Sunday, October 11, 2009

துவையல் - அரசியல் ஸ்பெஷல்

ஜ்வோவ்ராம்சுந்தர் மீதான தாக்குதலைப் படித்து விட்டு அதிர்ந்து போய் இருக்கிறேன்.அடுத்தவர்களை நன்றாக விமர்சித்து விட்டு தன் மீதான விமர்சனத்தைத் தாங்க முடியாதவர்கள் தான் அடிதடியில் இறங்குவார்கள் என்று இது நாள் வரை நினைத்திருந்தேன்.இன்று அது உறுதியாக இருக்கிறது. அப்படி தன் மீதான விமர்சனத்தைத் தாங்க முடியாதவர்கள் அடுத்தவர்களை விமர்சிப்பதை நிறுத்தி விடுங்கள்.யார் மீதும் யாரும் விமர்சனம் வைக்க மாட்டார்கள்.

விரைவில் அவர் உடல் நலம் பெற பிராத்திக்கிறேன்.

தமிழ்மணத்திற்கு ஒரு வேண்டுகோள்

சில பதிவுகள் நன்றாக இருந்தாலும் மகுடம் ஏற விடாமல் தடுக்க மைனஸ் ஓட்டுப் போடப்படுகிறது.ஓட்டுப் போடுவர்களின் பெயர்களைக் காட்டலாமே.எனக்கும் பார்க்க ஆசையாக இருக்கிறது..இதில் கூட அரசியல் செய்யும் பெயர்களையாவது தெரிந்து கொண்டு ஒரு பாராட்டு விழா நடத்த ஏதுவாக இருக்கும்.(இன்னைக்கு மைனஸ் ஓட்டு நிச்சயம்)

ஒபாமாவுக்கு ஆஸ்கர் இல்ல இல்ல அமைதிக்காக நோபல் பரிசு வழங்கி இருக்கிறார்கள்.இராக் மற்றும் ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து படைகளை வாபஸ் பெறுவேன் என்று சொன்னதற்கே இந்த பரிசா.இதுக்கு அவருடைய பெரிய நொண்ணன் புஷ் அவர்களுக்கு இந்த விருதை வழங்கி இருக்கலாம்.என்ன கொடுமை கந்தசாமி இது..

இந்த ஒரு விஷயத்தை வலியுருத்தி நான் கந்தசாமி கோவிலில் சீட்டு கட்டப் போகிறேன்..

ஒபாமா முதல் நூறு நாட்கள் என்ற கேலிச்சித்திரம் அங்கு உள்ள பத்திரிக்கையில் வெளியிட்டு இருக்கிறார்கள்.ஒருவரும் போராட்டம் நடத்தவில்லை. கொடும்பாவி கொளுத்தவில்லை.பஸ்ஸை எரிக்கவில்லை.என்ன கொடுமை அமெரிக்கா இது..இப்படி ஒரு கலாச்சாரம் இல்லாத நாட்டில் நான் வர விரும்பவில்லை..

எனக்கு ஓட்டு போடுங்கள்,எனக்கு ஓட்டு போடுங்கள் என்று மகாராஷ்ட் ராவில் நடக்கும் தேர்தலுக்காக மத்தியை ஆளும் கூட்டணியும்,ஆளாதக் காரணத்தினால் அழும் கூட்டணியும் எனக்கு குறுஞ்செய்தி அனுப்பி ஏதோ யாசிக்கிறார்கள்.நான் வாக்காளர் அடையாளச் சீட்டுக் கேட்டு விண்ணப்பித்த போது கொடுத்து விடுங்கள்,கொடுத்து விடுங்கள் என்று சொல்லாமல் எங்கே போய் தொலைந்தீர்கள்.எனக்கு வாக்காள அட்டை தருவதற்கு என்னுடைய ரேஷன் கார்டைக் கேட்டாலும் பரவாயில்லை.பக்கத்து வீட்டுகாரனின் ரேஷன் கார்டைக் கேட்பதில் என்ன நியாயம் இருக்கிறது. என்ன கொடுமை பிரதீபா பாட்டில் மேடம் இது..நீங்கள் ஏதாவது செய்யணும்..எனக்கு அடையாள அட்டை கிடைக்க அங்கு எந்த கோவிலில் சீட்டுக் கட்ட வேண்டும்..தெரிந்தவர்கள் சொல்லலாம்..

