Wednesday, February 10, 2010

பிரபலமாக அல்லது பிரபல பதிவராக ஆவது எப்படி

முதல்ல பிரபலத்தின் உச்சக்கட்டமான தகுதி - சாருவிடம் போய் காலை வணக்கம் சொல்லி வாங்கி கட்டினால் அது பிரபலமாக ஆக உதவாது.சாரு எனக்கு மத்தியான வணக்கம் சொன்னார்,மாலை வணக்கம் சொன்னார்,இரவு வணக்கம் சொன்னார்,அட அதிகாலை வணக்கம் சொன்னார் என்று புரளியை கிளப்பி வயிற்றில் புளியைக்(கொட்டை எடுத்தது தான்) கரைக்க வேண்டும்.அவருக்கு தெரிந்தால் நம்மை திட்டுவார்,ராஜன் எதிர்பதிவு போடுவார்,சில அன்பு நெஞ்சங்கள் மைனஸ் ஓட்டு குத்தி விளையாடுவார்கள்.இதெல்லாம் நமக்கு கிடைக்கும் விளம்பரங்கள் அதனால் ஜாலியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.இதை அப்படியே ஃபாலோ செய்தால் நாம் பிராபலமாகி இல்லங்க பிரபலமாகி விடுவோம்.

இனி விதிமுறைகள்.

எல்லோரும் கொண்டாடும் சினிமாவை நாம் வெளுத்து காயப் போட்டு பிறகு இஸ்திரி போட வேண்டும்.எப்படியும் மூணு பதிவுக்கு நான் கேரண்டி.அனானி ஆப்சனை எடுத்து விடவும்.பின் விளைவுகள் பயங்கரமாகயிருக்கும்.அதுவே எல்லோரும் நிராகரிக்கும் சினிமாவை நான் தூக்கி வைத்து கொஞ்ச வேண்டும்.தமிழ் ரசிகனின் இரசனையை கேள்வி குறியாக்க வேண்டும்.

கதையோ,கவிதையோ படிக்கும் யாருக்குமே புரியவே கூடாது.முக்கியமாக உங்களுக்கே புரியுமாறு எழுதக் கூடாது.சிம்பிளாக உதட்டில் முத்தம் கொடுத்தார்கள் என்று இருக்கும் வாக்கியத்தை மாற்றி சொல்ல வேண்டும்.அதற்காக கொடுத்தார்கள் முத்தம் உதட்டில் என்று சொன்னால் ஹாலிவுட் படத்தை டப் செய்தது போலிருக்கும்.இப்படி எழுதவும்.

எச்சில் அருவிகள் கலக்கும்
சுழலில் உருவான மின்சாரம்
என்னையும் தாக்க துரத்த
யாருமே இல்லாத தனிமையை தேடினேன்.

என்ன சொன்னேன் என்று எனக்கே புரியவில்லை.அப்படி எழுதினால் இலக்கியவியாதி என்ற இலக்கை அடைய முடியும்.

யாராவது உங்களுக்கு பட்டம் கொடுக்க முன் வந்தால் சண்டை போடாமல் பட்டத்தை வாங்கி வேறு யாரிடமாவது மாஞ்சா வாங்கி அதை காற்றில் விட்டு விட்டு அடுத்த பட்டத்திற்காக காத்து இருக்கவும்.

சண்டை நடக்கும் பதிவில் போய் போன பதிவிற்கான பின்னூட்டத்தைப் போட்டால் என்ன சொல்ல வருகிறான் என்று தெரியாமல் சண்டை கொஞ்ச நேரம் நிற்கும்.நிறைய பேருக்கு நீங்களும் ஒரு இரத்தப் பூமியில் நடக்கும் ஆள் தான் என்று புரியும்.

