Tuesday, October 13, 2009

வசீகரிக்கும் குரல்கள்

சில நேரங்களில்,சில மனிதர்களின் குரல் மட்டும் என்னை வசீகரிக்கும்.அப்படி ஈர்க்கும் அந்த சமயங்களில் நான் அவர்களின் இரசிகனாகவே மாறி இருக்கிறேன்.அப்படி வசீகரித்த சில குரல்கள் எந்த காலத்திலும் அடிமனதில் தங்கி விடுகிறது.என் பெரியப்பா ஒரு பிரபல வக்கீல்.அவர் வாதாடும் போது குரல் கம்பீரமாக ஒலிக்கும் என்று அப்பா அடிக்கடி சொல்வார்.எனக்கு அப்படி கேட்க ஒரு வாய்ப்பு கிடைக்கவில்லை.

அப்பாவுக்கும் ஒரு தனி குரல்.ஒரு எம்.ஜி.ஆர் ரசிகர்.ஒரு நாள் ஒரு பாடலை அவர் பாடி கேட்ட சமயம் என்னிடம் தான் ஒரு திறமையும் இல்லை என்று நினைத்து வருந்தினேன்(இப்பவும் அப்படித்தான்).எந்த விஷயம் பேசினாலும் அவர் கருத்துக்கு எதிர் கருத்து தான் நான் வைப்பேன்.அவர் குரலைக் கேட்பதற்காக இருக்கும் என்று நினைக்கிறேன்.நாங்கள் மடிப்பாக்கத்தில் இருக்கும் போது எங்கள் கடை அண்ணா சாலையில் இருந்தது.கல்லூரி சேர்ந்தப் பிறகு மணிக்கணக்காக (அ)வறுப்பது வழக்கம்.போன் எந்த நேரமும் பிஸியாக பசியாக இருக்கும்.அப்பா வரும் போது குரலைக் கேட்டு வைத்து விடுவேன்.எதிர்முனையில் இருந்து வைக்காதே என்று கெஞ்சினாலும் கேட்பதில்லை.சில சமயம் அப்பா குரல் கேட்டு வெளியே வந்து பார்த்தால் தம்பி நின்று கொண்டுயிருப்பான்.இல்லை போனை வைத்து விட்டு எங்காவது பம்மி விடுவேன்.வருவது யார் என்று பார்த்தால் பெரும்பாலான தம்பியாகத் தான் இருக்கும்.அப்படியொரு அவனுக்கு அப்பா மாதிரியே அச்சு அசல் குரல்.யாராவது உறவினர்கள் என்னிடம் நீ பேசும் போது உன் அப்பா குரல் மாதிரி இருக்கிறது என்றால் சிரித்து விடுவேன்.பாசத்தில் சொல்கிறார்கள் என்று நினைத்து கொள்வேன்.(இப்போழுது கூட தண்டோரா அண்ணன் நான் நையாண்டியில் ஜொலிப்பதாக சொல்கிறார்.அது அவருடைய பாசம்.நான் பதிவுலகத்தில் ஒரு முக்கியப்புள்ளி என்று கார்த்திக் சொல்கிறான் அது அவனுடைய பாசம்).

தம்பி அதிகமாக பேசவே மாட்டான்.ஒரு வார்த்தையில் முடித்து விடுவான்.தேவையான சமயம் பேசும் போது ஒரு எதிரில் இருப்பவருக்கு ஒரு அணுகுண்டு வெடித்தது போல் இருக்கும்.நானும் இதை கற்க முயற்சி செய்கிறேன்.அது போல இருக்க முடியவில்லை.இவன் வரும் போது அப்பா என்று நினைத்து அவள் மறுக்க மறுக்க போனை வைத்து விட்டு திரும்ப பேச முடியாமல்....................

சினிமாவில் என்று பார்த்தால் சின்ன வயதில் இருந்தே கமல்,ரஜினி படத்திற்கு மட்டும் அதிகமாக போவோம்.பாட்டி வீட்டிற்கு போக முடிவு செய்து பஸ் ஏறும் சமயம் போஸ்டரைப் பார்த்து விட்டு படம் பார்க்க அம்மாவிடம் அடம் பிடித்த நாட்கள் அதிகம்.ரஜினி ரசிகனாகவே வளர்ந்த நான் தேவர் மகன் படம் பார்த்தப் பிறகு கமல் மேல் ஒரு மரியாதையே உருவாகி இருந்தது.காரணம் அந்த குரல் தான்.ரஜினி படத்தையே ஒரு முறைக்கு மேல் பார்க்காத நான் தேவர் மகன் படத்திற்கு அடுத்த நாளும் போய் திட்டு வாங்கி இருக்கிறேன்.கமல் படத்தில் நான் தேவர் மகன் படத்தை ரீமேக் செய்யவே ஆசைப்படுவேன் என்று சேரன் சொன்னார்.(என்ன கொடுமை சேரன் இது..மனசாட்சி இல்லாமல் இப்படி பேசக் கூடாது..ரம்யா தான் கேட்டார் அதுக்காக இப்படியா..)

