Thursday, October 22, 2009

குலால்,கமீனே,சாரு - 2

கமீனே - அரத பழசான அண்ணன் தம்பி கதை.ஷாகித் கபூர் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார்.சார்லி,குட்டூ இருவரும் அண்ணன் தம்பிகள்.அப்பா இறந்த பிறகு பிரிந்து விடுகிறார்கள்.சார்லி குறுக்கு வழியில் முன்னேற நினைப்பவன்.குட்டூ நேர் வழியில் செல்பவன்.(என்ன இப்பவே கண்ணைக் கட்டுதா).வித்தியாசம் ஏதாவது இருக்க வேண்டுமே.சார்லி "ச" வை "ப" என்று உச்சரிப்பான்.குட்டூ திக்கி திக்கி பேசுவான்.இது மட்டும் தான் வித்தியாசம் என்று நினைத்தால் அப்படி இல்லை திரைக்கதை முழுவதுமே வித்தியாசம் தான்.

சார்லி குறுக்கு வழியில் கவனம் சிதறாமல் குதிரை போல ஓடுபவன்.(குதிரை பந்தயத்தில் விளையாடி பணத்தைத் தொலைக்கிறான்).ஜாக்கியைப் பிடித்து இப்படி ஆனதிற்கு காரணமாணவனைத் செல்கிறான்.அவன் பேர் பிரான்பிப்(சார்லி மொழியில்) பிரான்சிஸ்.அங்கு நடக்கும் சண்டையில் தப்பி வரும் போது ஒரு வண்டியில் தப்பிக்கிறார்கள் சார்லியும் அவன் நண்பனும்.

செக் போஸ்ட்டில் தான் தெரிகிறது அவர்கள் அடித்தது காவலர்களை கடத்தியது அவர்களுடைய வண்டியை,அதில் இருக்கும் போதை பொருளை.வீட்டிற்கு போனால் எமன் காத்து இருக்கிறான் பிரியங்காவின் அண்ணன் உருவில். .

இதற்கிடையில் கர்ப்பமான காதலியை திருமணம் செய்ய வேண்டிய நிர்பந்தம்.காரணம் அவளுடைய அண்ணன் ஒரு ரவுடி கம் அரசியல்வாதி.அவனது ஆட்கள் அவர்களைப் பிடித்து விட அங்கு நடக்கும் சண்டையில் பிரியங்காவால் காப்பாற்றப்பட்டு குட்டூ தப்பிக்கிறான்.
வரும் வழியில் இருவருக்கும் சண்டை வர "நீ சொல்வது எல்லாம் பொய்.." என்று குட்டூ திட்ட அவள் போய் விடுகிறாள். அவளுடைய அண்ணனின் ஆட்கள் சார்லியின் இடத்தை சொல்ல அவர்கள் சார்லியின் இடத்திற்கு செல்கிறார்கள்.

போதைப் பொருளை இழந்த அதிகாரி குட்டூவைப் பிடித்து விசாரிக்க..விசாரணையில் அவன் திக்க..பிறகு பாட சொல்ல அவன் திக்காமல் பாடுகிறான்.(வாசுவின் செந்தமிழ் பாட்டு படம் பார்த்து இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்).விசாரணையில் அவனுக்கு ஒரு சகோதரன் இருப்பது தெரிய வர..ரவுடி அண்ணன் தொல்லையால்(உயிர் நண்பன் வேறு காலி) சார்லியிடம் இருந்து போன் வர 1+1 = 2.

இருவரையும் பண்டமாற்று முறையில் அதிகாரியில் ரவுடியும் மாற்றிக் கொள்கிறார்கள்.குட்டூ அண்ணனிடம் பேரம் பேச..அதிகாரியை சுட்டு விட்டு சார்லி போதைப் பொருள் கூட்டத்தின் தலைவனிடம் பேரம் பேச..

