Tuesday, August 10, 2010

ஜீ டிவி வளையலில் தெரிந்த தமிழ்சினிமா - ஆடும் கூத்து

ஆட்டோகிராப் மற்றும் தவமாய் தவமிருந்து படத்திற்கு நடுவில் சேரன் ஆடும் கூத்து என்ற படத்தில் நடித்து கொண்டிருக்கிறார் என்று கேள்விப்பட்டியிருக்கிறேன். பின் த.த,மா.க,பொக்கிஷம் என்ற படங்கள் எல்லாம் வெளி வந்தப் பிறகும் ஆடும் கூத்து வெளியாகவே இல்லை. எந்திரனை விமர்சிக்கும் நம்மில் எத்தனை பேர்  ஆடும் கூத்து,ரைட்டா தப்பா, காஞ்சிவரம் படங்களை எல்லாம் பார்த்திருப்போம். மாயக்கண்ணாடி படமே ஆடும் கூத்தில் இருந்து கிடைத்த கருவாக தானிருந்திருக்கும்.அவ்வளவு ஒற்றுமைகள் படத்தில் உண்டு.

நவ்யா நாயர் திருவிழாவில் ஒரு கொலையைப் பார்ப்பதோடு ஆரம்பிக்கிறது. அதை சொன்னால் யாரும் நம்பவில்லை. முறைப்பையன் மட்டும் நம்புவதாக சொல்கிறான்.திருவிழாவில் வாங்கிய வளையலை நவ்யாவுக்கு தந்து அதில் ஒரு கறுப்பு வெள்ளை படம் ஒளிந்திருப்பதாக சொல்கிறான். கேலி செய்யும் நவ்யா அதில் ஒரு வெளிவராத ஒரு படத்தைப் பற்றி சொன்னாலும் நம்பாமல் வீட்டில் உள்ளவர்களிடமே குறை சொல்கிறான்.எல்லோரும் மனநல மருத்துவரிடம் அழைத்து செல்ல கண்ட கண்ட புத்தங்களைப் படிக்க வேண்டாம் என்று சொல்கிறார்.

கொலை நடந்தது தலையில்லாத முண்டம் கிடைத்ததும் உறுதியானாலும் கறுப்பு வெள்ளை படத்தை மட்டும் நம்ப மறுக்கிறார்கள். முன்னும் பின்னும் கதை நகர்ந்து போக வளையலில் தெரியும் கறுப்பு  வெள்ளை படம் உதவி அந்த கதையை நவ்யாவிற்கு புரிய செய்கிறது.அதில் கதாநாயகியாக நவ்யா மற்றும் நாயகனாக சேரனும், ஜமீன்தாராக பிரகாஷ்ராஜூம் அந்த படத்தில் தெரிகிறார்கள்.

கல்யாணம் செய்து வைத்தால் சரியாகி விடும் என்று சொல்ல படிப்பை நிறுத்தி விட்டு கல்யாணம் செய்ய சம்மதிக்கும் நவ்யாவிற்கு தாலி கட்டும் நேரத்தில் மறுபடியும் திரைப்படம் தெரிய அதில் மொட்டைத் தலையோடு நவ்யா தெரிய அதிர்ந்து ஓடி கல்யாணத்தை நிறுத்துகிறார். மருத்துவமனையில் அந்த கதையை நவ்யா விவரிக்க கல்யாணம் நின்ற கோபத்தில் முறைப்பையன் வீட்டை விட்டு போய் பத்திரிக்கையில் வேலைக்கு சேர்கிறார். அங்கு 1975ல் வந்த நாளிதழில் அந்த கறுப்பு வெள்ளை படத்தைப் பற்றிய செய்தி இருக்கிறது.

நவ்யாவும்,முறைப்பையனும் படப்பிடிப்பு நடந்த இடத்திற்கு போக,அங்கு பிரகாஷ்ராஜை சந்திக்க அவர் ஞானசேகரன் மற்றும் பிரபா என்ற இயக்குனர்,நடிகர் வாழ்வில் நடந்த கதையை சொல்கிறார்.சின்ன வயதில் சேரனைப் பாதித்த ஜமீந்தாரின் அடக்குமுறைகளை பற்றி படமெடுக்க முடிவி செய்கிறார் அதில் உண்மையாக தெரிய தத்ரூபமாக தெரிய நவ்யா நாயர் ஒத்துக் கொள்கிறார்.எல்லாம் முடியும் நேரத்தில் ஜமீந்தாரின் மகன்(சீமான்) கலாட்டா செய்ய படப்பிடிப்பு நிற்க நவ்யா தற்கொலை செய்ய அவரை காதலித்த சேரன் காணாமல் போகிறார்.

