Thursday, December 16, 2010

ஹேரி பிரவுன் - ஈசனாகுமா

வயதுகேற்ப நடியுங்கள் என்று சொல்லிக் கொண்டேயிருப்பதை விட அதற்கேற்ப கதையையும் நடிகர்களையும் தான் உருவாக்க வேண்டும்.அப்படி கன்னடத்தில் உருவான படத்தைப் பார்க்க ஆவல் எழுந்துள்ளது.

போதையும்,கொலையுமாக ஹேரி பிரவுன் ஆரம்பிக்கிறது. ஈசன் டிரைலரில் வருவது போல ஒரு போலீஸ் அதிகாரி,ஒரு வயதானவர்,இன்னும் இளமை கொஞ்சும் பட்டாளங்கள் என்று ஹேரி பிரவுன் நகர்வதும் இது வேறு மாதிரியான நகரம் என்று சசிகுமார் சொன்னதும் இன்னும் நிரடுகிறது. அமீரின் யோகியும் இப்படித்தான் ஆரம்பித்தது.அமீர் வாங்கிய உதைகளும் அதற்குப்பிறகான மௌனமும் இன்னும் நினைவில் நிரம்பி வழிகிறது. இன்னும் ரெண்டு நாட்கள் தான் எல்லாம் தெரிந்து விடும். மிஷ்கின் காத்துப்பட்டு சசியும் திரும்பியிருக்கிறது போலவே ஒரு உணர்வு.காற்றில் வீசப்பட்ட சாருவின் வாள் மிஷ்கினோடு சேர்த்து சசிகுமாரையும் வெட்டுவது போல அந்திவேளையில் ஒரு கனவு.

சரி கதைக்கு வருவோம்.ரொம்ப சிம்பிளான கதை.ஒரு சப்வே.அதில் எல்லா காரியங்களையும் செய்யும் இளந்தாரிகள்.யாராவது வந்தால் அடித்து பணத்தைப் பிடுங்கிறார்கள். போதைப்பொருள்,பெண்கள் என்று சக நேரமும் அவர்களால் அந்த நடைபாதை ஆக்ரமிக்கப்பட்டிருக்கிறது.ஹேரியின் மனைவி மருத்துவமனையில் இருக்கிறார்.பார்க்க அந்த நடைபாதை தான் குறுக்குவழி.அங்கே போக வேண்டாம் என்று அவரிடம் சொல்வதால் அவர் சுற்றியே போகிறார்.மனைவி சாகக்கிடக்கிறாள் என்று தொலைபேசி வந்தப்பிறகும் பயத்தினால் சுற்றியே போய் இறப்பதற்கு முன்னால் போய் சேர முடியவில்லை.

பப்பில் தண்ணியடிக்கும் போது நான் அவர்களை தாக்கவே இந்த கத்தியை வைத்திருக்கிறேன் என்று சொல்லும் நண்பன் அடுத்த நாளே கொல்லப்படுகிறார்.போலீஸ் குற்றத்தை நிரூபிக்க முடியாமல் கைது செய்தவர்களை அனுப்பி விடுகிறார்கள்.துக்கம் தாளாமல் போதையில் சப்வேயில் நுழைந்தவரிடம் கொள்ளையடிக்க முயல்பவனை கொன்று விடுகிறார். போலீஸ் நண்பனின் வழக்கில் பெரிதாக முன்னேற முடியாது என்று சொல்ல இவர் பழி வாங்க கிளம்புகிறார். முக்கியமான குற்றவாளி மட்டும் தப்பித்து விட மற்றவர்களை கொன்று கூடவே கொள்ளையும் அடிக்கிறார்.

இவர் பழிவாங்கும் அதிரடியால் போலீஸூம் களத்தில் இறங்க ஒரு இளைஞர்களுக்கும் போலீஸூக்கும் கலவரம் வெடிக்கிறது.(உயர் நீதி மன்ற லாயர் -போலீஸ் சண்டை இந்த இடத்தில் நல்லா பொருந்தும்). கலவரத்தின் போது அங்கு போகும் ஹேரியைத் தடுக்க இரண்டு போலீஸ் அதிகாரிகள் வருகிறார்கள். கலவரக்காரர்களால் தாக்கப்படும் போது ஹேரியால் காப்பாற்றப்படுகிறார்கள். தொடர்ந்து திடுக்கிடும் சாதாரண முடிவில் எல்லோரும் பயமில்லாமல் அங்கு விளையாடுகிறார்கள்.ஹேரி சப்வே வழியாக பயமில்லாமல் தனியே நடந்து போகிறார். சப்வே என்பதை தெருவாக,ஏரியாவாக சசிகுமார் மாற்றியிருக்கலாம். ஹேரி என்ற கிழவனுக்கு பதில் சசிகுமார் இருக்கலாம். இன்னும் கொஞ்ச நேரம் எல்லாம் தெரிந்து விடும். அவரும் மிஷ்கின் மாதிரி சுப்ரமணியபுரம் எதோட இன்ஸ்பிரேஷன் தெரியுமா. அதை ஒன்றும் சொல்லாமல் இதை மட்டும் வெளுக்கலாமா என்று ஆரம்பித்து விடாமலிருக்க வேண்டும்.

2 comments:

Philosophy Prabhakaran said...

ஆக ஈசனும் தழுவல் தானா...

நேரம் கிடைக்கும்போது நம்ம பக்கம் வரவும்...
http://philosophyprabhakaran.blogspot.com/

Vikram said...

I wish easan wasn't an inspired movie or a lift off 'Harry Brown'...