Wednesday, August 4, 2010

வேலாயுதம் - திரை விமர்சனம்

இந்திய சினிமா வரலாற்றில்,தமிழ் சினிமா வரலாற்றில், ஏன் ஜெயம் ராஜா,விஜய், மற்றும் தெலுங்கு சினிமா வரலாற்றில் கூட இந்த மாதிரி ஒரு படம் வந்தது கிடையாது.அதற்கு உதாரணம் தான் இந்த படம். ராஜா கோடு மேல கோடு போட வச்சிருந்த பென்சில் உடைஞ்சி காணாமப் போயிருச்சாம். அதனால முதல் தடவையா சொந்தமா யோசித்து படம் எடுக்கிறாராம்.

ஜெனிலியா ரொம்ப புத்திசாலி (விஜய் கிட்ட இருக்கும் போது மட்டும் முட்டாள்) பத்திரிக்கை நிருபரா வேலை செய்கிறார்.பசுபதி அந்த ஊர்ல தாதா.ஆனா பகவத் கீதை பாக்குற எல்லோருக்கும் உபதேசம் பண்ணுவார். அவரோட உண்மையான முகம் ஜெனிலியாவுக்கு மட்டும் தான் தெரியும்.(பின்ன ஒரிஜினல் படத்துலையும் கதை அப்படித்தான் போகுது). அப்படியிருக்கும் போது ஒரு வெடிகுண்டு விபத்துல பசுபதியின் ஆட்கள் சாக அதை வைச்சது வேலாயுதம் தான் என்று துண்டுச்சீட்டுகள் மூலம் வதந்தி பரப்புகிறார்.

அப்படியே கட் பண்றோம்.இது எதுவும் தெரியாம அத்தைப் பொண்ணு,அம்மா என்று சந்தோஷமாக ஆடல் பாடல் ஊரே மதிக்கும் ஒருவராக கிராமத்தில் வாழ்கிறார் விஜய்.(மதிக்காம மிதிச்சா கொஞ்சம் நல்லாயிருக்கும்).இப்போ விஜய் ஜெனிலியா,பசுபதி  இருக்கிற ஊருக்குப் போக ஒரு காரணம்.அதுக்கு இட்டாங்கடா அந்த தங்கச்சி சரண்யாவ. தங்கை இருந்தா போதுமா.சிட்டிக்கு எப்படி போக. கல்யாணம் பண்ணுங்கடா. கல்யாண நேரத்துல எப்படிடா சிட்டிக்கு போகுறது. தங்கச்சி கல்யாணத்துக்கு ஒரு சிட்பண்ட்ல பணம் போட்டியிருக்காரு விஜய்.அதுவும் ரவுடி இருக்கிற சட்டியில தான் அகப்பை போட முடியும்.பணத்தை எடுக்க அந்த ஊருக்கு போக.

அப்ப பாத்து ஊர்ல நிறைய இடத்துல குண்டு வெடிக்க அந்த இடத்துல எல்லாம் விஜய் ஜஸ்ட்ல மிஸ் ஆகுறார். எப்படின்னா குண்டு அவர் செருப்பு பக்கத்துல வெடிக்கும்.இங்க யார்டா பொட்டு வெடி வெடிச்சதுன்னு கேக்காம எஸ் ஆயிருவாரு. அப்ப பாத்து கோவில் அர்ச்சகர் உங்க பெயர் என்ன அப்படி கேக்க(அப்பத்தானே வேலாயுதம் பெயர் எல்லோருக்கும் தெரியும்).அதே மாதிரி விஜய் சொல்ல ஆபத்பாந்தவர் வந்துட்டார் அப்படி மக்கள் பில்டப் கொடுக்கிறாங்க.(அதே மாதிரி தான் தியேட்டர்ளையும் சொல்வாங்க). ஜெனிலியா வந்து நீங்க தான் அதுக்கு சரியான ஆள்னு சொல்ல நான் அதுக்கு சரி வர மாட்டேன்னு விஜய் சொல்ல (எதுக்குப்பா அதை சொல்வீங்களா..இல்ல வடிவேலுக்கு சொல்லாம விட்ட மாதிரி இருந்துருவீங்களா) ஜெனிலியா நீங்க தான் அதுக்கு சரியான் ஆள்னு சொல்றாங்க.