பிற்கு புரட்சியாளராக திரும்பி வந்து(அதானே நமக்கு ஒரு பிரச்சனை வந்தால் புரட்சியாளனாக மாறி விட வேண்டியது தானே) சீமானை கொல்ல அதற்கு பதில் நடவடிக்கையாக எமர்ஜன்சி காலக்கட்டத்தில் சேரன் கொல்லப் படுகிறார். இவ்வளவும் தெரிந்த பின் நவ்யா அதை ஆவணப்படமாக எடுக்கிறார். ஒரு தியாகம் செய்து அதை முடிக்கிறார்.

சேரன்,தலைவாசல் விஜய்,மனோரமா,சீமான்,பிரகாஷ்ராஜ்,பாண்டியராஜன் தவிர எல்லாம் மலையாள நடிகர்கள் இருப்பது படத்தில் ஒரு பெருங்குறை.பட்ஜெட் பட்ஜெட்.சேரன்,நவ்யா,பிரகாஷ்ராஜ்,சீமான் போன்ற நடிகர்கள் பணமே வாங்காமல் நடித்தும் படம் வெளி வராமல் போனது வருத்தமே.

நாடகம் பார்ப்பது போல சில இடங்களில் படம் நகர்வது ஒரு மைனஸ்.படமே ஒரு ஆவணப்படம் மாதிரி தான் தெரிகிறது. இந்த படத்தை மலையாளத்தில் எடுத்திருந்தால் கூட அதிக தமிழர்கள் பார்த்திருப்பார்கள் என்பது மட்டுமில்ல திரையரங்கிலும் வெளி வந்திருக்கும் என்பதும் மறுக்க முடியாத உண்மை. மீனாள் என்ற நடிகை லவ்லி படத்தில் நடித்திருந்தாலும்,ஆடும் கூத்தில் வந்து போனாலும் சேரன் தான் அறிமுகப்படுத்தினார் என்று நம்பி தொலைக்க வேண்டியிருக்கிறது. படத்தில் ஒரு காட்சியில் சொல்வது போல இந்த படம் வெள் வந்தால் பிரபா உன்னை கொண்டாடுவார்கள் என்று இயக்குனர் ஞானசேகரன் சொல்வார். உண்மை தான் கொண்டாட விட்டாலும் கொஞ்சமாவது பேசியிருப்பார்கள். மலையாளத்திலே எடுத்திருந்தால் இது உலக சினிமா பட்டியலை நெருங்கியிருக்கும். குலுங்கி குலுங்கி அழாத சேரனைப் பார்க்கும் போது கொஞ்சம் சந்தோசமாகத்தானிருந்தது.இசையும் அருமை. யாருமே கவனிக்காமலிருந்தால் இதுவும் எதாவது வளையலாக மாறியிருக்கும்.அதை வெளியே காட்டிய பெருமை ஜீடிவி என்ற அற்புத விளக்கில் இருந்து வந்த வெளி மாநிலத்துப் பூதத்திற்கு தான் சேரும்.

சன்,கே,கலைஞர்,ஜெயா என்று என் வீட்டிலிருக்கும் ரிமோட்டில் முதல் நான்கு சேனல்கள் இருக்கிறது. ஜீ டிவி ஏதோ தொன்னூறுகளிலிருக்கிறது.மாற்ற நினைத்தாலும் வீட்டிற்கே வருடத்திற்கு முப்பது நாட்கள் மட்டுமே வந்து செல்லும் அன்னியனாகயிருப்பதால் அதை மாற்ற மறந்து விடுகிறேன்.

4 comments:

நீ தொடு வானம் said...

இப்போ தெரியுதா ஏன் எந்திரன் படம் பத்தி எழுதுறாங்கன்னு

இரும்புத்திரை said...

அது சரி தான்..எந்திரன் பற்றி எழுதினால் தான் தமிழ் சினிமா உருப்படும் :-)))))))))))))))

அகல்விளக்கு said...

அன்னை....
ஆடும் கூத்தை
ஆடச்செய்தாய்
என்னை....

:)

Unknown said...

Naanum inthap padathaip parthen. Navya pranaathsp patuthiyiruppaar