ஞானி நீங்க ரொம்ப லேட்டாக உன்னைப் போல் ஒருவனை விமர்சித்து உள்ளீர்கள்.அதில் தமிழ் நாட்டிற்குப் பொருந்தக் கூடிய பஸ் எரிப்பு சம்பவம் , இன்னும் சில கலவரங்களைஸ் செய்தவர்களை தீவிரவாதிகளுக்கு பதில் சேர்த்து இருக்கலாம் என்று குறிப்பிட்டு உள்ளீர்கள்.அதெல்லாம் முடிந்தால் தான் என்ன வேண்டுமானாலும் செய்யலாமே.இங்கு லேசுபாசாக பிபாஷா பாசுவைப் பற்றி எழுதினாலே கோமணம் கிழிந்து விடுகிறது.என்ன கொடுமை ஞானி சார் இது..நீங்கள் எடுக்கும் படங்களில் இப்படி செய்வீர்களா சொல்லுங்கள் ப்ளீஸ்.

இந்த வார வம்பு..

ரஜினிகாந்தும்,கருத்து கந்தசாமி விவேக்கும்..

முதலில் ரஜினிகாந்த் - சார் நீங்க பேச மாட்டேன்,பேச மாட்டேன் என்று சொல்லியே பத்து நிமிடம் பேசியுள்ளீர்கள்.நிறையப் பிரச்சனைகள் இருக்கிறது நாட்டில் அதை விட்டு விட்டு முதல்வரை நடவடிக்கை எடுக்க இதற்கெல்லாமா அழைப்பது.சிவாஜி படத்தில் அங்கவை,சங்கவை என்று நடித்தப் போது கண்டனம் தெரிவிக்கவில்லையே..ஆபாஷமாக நடிகர் நடிகைகள் பேசியதற்கு ஒரு கண்டனமும் இல்லையே..ரொம்ப ஸாரி நீங்கள் இயக்குனர் எழுதித் தருவதைப் பேசுவதாக நினைவு..(ஞாபகம் வந்து விட்டது..குசேலன் படத்தில் சொன்னீர்கள்..)

மிஸ்டர் குவேக்..சொம்பு ரொம்ப அடி வாங்கி இருக்கு என்று பேசியது யார்..துள்ளல் படத்தில் ஆபாஷமாக நடித்தது யார்.உங்கள் படத்தில் பெண்களை எப்படி நடிக்க வைக்கிறீர்கள்.புவனேஷ்வரிக்கு ஒரு கண்டனம் கூட இல்லையே..(சரி தெரிவித்தால் இன்னும் நிறைய பேர்களுக்கு கோமணம் கிழிந்து இருக்கும்..)

ஆரம்பக்காலத்தில் என்னை பற்றி நன்றாக எழுதுங்கள் என்று எல்லா நடிகர்களும் சொல்வதாக நினைவு..இன்மேல் வளர்ந்தப் பிறகு அவர்கள் தயவு எதற்கு..அதை விட அவர்களின் அம்மா,அக்கா,மனைவி படத்தைத் தந்தால் மிஸ்டர் விவேக் வேறு மாதிரியாக ஆபாசமாக மாற்றி தருவார்.

அந்த நேரத்திலும் நிதானம் இழக்காமல் பேசிய நடிகர் தாமுவிற்குப் பூங்கொத்துகளுடன் என் கைகுலுக்கள்கலும்..

டிஸ்கி :

என்னுடைய ஐ.பி முகவரிக்கு ஆட்டோ,தண்ணீர் லாரி எதுவும் அனுப்ப வேண்டாம்.நான் இருப்பது இந்தியாவில்..ஆனால் இனிமேல் பதிவு அமெரிக்காவில் இருக்கும் நண்பன் மூலம் போடலாம் என்று இருக்கிறேன்.

