Monday, February 22, 2010

துவையல் - கும்மாங்குத்து ஸ்பெஷல்

அஜித்துக்கு வாயில் சனி தான்.இனிமே சளி பிடித்து தொண்டையைச் செருமி துப்பினால் கூட அதை பிடித்து அரசியல் செய்ய முடியுமா என்று கிளறுவார்கள்.ஊர்ல சொல்லுவாங்க "நல்லவனா அவன்..அப்ப அவனை நாய்க்கு பிடிச்சி கட்டி வை.." என்று.இது தான் சந்தர்ப்பம் என்று உலக மகா உத்தமர் ஜாக்குவார் அவருடைய கிழிந்த டங்குவாரை இழுத்து கட்டிக் கொண்டு களத்தில் இறங்கியுள்ளார்.ஜாக்குவார் இயக்கிய சூர்யா படத்தில் வந்த சண்டைகளை எண்ணி முடிப்பதற்குள் படம் முடிந்து விட்டது.அப்படி எல்லோரையும் வெளுத்து கட்டிய சூராதி சூரன் அவருடைய மகன் அவர் வீட்டை தாக்கும் எங்கு பம்மியிருந்தார் என்று சொன்னால் எனக்கும் ஆட்டோ அனுப்பும் போது நானும் பம்ம வசதியாகயிருக்கும்.

ரஜினி பற்றி சொல்லவே வேண்டாம்.அவருக்கு இது தேவைதான்.பாபா படப்பெட்டியைத் தூக்கியப் போது அவருக்கு யார் உதவி செய்தது.அதிலும் பாடம் கற்றுக் கொள்ளாமலிருந்தால் ஜக்குபாய்,பத்திரிக்கைகளுக்கு எதிரான போராட்டம்,உண்ணாவிரதம்,இன்னும் நடிகர் சங்கத்தில் சட்டி காணாமல் போனது,வருங்காலத்தில் வரும் தலைவருடைய ஜட்டி காணாமல் போனால் இப்படி எல்லா விஷயத்திற்கும் கண்டனம் தெரிவிக்க ரஜினி தேவை.அவருக்கு ஒரு பிரச்சனை என்றால் கைகள் தானாக மேலேயும் கீழேயும் மூடிக் கொள்ளும்.உங்களை கோமாளி என்று காமாளி,காவாலி சொன்னது உண்மையில் ரஜினி கோமாளி அல்ல ஏமாளி.இன்னும் ஏமாறுவார்.

இப்படியே விழா கொண்டாடுங்கள்.இன்னும் ஒரு வருடம் தான்.கொட நாடு ஆட்சியைக் கைப்பற்றினால் அங்கு சென்றும் குத்து ஆட தயாராவார்கள்.ரஜினி,அஜித் எல்லோரும் வர வேண்டும் என்று "அன்போடு" அழைப்பார்கள்.நம் ஆட்கள் ஜாதி வெறியில்,மொழி வெறியில் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல அதுவும் குறிப்பாக நடிகர்கள் விஷயத்தில்.

திருமாவளவனுக்கு ஈழப்பிரச்சனை எல்லாம் இரண்டாம் பட்சம் ஆகி விட்டது போல.நடிகர்கள் வெளுத்துக் கட்டுகிறார்.அவரும் நடிகர் சங்கத்தில் உறுப்பினர் தான்.எப்போ ஸ்டண்ட் யூனியனில் சேர்ந்தார் என்று தெரியவில்லை.

இன்னும் கருத்து சொல்லாமல் இருப்பது கேப்டன் தான்.அவர் நடிகராக இருக்கிறாரா இல்லை இயக்குனர் சங்கத்தில் சேர்ந்து விட்டாரா இல்லை அரசியல்வாதியா எல்லாம் அவருக்கு தான் வெளிச்சம்.அதனால் தான் விழாவுக்கு வராத போதும் அவரை ஒன்றும் சொல்லவில்லையா?

சரத்குமாருக்கும்,விஜய.டி.ராஜேந்தருக்கும் அடுத்த கூட்டணியில் இடம் கிடைக்கும் போல.அதனால் தான் இன்னும் டண்டணக்கா டணக்குணக்கா என்று தாளம் வரவில்லை.குரல் குடுத்தால் ஜக்குபாய் சாட்டிலைட் உரிமைக்கு குடுத்த காசை திரும்ப கேட்பார்கள்.அவருக்கு அவர் எடுக்கும் புதிய காவியம் வீராசாமி இரண்டாம் பாகம் வெளிவராது.மக்கா எனக்கு ஒரே ஒரு சந்தேகம் தான்.அமிதாப் பச்சனை யார் மிரட்டி விழாவுக்கு அழைத்து வந்தார்கள் அல்லது இழுத்து வந்தார்கள்.

8 comments:

இரும்புத்திரை said...

அப்படியே அஜித்துக்கு ஆதரவு தெரிவித்த ஆர்யா,விஷால்,திரிஷா இவர்களை எல்லாம் ஏன் விட்டு விட்டார்கள்.அப்ப அவங்க எல்லாம் டம்மி பீஸா?

பொன் மாலை பொழுது said...

அட எங்க பக்கமும் வந்துதான் பாருங்களேன்

உண்மைத்தமிழன் said...

கடைசி வரி அட்டகாச ட்விஸ்ட்..!

ஹாட்ஸ் அப் இரும்புத்திரை..!

ஆர்வா said...

அமிதாப் பச்சன் மேட்டரை உட்கார்ந்து யோசிச்சீங்களோ?

Unknown said...

aaga ellarukkum adutha matter kidaichtte

எறும்பு said...

//அமிதாப் பச்சனை யார் மிரட்டி விழாவுக்கு அழைத்து வந்தார்கள் அல்லது இழுத்து வந்தார்கள். //

Good question...

Unknown said...

//அமிதாப் பச்சனை யார் மிரட்டி விழாவுக்கு அழைத்து வந்தார்கள் அல்லது இழுத்து வந்தார்கள். //


அருமை, உட்கார்ந்து யோசிச்சீங்களோ?

Unknown said...

//அமிதாப் பச்சனை யார் மிரட்டி விழாவுக்கு அழைத்து வந்தார்கள் அல்லது இழுத்து வந்தார்கள். //


அருமை, உட்கார்ந்து யோசிச்சீங்களோ?