இப்படி எல்லாம் சொன்னா விஜய் கேப்பாரா. சிட்பண்ட்ல பணத்தை ஏமாத்துறாங்க. ஜெண்டிமேன், இந்தியன்,அன்னியன்,சாமுராய், ரமணா, இன்னும் வர்ற போற சங்கர் படம் மாதிரி இவரு பணம் போன உடனே பொங்குறாரு.பொங்குறாரு.லாஜிக் இடிக்குமே.சரி இப்படி வைப்போம்.பணம் போனதால மக்கள் எல்லாம் தற்கொலை செய்ய பொங்கி எழுந்து மாஸ்க்கைப் போட்டுகிறார். அழிக்கிறார்.

நடுவுல விஜய் தங்கச்சி கல்யாணம். விஜய் மேல சந்தேகம் வந்து வில்லன் குண்டு வைக்க இவர் சாகாம சரண்யா காலி. லேசா முகம் தெரிஞ்ச காரணத்துனாலத்தான் இங்கே வந்துட்டாங்க அப்படி சொல்லி ராவோடு ராவாக இன்னொரு மாஸ்க் தைக்கிறார். அப்படியே கிளம்பி எதிரிகளை அழிக்கிறார். அப்பத்தான் ஒரு உண்மை தெரியுது பசுபதி இந்து இல்ல இந்தியாவை இழிக்க (சாரி ஒரு ரைமிங் வரட்டுமே என்று சொல்லி விட்டேன்) அழிக்க வந்த முஸ்லீம் (கொய்யால இதையாவது மாத்துங்க). உடனே துவம்சம் பண்ணி இந்தியாவை காப்பாத்தி விட,ஜெனிலியா,ஹன்சிகா இருவரும் விஜய்க்காக போட்டி போட எனக்கு கோட்டி கிழிய..

இந்தியா முழுக்க ரசிகர்கள் படத்தை கொண்டாட  வருங்கால பிரதமர் என்று போஸ்டர் அடித்து விடுகிறார்கள்.இது தெரிந்து ஒபாமா கூட்டணிக்கு விஜயைக் கூப்பிடுகிறார். எனக்கு சூலாயுதம் படம் நடிக்க வேண்டும். பெயரும்,ஹீரோயின்,இயக்குனர், தயாரிப்பாளர் தான் வேற.கதை அதே தான்.எனக்கு அது தான் முக்கியம் என்று சொல்லி விட்டு வர. தொல்லை தாங்க முடியாமல் ஒரு கேஸ் போடலாமா என்று ஆட்சியாளர்கள் யோசிக்கிறார்கள். ரசிகர்கள் (அவர் ரசிகர்கள் குறையாமலிருந்தால்) அடுத்த படமாவது நல்லா வந்து விடாதா என்று நப்பாசையோடு விஜய் நடிக்கும் அடுத்த படத்தைப் பற்றி பேசுகிறார்கள்.

18 comments:

நீ தொடு வானம் said...

ஆமா நீங்க சொன்ன மாதிரி முகம் தெரியுது.

அகல்விளக்கு said...

படம் ரிலீசானதுக்கப்புறம்....

நாங்கல்லாம் அப்பவே இதை கரெக்டா விமர்சனம் பண்ணிட்டமே-ன்னு நீங்க ஒரு போஸ்ட் போடுவீங்க...

:-)

வேலாயுதம் கல் உடைக்கிறார்...
(Velayutham rocks)

இரும்புத்திரை said...

அதுமட்டுமா அங்கியும் பறந்து பேண்ட் தெரியுதே..ஒருவேளை அதனால கண்டுப்பிடிச்சிருப்பாங்களா.. வில்லனும் வர வர புத்திசாலியா இருக்காங்க..ம்ம்..

இரும்புத்திரை said...