எதிர்பதிவு,பக்கத்து பதிவு,சைட் பதிவு இப்படி ஒரண்டை இழுத்து வேட்டியில் எதையாவது விட்டு கொள்ள வேண்டும்.குத்தினாலும்,குடைந்தாலும் அமைதியாக இருந்து விட்டு பொறுமையாக பாத்ரூமில் அழுது விட்டு வந்து அடி வெளுக்க வேண்டும்.திரும்பவும் அடி வாங்கினால் இருக்கவே இருக்கு இன்னொரு பாத்ரூம்.

தலைப்பு வைக்கும் போது பயங்கரமாக வைக்க வேண்டும்.அவளும் நானும் இப்படி வைக்க வேண்டும்.அதை விட்டு விட்டு அவலும் நானும்,அளவும் நானும் இப்படி எல்லாம் தப்பாக தலைப்பு வைத்து விட்டு பின்னாடி பீல் பண்ணக் கூடாது.வடையை சரியாக கேட்ச் பிடிக்க வேண்டும்.காட்சஸ் கேன் வின் மேட்சஸ்.

இதுக்கு மேல நான் சொல்லிக் குடுத்தால் என்னுடைய இலக்கியவாதி இலக்கில் ஓட்டை விழுந்து விடும்.நான் தூங்கப் போறேன்.ஏதாவது இருந்தால் பின்னூட்டத்தில் சொல்லவும்.

45 comments:

இரும்புத்திரை said...

for followup

இரும்புத்திரை said...

:-)))))))))

இரும்புத்திரை said...

:-((((((((((((

இரும்புத்திரை said...

me the firstaa

லோகு said...

ஓ.. இதுல இவ்ளோ விஷயம் இருக்கா?

பிரபல பதிவர் ஆகணும்னா, உயிருக்கே உத்திரவாதம் இல்ல போல.. நெறைய ஆட்டோக்களை சந்திக்கணும் போல. இந்த ஆட்டத்துக்கு நான் வரல தலைவா.

ப.கந்தசாமி said...

ஏறக்குறைய நானும் இப்படி பதிவு போட்டேன். சீந்துவாரில்லை. ஆனால் உங்கள் பதிவு நன்றாகவே இருக்கிறது.

Cable சங்கர் said...

rightu..எப்ப ஊருக்க்கு வர்றே..? ஞாயித்துக்கிழமை வர்றியா?
புக் ரிலீஸ் இருக்கு..

கார்மேகராஜா said...

///எச்சில் அருவிகள் கலக்கும்
சுழலில் உருவான மின்சாரம்
என்னையும் தாக்க துரத்த
யாருமே இல்லாத தனிமையை தேடினேன்.///

சார். கவிதை மிக அருமை. :-))

துளசி கோபால் said...

நீங்க(ளும்) ரௌடி தானா??????????

ஆஹா......தெரியாமப்போச்சே:-))))

இரும்புத்திரை said...

@இரும்புத்திரை
என்ன ஃபாலோ அப்

இரும்புத்திரை said...

@இரும்புத்திரை
என்ன சிரிப்பு வேண்டியிருக்கு

நாமக்கல் சிபி said...

//பிரிவுக்கு முன் கடைசி முத்தம்
தீப்பிழம்பாய் எரிகிறது
நினைவில் நிழலாடும் பொழுது
புகைத்து புதைக்கிறேன்
முதல் முத்தத்தின் தித்திப்பு
சக்கரையாய் கரைகிறது
யாரோ அமில உதடுகளால்
முத்தமிடும் சப்தத்தில்
அவனுக்கு முதலா கடைசியா
அனுமானிக்க தெரியாத
பைத்தியக்காரனாய் நான் //

ரைட்டு!

இரும்புத்திரை said...

@இரும்புத்திரை
அதுக்குள்ள என்ன சோகம்

இரும்புத்திரை said...

@இரும்புத்திரை
நீங்க இல்ல..பிள்ளை இல்லாத வீட்டில்..

இரும்புத்திரை said...

@லோகு
நீங்க ஏற்கனவே பிரபலம் தான்.இது உங்களுக்கான பதிவு இல்லை

இரும்புத்திரை said...