இருவரும் போதைப் பொருளை எடுக்க வர..நடக்கும் சண்டை ப்ளஸ் வாக்குவாதத்தில் சார்லி விட்டு கொடுக்கிறான். சார்லியைப் பார்த்து அப்பாவின் மரணத்திற்கு நீ காரணமில்லை என்று குட்டூ சொல்கிறான்.சின்ன ப்ளாஸ்பேக்.அப்பாவை விடுவிக்க சார்லி சூதாடுகிறான்.(சின்ன வயதில் எப்படி இருக்கிறோமோ அப்படிதான் கடைசி வரை இருக்கிறோம்).பணம் கொண்டு வருவதற்குள் அப்பா தற்கொலை செய்து கொள்கிறார்.மகன்கள் பிரிகிறார்கள்.

குட்டூ வரும் வழியில் காவலர்களிடம் மாட்ட,அவர்கள் எல்லோரையும் பிடிக்க திட்டம் தீட்ட,சார்லி போதை பொருள் கும்பலுடன் அங்கு வர,தம்பியைக் கொன்ற கும்பலைத் தேடி சார்லியின் முதலாளிகள் வர,காவல்துறை சுற்றி வளைக்க,(இந்த இடத்தில் வாமனன் படம் ஞாபகம் வந்தது..அய்யோ அம்மா கொடுமைடா சாமி) சார்லி குட்டூவைக் காப்பாற்ற போதைப் பொருளை வைத்து மிரட்ட,பிறகு இறந்த நண்பனைப் பார்த்து அதை தீயில் கொட்டி விட பிறகு நடக்கும் சண்டை ரணகளம்.

சார்லிக்கும் அடிபட ஆனால் உயிர் பிழைத்து சூதாட்டம் ஆடுகிறான்.போபியாவை சாரி சோபியாவை கரம் பிடிக்கிறான்.உபயம் நடக்கும் சண்டையில் இரண்டு வைரம் சார்லிக்கு கிடைக்கிறது.குட்டூவிற்கு இரட்டை குழந்தைகள்.(சரித்திரம் திரும்புகிறது)

படம் பார்க்காதவர்கள் நிச்சயம் பார்க்க வேண்டிய படம்.

டிஸ்கி :

படத்தை விளம்பரம் செய்ய எப்.எம்மில் பேட்டி கொடுக்க சென்ற ஷாகித்திடம் ஏடாகூடமாக கேள்வி கேட்க அங்கு ஒரு சண்டை.

கேள்வி : பிரியங்கா சோப்ரா எப்படி ?

ஷாகித் : நன்றாக நடித்தார்.பாதி படம் முடிந்தப் பிறகு தான் அவர் வந்தார்.

கேள்வி : (சென்ஸார் செய்யப்படுகிறது..தனி மெயிலில் சொல்கிறேன்)

ஷாகித் எழுந்து வந்து விட்டார்.பேட்டி பாதியில் நிறுத்தப்பட்டது.பிறகு மன்னிப்பு கேட்ட பிறகு ஏனோ தானோ என்று தொடர்ந்தது.

படத்தின் திரைக்கதை நாலு பேர் சேர்ந்து எழுதி இருக்கிறார்கள்.(ஒருத்தர் எழுதினால் தான் அது பழைய படம் மாதிரி தான் இருக்கும்) படத்தின் இயக்குனர் தான் இசை.அற்புதம்.

இங்க பேரரசுவே எல்லாம் பண்ணுவார்.இப்போ இசையும் அவருதானாம்.பின்ன படம் எப்படி இருக்கும்.

சிபாரிசு :

இந்த படத்தை அஜித் அல்லது சூர்யா செய்யலாம்

2 comments:

பிரபாகர் said...

//இங்க பேரரசுவே எல்லாம் பண்ணுவார்.இப்போ இசையும் அவருதானாம்.பின்ன படம் எப்படி இருக்கும்.
//

என்னை பயமுறுத்த பேரரசு என சொன்னாலே போதும். பயங்கர டெரர் அவர். விமர்சனம் நல்லருக்கு தம்பி...
பிரபாகர்.

இரும்புத்திரை said...

நன்றி பிரபாகர்