13 comments:

லோகு said...

/ஆனால் இனிமேல் பதிவு அமெரிக்காவில் இருக்கும் நண்பன் மூலம் போடலாம் என்று இருக்கிறேன்.//

ரொம்ப பயந்திட்டீங்க போல.. எதுக்கும் பாடி கார்ட் முனீஸ்வரர் கோவிலுக்கு ஒரு தரம் போயிட்டு வந்துருங்க..

**

துவையல் நல்ல சுவையோடுஇருந்தது.

வெண்ணிற இரவுகள்....! said...

//மிஸ்டர் குவேக்..சொம்பு ரொம்ப அடி வாங்கி இருக்கு என்று பேசியது யார்..துள்ளல் படத்தில் ஆபாஷமாக நடித்தது யார்.உங்கள் படத்தில் பெண்களை எப்படி நடிக்க வைக்கிறீர்கள்.புவனேஷ்வரிக்கு ஒரு கண்டனம் கூட இல்லையே..(சரி தெரிவித்தால் இன்னும் நிறைய பேர்களுக்கு கோமணம் கிழிந்து இருக்கும்..)

ஆரம்பக்காலத்தில் என்னை பற்றி நன்றாக எழுதுங்கள் என்று எல்லா நடிகர்களும் சொல்வதாக நினைவு..இன்மேல் வளர்ந்தப் பிறகு அவர்கள் தயவு எதற்கு..அதை விட அவர்களின் அம்மா,அக்கா,மனைவி படத்தைத் தந்தால் மிஸ்டர் விவேக் வேறு மாதிரியாக ஆபாசமாக மாற்றி தருவார்.
//

சூப்பர் ஸ்டார் என்ன பேசுகிறார் என்றே புரியவில்லை ............விவேக் எதற்கு ஆபாசம் அவர்கள் உங்கள் வீட்டு பெண்களை சொல்ல வில்லையே .........நீங்கள் நகைச்சுவை என்ற
பெயரில் ரெட்டை அர்த்தத்தில் பேசுகிறிர்களே

ஈரோடு கதிர் said...

அரவிந்த்.....
ஐ.பி அட்ரசுக்கு சிக்கன் குனியாவை அனுப்பிடப்போறங்க

Starjan (ஸ்டார்ஜன்) said...

அரவிந்த் கலக்கிட்டீங்க குவேக்கை !

சென்ஷி said...

நல்லா எழுதியிருக்கீங்க அரவிந்த்!

பிரபாகர் said...

சரியா எழுதியிருக்கே தம்பி... ஒட்டு போட்டுட்டேன்....

இராகவன் நைஜிரியா said...

உங்க ஐபி அட்ரசுக்கு நைஜிரியா இமெயில்தான் வரப்போகுது... பார்த்து நடந்துகுங்க.

வினோத் கெளதம் said...

Super Post My friend..
Kalakkal.

துபாய் ராஜா said...

துவையல் நல்ல காரமா இருக்கு...

ᾋƈђἷłłἔṩ/அக்கில்லீஸ் said...

துவையல் சூப்பர்.. :))

மணிகண்டன் said...

துவையல் நல்ல டேஸ்ட்.

தமிழ்மணம் நெகடிவ் வாக்கு செம interesting. திடீர்னு ஒருநாள் ஒவ்வொருத்தரோட வோட்டிங் வரலாறு ரிலீஸ் பண்ணினா செம கலக்கலா இருக்கும் :)-

kanagu said...

/*ஆனால் இனிமேல் பதிவு அமெரிக்காவில் இருக்கும் நண்பன் மூலம் போடலாம் என்று இருக்கிறேன்*/

பயப்படாதீங்க.. தைரியமா இருங்க ;)

துவையல் நல்லா இருந்துதுங்க.. :)

முதல்ல சொன்ன விஷயத்த பத்தி படிச்ச போது ரொம்ப கஷ்டமா இருந்துது.. :(

மணிஜி said...

துவையல் காரசாரமா இருக்கு தம்பி(ஆமாம்..எங்க அங்கிட்டு உன்னைய ஆளையே காணோம்?)