@கந்தசாமி ஐயா
தலைப்பில் தான் பிரச்சனை

இரும்புத்திரை said...

@கேபிள்சங்கர்
இல்ல அண்ணா,எனக்கு ஒரு டக்கீலா தனியா எடுத்து வைங்க..வந்து ரெண்டு ஷாட் அடிக்கிறேன்.டக்கீலாவும்,பழம்பெரும் மலையாள நடிகை .கீலாவுக்கும் என்ன சம்பந்தம்.ஏதாவது சம்பந்தமிருந்தால் சொல்லவும்.

இரும்புத்திரை said...

@கார்மேகராஜா
அது என் வட..நீங்க எடுத்துட்டீங்களே :-))))

இரும்புத்திரை said...

@துளசி மேடம்
நீங்க என்னுடைய ஐம்பதாவது பதிவுக்கு வந்ததாக எனக்கு ஞாபகமிருக்கு :-))))

இரும்புத்திரை said...

@நாமக்கல் சிபி
தலைவா..இங்க சண்டை நடக்கல..சண்டை நடக்கும் இடத்தில் தான் இப்படி போடணும்

இரும்புத்திரை said...

@கல்ப் தமிழன்
நன்றி பாஸ்

gulf-tamilan said...

/நன்றி பாஸ்/
நன்றிக்கு நன்றி!!!

இரும்புத்திரை said...

@கல்ப் தமிழன்
:-))))))))

gulf-tamilan said...

23ல் 15 உங்க கமெண்ட் ம்

இரும்புத்திரை said...

@கல்ஃப் தமிழன்
இந்தாங்க 16..தன் கையே தனக்கு உதவி
மிச்சம் இருப்பதில் மூணு உங்களுடையது

நேசமித்ரன் said...

:)

rightu

gulf-tamilan said...

/தன் கையே தனக்கு உதவி/
அப்ப எலி உதவி செய்யலையா???

வெண்ணிற இரவுகள்....! said...

நண்பா நீ இன்னும் சரியாக எழுதவில்லை என்று நினைக்கிறேன் . முதலில் நமக்கு பிடிகிதோ இல்லையோ
அவர்களுக்கு follower ஆகி அவர்களுக்கு பின்னூட்டம் போடா வேண்டும் அப்புறம் CHATIL அருமை என்று சொல்ல வேண்டும்
நீங்கள் தமிளிஷில் vote போட்டால் அவரும் போடுவார். இப்படி ஐம்பது பேருக்கு போட்டால் 30 பேர் உங்களுக்கு VOTE போடுவார்கள்
நீங்கள் படம் போனது பாட்டு கேட்டது போன்ற பதிவுகள் கூட முதல் இடம் பிடிக்கும்

வெண்ணிற இரவுகள்....! said...

முக்கியமாய் சினிமா பதிவு முக்கியம்........அதுவும் மாஸ் ஹீரோ படம் என்றால் தொலைந்தார் .....
மணிரத்னம் கமல் என்றால் மொக்கை போட்டாலும் திட்டினால் HITZ எகுரும் ஆனால் பின்விளைவு பயங்கரமாய் இருக்கும் .......

கவிதையில் இரண்டு வரியை மட்டும் படித்து ....இல்லை அடுத்தவன் பின்னூட்டத்தை copy அடித்து // // என்ற வரிக்கு அப்புறம்
அருமை நண்பரே என்று சொல்ல வேண்டும் அப்பொழுது தான் உங்களுக்கு சொல்வார்

இரும்புத்திரை said...

@நேசமித்ரன்
நன்றி தல

இரும்புத்திரை said...

@கல்ஃப் தமிழன்
மவுஸ் பிடிக்கவும் கை வேணுமே

இரும்புத்திரை said...

@வெண்ணிற இரவுகள்
கம்பேனி ரகசியத்தை வெளியே உடைக்காதே

வெண்ணிற இரவுகள்....! said...

