Wednesday, August 18, 2010

கோட்டா,பேட்டா,சேட்டா

இணையத்தில் புரட்சி செய்யலாம் என்று தான் பார்க்கிறேன்.எதில் என்று தெரியாமல் கண்ணில் கண்டதை எல்லாம் வெளுத்து விட்டால் புரட்சி வெடித்து விடும் போலிருக்கிறது.நானும் முயற்சி செய்யலாம் என்று பார்த்தாலும் சுட்டுப் போட்டாலும் வர மறுக்கிறது. அட வினவினாலும் வரவே மாட்டேன் என்றால் பார்த்துக்கோங்களேன். ஏதாவது கோளாறா என்று நண்பரிடன் கேட்டேன்.பதினெட்டு வயசில் கம்யூனிசம் பேசணும்.அப்புறம் என்றேன் அதை வெளுக்கணும் என்று சொன்னார். அப்ப நான் சரியாகத்தானிருக்கிறேன். என்ன செய்வது இணையப்புரட்சியாளர்கள் ஓட்டுப் போடுவதில் தான் புரட்சி செய்கிறார்கள்.

முகிலனுக்கு இன்று இந்த பாட்டை டெடிகேட் செய்கிறேன். ஊரைத் தெரிஞ்சிகிட்டேன் உலகம் புரிஞ்சிகிட்டேன் கபாலி கபாலி. என்னால் அம்பிகா மாதிரி அவரை தாங்க முடியாது வேண்டுமென்றால் கபாலி மாதிரி தாங்குகிறேன். எந்திரனைப் புறக்கணியுங்கள் முகிலன் நீங்கள் புறக்கணிக்கத்தால் அமெரிக்காவில் ஒபாமாவும் புறக்கணித்து விடுவார். அப்புறம் பிரிட்டன் வழியாக ஆஸியில் புறக்கணித்தால் கடைசியில் தமிழ்நாடு புறக்கணித்து விடும்.

டிவிட்டருக்கு தெரியுமா கவிதையின் வாசனை அருமை.

முக்கில் முயற்சித்த
முதல் முத்தம்
மூக்கில் முடிந்தது !

இப்படி ஒண்ணுக்கு கீழே ஒண்ணு அடித்தேன்.அப்பவும் ஒரே வரியில் காட்டுகிறது.நண்பனிடம் சொன்னேன் ஒண்ணுக்குன்னா கீழே தான் அடிக்கணும் என்று சொல்கிறான்.அடுத்த முறை வாயைத் திறக்கட்டும். கழுதைக்கு தெரியுமா என்று நினைத்துக் கொண்டேன். இதை தான் காதல் கவிதை படத்தில் பின் நவீனத்துவ இயக்குனர் அகத்தியன் ஒரு காட்சியில் கவிதையாக எழுதினார். அது தான் கடைசி பிரசாந்த் படம் பார்த்தது.

இந்தியாவின் முதல் பணக்காரனையும், இரண்டாம் பணக்காரனையும் ஒரே படத்தில் கண்டுக்களிக்கிறேன். தமன்னா முகத்தில் எதுக்குடா நாலு இஞ் மேக்கப் அதை சூர்யாவிற்கு அடித்திருந்தால் அல்லது மிச்சம் வைத்திருந்தால் அதையும் விற்று பில்கேட்ஸை விட இரண்டு ரூபாய் அதிகமாக சம்பாதித்திருப்பார்.வியாபாரி.

புரட்சியாளர்கள் இன்னும் அமீர்கானை விட்டு வைத்திருப்பது ஆச்சர்யம் தான். 2005லிருந்து கதை சொல்லி சொல்லி போராடி இதை இயக்கியிருக்கும் பெண் இயக்குனருக்கு வாழ்த்துக்கள். மனிதன் எதை தொட்டாலும் கொட்டுது.நிச்சயம் இவர் ஒரு 100 % வியாபாரி என்று அவர் மூக்கில் குத்து விட்டாலும் அவருக்கு தெரியாதாம். தமிழ் படிக்க தெரியாது என்று சொன்னேன். விதர்பா விவசாயிகள் அமீர் கான் அசிங்கப்படுத்தி விட்டார் என்று போர்க்கொடி தூக்கி அமீர்கான் உருவபொம்மையை எரித்திருக்கிறார்கள். அமீர் கான் தப்பாகவே சொல்லியிருந்தாலும் (சிலர் சொன்ன மாதிரி) அதை உலக அளவில் வெளிச்சம் போட்டுக் காட்டிய பெருமை அவருக்கே.

இலங்கை பந்து வீச்சாளர்,அணித் தலைவர்,வாரியத் தலைவர் விட்டால் நாட்டின் தலைவரும் சேவாக்கிடம் மன்னிப்பு கேட்பார்கள் போல. கோபத்தில் இந்தியா விளையாட வராமல் இருந்து விட்டால் துட்டுக்கும்,சாதனைக்கும் என்ன செய்வது. பெரிய லாடு லங்கோத்து தான் இந்திய கிரிக்கெட் வாரியம் இதில் எல்லாம் ஆஸ்திரேலியாவை உதாரணம் காட்டுவார்கள்.மற்ற விளையாட்டு விளையாடுவதில் ஆஸ்திரேலியாவை காட்டுங்கள் என்றால் மாட்டார்கள். மீன்வன் மீது தாக்குதல் நடத்தினால் விளையாட வர மாட்டேன் என்று சொன்னால் நிச்சயம் நிறுத்துவார்கள் என்று நினைக்கிறேன். சொல்வதற்கு தான் வாய் வராதே.

4 comments:

Unknown said...

தம்பி

இலங்கை இந்தியா கிரிக்கெட் விளையாடுவதில் பணமும் சாதனையும் மட்டுமல்ல அதையும் தாண்டி பார்ப்பவன் புத்தியை போதையில் மயங்க வைக்கும் ஒரு பெரிய அரசியலும் இருக்குதப்பா

Unknown said...

இதை நான் சொன்னலும் எனக்கு நடுத்தர வர்க்க சிந்தனை என்று சொல்கிறார்கள் 

Unknown said...

இதை நான் சொன்னலும் எனக்கு நடுத்தர வர்க்க சிந்தனை என்று சொல்கிறார்கள் 

இரும்புத்திரை said...

எப்ப முதலாளித்துவ சிந்தனையிலிருந்து நடுத்தரத்திற்கு இறங்குனீங்க..சொல்லவே இல்ல..