுமா சொல்லுங்க..(திரும்ப சாட் பண்றேன்..)

நாடோடி இலக்கியனும்,கதிரும் "அன்பாக" சொன்னார்கள்."மொக்கைய நிறுத்தி விட்டு ஒழுங்கா எழுதுங்க.." நானும் முயற்சி செய்து பார்த்தேன்.. ம்ஹூம் நிறுத்த முடியல.. கூடிய விரைவில் நிறுத்தி விடுவேன் என்று நினைக்கிறேன்..(இன்னுமா இந்த ஊர் என்ன நம்பிகிட்டு இருக்கு..).கதிர் அண்ணன் எனக்கு விருது கொடுத்தார் (உனக்கு கூடவா என்று யாரும் சிரிக்க வேண்டாம்).அதுல பிரச்சனை இல்ல ஆனா இருக்கு.. பத்து நண்பர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். கொடுக்கலாம் யாரையாவது விட்டு விடுவோமா என்று பயமாக இருக்கிறது.

என்’ணங்கள் பதிவுவைப் படித்த பிறகு நர்சிமிடம் கேட்டேன்."சேரன் எம் பதிவப் படிக்கிறாரா.."(அதாவது க்ளாஸிக் என்ற படத்தின் காப்பி என்று ப்ளாகில் எழுதியவர்கள் சேரன் "தான்தோன்றிகள்" என்று சொன்னாராம்.நான் படம் வருவதற்கு ஒரு மாதம் முன்பே அப்படி எழுதி விட்டேன்.).அதற்கு நர்சிம் "ஆமா சேரன் உங்க ப்ளாக்க படிப்பாரு" என்று சொன்னார்.அதோடு விட்டு விடாமல் சிரித்தார்..(இதுல ஏதாவது உள்குத்து இருக்கா..)

பரிசல் வாரம் ஒரு பதிவரை அறிமுகம் செய்கிறார்.அவர் பதிவில் இருந்து நிறைய பதிவர்களின் பதிவு மற்றும் அறிமுகம் கிடைக்கும் என்று நினைக்கிறேன். வாழ்த்துகள் தல..இந்த வாரம் பாஸ்டன் ஸ்ரீராம்..

இந்த வாரம் இரண்டு ஆச்சரியங்கள்..சிறந்த சிறுகதை,கட்டுரைகளை எழுத நினைத்த காலடி ஜெகநாதனை பதியுலகம் மொக்கை மன்னனாக மாற்றியுள்ளது. இந்த சிறுகதையைப் பாருங்கள். தலைமுறையாய் தொடரும் கனவு. நூறு ஆண்டுகள் இடைவெளியில் ஒரு அருமையான கதை.நான் ஒன்பது ஆண்டு இடைவெளியில் நடக்கும் ஒரு கதையை முடிக்க முடியாமல் நான்கு மாதம் மற்றும் பத்து நாள் முக்கி கொண்டுயிருக்கிறேன்.

அடுத்த ஆச்சரியம் தண்டோரா. 32 கேள்விபதில் தொடர்களை எழுதி சிரிக்க வைத்தவர்.சமீப காலமாக கவிதைகள் எழுதி குவிக்கிறார்.அண்ணனுக்குள்ள இருந்த இலக்கியவாதிய யாரோ உசுப்பி விட்டு இருக்காங்க.

பக்கடா,குட்டிமணி இல்லாம எப்படி பதிவு முடியும்.இந்த பதிவை எழுதியவர் டக்ளஸ் என்ற ராஜு. மெயிலில் அனுப்பியவர் நையாண்டி நைனா. ஸாரி.. ரெண்டு பேரும் ஒன்னுதானே.. எழுதி மெயிலில் அனுப்பியவர் நையாண்டி நைனா என்ற டக்ளஸ் என்ற ராஜு.

இந்த வார வம்பு - விகடன்.

க.சீ.சிவக்குமார் குமாரசம்பவம் என்ற தொடர்கதையை அருமையாக எழுதி வந்தார்.எனக்கு முடிவு அவசரமாக முடித்தது போல் தோன்றுகிறது.வம்பு இனிமே தான் வருது..(அடுத்த வாரத்துல இருந்து விகடன் வாங்க வேண்டாம்..). இனிமே பதிவர்கள் எழுதினால் மட்டும் வாங்கப்படும்.

13 comments:

நாஞ்சில் நாதம் said...

துவையல் - நல்லாயிருக்கு
தமிழ்மணத்தில சேத்தாச்சு

ஈரோடு கதிர் said...

//இன்னுமா இந்த ஊர் என்ன நம்பிகிட்டு இருக்கு//

சரி... சரீ இனி நம்பள போதுமா?