முக்கியமாய் HOLYWOOD படங்கள் என்ன மொக்கை போட்டாலும் அருமை என்று சொல்ல வேண்டும்.
அடிக்கடி அனைவருக்கும் தொடர் பதிவு எழுத அழைக்க வேண்டும் ...........! விருதுகள் கொடுக்க வேண்டும் ....
இப்படி நிறைய இருக்கிறது அரவிந்த் . இன்னும் இருக்கிறது ............

இரும்புத்திரை said...

@வெண்ணிற இரவுகள்
//கவிதையில் இரண்டு வரியை மட்டும் படித்து ....இல்லை அடுத்தவன் பின்னூட்டத்தை copy அடித்து // // என்ற வரிக்கு அப்புறம்
அருமை நண்பரே என்று சொல்ல வேண்டும் அப்பொழுது தான் உங்களுக்கு சொல்வார்//

அருமை தல..இந்த கட் காப்பி பேஸ்ட் போதுமா

இரும்புத்திரை said...

@வெண்ணிற இரவுகள்

//முக்கியமாய் HOLYWOOD படங்கள் என்ன மொக்கை போட்டாலும் அருமை என்று சொல்ல வேண்டும்.
அடிக்கடி அனைவருக்கும் தொடர் பதிவு எழுத அழைக்க வேண்டும் ...........! விருதுகள் கொடுக்க வேண்டும் ....
இப்படி நிறைய இருக்கிறது அரவிந்த் . இன்னும் இருக்கிறது ............//

நான் கத்துக்க வேண்டியது நிறைய இருக்கா

வால்பையன் said...

ட்ரை பண்ணி பார்க்கிறேன்!

Thamira said...

அவளும் நானும் இப்படி வைக்க வேண்டும்.அதை விட்டு விட்டு அவலும் நானும்,அளவும் நானும் இப்படி எல்லாம் தப்பாக தலைப்பு வைத்து விட்டு பின்னாடி பீல் பண்ணக் கூடாது.//

:-))

Thamira said...

எப்போதோ சொன்னதை நினைவு கூறுகிறேன். நல்ல Funnyயான எழுத்து உங்களுடையது. கொஞ்சம் அளந்து எழுதினீர்கள் என்றால் (இரண்டு நாளைக்கு ஒன்று. ஒரு நாளுக்கு இரண்டு அல்ல) இப்படி நீங்களே 38ல் 30 பின்னூட்டம் போடுகிற மாதிரி நிலைமை ஆகியிருக்காது.

சங்கர் said...

அரவிந்த் பின்னூட்டத்துக்கு பதில் எல்லாம் சொல்றாரே, இது இரும்புத்திரை தானே ? நான் அட்ரஸ் மாறி வந்திடலையே :))

சங்கர் said...

அய், மீ த 40

கண்ணகி said...

இன்னும் கைவசம் உள்ளதையும் எடுத்துவிடுங்க..

Unknown said...

மீ த 43

Unknown said...

அப்போ நீங்க பிராபல பதிவர் இல்லயா

பெசொவி said...

//.எப்படியும் மூணு பதிவுக்கு நான் கேரண்டி//

மூணு பின்னூட்டம் என்று வந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

போகட்டும்.....உங்க பதிவு ரொம்ப நல்லாவே இருந்தது.

(நாமளே நாலு பின்னூட்டம் போட்டுவிட வேண்டும் என்ற விதிமுறையைச் சொல்லாமல் செயலில் விளக்கியதற்கு ஸ்பெஷல் நன்றி)

துபாய் ராஜா said...

போறவங்க, வர்றவங்கல்லாம் இழுத்து போட்டு அடிக்கணும்ன்னா அரவிந்த் மாதிரி ராமராஜனை பத்தி மட்டமா ஒரு பதிவு எழுதுனாப் போதும்...

கரீக்ட்டா தம்பி.... :))