வேலாயுதம் ராக்ஸ் இல்ல..நாக்ஸ்..ரசிகர்கள் மூக்கு..இதான் நாக் அவுட்டா..

GNU அன்வர் said...

இது வழக்கமான தெலுங்கு காப்பி படம் ஆசாத் நாகார்ஜூன்தான் விஜய்

Unknown said...

Arivillathavane. Ungalukkellam vijayai nondavittaal thookkam varaatha? Poi ajiththin tholvi padam ondrai par. Thookam varum. Engal thalaivanaip patri pesa entha nayikkum thaguthi illai.

-- vijay veriyan

இரும்புத்திரை said...

vijay rasikarkalukku romba mariyaathai theriyum pola..paaththaalE theriyuthu..vijay pathi asingamaa thittaama irukkirathe perusu..vijay rasikar sonnathaale onnu sollaama viduren kaaranam vijay nadicha padam paathaale pothu athu asinga asingamaa thittu vaankina maathiri thaan

அத்திரி said...

தம்பி ஊருக்கு எப்ப வரப்போற...


ரொம்ம்ம்ம்ம்ம்ப ஆவலா எதிர்பார்க்கீறேன்

Unknown said...

Vijayin dancekku pakkathilavathu yaravathu vara mudiyuma?

Kuruvi - intha titlukku etha mathiri thana enga thalaivaa paranthu poi trainap pidichar. Title vachavana sollaama enga rhalaivara korai solla vantaynga

இரும்புத்திரை said...

mukinan neenga ennai thoondi vidureenga..naan vijayoda nooraavathu pada vimarsanam naalaikku eluthuren..appa paappom enna solreengannu..unga comment paathaale theriyuthu neenga ajith rasigarnnu..

Unknown said...

Commenting in blogger thru iPhone is painful. Let's continue this in the forum. What do ya say?

இரும்புத்திரை said...

start music

ஜெட்லி... said...

பாஸ்...இது தான் நம்ம அடுத்த டார்கட்ஆ??
இல்லை காவல் காதலா...

இரும்புத்திரை said...

kaaval kathal than next..

Selva Kumar said...

vijay Son : Appa Inime nadikkathinga ppa

Vijay v: Yen da chellam ?

Vijay Son : Appa senja paavam lam pillaiyai baathikummam pa

Thalaivar vijay rocks

Prakaash Duraisamy said...

முண்டம் - சொல்லாமல் சொல்லும் கௌதம்


அ‌‌‌ஜீத்தின் 50வது படத்தை கௌதம் இயக்கவில்லை என்பது உறுதியாகிவிட்டது. 50வது படத்தில் இணையவில்லை என்றாலும் அதற்கு அடுத்தப் படத்தில் கௌதமுடன் இணைந்து பணியாற்ற வாய்ப்புள்ளதாக அ‌‌‌ஜீத் தரப்பு கூறி வந்தது. கிளவுட் நைன் இந்தப் படத்தை தயா‌ரிக்கும் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் அ‌ஜீத்துடன் இணைந்து பணியாற்றுவது சாத்தியமில்லை என்பதுபோல் பேசியுள்ளார் கௌதம். கமல் அல்லது சூர்யாவுக்காக காத்திருப்பதில் நியாயம் இருக்கிறது. அ‌ஜீத்துக்காகவெல்லாம் காத்திருக்க முடியாது என்று கூறியிருப்பவர்,

தோளுக்கு மேல் தலை இருப்பவர்களுடன் மட்டும்தான் என்னால் வேலை பார்க்க முடியும் என கடுமையாக சாடியுள்ளார்.

இதனால் கௌதம், அ‌ஜீத் இணைவதற்கான சாத்தியம் முற்றிலுமாக அழிக்கபட்டதாகவே விமர்சகர்கள் கருதுகிறார்கள்

சி.பி.செந்தில்குமார் said...

காமெடியான கலக்கல் பதிவு

ராவணன் said...

இது தெலுங்கில், நாகார்ஜுனா,விஜயசாந்தி நடித்த ஆஸாத் என்ற படமல்லவா?