இன்று எனக்கு விக்ரமை மிகவும் பிடிக்கிறது.காரணம் குருதிப்புனல் படத்தில் ஒலித்த விக்ரமின் குரல்.கமலை விட கம்பீரமாக தெரிந்தது.பிரபுதேவா,அப்பாஸ் என்று பலருக்கு குரல் குடுத்து இருக்கிறார்.(காதலன்,கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்).குருதிபுனல் படத்தில் இரவல் குரல் குடுத்தப் பிறகு நிச்சயம் இரண்டு சொட்டு கண்ணீர் சிந்தி இருப்பார்.

பதிவர்களில் அவரை போட்டோவில் பார்த்து இருக்கிறேன்.குரல் இப்படிதான் இருக்கும் என்று நான் நினைத்து இருந்தது போல் இல்லை.அவ்வளவு கம்பீரமான குரல்.இன்னும் காதில் ஒலிக்கிறது அவருடைய குரல்.

என்னுடைய மேலதிகாரி கௌஷிக்.அவருக்கும் அது போல ஒரு வித்தியாசமான குரல்.என் மேல் எப்பவும் ஒரு வருத்தம் உண்டு.அவர் சொல்வதை நான் கேட்பதேயில்லை என்று.ஒரு பழமொழி உண்டு.ஜாக் ஆப் ஆல் மாஸ்டர் ஆப் நன்.அதுதான் அவர்.அது போல நானும் மாறக் கூடாது என்று சொல்லும் அவர் என் வாழ்க்கைப் புத்தகத்தின் சிறப்புரை.

கடைசியாக கௌதம் மேனன்.என்ன ஒரு குரல்.கம்பீரம்.ஒரு உதாரணம் போதும்.வாரணம் ஆயிரம் பாடல் கேஸட் ரீலிஸ் செய்த சமயம் அவர் தான் தொகுப்பாளர்."உறுதிமொழி படம் உங்களுக்காக நான் பார்த்து இருக்கிறேன்.முதல் பாடலை நீங்க தான் ரீலிஸ் செய்யனும்..வாங்க சிவக்குமார் சார்.." என்று முதல் பாடலை வெளியிடும் போது சிவகுமாரை அழைத்த விதத்தை இன்னும் மறக்கவில்லை.டேனியல் பாலாஜியின் குரல் வேட்டையாடு விளையாடு படத்தில் கமலை விட கம்பீரமாக இருக்கும்.காரணம் கௌதம் மேனன் என்று நினைக்கிறேன்.வாரணம் ஆயிரம் படம் தான் எனக்கு பிடிக்கவில்லை.மின்னலே தவிர எந்த படமும் என்னை ஈர்க்கவில்லை.

பெண்களில் எனக்கு பிடித்த குரல் நாலு வருடம் போனில் பேசி பேசியே என்னை கொன்று போட்ட அந்த குரல் தான்.அதை நினைக்கும் போதெல்லாம் வெள்ளிவிழா படத்தில் இருந்து "காதோடு தான் நான் பேசுவேன்.." என்ற பாடல் ஒலிக்கிறது.ஹஸ்கி வாய்ஸ் இன்று நினைத்தாலும் உடம்பே ஒரு கணம் சிலிர்க்கிறது.என்றும் என்னால் மறக்க முடியாத ஒரு குரல்.

10 comments:

சென்ஷி said...

ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரொமாண்டிக்க் மூட்ல எழுத ஆரம்பிச்சீங்களா! :)

shabi said...

இன்று எனக்கு விக்ரமை மிகவும் பிடிக்கிறது.காரணம் குருதிப்புனல் படத்தில் ஒலித்த விக்ரமின் குரல்......///யாருக்கு விக்ரம் குரல் கொடுத்தார்

shabi said...

இன்று எனக்கு விக்ரமை மிகவும் பிடிக்கிறது.காரணம் குருதிப்புனல் படத்தில் ஒலித்த விக்ரமின் குரல்......///யாருக்கு விக்ரம் குரல் கொடுத்தார்

இரும்புத்திரை said...

நன்றி சென்ஷி

நன்றி ஷபி.அவர் குரல் கொடுத்தது நாஸருக்கு அடுத்த இடத்தில் இருக்கும் ஒரு வில்லனுக்கு

வெண்ணிற இரவுகள்....! said...

கமல் குரல் வசீகரம் உள்ளது நண்பா .........தென் பண்டி சீமையிலே ...கமலும் ராஜாவும் பாட வேண்டும் .எனக்கு பிடித்த மற்றொரு குரல் இளையராஜா ........தெய்வத்தின் குரல்

Ashok D said...

nice அரவிந்த்

எனக்கு விக்ரம் குரல் பிடிக்காது.
my choice the great வைரமுத்து குரல்.

அமுதா கிருஷ்ணா said...

எனக்கு கமல் குரல் ரொம்ப பிடிக்கும்..ஜானகியோடு சேர்ந்தால் அந்த பாட்டு நிச்சயம் ஹிட்தானே.. ஆமாம், விக்ரம் நிறைய படங்களில் ஆரம்பத்தில் குரல் கொடுத்து உள்ளார்.

Beski said...

எனக்கு எந்தக் குரல் பிடிக்கும்னு யோசிச்சுட்டு இருக்கேன்,
இரும்புக்குரல் அரவிந்த்.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

உங்க குரலைக் கேக்கணும் போல இருக்கே :)

செ.சரவணக்குமார் said...

அருமையான பதிவு..