துவையல் அருமை

லோகு said...

//நையாண்டி நைனா. ஸாரி.. ரெண்டு பேரும் ஒன்னுதானே.. எழுதி மெயிலில் அனுப்பியவர் நையாண்டி நைனா என்ற டக்ளஸ் என்ற ராஜு.//

இது எந்த அளவுக்கு உண்மைன்னு தெரியல தலைவா... மூத்த(??) பதிவர்களெல்லாம் இல்லை ரெண்டு பேரும் வேற வேறன்னு சொல்றாங்க..

Anonymous said...

//பரிசல் வாரம் ஒரு பதிவரை அறிமுகம் செய்கிறார்.அவர் பதிவில் இருந்து நிறைய பதிவர்களின் பதிவு மற்றும் அறிமுகம் கிடைக்கும் என்று நினைக்கிறேன். வாழ்த்துகள் தல..இந்த வாரம் பாஸ்டன் ஸ்ரீராம்..//

அறிமுகத்துக்கே அறிமுகம் கொடுக்கறீங்களே, நீங்க பெரிய ஆளுதான் :)

மணிஜி said...

அறிமுகத்திற்கும்
ஆதரவிற்கும்
நன்றிகள் சகோதரா...

Raju said...

\\பக்கடா,குட்டிமணி இல்லாம எப்படி பதிவு முடியும்.இந்த பதிவை எழுதியவர் டக்ளஸ் என்ற ராஜு. மெயிலில் அனுப்பியவர் நையாண்டி நைனா. ஸாரி.. ரெண்டு பேரும் ஒன்னுதானே.. எழுதி மெயிலில் அனுப்பியவர் நையாண்டி நைனா என்ற டக்ளஸ் என்ற ராஜு.\\

யோவ்..ங்கொய்யால..உங்களையெல்லாம் ஏன்யா சுனாமி தூக்கல..?

Raju said...

\\இனிமே பதிவர்கள் எழுதினால் மட்டும் வாங்கப்படும்.\\

எங்க எழுதனும்ன்னு சொல்லுங்க..!
எழுதிருவோம்.!
:=)

க.பாலாசி said...

துவையல் ருசி....அருமை நண்பா....

சமயத்துல உங்களப்பத்தின உண்மைகளையும் சொல்லிடுறீங்க...

வால்பையன் said...

//திரும்ப ஒரிஜினல் சரக்கு வேணுமா சொல்லுங்க..(திரும்ப சாட் பண்றேன்..)//


உங்களுடன் சாட் பண்ணுவது மட்டும் முக்கியமல்ல!
ஒரிஜினல் சரக்கு நான் அடிக்க வேண்டும்!
இங்கே எல்லாமே டூப்ளிகேட்டா தான் இருக்கு!
ஒரிஜினல் வாங்கி அனுப்புங்க!

இரும்புத்திரை said...

நன்றி நாஞ்சில் நாதம்

நன்றி கதிர் - ஈரோடு

நன்றி லோகு

நன்றி சின்ன அம்மிணி

நன்றி தண்டோரா

நன்றி ராஜு

நன்றி க.பாலாஜி

நன்றி வால்பையன்

துபாய் ராஜா said...

//லோகு said...
//நையாண்டி நைனா. ஸாரி.. ரெண்டு பேரும் ஒன்னுதானே.. எழுதி மெயிலில் அனுப்பியவர் நையாண்டி நைனா என்ற டக்ளஸ் என்ற ராஜு.//

இது எந்த அளவுக்கு உண்மைன்னு தெரியல தலைவா... மூத்த(??) பதிவர்களெல்லாம் இல்லை ரெண்டு பேரும் வேற வேறன்னு சொல்றாங்க..//

ஆமா அரவிந்த்,இருவரும் வேறு வேறு நபர்கள் என்றே நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த விஷயம் இனியும் இதுபோல் எழுதவேண்டாமே.

ஆ.ஞானசேகரன் said...

துவையல் சூப்பர்

தினேஷ் said...

/உங்களுடன் சாட் பண்ணுவது மட்டும் முக்கியமல்ல!
ஒரிஜினல் சரக்கு நான் அடிக்க வேண்டும்!
இங்கே எல்லாமே டூப்ளிகேட்டா தான் இருக்கு!
ஒரிஜினல் வாங்கி அனுப்புங்க//

இதுக்கு பதிலா நன்றினு முடிச்சிட்டிய பார்சல்ல அனுப்பும் போது பெங்களூருக்கும் ஒரு சின்ன பார்சல அனுப்புங்க