Saturday, December 11, 2010

நந்தலாலா - குறியீடு தேடி ஒரு பயணம்

சாருவின் பரிந்துரையால் நந்தலாலா பார்த்தேன்.

//முக்கியமாக, அகியின் பாட்டி.அகி பள்ளிக்கூடத்திலிருந்து வரும்வரை அவள் கழிப்பறைக்குச் செல்லாமல் அவனுக்காகக் காத்திருக்கிறாள்.//

என்ன கொடுமை சாரு இது.பேரன் வந்தால் தான் கழிப்பறைக்கு போக வேண்டும் என்பதில்லை.சிறுநீர் முட்டினாலும் போகலாம்.ஐந்து நாள் சுற்றுலா செல்லும் பேரன் வரும் பாட்டி கழிப்பறை போகாமலே காத்திருப்பாளா. சொடக்கு எடுத்து விடவே வேலைக்காரியிடம் காசு தரும் பேரன் மற்ற விஷயங்களை சொல்லவில்லை.காரணம் அதை சொல்லாமலே செய்வாள் என்று. மிஷ்கின் பாசம் கண்ணை மறைக்குது. நியாயம் தான்.ஆனாலும் இந்த அளவுக்கு இருக்கக்கூடாது. சாதாரண காட்சி அது.இயக்குனரே மலைத்து போகும் அளவிற்கு குறியீடு வந்து மிஷ்கின் குறியீடு கிறுக்காக மாறினாலும் ஆச்சர்யமில்லை.

சாருவின் பரிந்துரையால் நந்தலாலா பார்த்தேன்.இதை தமிழின் முதல் படம் என்கிறார்கள் விபரம் தெரியாதவர்கள்.இதை உலகின் முதல் படம் என்று சொன்னால் தான் மனம் ஆறும். தமிழின் முதல் படம் என்று சொல்லி புண்படுத்தி விட்டார்கள். நீங்கள் சாதாரணமாக வைத்த காட்சி கூட சதா ரணமாக மாறி நந்தலாலாவே சரணம் என்று சொல்லும்படி ஆகி விட்டது.

ஸ்னிக்தா பேசும் அந்த ஐந்து நிமிட வாழ்க்கை வரலாறில் உங்களுடைய முந்தைய இரண்டு படமும் குறியீடுகளாக மறைந்து கிடக்கிறது என்ற நீங்கள் அறியாத உண்மையை நான் இன்று தான் கண்டுப்பிடித்தேன். ஒரு கார் டிரைவரை நம்பி ஏமாந்த கதையை சொல்லும் போது கண் விழித்து பார்த்தால் புது இடம்.அங்கே புது சரக்கு மூன்று நாளில் முப்பத்தாறு பேர் வந்ததாக சொல்வாள். அதில் ஒருவராக சித்திரம் பேசுதடி படத்தில் வந்த பாவனாவின் அப்பாவும் இருந்திருக்கலாம்.போலீஸ் ரைடின் போது அவருக்கு பதில் நரேன் மாட்டிக் கொள்கிறார்.அதில் அவர் எந்த பெண்ணிடம் போனார் என்று நீங்கள் காட்டாமல் விட்ட உங்கள் புத்திசாலித்தனத்தை எப்படி மெச்சுவது என்றே தெரியாமல் மெச்ச முடியாமலிருக்கிறேன்.

அடுத்து கிழவன் அவளை கடத்த முயல்வதற்கு ஒரு காரணம் சொல்லி அவன் துரத்துவதால் அங்கு இருந்து தப்பி வந்து விட்டேன் என்று கூறுவாள்.எப்படி தப்பி வந்திருக்க முடியும் என்று யோசித்து பார்த்தேன். அப்போது தான் உங்கள் அஞ்சாதே படம் ஞாபகம் வந்தது.கத்தால கண்ணாலே என்று தொடங்கும் பாடலில் ஆடும் பெண்ணிற்கு இதே மாதிரியிருந்த முகச்சாயலை வைத்து தான் கண்டுப்பிடித்தேன். பாடலின் முடிவில் பாண்டியராஜன் கொல்லப்படும் போது ஏற்படும் களேபரத்தில் அவள் தப்பியிருப்பாள் என்று கண்டுப்பிடித்தேன்.இப்படி உங்களின் முந்தைய படத்திற்கே தொடர்பு இருக்கும் போது ஜப்பானிய படத்திற்கு தொடர்பு இருக்காதா என்ன.

முந்தைய படங்களில் இருந்த கறையை இந்த படத்தில் நீக்குவதாக காட்டும் போது அகலிகையை சாபத்திலிருந்த மீட்ட ராமன் நினைவுக்கு வந்தார்.நீங்கள் ராமனாக இருப்பதால் தான் டிராக்டர் ஓட்டிய அந்த சீதாவை தேடிக் கொண்டு பலூன் விற்பதாக வைத்திருந்த குறியீடு இன்னும் சொல்லாமல் எனக்கு பல கதையை சொல்லியது.

இப்படி எல்லாம் யோசித்து மற்றவர்களையும் யோசிக்க வைத்து சேர்த்த பாவத்தை கழுவ வேண்டும் என்று நினைத்து இரண்டு நாட்கள் ரூம் போட்டு அழ வேண்டும் என்று பக்கத்திலிருந்த தீவிற்கு சென்றேன். அவன் சொன்ன இரண்டு நாள் வாடகை என் பத்து நாள் முருகன் டாலர்கள் என்பதால் அந்த தீட்டத்தைத் தள்ளி வைத்து விட்டு குறியீடு கண்டுப்பிடிக்க கிளம்பி விட்டேன்.

3 comments:

பனித்துளி சங்கர் said...

உங்களின் பார்வையில் ஒரு புதுமையான மாற்றம் தந்து ரசிக்கவும் , சிந்திக்கவும் செய்த விதம் அருமை . பகிர்வுக்கு நன்றி சகா

இரும்புத்திரை said...

சுரேஷ் நான் இந்தியாவில் இல்லை.உங்களுக்கு சாட் ரிக்வெஸ்ட் அனுப்பியிருக்கிறேன். மெயில் பண்ணுங்க.

irumbuthirai@gmail.com

மார்கண்டேயன் said...

இப்படி எல்லாம் யோசித்து மற்றவர்களையும் யோசிக்க வைத்து சேர்த்த பாவத்தை கழுவ வேண்டும் என்று நினைத்து இரண்டு நாட்கள் ரூம் போட்டு அழ வேண்டும் என்று பக்கத்திலிருந்த தீவிற்கு சென்றேன். அவன் சொன்ன இரண்டு நாள் வாடகை என் பத்து நாள் முருகன் டாலர்கள் என்பதால் அந்த தீட்டத்தைத் தள்ளி வைத்து விட்டு குறியீடு கண்டுப்பிடிக்க கிளம்பி விட்டேன்.

கலக்குறீக வாழ்த்துகள் . . . அப்பப்ப நம்ம கடைக்கும் வாங்க . . . அனாவசியமா புது வருஷம் ன்னு சொல்லி அலும்பிகிட்டு பொருக்காம ஒரு பதிவ போட்டுர்க்கேன்